search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scam"

    • நாங்கள் அனுப்பும் செயலி மூலமாக முதலீடு செய்தால் போதும், விரைவில் லட்சாதிபதிகளாவும், கோடிசுவர்களாகவும் மாறி விடலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைக்கிறார்கள்.
    • வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளின் எண்களுக்கு முன்னால் பிளஸ் குறியீடு வரும்.

    சென்னை:

    நாடு முழுவதும் செல்போன் பயன்படுத்துவோர்களில் 40 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வாட்ஸ் அப் செயலி வழியாக பல்வேறு தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

    இந்த நிலையில் செல்போன் திரையை அனுப்பி வைக்கும் புதிய வசதி வாட்ஸ் அப்பில் உள்ளது. இதனை பயன்படுத்தி மோசடி பேர்வழிகள் கோடிக்கணக்கில் பணம் சுருட்டி இருப்பது அம்பலமாகி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பேசி வாட்ஸ் அப் பயனாளர்களை மயக்கும் இந்த கும்பல் குறுகிய காலத்தில் நீங்கள் பணக்காரர்கள் ஆகிவிடலாம், நாங்கள் அனுப்பும் செயலி மூலமாக முதலீடு செய்தால் போதும், விரைவில் லட்சாதிபதிகளாவும், கோடிசுவர்களாகவும் மாறி விடலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைக்கிறார்கள்.

    இந்த நிலையில் மோசடி கும்பல் வாட்ஸ் அப் திரைககளையும் விட்டு வைக்கவில்லை. பொதுமக்களிடம் இருந்து வாட்ஸ் அப் திரைகளை அனுப்ப சொல்லி, அதில் உள்ள ரகசிய தகவல்களை மோசடி கும்பல் திருடிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாட்ஸ் அப்பில் பேசி அரசு அதிகாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு உயர் பதவிகளில் இருப்பவர்கள் போல் பேசி இந்த மோசடி ஆசாமிகள் பணத்தை வாரி சுருட்டி உள்ளனர்.

    வியட்நாம், கென்யா, எத்தியோப்பியா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து மோசடி ஆசாமிகள் நாடு முழுவதும் 10 ஆயிரம் கோடி அளவுக்கு பணத்தை சுருட்டி இருக்கிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் ரூ. 10 ஆயிரத்து 319 கோடி அளவுக்கு வாட்ஸ் அப் பயன்படுவோரிடம் இருந்து வெளிநாட்டு மோசடி கும்பல் பணத்தை சுருட்டி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவல் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு செயல்பாட்டு மையம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. எனவே வாட்ஸ் அப்பயன்படுத்துவோர்கள் எந்த எந்த விஷயங்களை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்கள்.

    வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளின் எண்களுக்கு முன்னால் பிளஸ் குறியீடு வரும். அதன் பிறகு 84, 63, 24 என்பது போன்ற எண்களில் இருந்து மோசடி அழைப்புகள் வருகின்றன. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் பொது மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீண்ட நேரம் வாட்ஸ்- அப்பை பயன்படுத்துவோர்களை குறி வைத்து இந்த மோசடி அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    • மோசடியின் பின்னணியில் உள்ள பீகார் கும்பல் பிடிபட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ராஜாஜி நகர், கீரைக்கார தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 47). இவர் பிரபல தனியார் துரித உணவகத்தின் கிளையை அரியலூரில் தொடங்குவதற்காக முடிவெடுத்தார். இதற்காக இணையதளம் ஒன்றில் பதிவு செய்தார். இதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் அந்த இணையதளத்தில் பதிவு செய்தார்.

    இந்நிலையில் அவரை செல்போனில் தொடர்புகொண்ட சிலர் பல்வேறு காரணங்களை கூறி பணம் செலுத்த கூறியுள்ளனர். முன்தொகை மற்றும் தடையில்லா சான்று, பதிவுச்சான்றுக்கு என ரூ.66.20 லட்சத்தை பல்வேறு தவணைகளில் பெற்றனர்.

