search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Food Festival"

    • கலெக்டர் வளர்மதி தகவல்
    • தானியங்களின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுதானிய ஆண்டு-2023 ஐ முன்னிட்டு பொதுமக்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நாளை முதல் சிறுதானிய உணவுத்திரு விழாவானது பஸ் நிலையங்கள், கல்லூரிகள் மற்றும் பொது மக்கள் கூடும் சந்தைகளில் நடைபெறவுள்ளது.

    மேற்படி உணவுத் திருவிழாவில் சிறுதானிய உணவுகள் குறித்த கண்காட்சி பல்வேறு அரசுத்துறைகள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி களில் இடம்பெற்றுள்ள குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் சார்பில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் மற்றும் சிறுதானியங்களின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளது.

    இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) ராணிப்பேட்டை சந்தை, 2 -ந்தேதி ஓச்சேரி சந்தை, 4-ந்தேதி நெமிலி சந்தை, 5-ந்தேதி மின்னல் கிராமம்,6-ந்தேதி சோளிங்கர் பஸ் நிலையம், 7-ந்தேதி பாணாவரம் சந்தை, 8-ந்தேதி அரக்கோணம் பஸ் நிலையம், 11-ந்தேதி ஆற்காடு பஸ் நிலையம், 19-ந்தேதிராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் மேலும் நுகர்வோர் மன்றங்கள் செயல்படும் கல்லூரி களிலும் சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெறும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் சிறுதானிய உணவுத்திரு விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறுதானிய உணவுகளின் பயன்பாடு குறித்து தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

    • 100-க்கும் மேற்பட்ட நவதானிய உறை பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது.
    • முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் மூலம் வேதாரண்யம் வட்டாரத்தில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா வட்டார இயக்க மேலாண்மை அலுவ லகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு வட்டார இயக்க மேலாளர் அம்பு ரோஸ்மேரி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் இந்திராணி, வேதாரண்யம் வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன், தோப்புத்துறை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தெட்சணமூர்த்தி மற்றும் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தினர் கலந்து கொண்டனர். விழாவில் மகளிர் குழு உறுப்பினர்கள் தயாரித்த ஊட்டச்சத்து நிறைந்த 100-க்கும் மேற்பட்ட நவதானிய உறை பொருட்கள் காட்சிபடுத்தி வைத்திருந்தனர்.

    பின்பு, ஊட்டச்சத்து தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.

    • ஏற்காட்டில் மகளிர் திட்ட அலுவலகத்தில் ஏற்காடு வட்டார அளவிலான பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது.
    • ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மகளிர் திட்ட அலுவலகத்தில் ஏற்காடு வட்டார அளவிலான பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது. ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ஊராட்சி ஒன்றிய மேலாளர் கென்னடி, மகளிர் திட்ட வட்டார மேலாளர் மகாலிங்கம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த ஊட்டச்சத்து திருவிழாவில் ஏற்காட்டில் உள்ள 9 ஊராட்சியில் உள்ள மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு ராகி, சாமை, வரகு போன்ற பல்வேறு தானியங்களை வைத்து தயாரித்த பாரம்பரிய உணவு வகைகளை பார்வைக்கு வைத்தனர். இந்த உணவுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சுவைத்து பார்த்து சிறப்பாக செய்திருந்த 3 குழுக்களை தேர்ந்தெடுத்தனர்.

