search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேஸ்புக் மூலம் தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.15 லட்சம் மோசடி
    X

    பேஸ்புக் மூலம் தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.15 லட்சம் மோசடி

    • சமூகவலைதளத்தில் நண்பராக பழகி கைவரிசை
    • லண்டன் வாலிபர் கிளிண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை காளப்பட்டி அருகே உள்ள திருமுருகன் நகரை சேர்ந்தவர் 37 வயது இளம்பெண். இவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதா வது:-

    நான் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறேன். இந்த நிலையில் எனக்கு கடந்த மார்ச் மாதம் பேஸ்புக் பக்கம் மூலமாக லண்டனை சேர்ந்த கிளிண்டன் என்ப வருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தோம். பின்னர் வாட்ஸ்அப் எண்ணை மாற்றிக் கொண்டு அதன் மூலம் பேசி வந்தோம். அவர் என்னிடம் லண்டனில் உள்ள பிரபல கார் நிறுவ னத்தில் விற்பனை மேலாள ராக வேலை பார்த்து வருவதாக கூறினார்.

    மேலும் அவர் என்னிடம் கிறிஸ்துமல் பண்டிகை சுற்றுலாவில் இந்தியாவுக்கு வர உள்ளதாக கூறினார். கிளிண்டன் என்னிடம் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் வைத்து இருப்பதாகவும், அதனை எனக்கு பார்சல் மூலமாக அனுப்புவதாகவும் கூறினார். பின்னர் என்னை தொடர்பு கொண்ட அவர் நகைகளை பார்சல் மூலமாக அனுப்பி விட்டதாகவும், டெல்லியில் விமான நிலையத்தில் உள்ள சுங்க த்துறை அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்வார்கள் அவர்கள் கூறும் வங்கி கணக்கிற்கு வரியை செலுத்தி நகை களை பெற்றுக்கொள்ளு மாறு கூறினார். இதனை தொடர்ந்து என்னுடைய செல்போன் எண்ணுக்கு டெல்லி விமான நிலை யத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒருவர் பேசினார். அவர் என்னிடம் பார்சல் வந்துள்ளதாகவும், அதற்கு வரியாக ரூ.32 ஆயிரத்தை அவர் கூறி வங்கி கண க்கிற்கு அனுப்பி வைக்கு ம்படி கூறினார். இதனை உண்மை என நம்பிய நான் பணத்தை அவர் கூறி வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அவர் பணம் வரவி ல்லை என்று கூறி விட்டனர்.

    அவர்கள் என்னிடம் நகைகள் இருப்பதாக தொடர்ந்து ஆசை வார்த்தை கூறினர்.

    இதனையடுத்து நகைகளை பெற்றுக்கொ ண்டால் போதும் என்ற நோக்கில் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு வெவ்வேறு பரிவர்த்த னைகளில் ரூ.15 லட்சத்து 22 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத் தேன். ஆனால் அவர்கள் கூறியபடி எனக்கு நகைகள் வந்து சேரவில்லை.

    அவர்களது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் இவர்கள் மோசடி நபர்கள் என்பது எனக்கு தெரிய வந்தது.

    எனவே என்னிடம் பேஸ்புக் மூலம் நண்பராக பழகி நகைகள் பார்சல் அனுப்பி வைத்துள்ளதாக நம்ப வைத்து ரூ.15 லட்சத்து 22 ஆயிரம் பணத்தை மோசடி செய்த கிளிண்டன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் பேஸ்புக் மூலம் நண்பராக பழகி தனியார் பள்ளி ஆசிரி யையிடம் ரூ.15 லட்சத்து 22 ஆயிரம் பணத்தை மோசடி செய்த கிளிண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×