    ஆனால் துரித உணவகம் திறக்க எந்தவித அனுமதியும் கிடைக்கவில்லை. மேலும் அந்த இணையதளம் போலி என்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கொளஞ்சிநாதன் இலவச இணைய குற்ற புகார் எண் 1930-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

    இதனைதொடர்ந்து திருச்சி மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் உத்தரவின்பேரில், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மேற்பார்வையில், அரியலூர் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிவநேசன்(தொழில்நுட்பம்), போலீசார் சுரேஷ்குமார், சுதாகர், ரஞ்சித்குமார், அரவிந்தசாமி, செல்வமாணிக்கம், வசந்தி ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

    இதை தொடர்ந்து முதற்கட்டமாக குற்றம்புரிய பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்த ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்தை போலீசார் முடக்கினர். மேலும் குற்றவாளிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் கடந்த 9-ந்தேதி பெங்களூருக்கு சென்று பிரபல தனியார் உணவகத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்ட கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முகமது இத்ரீஸ் (39), தருண் (21) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பல்வேறு வங்கிகளில் மொத்தம் 15 வங்கி கணக்குகளை தொடங்கி, 10 சிம்கார்டுகள் உதவியுடன், பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் பீகாரில் உள்ள முக்கிய குற்றவாளிக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

    இதனைதொடர்ந்து, முகமது இத்ரீஸ், தருண் ஆகியோரிடம் இருந்து 2 செல்போன்கள், 4 சிம்கார்டுகள், 4 வங்கி கணக்கு புத்தகங்கள், 5 காசோலை புத்தகங்கள், 5 ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இந்த கும்பல் தமிழகம் முழுவதும் பல்வேறு மோசடியில் ஈடுபட்டிருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    செல்போனில் ஓ.டி.பி. பெற்று மோசடி, ஆன்லைன் லோன் தருவதாக மோசடி, செல்போன் டவர் அமைக்க இருப்பதாக கூறி மோசடி என பல்வேறு நூதனை மோசடிகளை ஆன்லைன் மூலமாக அரங்கேற்றி உள்ளனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த மோசடியின் பின்னணியில் உள்ள பீகார் கும்பல் பிடிபட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் சிலர் பீகர் செல்ல உள்ளனர். பீகார் போலீசார் உதவியுடன் நூதன மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

    • கரூர் அருகே உள்ள தாந்தோணிமலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
    • . அப்போது சரவணன் போலியான நகைகளை வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    கரூர்,நவ

    கரூர் அருகே உள்ள தாந்தோணிமலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் வெங்கமேட்டை சேர்ந்த சரவணன் (வயது 42), அவரது மனைவி செல்வி (45) ஆகியோர் பெரம்பலூர் மெயின் ரோட்டை சேர்ந்த மணி (71), திருச்சியை சேர்ந்த சந்திரசேகரன் (68) ஆகியோரின் உதவியுடன் தங்க நகைகளை அடகு வைத்து ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்து 900-ஐ பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சரவணன் போலியான நகைகளை வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து தனியார் நிதி நிறுவன மேலாளர் தம்மாநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கவுதமன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து கரூர் ஜவகர் பஜாரில் காரில் வந்த சரவணனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம், 3 போலி தங்க காயின், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மணி, சந்திரசேகரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள செல்வியை தேடி வருகின்றனர்.

    கைதான 3 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கபப்ட்டனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

    • சேர்க்கை ஆண்டுதோறும் சென்டாக் அதிகாரிகள் சரியாக நடத்துவதில்லை.
    • அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை இண்டியா கூட்டணி சார்பாக கட்சி தலைவர்கள் கூட்டம் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது.

    கூட்டத்துக்கு மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில அமைப்பாளரும்,எதிர்கட்சி தலைவர்சிவா எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம்,துணை செயலாளர் சேதுசெல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மார்க்சிஸ்டு லெனிஸிட்டு கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர் சோ.பாலசுப்பரமணியன், மார்க்சிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெ.பெருமாள்,ராமச்சந்திரன்,தமிழ்ச்செல்வன்,கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி,பிரபுராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் எதிர்க்கட்சித்தலைவர் சிவா கூறியதாவது:

    புதுவையில் மருத்துவ மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சென்டாக் அதிகாரிகள் சரியாக நடத்துவதில்லை. தொடர்ந்து அரசு குழப்பமாக செயல்பட்டு நடப்பாண்டு மோசடியும், ஊழலும் நடந்துள்ளது. சில அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து புகார் தெரிவித்தும் அரசு பொறுப்பான பதில் தரவில்லை. மருத்துவ கவுன்சில் உத்தரவு களைக்கூட மதிக்கவில்லை. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான உச்சநீதிமன்ற உத்தரவும் மதிக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.இதற்காக நீதிமன்றத்தை நாடவுள்ளோம். இதை மக்களிடம் கொண்டு செல்ல பிரச்சா ரமும் செய்யவுள்ளோம்.

    நாடுமுழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை இயல்பாக நடக்கும்போது ஆண்டுதோறும் புதுவையில் மட்டும் குழப்பம் நிலவுகிறது. உரிய இடங்களைக்கூட கேட்டு பெறவில்லை. முழுமையாக நீதிபதி தலைமை யில் விசாரிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பணத்தையும் ரூ.15 சதவீதம் வட்டியுடன் சேர்த்து முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • அதே நேரத்தில் மீதி உள்ள தொகை பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது.

    மும்பை:

    சஹாரா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுப்ரதாராய் நேற்று முன்தினம் காலமானார்.

    1978-ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் முதலீட்டில் சஹாரா இந்தியா பரிவார் நிறுவனத்தை தொடங்கிய சுப்ரதா ராயின் தலைமையின் கீழ் சஹாரா நிறுவனம் ரியல் எஸ்டேட், மருத்துவமனை, விளையாட்டு, சினிமா, போக்குவரத்து என பல்வேறு துறைகளிலும் கால்பதித்தது. இதனால் சுப்ரதா ராயின் வளர்ச்சி கதை பலருக்கும் வியப்பாக இருக்கும்.

    இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் கோடிக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து மோசடி செய்த வழக்கு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

    சஹாரா இந்தியா பைனான்சியல் கார்ப்பரேஷன் லிமிடெட் மீது ரிசர்வ் வங்கி கடந்த 2008-ம் ஆண்டில் அதன் சிட்பண்ட் செயல்பாடுகளின் கீழ் மக்களிடம் இருந்து எந்த டெபாசிட்களையும் பெற கூடாது என்று தடை விதித்தது. ஆனால் அதை மீறி அந்நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் டெபாசிட்களை பெற்றது.

    இதன் மூலம் 2015-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு டெபாசிட் தொகையை திரும்ப செலுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதே போல நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன் மற்றும் சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட் மென்ட் கார்ப்பரேஷன் ஆகிய 2 நிறுவனங்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலத்தில் முழுமையாக மாற்றக்கூடிய கடனீட்டு பத்திரங்களை வழங்கியதன் மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.17,656 கோடிக்கு அதிகமான பணத்தை விதிமுறைகளை மீறி பொது சந்தையில் வெளியிடாமல் தனிப்பட்ட முறையில் பணத்தை வசூலித்தது.

    இதைத்தொடர்ந்து அந்த பணத்தையும் ரூ.15 சதவீதம் வட்டியுடன் சேர்த்து முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து 2014-ம் ஆண்டு சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தவர் வீழ்ச்சியை சந்தித்தார். பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு 2016-ம் ஆண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், சஹாரா குழும நிறுவனங்கள் முறையற்ற வகையில் திரட்டிய பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்க அரசு தரப்பில் செபி-சஹாரா ரீபண்ட் என்ற பெயரில் தனியாக ஒரு கணக்கு ஆரம்பிக்கப்பட்டது.

    ஜூலை மாதத்தில் இருந்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்தும் பணிகளை தொடங்கிய வேளையில் கடந்த மார்ச் 31-ந்தேதி முடிவில் கோர்ட்டு உத்தரவின் பேரில் சஹாரா குழுமம் இந்த சிறப்பு கணக்கில் ரூ.25,163 கோடியை டெபாசிட் செய்துள்ளது.

    ரூ.25 ஆயிரம் கோடியின் நிலைமை என்ன?

    இந்நிலையில் செபி அமைப்பு சஹாரா குழுமம் தொடர்பாக 17,526 விண்ணப்பங்களுக்கு தொடர்புடைய 48,326 கணக்கில் உரிமையாளர்களுக்கு ரூ.138.07 கோடி வினியோகம் செய்துள்ளது என்றும், இதில் சுமார் 67.98 கோடி வட்டி தொகை மட்டும் என்று செபி அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு இதற்காக தனியாக போர்டல் தொடங்கிய நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ரீபண்ட் அளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு முதல் கட்டமாக 112 முதலீட்டாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரீபண்ட் செய்யப்பட்டது. அதே நேரத்தில் மீதி உள்ள தொகை பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது.