    இதன்படி ஏற்காடு ஊராட்சியை சேர்ந்த பி.எல்.எப் குழு, மாரமங்கலம் ஊராட்சியை சேர்ந்த பனித்துளி மகளிர் குழு, வெள்ளக்கடை ஊராட்சியை சேர்ந்த சிறகுகள் மகளிர் குழு ஆகிய குழுக்கள் தேர்தெடுக்கப்பட்டனர். இந்த 3 குழுக்கள் மாவட்ட அளவில் நடைபெற இருக்கும் உணவு ஊட்டச்சத்து திருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன் மற்றும் மோகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • விழாவில் பெற்றோர்களும் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகமூட்டினர்.
    • பள்ளி தாளாளர் கார்த்திகேயன் விழாவை தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக்குலேசன் பள்ளியில் "உணவுத் திருவிழா" கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் கார்த்திகேயன் விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் மாணவர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார் மற்றும் குஜராத் என்று அந்தந்த மாநிலங்களின் சிறப்புமிக்க உணவு வகைகளை சுவை மிகுந்ததாகவும், சத்துள்ளதாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தினர். மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவின் பயன்களையும் மற்றும் செய்முறை விளக்க த்தினையும் எடுத்துரைத்தனர். சமூக அறிவியல் துறையால் தானிய வகைகள் மூலம் அலங்கரிக்க ப்பட்ட 'உலக வரைபடம்" அனைவரையும் கவர்ந்தது. விழாவில் பெற்றோர்களும் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகமூட்டினர். பள்ளி முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிதா பானு,மேலாளர் ராமசாமி ஆகியோர் மாணவர்களையும், அவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டினர்.

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்பு
    • உணவுத் திருவிழா மற்றும் கைவினை கண்காட்சியில் பங்கேற்று பல மாநில அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் பல்வேறு மாநில, யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து உணவுத் திருவிழாவை டெல்லியில் நடத்தியது.

    கடந்த 18-ந் தேதி தொடங்கி  வரை நடக்கும் உணவு திருவிழா வில் புதுவை அரசு சார்பிலும் உணவு, கைவினை கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில் 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பங்கேற்றன.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவின்படி அமைச்சர் லட்சுமி நாராயணன் இந்த உணவுத் திருவிழா மற்றும் கைவினை கண்காட்சியில் பங்கேற்று பல மாநில அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

    உணவு திருவிழாவுக்கு வந்திருந்தவர்கள் புதுவை சார்பில் காட்சிப்படுத்த ப்பட்டிருந்த பிரெஞ்சு, தமிழ் உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தனர்.

    புதுவையின் பாரம்பரிய கைவினை, நடன கலைகளையும் கண்டு ரசித்தனர். கண்காட்சியில் இணை ஆணையர் ரவிதீப்சிங் சாகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கண்காட்சியின் மூலம் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க அரசின் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    • கல்லை தூக்கினால் திருமணமாகும் என அறிவிக்கப்பட்டது
    • ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா நடைபெற்றது.

    இதில் இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறிகள், அரிசி வகைகள், உணவு தானியங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

    இதில் ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான இயற்கை உணவுப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

    மேலும் இளைஞர்கள் விளையாட்டு களம் என்ற பெயரில் இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான இளைஞர்கள் மற்றும் இளம்பெ ண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    இந்த இள வட்டக்கல் தூக்கு பவர்கள் யாராக இருந்தாலும் இந்த ஆண்டே திருமணமாகும் என ஒலிபெருக்கியில் அறிவித்தபடி இருந்தனர். இதில் ஏராளமான இளம்பெண்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டு தூக்கினர்.

    இளவட்டக்கலை பெண் ஒருவர் ஆர்வமுடன் தூக்கும்போது, அவரது நண்பர்கள் செல்போனில் படம் பிடித்து கொண்டனர்.

    அதேபோல் இளவட்டக்கலை சில சிறுவர்களும் தூக்க முயன்றனர்.

    • உயிர் காக்கும் உணவுகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.
    • முன்னதாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் யோகா தியான வகுப்புகள் நடைபெற்றது.

