search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mosques"

    • நாளை பக்ரீத் பண்டிகை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.
    • குர்பானிக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் தயார் நிலையில் உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை ஜூன் (29-ந்தேதி) பக்ரீத் பண்டிகை கொண்டாடப் படுகிறது. இதனை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட ஜூம்ஆ பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    ராமநாதபுரத்தில் ரம்ஜான் மற்றும் பக்ரீத் சிறப்பு தொழுகைகள் மதுரை ரோட்டில் உள்ள ஈதுகா மைதானத்தில் நடை பெறுவது வழக்கம். இந்த முறை சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மைதானம் ஈரமாக இருப்பதால் இங்கு நடைபெற இருந்த தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலாக நகர் முழுவதும் ஆங்காங்கே அமைந்துள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெறும் என்று முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். தொழுகை முடிந்ததும் குர்பானிக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் தயார் நிலையில் உள்ளது.

    நாளை காலை 7 மணி முதல் தக்பீர் முழக்கத்துடன் பள்ளிவாசல்கள் மற்றும் திறந்த வெளி மைதானங்க ளிலும் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது. சொந்த ஊர்களில் நடைபெறும் தொழுகையில் கலந்து கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடவும், வளை குடா நாடுகளில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதன் காரணமாக மக்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.

    • பள்ளிவாசல்களில் புனித இரவு தொழுகை நடந்தது.
    • திரளானோர் பங்கேற்றனர்.

    கீழக்கரை

    ரம்ஜான் மாதத்தில் லைலத்துல் கத்ரு எனப்படும் புனித இரவில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து இரவு முழுவதும் தூங்காமல் பள்ளிவாசல்களில் திருக்குரான் ஓதி சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். இதன்படி நேற்று புனித இரவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி , பெரியபட்டணம், பனைக்குளம், திருப் புல்லாணி உள்பட மாவட் டத்தின் பல்வேறு பகுதி களிலும் உள்ள ஜும்மா பள்ளி வாசல்களில் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இதில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து நறுமணம் பூசி தொழுகை மற்றும் சிறப்பு துஆவில் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின் உலக நன்மைக்காகவும், மக்கள் அனைவரும் நலமுடன் வாழவும், திருக்குர்ஆன் ஓதி சிறப்பு துஆ செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று இரவு பள்ளிவாசல்களில் விடிய விடிய இஸ்லாமிய மக்கள் திருக்குர்ஆன் ஓதி இறைவனை தொழுதனர்.

    அனைத்து ஊர்களிலும் ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதிகாலை அனைத்து பள்ளி வாசல் களிலும் நோன்பு நோற்பதற்காக சகர் உணவு வழங்கப் பட்டது. பெண்களுக்கான தொழுகை மதரசாக்களிலும், வீடுகளிலும் நடந்தது.

    • ராமநாதபுரம் மாவட்ட பள்ளிவாசல்களில் ஆட்டுக்கறி கலந்த நோன்பு கஞ்சி வினியோகிக்கப்பட்டது.
    • பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

    ராமநாதபுரம்

    ரமலான் மாதம் பிறந்து விட்டாலே எங்கு பார்த்தாலும் நோன்புக்கஞ்சியின் வாசம் கமகமக்கும். அதிகாலையிலிருந்து மாலை வரை நோன்பை கடைப்பிடிக்கும் நோன்பாளிகளுக்கு உடலுக்கு சக்தி அளிக்கும் உணவாக விளங்குகிறது.

    நோன்பு கஞ்சி நோன்பாளிகளுக்காக தயாரிக்கப்பட்டாலும், அனைத்து சமுதாய மக்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். கஞ்சியின் கூடுதல் சுவைக்காக ஆட்டு இறைச்சி சேர்த்து வருகின்றனர். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் சோர்வை நீக்கி, உடலின் வெப்பத்தை தணித்து, ஜீரணசக்தியை ஏற்படுத்துகிறது. திட உணவில் இது போன்ற சத்து இருப்பதில்லை. பக்க விளைவில்லாத உணவாக இருப்பதால் நோன்பு திறக்க நோன்பு கஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுக்கு ஒரு மாதம் நோன்பு கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.