    தற்போது சுப்ரதா ராய் மறைந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு திருப்பி செலுத்தப்படாமல் செபி வசம் இருக்கும் இந்த தொகையின் நிலைமை என்ன என்பது மிகப்பெரிய பேசு பொருளாகி இருக்கிறது. 

    • வங்கியில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஹேமலதா காத்து நின்றார்.
    • சிறிது நேரம் கழித்து வந்த மர்ம நபர் பணம் செலுத்திவிட்டதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா (22). இவர் ரூ.36 ஆயிரத்துடன் தனது வங்கி கணக்கில் பணம் செலுத்துவதற்காக கே.கே நகர் ஆர்.கே சண்முகம் சாலையில் உள்ள வங்கிக்கு சென்றார். வங்கியில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஹேமலதா காத்து நின்றார் அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஹேமலதாவிடம் நைசாக பேச்சு கொடுத்தார் மேலும் வங்கி ஊழியர்கள் அனைவரையும் தனக்கு நன்றாக தெரியும் ஆகவே கவுண்ட்டரில் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று பணம் செலுத்தி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார் இதை உண்மை என்று நம்பிய ஹேமலதா ரூ36ஆயிரம் ரொக்கத்தை அவரிடம் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து வந்த மர்ம நபர் பணம் செலுத்திவிட்டதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    பின்னர் அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்குள் சென்ற ஹேமலதா தனது வங்கி கணக்கில் பணம் ஏதும் செலுத்தப்படவில்லை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார் மேலும் பணம் செலுத்திவிட்டதாக கூறிய மர்ம நபர் நூதனமான முறையில் பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது.

    • வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புகிறேன். அதனை கஷ்டப்படுபவர்களுக்கு கொடுங்கள் என்று பெண் ஒருவர் கூறியுள்ளார்.
    • வங்கி கணக்கில் உள்ள அமெரிக்க டாலர்களை எடுப்பதற்கு வரியாக ரூ.6 லட்சம் செலுத்த வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள லத்திகுளத்தை சேர்ந்தவர் மாடசாமி (வயது 42). இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது முகநூல் பக்கத்தை செல்போனில் பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் வந்த விளம்பரத்தை பார்த்துள்ளார்.

    அப்போது அதில் கொடுக்க ப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது எதிர்புறம் பேசிய பெண் ஒருவர் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புகிறேன். அதனை இந்தியாவில் கஷ்டப்படு பவர்களுக்கு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

    அதனை உண்மை என்று மாடசாமி நம்பி உள்ளார். தொடர்ந்து அவரது செல்போனுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதற்கிடையே சில நாட்களில் மாடசாமியை தொடர்பு கொண்ட மற்றொரு நபர் வருமான வரி அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களது வங்கி கணக்கில் அமெரிக்க டாலர்கள் இருப்பதை எடுப்பதற்கு வரியாக ரூ.6 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

    அதனை உண்மை என்று நம்பிய மாடசாமி அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி பல்வேறு தவணைகளாக ரூ.6 லட்சத்து 47 ஆயிரத்து 300-ஐ செலுத்தியுள்ளார். அதன் பின்னர் அவர் அந்த நபரை தொடர்பு கொண்ட போது அந்த செல்போன் 'சுவிட்ச் -ஆப்' ஆக இருந்துள்ளது.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாடசாமி நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • போலீசார் 2 ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • பாரதியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பழனிவேலை தேடி வருகின்றனர்.

    கோவை.

    கோவை தண்ணீர் பந்தல் ரோட்டை சேர்ந்தவர் சிவகுமார் (49). இவர் கோவை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது நண்பர் ஒருவர் மூலமாக ரியல் எஸ்டேட் புரோக்கர்களான பழனி வேல், பாரதி ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் என்னை போனில் தொடர்பு கொண்டனர்.

    அப்போது, அவர்கள் ரேஸ் கோர்ஸ் பகுதியில் 3.04 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது. அந்த இடத்தின் விலை ரூ.40 கோடி என தெரிவித்தனர். அதனை நீங்கள் வாங்கி கொள்கிறீர்களா? என கேட்டனர்.