    பவானி:

    இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறை ஈரோடு மற்றும் பவானி சித்த மருத்துவ பிரிவு சார்பில் சர்வதேச யோகா தினம் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா கண்காட்சி பவானி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    விழாவிற்கு சித்த பிரிவு டாக்டர்.கண்ணுசாமி தலைமை வகித்தார். பவானி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர்.கோபாலகிருஷ்ணன், மனவளக்கலை மன்ற ஆறுமுகம், உலக சமாதான ஆலய ஞானாசியர் ரவிச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    சிறு தானியங்கள், பாரம்பரிய உணவு வகைகள், சிறு தானியத்திலான திண்பண்டங்கள், முளைகட்டிய தானியங்கள், தொற்றா நோய்களுக்கான உணவுகள், உணவு உண்ணும் முறைகள், உயிர் காக்கும் உணவுகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.

    முன்னதாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் யோகா தியான வகுப்புகள் நடைபெற்றது. இதில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு நன்னாரி ஜூஸ், நெல்லிக்கனி ஜூஸ், பருத்திப்பால் உள்பட பல்வேறு வகையான ஜூஸ்கள் வழங்கப்பட்டது.

    • கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற பழமொழி கைத்தொழிலின் மேன்மையை உணர்த்துவதாக உள்ளது.
    • மே 14-ந் தேதி வரை தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் கைவினை, உணவு திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    தமிழ்நாட்டை முக்கியமான சுற்றுலா தலமாக உருவாக்கும் வகையில் கலைஞர் கருணாநிதி சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தை 1971-ம் ஆண்டில் உருவாக்கி சுற்றுலா பேருந்து வசதியையும், சுற்றுலா திட்டங்களையும் அறிமுகப்படுத்தி நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு சுற்றுலாத்துறையை விளங்கச் செய்தார். கருணாநிதியால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், 'பூம்புகார்' என்ற வர்த்தக பெயரால் 1.8.1973 அன்று முதல் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கருணாநிதி 1989-ம் ஆண்டு முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்து பெண்கள் தாங்களாகவே வங்கி நடவடிக்கைகள், சுய தொழில் செய்தல், குழுவாக செயல்படுதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுத்தார்.

    அவரது வழியில் தற்போது தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி, சமமான வளர்ச்சி என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நடைபெற்று வருகின்றது. அவர் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா பாதிப்பால் நலிவடைந்த நிலையில் இருந்த சுற்றுலாத்துறை, முதலமைச்சரின் சிறப்பான முன்னெடுப்புகளால் தற்போது விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்றது.

    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சிறு வணிகர்கள், வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என லட்சக்கணக்கானோருக்கு இத்துறையின் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதும், நிரந்தர பொருளாதாரம் மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டும் வருகின்றது.

    தமிழ்நாட்டை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ள சென்னை விழாவில் 10 வெளிநாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்கள் 30 அரங்கங்களில் இடம் பெறுகின்றன. 20 வெளிமாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள், நெசவாளர்களின் படைப்புகள் 83 அரங்கங்களில் இடம் பெற உள்ளன. தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணிவகைகள், பட்டு சேலைகள், கோ –ஆப் டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் 70 அரங்கங்களில் இடம் பெற உள்ளன. மொத்தம் 311 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த கண்காட்சியால் சென்னை பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கைவினை கலைஞர்களின் படைப்புகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழ்நாடு கலை நயமும், பாரம்பரியமும் கொண்டதாகும். தொன்மை வாய்ந்த துறைமுக நகரங்களை கொண்ட தமிழ்நாட்டில் வெளிநாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. ஆள்பாதி, ஆடைபாதி என்பது தமிழ்நாட்டின் பழமொழிகளுள் ஒன்றாகும். இந்த பழமொழி ஆடை நெய்யும் நெசவாளர்களின் புகழை தெரிவிப்பதாக உள்ளது.

    கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற பழமொழி கைத்தொழிலின் மேன்மையை உணர்த்துவதாக உள்ளது. தற்போது நடைபெறும் திருமணங்களில் பெண்களின் ஆடைகள் கைவினைக் கலைஞர்கள் மூலம் நூல் வேலைப்பாடுகள் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுவது கை வினைக் கலைஞர்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

    சென்னை விழாவில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், தூய ஜரிகை சேலைகள், கோரா காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், கோடம்பாக்கம் சேலை கள், பரமக்குடி காட்டன் சேலைகள், ராசிபுரம் தாழம்பூ பட்டு புடவைகள், ஆர்கானிக் கைத்தறி சேலைகள், நெகமம் கைத்தறி சேலைகள், பவானி ஜமுக்காளம், படுக்கை விரிப்புகள், அலங்கார கைத்தறி துணிகள், மேஜை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டுகள், செட்டிநாடு சுங்கடி புடவைகள், ஓவியங்கள், மரவேலைப்பாடுகள், மகளிர் அணிகலன்கள், இயற்கை மூலிகை பொருட்கள், சிப்பிகளால் தயாரிக்கப்பட்ட கலை பொருட்கள், துணிப் பைகள், தஞ்சா வூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், பத்தமடை பாய் உள்பட ஏராளமான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. மேலும் தென்னக கலைபண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாட்டின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மயிலாட்டம், ஒயிலாட்டம் என தினந்தோறும் 5-க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள் பொதுமக்களின் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளன.

    சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சென்னை விழா-கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா மே 14-ந் தேதி வரை தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.

    இந்த திருவிழாவுக்கு நுழைவு கட்டணம் ரூ.10 ஆகும். கண்களுக்கு விருந்து படைக்கும் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்து விட்டு, விதம் விதமாக சாப்பிட்டும் வரலாம்.

    • சென்னையில் 16 இடங்களில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
    • தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. ஒருங்கிணைக்கிறார்.

    தொடர்ந்து 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னையில் 16 இடங்களில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த இடங்கள் வருமாறு:-

    தீவுத்திடல், பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், கொளத்தூர், முரசொலி மாறன் மேம்பால பூங்கா, பெரம்பூர், ராபின்சன் பூங்கா, ராயபுரம், நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், சிந்தாதிரிப்பேட்டை, டென்னிஸ் விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம், டவர் பூங்கா, அண்ணாநகர், ஜெய் நகர் பூங்கா, கோயம்பேடு, ராமகிருஷ்ணா நகர் விளையாட்டு திடல், வளசரவாக்கம், சிவன் பூங்கா, கே.கே.நகர், கடற்கரை சாலை, திருவான்மியூர், அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு திடல், சைதாப்பேட்டை, நடேசன் பூங்கா, தியாகராய நகர்.

    தினமும் கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். அப்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலை வடிவங்களான தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பம்மையாட்டம், தெருக்கூத்து, கட்டைக் கூத்து, கணியன் கூத்து, பொம்மலாட்டம், தோற் பாவைக்கூத்து, சேர்வையாட்டம், தெம்மாங்கு பாட்டு, பெரும் சலங்கையாட்டம், தோடர் நடனம் போன்ற 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

    நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மக்களால் விரும்பி உண்ணப்படும் சுவையான உணவு வகைகளை விற்பனை செய்யும் வகையில் உணவுத் திருவிழாவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விழாக்கள் நடக்கும் இடங்களில் கிராமிய சூழலை உருவாக்கி, பார்வையாளர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வண்ணம் உறியடி, பரமபதம், வழுக்கு மரம் போன்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    • தாளாளர் கீதா தங்கராஜன் உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார்.
    • மாணவ-மாணவிகள் 6 அணிகளாக பிரிந்து பாரம்பரிய உணவு வகைகளை தயார் செய்து அசத்தினார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெருமாள் கோவில் வீதியில் உள்ள ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லூரியில் உணவு திருவிழா நடைபெற்றது. தாளாளர் கீதா தங்கராஜன் உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார். மாணவ-மாணவிகள் 6 அணிகளாக பிரிந்து பாரம்பரிய உணவு வகைகளை தயார் செய்து அசத்தினார்கள்.

