search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    200 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
    X

    200 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

    • 200 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
    • தமிழகம் முழுவதும் நாளை (10-ந்தேதி) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் நாளை (10-ந்தேதி) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஜூம்ஆ பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தொழுகை முடிந்ததும் குர்பானிக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் தயார் நிலையில் உள்ளது.

    இறைத்தூதர் இபுராகிம் (அலை) தியாகத்தை கொண்டாடும் வகையில் முஸ்லிம் மக்கள் ஆண்டு தோறும் துல்ஹஜ் மாதம் பிறை 10-ல் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.

    நாளை காலை 7 மணி முதல் தக்பீர் முழக்கத்துடன் மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் திறந்தவெளி மைதா னங்களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடக்கிறது.

    முன்னதாக பள்ளிவா சலில் பேஷ் இமாம்கள் பக்ரித் பண்டிகையின் சிறப்புகள் குறித்து பயான் (சொற்பொழிவு) நடைபெறும். தொழுகைக்கு பின் உலக மக்களின் அமைதிக்காகவும், மத நல்லிணக்கம் தொடரவும் சிறப்பு துவா நடைபெற்று தொழுகை நிறைவடையும். இதைத்தொடர்ந்து வீடுகளில் ஆடுகள், மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சிகளை உறவினர்களுக்கும், ஏழை களுக்கும் வழங்குவார்கள்.

    ராமநாதபுரத்தில் வெளிப்பட்டணம், சின்னக்கடை, பாரதிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும், கீழக்கரையில் தெற்குத்தெரு, நடுத்தெரு, பழைய குத்பா பள்ளி, வடக்குத்தெரு, மேலத்தெரு உள்பட 13-க்கும் அதிகமான பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகை நடைபெறுகிறது.

    இதேபோல் பனைக்குளம், என்மனங்கொண்டான், ஏர்வாடி, மண்டபம், பாம்பன், ராமேசுவரம், பெருங்குளம், பெரியபட்டி னம், தேவிபட்டினம், சித்தார் கோட்டை, அழகன்குளம், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    சொந்த ஊரில் நடை பெறும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு குடும்பத்துடன் பெருநாள் கொண்டாட வளைகுடா நாடுகளில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடு களில் இருந்தும் ஏராள மானோர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.

    Next Story
    ×