    நானும் சம்மதம் தெரி வித்து, இடத்தை பார்க்க வேண்டும் என கூறினேன். இதையடுத்து 2 பேரும் என்னை, இடத்தை பார்க்க அழைத்து சென்றனர்.

    இடத்தை பார்த்ததும் எனக்கு பிடித்து போகவே முன்பணமாக ரூ.50 லட்சம் கொடுத்தேன். சில நாட்கள் கழித்து நான் கிரையம் செய்வதற்காக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றேன்.

    அப்போது நான் வாங்கிய நிலம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    இதையடுத்து நான் பழனிவேல், பாரதியிடம் எனது பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தை இதுவரை திருப்பி வரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புகாரின் பேரில் போலீசார் பழனிவேல், பாரதி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் கோவையில் இருந்த பாரதியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பழனிவேலை தேடி வருகின்றனர்.

    • ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி 2 லட்சம் பேரிடம் ரூ.1000 கோடி மோசடி செய்துள்ளனர்.
    • கோவிந்தாவுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருக்குமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலிவுட் திரை உலகில் புகழ் பெற்ற நடிகராக விளங்கியவர் கோவிந்தா.

    இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் நாடு முழுவதும் அதிக வட்டி மற்றும் போனஸ் தருவதாக கூறி பொது மக்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்துள்ளது.

    இந்த திட்டங்களை நடிகர்களை வைத்து விளம்பரப்படுத்தி உள்ளது. இதில் பாலிவுட் நடிகர் கோவிந்தா இந்த நிறுவனம் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஒடிசாவில் மட்டும் 10 ஆயிரம் பேரிடம் ரூ.30 கோடியை வசூலித்துள்ளனர். இது தவிர மகாராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, டெல்லி உள்பட பல மாநிலங்களில் வசூல் வேட்டையை கோடிக்கணக்கில் நடத்தியுள்ளது.

    இது குறித்து ஒடிசா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளை கைது செய்துள்ளனர்.

    முதலீட்டாளர்களிடம் கூடுதல் முதலீட்டாளர்களை அழைத்து வந்தால் அதற்கு வட்டி மற்றும் போனஸ் அதிகமாக கிடைக்கும் என்று ஆசை காட்டி உள்ளனர். ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி 2 லட்சம் பேரிடம் ரூ.1000 கோடி மோசடி செய்துள்ளனர்.

    இந்நிலையில் கோவாவில் கடந்த ஜூலை மாதம் நடந்த இந்த நிறுவனத்தின் விழாவில் நடிகர் கோவிந்தா நிறுவனத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

    எனவே கோவிந்தாவுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருக்குமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து ஒடிசா பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி பங்கஜ் கூறுகையில், "இதுவரை கோவிந்தாவை நாங்கள் சந்தேகப்படவில்லை. அவரிடம் விசாரணை நடத்திய பிறகுதான் அவருக்கு எந்த அளவுக்கு பங்கு உள்ளது என தெரியும். அவரை இந்த வழக்கில் சாட்சியாக மட்டும் சேர்த்துக் கொள்வோம். அவரிடம் விசாரணை செய்ய தனிப்படை போலீசார் மும்பை செல்ல உள்ளனர்" என்று தெரிவித்தார்.

    • ஒருவர் பட்டபடிப்பு படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார்.
    • உன்னால் ஆனதைப் பார் என மிரட்டும் வகையில் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பட்டபடிப்பு படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது வடுகபாளையம்புதூரை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கிராம உதவியாளர் வேலைக்கு அவரை சேர்த்து விடுவதாகவும், அதற்கு ரூ.6 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளார். அரசு வேலைக்கு ஆசைப்பட்ட அந்த வாலிபரின் குடும்பத்தினர் அந்தப் பிரமுகரிடம் 2 தவணைகளாக ரூ. 6 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணம் கொடுத்து 10 மாதங்கள் ஆகியும் வேலை கிடைக்காததால் அவரிடம் பணத்தைத் திருப்பி கொடுக்குமாறு வற்புறுத்தி உள்ளனர்.