    கீழக்கரை, ராமநாதபுரம், ஏர்வாடி, தொண்டி, மண்டபம், பாம்பன், பனைக்குளம், அழகன்குளம், சித்தார்கோட்டை, தேவிபட்டிணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நோன்புக்கஞ்சி பள்ளிவாசல்களில் மட்டு மில்லாமல் வீடுகளிலும் தயார் செய்து நோன்பு கஞ்சியை ஏழை,எளிய மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    ஒவ்வொரு கிராமங்களிலும் முஸ்லிம் மக்கள் இறைவன் தனக்கு அளித்த வாய்ப்பாக கருதி போட்டி போட்டு ஆர்வமாக வந்து தங்களது சொந்த செலவில் நோன்பு கஞ்சியை முஸ்லிம் ஜமாத் மூலமாக வழங்கி வருகின்றனர். நோன்பு கஞ்சிக்காக ஏராளமானோர் விண்ணப்பித்தால் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் குலுக்கல் முறையில் நன்கொடையா ளர்களை தேர்வு செய்கின்றனர்.

    முஸ்லிம் மக்கள் மட்டுமில்லாமல் அனைத்து சமூக மக்களும் விரும்பி பருகுவதால் தநல்லிணக்கத்தின் மறு பெயராகவும், ரமலான் மாதத்தின் அடையாளமாகவும் நோன்புக்கஞ்சி திகழ்கிறது என்றால் மிகையாகாது.

    • ரம்ஜான் நோன்பு தொடங்கியதை முன்னிட்டு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.
    • 120 கிலோ அரிசி கொண்டு நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    ரம்ஜான் நோன்பு தொடங்கியதை முன்னிட்டு திருப்பூர் நகரில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன. மாலை தொழுகை முடிந்து நோன்பு துறக்கும் நேரம் துவங்கிய பின் அவர்கள் பருகும் வகையில் பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது.

    திருப்பூர் பெரிய பள்ளி வாசலில் நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கப்படுகிறது. இது குறித்து பள்ளிவாசல் செயலாளர் ஷாஜகான் கூறியதாவது :- பெரிய பள்ளிவாசல் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுப்பகுதி பள்ளி வாசல் மற்றும் பிற பகுதியினருக்கும் நோன்பு கஞ்சி வழக்கமாக இங்கிருந்து வழங்கப்படும்.அவ்வகையில் தினமும் சராசரியாக 120 கிலோ அரிசி கொண்டு நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கப்ப டுகிறது. ரமலான் பண்டிகை நாள் வரையிலான அளவு நோன்பு கஞ்சி வழங்குவத ற்கான பொருள் தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
    • இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரித் பண்டிகை ஆகும். இன்று நாடு முழுவதும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

    மதுரை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடி னர். இதனை முன்னிட்டு முஸ்லிம்கள் அனைவரும் புத்தாடை அணிந்து உற்சா கத்துடன் அதிகாலை நேரத்தில் மசூதிக்கு புறப்பட்டு சென்றனர்.

    மதுரை மாநகரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசரடி ஈத்கா மைதானம், காஜிமார் தெரு பெரிய பள்ளிவாசல், சிம்மக்கல் மக்கா ஜும்மா‌‌ பள்ளிவாசல், நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல், முனிச்சாலை கரீம்ஷா பள்ளிவாசல், கோரிப்பாளையம் தர்ஹா பள்ளிவாசல், முஸ்லிம் மேலகார ஜமாத் பள்ளி வாசல். மாட்டுத்தாவணி பள்ளிவாசல், டவுன் ஹால் ரோடு மசூதி சம்மட்டிபுரம் புதுப்பள்ளிவாசல் உள்பட பல்வேறு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு தொழுகையின் முடிவில் இஸ்லாமிய மத குருமார்கள் பக்ரீத் பண்டிகையின் முக்கியத்து வம், நடைமுறைகள் மற்றும் நன்மைகள் குறித்து கூறினர்.

    பக்ரித் பெருநாள் தொழு கையை நிறைவேற்றிய பிறகு இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் இறை வனுக்கான கடமையை நிறைவேற்றும் வகையில், ஆடுகளை பலியிட்டு, இறைச்சிகளை ஏழை எளியோருக்கு வழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர்.

    • உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் இரண்டு பெருநாளை கொண்டாடுவார்கள்.
    • ஈதுல் அல்ஹா எனும் இந்த தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் இரண்டு பெருநாளை கொண்டாடுவார்கள். ஒன்று ரம்ஜான் பண்டிகை. மற்றொன்று பக்ரீத் பண்டிகை ஆகும்.புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்து அதன் இறுதியில் கொண்டாடப்படுவது ரம்ஜான் பண்டிகையாகும்.

    இந்த நிலையில் நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்–பட்டது. இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இப்ராஹீம் நபி தான் கண்ட கனவின்படி தனது மகன் இஸ்மாயிலை அறுத்துப் பலியிட துணிந்தார். அப்போது வந்த இறைக்கட்டளை மகனை அறுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஒரு ஆட்டை இறைவனுக்காக பலியிடுமாறும் கூறப்பட் டது. அத–ன்படியே அவர் அக்கடமையை நிறைவேற்றினார்.இறைக்கட்டளை என்ற தும் தனது மகனையே பலி கொடுக்க முயன்ற இந்தத் தியாகம் தான் இந்த பண்டிகையின் பின்னணியாகும்.

    இந்த தியாகத் திருநாளில் சிறப்பு தொழுகை நடத்தியும், கால்நடைகளான ஆடு, மாடு, ஒட்டகங்களை பலியிட்டு அதன் இறைச்சிகளை உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்தும் கொண்டாடப்படும்.ஈதுல் அல்ஹா எனும் இந்த தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அைனத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பள்ளிவாசலில் திருப்பூர் மாநகர பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்காேனார் ஒன்று கூடி உலக அமைதி வேண்டி கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இதுபோல் திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியிலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதிலும் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று பக்ரீத் பண்டிகை தொழுகையில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் பெரிய பள்ளிவாசல், காதர்பேட்டை பள்ளிவாசல், கோம்பைத்தோட்டம் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் இன்று காலை பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. அதுபோல் பெரிய பள்ளிவாசலில் தொழுகை நடந்தது. சி.டி.சி. கார்னர் அல் அமீன் பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர். பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, குர்பானி கொடுத்து கொண்டாடினர்.

    • 200 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
    • தமிழகம் முழுவதும் நாளை (10-ந்தேதி) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் நாளை (10-ந்தேதி) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஜூம்ஆ பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தொழுகை முடிந்ததும் குர்பானிக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் தயார் நிலையில் உள்ளது.

    இறைத்தூதர் இபுராகிம் (அலை) தியாகத்தை கொண்டாடும் வகையில் முஸ்லிம் மக்கள் ஆண்டு தோறும் துல்ஹஜ் மாதம் பிறை 10-ல் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.

    நாளை காலை 7 மணி முதல் தக்பீர் முழக்கத்துடன் மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் திறந்தவெளி மைதா னங்களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடக்கிறது.

    முன்னதாக பள்ளிவா சலில் பேஷ் இமாம்கள் பக்ரித் பண்டிகையின் சிறப்புகள் குறித்து பயான் (சொற்பொழிவு) நடைபெறும். தொழுகைக்கு பின் உலக மக்களின் அமைதிக்காகவும், மத நல்லிணக்கம் தொடரவும் சிறப்பு துவா நடைபெற்று தொழுகை நிறைவடையும். இதைத்தொடர்ந்து வீடுகளில் ஆடுகள், மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சிகளை உறவினர்களுக்கும், ஏழை களுக்கும் வழங்குவார்கள்.

    ராமநாதபுரத்தில் வெளிப்பட்டணம், சின்னக்கடை, பாரதிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும், கீழக்கரையில் தெற்குத்தெரு, நடுத்தெரு, பழைய குத்பா பள்ளி, வடக்குத்தெரு, மேலத்தெரு உள்பட 13-க்கும் அதிகமான பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகை நடைபெறுகிறது.

    இதேபோல் பனைக்குளம், என்மனங்கொண்டான், ஏர்வாடி, மண்டபம், பாம்பன், ராமேசுவரம், பெருங்குளம், பெரியபட்டி னம், தேவிபட்டினம், சித்தார் கோட்டை, அழகன்குளம், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    சொந்த ஊரில் நடை பெறும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு குடும்பத்துடன் பெருநாள் கொண்டாட வளைகுடா நாடுகளில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடு களில் இருந்தும் ஏராள மானோர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.

