search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி விநியோகம்
    X

    கோப்புபடம்.

    பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி விநியோகம்

    • ரம்ஜான் நோன்பு தொடங்கியதை முன்னிட்டு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.
    • 120 கிலோ அரிசி கொண்டு நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    ரம்ஜான் நோன்பு தொடங்கியதை முன்னிட்டு திருப்பூர் நகரில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன. மாலை தொழுகை முடிந்து நோன்பு துறக்கும் நேரம் துவங்கிய பின் அவர்கள் பருகும் வகையில் பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது.

    திருப்பூர் பெரிய பள்ளி வாசலில் நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கப்படுகிறது. இது குறித்து பள்ளிவாசல் செயலாளர் ஷாஜகான் கூறியதாவது :- பெரிய பள்ளிவாசல் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுப்பகுதி பள்ளி வாசல் மற்றும் பிற பகுதியினருக்கும் நோன்பு கஞ்சி வழக்கமாக இங்கிருந்து வழங்கப்படும்.அவ்வகையில் தினமும் சராசரியாக 120 கிலோ அரிசி கொண்டு நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கப்ப டுகிறது. ரமலான் பண்டிகை நாள் வரையிலான அளவு நோன்பு கஞ்சி வழங்குவத ற்கான பொருள் தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×