    அவர் பணம் என்னிடம் இல்லை . திருப்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுத்துள்ளேன். அவர் அமைச்சர் ஒருவரிடம் கொடுத்து வேலைக்காக பேசிக்கொண்டு உள்ளார் என கூறியுள்ளார். மீண்டும், மீண்டும் பணம் கேட்கவே பணத்தைத் திருப்பித் தர முடியாது , உன்னால் ஆனதைப் பார் என மிரட்டும் வகையில் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வேலைக்காக பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர் மற்றும் பணம் பெற்றவர் பேசிக் கொள்ளும் ஆடியோ பல்லடம் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சமூகவலைதளத்தில் நண்பராக பழகி கைவரிசை
    • லண்டன் வாலிபர் கிளிண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை காளப்பட்டி அருகே உள்ள திருமுருகன் நகரை சேர்ந்தவர் 37 வயது இளம்பெண். இவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதா வது:-

    நான் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறேன். இந்த நிலையில் எனக்கு கடந்த மார்ச் மாதம் பேஸ்புக் பக்கம் மூலமாக லண்டனை சேர்ந்த கிளிண்டன் என்ப வருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தோம். பின்னர் வாட்ஸ்அப் எண்ணை மாற்றிக் கொண்டு அதன் மூலம் பேசி வந்தோம். அவர் என்னிடம் லண்டனில் உள்ள பிரபல கார் நிறுவ னத்தில் விற்பனை மேலாள ராக வேலை பார்த்து வருவதாக கூறினார்.

    மேலும் அவர் என்னிடம் கிறிஸ்துமல் பண்டிகை சுற்றுலாவில் இந்தியாவுக்கு வர உள்ளதாக கூறினார். கிளிண்டன் என்னிடம் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் வைத்து இருப்பதாகவும், அதனை எனக்கு பார்சல் மூலமாக அனுப்புவதாகவும் கூறினார். பின்னர் என்னை தொடர்பு கொண்ட அவர் நகைகளை பார்சல் மூலமாக அனுப்பி விட்டதாகவும், டெல்லியில் விமான நிலையத்தில் உள்ள சுங்க த்துறை அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்வார்கள் அவர்கள் கூறும் வங்கி கணக்கிற்கு வரியை செலுத்தி நகை களை பெற்றுக்கொள்ளு மாறு கூறினார். இதனை தொடர்ந்து என்னுடைய செல்போன் எண்ணுக்கு டெல்லி விமான நிலை யத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒருவர் பேசினார். அவர் என்னிடம் பார்சல் வந்துள்ளதாகவும், அதற்கு வரியாக ரூ.32 ஆயிரத்தை அவர் கூறி வங்கி கண க்கிற்கு அனுப்பி வைக்கு ம்படி கூறினார். இதனை உண்மை என நம்பிய நான் பணத்தை அவர் கூறி வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அவர் பணம் வரவி ல்லை என்று கூறி விட்டனர்.

    அவர்கள் என்னிடம் நகைகள் இருப்பதாக தொடர்ந்து ஆசை வார்த்தை கூறினர்.

    இதனையடுத்து நகைகளை பெற்றுக்கொ ண்டால் போதும் என்ற நோக்கில் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு வெவ்வேறு பரிவர்த்த னைகளில் ரூ.15 லட்சத்து 22 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத் தேன். ஆனால் அவர்கள் கூறியபடி எனக்கு நகைகள் வந்து சேரவில்லை.

    அவர்களது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் இவர்கள் மோசடி நபர்கள் என்பது எனக்கு தெரிய வந்தது.

    எனவே என்னிடம் பேஸ்புக் மூலம் நண்பராக பழகி நகைகள் பார்சல் அனுப்பி வைத்துள்ளதாக நம்ப வைத்து ரூ.15 லட்சத்து 22 ஆயிரம் பணத்தை மோசடி செய்த கிளிண்டன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் பேஸ்புக் மூலம் நண்பராக பழகி தனியார் பள்ளி ஆசிரி யையிடம் ரூ.15 லட்சத்து 22 ஆயிரம் பணத்தை மோசடி செய்த கிளிண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் தோற்றத்தையும் நடத்தையையும் பிரதிபலிக்கும் வகையில் டீப்பேக் தொழில் நுட்பத்தால் கவனமாக வடிவமைக்கப்படுகிறது.
    • www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.

    சென்னை:

    ஏ.ஐ. என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.