    இஸ்லாமிய பெண்களும் மசூதிகளுக்குள் சென்று தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கில் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SCissuesnotice #Muslimwomen #mosqueentry
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரை சேர்ந்த ஒரு இஸ்லாமிய தம்பதியர் இஸ்லாமிய பெண்களும் மசூதிகளுக்குள் சென்று தொழுகை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    மத்திய-மாநில அரசின் நிதியுதவி மற்றும் சில சலுகைகளுடன் இயங்கிவரும் மசூதிகளில் பாலின பாகுபாட்டை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள சமத்துவத்துக்கு எதிரானது என தங்களது மனுவில் அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மசூதிகளுக்குள் பெண்கள் வழிபாடு செய்ய கூடாது என்று விதிக்கப்பட்டுள்ள தடையால் பெண்களின் சமஉரிமையும், கண்ணியமும் கேள்விக்குள்ளாவதாக குறிப்பிட்டார்.

    அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு ‘அரசியலமைப்பு சட்டம் 14-வது பிரிவின்படி ஒரு நாட்டிடம் கோர வேண்டிய உரிமையை தனிநபர்கள் (மசூதி நிர்வாகம்) மீது திணிக்க முடியுமா?, வேறு எந்த நாட்டிலாவது இஸ்லாமிய பெண்கள் மசூதிகளுக்குள் தொழுகை நடத்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளதா?  என்று கேள்வி எழுப்பினர்.



    இதற்கு பதிலளித்த மனுதாரரின் வழக்கறிஞர் மெக்காவில் உள்ள பெரிய மசூதி மற்றும் கனடா நாட்டில் உள்ள பல மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி உண்டு என தெரிவித்தார்.

    இதனையடுத்து, மனுதாரர்களின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு? என்ன என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    முன்னர் சபரிமலை தீர்ப்பு விவகாரம்போல் இந்த வழக்கின் தீர்ப்பும் ஆகிவிடாமல் இருப்பதற்காகவே மத்திய அரசிடம் முன்கூட்டியே விளக்கம் கேட்கப்படுவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    (சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என முன்னர் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விளக்கம் கேட்டிருந்தது.

    அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் கோர்ட் எடுக்கும் முடிவுக்கு அரசு கட்டுப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என 5 நீதிபதிகளை கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பளித்திருந்தனர். ஒரு நீதிபதி மட்டும் எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

    ஆனால், பெரும்பான்மையான நீதிபதிகளின் கருத்தின் அடிப்படையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் வழிபாடு செய்யலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வெளியானது.

    பின்னர், மத்தியில் ஆளும் பாஜகவை சேர்ந்த பலர் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றை நடத்தினர். மேலும், இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் இருமுடியுடன் வந்த பல பெண்களை மிரட்டி, திருப்பி அனுப்பி விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.)

    இப்படி, சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மதிப்பில்லாமல் போனதை இன்று சூசகமாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘முன்னர் சபரிமலை தீர்ப்பு விவகாரம்போல் இந்த வழக்கின் தீர்ப்பும் ஆகிவிடாமல் இருப்பதற்காகவே மத்திய அரசிடம் முன்கூட்டியே விளக்கம் கேட்கப்படுவதாக’ தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SCissuesnotice #Muslimwomen #mosqueentry 
    பாராளுமன்ற தேர்தலில் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் அரசியல், மதத்தலைவர்களை கண்காணிப்பதற்கு சிறப்பு பார்வையாளர்களை நியமிக்குமாறு தேர்தல் கமிஷனை டெல்லி பாஜக வலியுறுத்தியுள்ளது. #DelhiBJP #DelhiEC
    புதுடெல்லி:

    தேர்தல் காலங்களில் மத வழிப்பாட்டுத்தலங்களில் அரசியல் பிரமுகர்கள் வாக்கு வேட்டையாட செல்வதுண்டு. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் அதிகமான மக்கள் கூடும் வேளைகளிலும், வெள்ளிக்கிழமையன்று மசூதிகளில் நடைபெறும் ’ஜும்மா’ சிறப்பு தொழுகையின்போதும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பதுண்டு.