    இயற்கை முறையில் விளைந்த பொருட்களை கொண்டு கம்பு தோசை, கம்மங்கூழ், ராகி வடை, சோள பக்கோடா, இளநீர் பாயாசம், புட்டு, கோதுமை அல்வா, சாமை அரிசி உணவு வகைகள், உளுந்து வடை, தேங்காய் பர்பி, ரசகுல்லா, முளை கட்டிய பச்சை பயிறு, புதினா சட்னி, எள்ளுருண்டை, அவல், கோதுமை அடை, கோளா உருண்டை, முட்டை மசாலா, ராகி அடை, மாங்காய் தொக்கு மற்றும் ரசம், சாம்பார் உள்ளிட்ட குழம்பு வகைகள், கேக் வகைகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட இயற்கை முறையிலான உணவு வகைகளை தயாரித்து தனித்திறமைகளை வெளிப்படுத்தினார்கள். முடிவில் சிறந்த உணவு தயாரிப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் பிரவீன் தலைமையிலான மாணவர் அணி முதலிடமும், ஸ்ரீதர் அணி 2-ம் இடமும், யாழினி தலைமையிலான மாணவிகள் அணி 3-ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ், மெடல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ. மெட்ரோ அமைப்பின் தலைவர், செயலாளர் ஆடிட்டர் கார்த்தி, இயக்குனர் பிரசன்னா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். ரோப்டிக் ஆசிரியர் சகாயசுரேஷ், கே.ஆர்.எஸ். பில்டர்ஸ் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்–லூரி முதல்வர் தங்கராஜன் நன்றி கூறினார்.

    • பிம்ஸ் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெறுகிறது.
    • 25- க்கும் மேற்பட்ட உணவு ஸ்டால்களில் பல்வேறு விதமாக உணவுகளை தயாரித்திருந்தனர்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெறுகிறது.

    மருத்துவ மாணவ-மாணவிகள் பங்கேற்ற உணவு திருவிழா மற்றும் கிறிஸ்துமஸ் சிறப்பு விழாவுக்கு பிம்ஸ் முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர் மெட்ராஸ் மறை மாவட்ட மலங்கரா ஆர்தோடக்ஸ் சர்ச் பேராயர் ஜீவர்கீஸ் மார் பிலாக்செனோஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது.

    பின்னர் மருத்துவ மாணவர்களின் ஆராதனை பாடல் இயேசு கிறிஸ்து குறுநாடகம் நடைபெற்றது. குறிப்பாக மருத்துவ மற்றும் செவிலியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களின் உணவு திருவிழா அனைவரையும் கவர்ந்தது.

    25- க்கும் மேற்பட்ட உணவு ஸ்டால்களில் பல்வேறு விதமாக உணவுகளை தயாரித்திருந்தனர். இதன் மூலம் கிடைத்த நிதியினை தொண்டு இல்லங்களுக்கு உதவுவதாக கல்லூரி துணை முதல்வர் மேகி முருகன் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பிம்ஸ் அருட் தந்தை ஜோபி ஜார்ஜ், துணை முதல்வர் டாக்டர் சுனில் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் பாரம்பரிய இயற்கை உணவு திருவிழா நடைபெற்றது.
    • பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் விழாவிற்கு முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் பாரம்பரிய இயற்கை உணவு திருவிழா நடைபெற்றது.

    விழாவிற்கு டாக்டர் வசந்தி நேரு தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மழலையர்களின் பாரம்பரியமான இயற்கை உணவுகளை சுவைத்து பாராட்டினார்.

    புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், லைன்ஸ் கிளப் உறுப்பினர் தேவிகா ஆகியோர் கலந்து கொண்டு மழலையர்களுக்கு இயற்கை உணவின் அவசியத்தை விளக்கி கூறினர்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் விழாவிற்கு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மழலையர்கள் கொண்டு வந்த இயற்கை பாரம்பரி யமான உணவுகளை காட்சிப்படுத்தினர். இது அனைவரையும் கவர்ந்தது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆசிரியைகள் லட்சுமி பிரியா , மகாலட்சுமி , சோனியா , சித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

    ×