    இதன் மூலமாக மனிதர்களை போன்று மாற்று உருவத்தை உருவாக்க முடியும் என்பதை பயன்படுத்தி போலியான நபர்களை உருவாக்கி திடுக்கிட வைக்கும் துணிகர மோசடி அரங்கேற தொடங்கி இருப்பதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    டீப்பேக் தொழில்நுட்பம், உண்மையான ஆடியோ, வீடியோ அல்லது புகைப்படங்களைப் போன்று போலியான ஆடியோ, வீடியோ அல்லது புகைப்படங்கள் உருவாக்க உபயோகிக்கப்படுவதால் பல்வேறு வகையான மோசடிகளைச் செய்வதற்கு வழி வகுக்கிறது.

    ஆரம்பத்தில், இந்தத் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகப் திரைப்படத் தயாரிப்பாளர்களால் தடையின்றி நடிகர்களை காட்சிகளில் ஒருங்கிணைக்கவும் அல்லது வரலாற்று நபர்களைப் போல சித்தரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், தொழில்நுட்பம் வளர்ந்தவுடன், குற்றவாளிகள் இந்த சக்தியைப் தவறாகப் பயன்படுத்த முற்படுகிறார்கள்.

    செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ அழைப்பு மோசடியானது அரங்கேற தொடங்கி உள்ளது.

    மோசடி செய்பவர்கள் முதலில் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போன்ற நம்பகமான நபர்களின் திருடப்பட்ட படங்கள் அல்லது ஆன்லைனில் கிடைக்கும் புகைப்படங்களைப் பயன்படுத்தி, அவர்களைப் போல் ஒரு போலி கணக்கை உருவாக்குகின்றனர்.

    செயற்கை நுண்ணறிவு மூலம் டீப் பேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் யதார்த்தமான வீடியோ அழைப்புகளை சமூக ஊடகங்கள், டேட்டிங் செயலிகள் அல்லது பிற ஆன்லைன் தளங்களில் உருவாக்கி பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது சக ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்து அவர்களை ஏமாற்றுகிறார்கள். பின்னர், பாதிக்கப்பட்டவரிடம் அவசர உணர்வை உண்டாக்கி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்புமாறு கூறுகின்றனர்.

    ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் தோற்றத்தையும் நடத்தையையும் பிரதிபலிக்கும் வகையில் டீப்பேக் தொழில் நுட்பத்தால் கவனமாக வடிவமைக்கப்படுகிறது. வீடியோவை கையாளுதலுடன் கூடுதலாக, மோசடி செய்பவர் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட குரல் தொகுப்பைப் பயன்படுத்தி, ஆள் மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் குரலைப் பிரதிபலிக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு வீடியோ அழைப்பு மோசடிகளை எவ்வாறு தடுப்பது என சைபர் கிரைம் கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் குமார் கூறியதாவது:-

    தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்.

    நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது சக பணியாளர் எனக் கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து வீடியோ அழைப்பைப் பெறும்போது, பணப் பரிமாற்றம் செய்வதற்கு முன் அவர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க அவர்களின் தனிப்பட்ட மொபைல் எண்ணுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவும்.

    ஆன்லைனில் நீங்கள் பகிரும் தனிப்பட்ட தகவலின் அளவைக் கட்டுப்படுத்துங்கள் மற்றும் உங்கள் தகவலுக்கான அணுகலைக் கட்டுப் படுத்த சமூக ஊடகத்தளங்களில் உள்ள தனியுரிமை அமைப்புகளைச் சரிசெய்யவும்.

    அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து உங்கள் கணக்குகளைப் பாதுகாக்க, பல காரணி அங்கீகாரம் மற்றும் பிற அடையாளச் சரிபார்ப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தவும்.

    நீங்கள் இது போன்ற வீடியோ கால் மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றவும்.

    சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.

    மோசடி நடந்த தளத்தை தொடர்பு கொண்டு மோசடி செய்தவரின் சுயவிவரத் தகவல் மற்றும் நீங்கள் சேகரித்த ஆதாரங்கள் உட்பட அனைத்து தொடர்புடைய விவரங்க ளையும் அவர்களிடம் வழங்கவும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கேரள மாநிலத்தில் இந்த மோசடி நடைபெற்றிருப்பதாகவும் அதன் காரணமாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×