    சில பகுதிகளில் மசூதிக்கு வருபவர்கள் இந்த வேட்பாளருக்குதான் வாக்களிக்க வேண்டும் என மதத்தலைவர்கள் பிரசாரம் செய்ததாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின.



    இந்நிலையில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வாக்கு சேகரிக்கும் அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் மதத்தலைவர்களை கண்காணிப்பதற்கு சிறப்பு பார்வையாளர்களை நியமிக்குமாறு தேர்தல் கமிஷனை டெல்லி பாஜக இன்று வலியுறுத்தியுள்ளது.

    குறிப்பாக, முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இத்தகைய கண்காணிப்பு மிகவும் அவசியம் என டெல்லி தேர்தல் கமிஷனுக்கு இன்று அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #DelhiBJP #DelhiEC #SpecialObserver 
    மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்" என்று முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளது. #SupremeCourt #mosques #Muslimwomen
    சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் நம்பிக்கை பெற்ற முஸ்லிம் பெண்கள் "மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்" என்று சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளனர்.  மசூதியில் பெண்கள் தொழுகை நடத்தவும், இமாம்களாக பெண்களை நியமினம் செய்ய அனுமதிக்கவும் சுப்ரீம் கோட்டை நாட கேரளாவில் உள்ள என்ஐஎஸ்ஏ என்ற பெண்கள் கூட்டமைப்பு விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளது.

    முஸ்லிம் மதத்தில் பாலின சமத்துவத்திற்காக பிரசாரம் மேற்கொண்டுவரும் அமைப்பு, பலதார திருமணம், நிக்கா ஹலாலாவை (விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் அந்த நபரே திருமணம் செய்வது) அனுமதிக்கும் முஸ்லிம் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. என்ஐஎஸ்ஏ அமைப்பின் தலைவர் வி.பி.ஜுஹாரா பேசுகையில், ''புனித குர்ஆன் நூலிலும், இறைத்தூதர் முகமது நபியும் ஒருபோதும் பெண்கள் மசூதிக்குள் வந்து தொழுகை நடத்தக்கூடாது என்று கூறியதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது.

    அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. ஆண்களைப் போன்று, பெண்களும் தங்களுக்குரிய நம்பிக்கையின் அடிப்படையில், அரசியலமைப்பு சட்ட உரிமைகள்படி வழிபாடு நடத்த உரிமை உண்டு. சபரிமலையை போன்று, மசூதிகளிலும் அனைத்து பெண்களும் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். இதில் காட்டப்படும் பாகுபாடுகள் அகற்றப்பட்டு, உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.



    சுப்ரீம் கோர்ட்டு செல்வது தொடர்பாக எங்களுடைய வழக்கறிஞருடன் பேசி வருகிறோம். விரைவில் மனுத்தாக்கல் செய்வோம் என கூறியுள்ளார். #SupremeCourt #mosques #Muslimwomen
    பக்தர்களை அனுமதித்தல், சொத்து பராமரிப்பு பற்றி அனைத்து கோவில், மசூதிகளையும் நீதிபதிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் 20 லட்சம் இந்துக் கோவில்களும், 3 லட்சம் மசூதிகளும், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ தேவாலயங்களும் உள்ளன.

    இவற்றின் சொத்துக்களை பராமரித்தல், பக்தர்களை அனுமதிக்கும் விதிமுறைகள், சுகாதார வசதிகள், கணக்கு வழக்கு பராமரிப்பு போன்றவற்றில் பல பிரச்சனைகள் உள்ளன. இதற்கு உரிய தீர்வுகள் எட்டப்படாமலேயே இருக்கின்றன.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கோவில், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் மத அறக்கட்டளைகள் ஆகியவற்றின் மாவட்ட நீதிபதிகள் நேரடியாகவே இது சம்பந்தமாக ஆய்வு நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.

    ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலில் இந்துக்களை தவிர, மற்ற பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மிரினாலினி பத்தி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஆதர்ஸ் கோயல், அப்துல் நசீர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் பூரி ஜெகநாதர் கோவிலில் இந்துக்கள் மட்டுமல்லாமல் வழிபட விரும்பும் அனைவரையும் அனுமதிப்பதற்கு ஆலய நிர்வாகம் உரிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இது சம்பந்தமாக மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் பேசி உரிய அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டுக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

    மேலும் நாட்டின் அனைத்து கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலய நடைமுறைகள் குறித்து தன்னிச்சையாகவே நீதிபதிகள் தங்கள் கவனத்துக்கு எடுத்து கொண்டு சில உத்தரவுகளையும் பிறப்பித்தனர்.

    அதில், கோவில், மசூதி, தேவாலயங்களில் ஏதேனும் சர்ச்சைகள் தொடர்பாக மாவட்ட கோர்ட்டுக்கு மனு வந்தால் மாவட்ட நீதிபதி நேரடியாக சென்று கோவில், மசூதிகளை ஆய்வு செய்ய வேண்டும்.

    அங்கு வரவு- செலவு, சுகாதார வசதி, பக்தர்களை அனுமதிக்கும் விதிமுறைகள் போன்றவைகள் பற்றி முழுமையாக ஆய்வு நடத்தி ஐகோர்ட்டுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

    ஐகோர்ட்டு அதை ஒரு பொதுநல வழக்காக எடுத்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்புகளை கூற வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

    இது சம்பந்தமாக வக்கீல் கோபால் சுப்பிரமணியம் கருத்து தெரிவிக்கையில், இந்திய கோர்ட்டுகளில் சுமார் 3 கோடியே 10 லட்சம் வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. கோர்ட்டுகளில் 23 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இதனால் ஏற்கனவே பணிச்சுமை அதிகமாக உள்ளது. இப்போது கோவில், மசூதி, தேவாலயங்களை ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருப்பதால் பணிச்சுமை இன்னும் அதிகரிக்கும் என்று கூறினார். #SupremeCourt
    சீனாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் என இங்குள்ள இஸ்லாமிய அமைப்புகளின் தலைமை சங்கம் அறிவித்துள்ளது.
    பீஜிங்:

    சுமார் 140 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சுமார் ஒரு கோடி பேர் உய்குர் இனத்தை சேர்ந்தவர்கள்.

    சீனாவின் சிங்ஜியாங் மாகாணத்தில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவை பெற்ற கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தினர், உய்குர் தீவிரவாதிகள் ஆகியோர் சீனப் படையினரை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.

    அதிகமாக உய்குர் முஸ்லிம்கள் வாழும் சிங்ஜியாங் பகுதியில் சீன ஹான் இனத்தவரின் குடியேற்றம் பெருகி வருவதை கண்டித்து இவர்கள் போராடி வருகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் எல்லையோரம் பதுங்கியிருக்கும் இவர்கள் அவ்வப்போது சீனாவின் சிங்ஜியாங் பகுதியில் பயங்ரவாத தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள டியனன்மென் சதுக்கத்தின் மீது இவர்கள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகினர். சீனாவின் பிரபல ரெயில் நிலையங்களுக்குள் கத்தி மற்றும் உடைவாட்களுடன் புகுந்த இவர்கள் ஏராளமான பொதுமக்களையும் வெட்டி சாய்த்துள்ளனர்.


    இந்நிலையில், முஸ்லிம் மக்களிடையே தேச பக்தியை அதிகரிக்கும் முயற்சியாக நாடு முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்ந்த அலுவலகங்களில் சீன நாட்டு தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என இங்குள்ள பிரதான முஸ்லிம் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, சீனாவின் தலைமை இஸ்லாமிய அமைப்புக்கு சொந்தமான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மசூதிகளில் தேசிய கொடிகளை ஏற்றி வைப்பதுடன், நாட்டின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் கலாசாரம் சார்ந்த பாரம்பரியங்களை பற்றியும் முஸ்லிம் மக்கள் கற்றறிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    சீனாவில் சுமார் 35 ஆயிரம் மசூதிகள் உள்ள நிலையில், நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தனிப்பட்ட மதமாக இல்லாமல் ஒன்றிணைந்த சோஷலிச சமுதாயமாக முஸ்லிம் மக்கள் உருமாற இந்த அறிவிப்பு நல்ல பலனை அளிக்கும் என இங்குள்ள அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். #mosquesinChina
    ×