search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மசூதிகள்"

    அனைத்து கோவில்கள், சர்ச்சுகள் மற்றும் தேவாலயங்களில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #DelhiHC #WomenEntryTemples
    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. கோவில் நடை திறந்தபோது இந்த போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. கோவிலுக்கு வந்த பெண்களை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக இந்த சீசனில் பெண்கள் யாரும் ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.



    இந்நிலையில் வழக்கறிஞர் சஞ்சீவ் குமார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், அனைத்து கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தார். பெண்கள் மட்டுமே வழிபடக்கூடிய ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மற்றும் காமக்யா கோவிலில் ஆண்கள் எப்போதும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இந்த மனுவை இன்று ஆய்வு செய்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். மனுதாரர் இந்த நீதிமன்றத்தின் விசாரணை வரம்பிற்குள் எந்த கோவில்களையும் குறிப்பிடாததால், விசாரணைக்கு ஏற்க முடியாது என குறிப்பிட்டனர். #DelhiHC #WomenEntryTemples
    பக்தர்களை அனுமதித்தல், சொத்து பராமரிப்பு பற்றி அனைத்து கோவில், மசூதிகளையும் நீதிபதிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் 20 லட்சம் இந்துக் கோவில்களும், 3 லட்சம் மசூதிகளும், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ தேவாலயங்களும் உள்ளன.

    இவற்றின் சொத்துக்களை பராமரித்தல், பக்தர்களை அனுமதிக்கும் விதிமுறைகள், சுகாதார வசதிகள், கணக்கு வழக்கு பராமரிப்பு போன்றவற்றில் பல பிரச்சனைகள் உள்ளன. இதற்கு உரிய தீர்வுகள் எட்டப்படாமலேயே இருக்கின்றன.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கோவில், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் மத அறக்கட்டளைகள் ஆகியவற்றின் மாவட்ட நீதிபதிகள் நேரடியாகவே இது சம்பந்தமாக ஆய்வு நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.

    ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலில் இந்துக்களை தவிர, மற்ற பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மிரினாலினி பத்தி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஆதர்ஸ் கோயல், அப்துல் நசீர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் பூரி ஜெகநாதர் கோவிலில் இந்துக்கள் மட்டுமல்லாமல் வழிபட விரும்பும் அனைவரையும் அனுமதிப்பதற்கு ஆலய நிர்வாகம் உரிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இது சம்பந்தமாக மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் பேசி உரிய அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டுக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

    மேலும் நாட்டின் அனைத்து கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலய நடைமுறைகள் குறித்து தன்னிச்சையாகவே நீதிபதிகள் தங்கள் கவனத்துக்கு எடுத்து கொண்டு சில உத்தரவுகளையும் பிறப்பித்தனர்.

    அதில், கோவில், மசூதி, தேவாலயங்களில் ஏதேனும் சர்ச்சைகள் தொடர்பாக மாவட்ட கோர்ட்டுக்கு மனு வந்தால் மாவட்ட நீதிபதி நேரடியாக சென்று கோவில், மசூதிகளை ஆய்வு செய்ய வேண்டும்.

    அங்கு வரவு- செலவு, சுகாதார வசதி, பக்தர்களை அனுமதிக்கும் விதிமுறைகள் போன்றவைகள் பற்றி முழுமையாக ஆய்வு நடத்தி ஐகோர்ட்டுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

    ஐகோர்ட்டு அதை ஒரு பொதுநல வழக்காக எடுத்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்புகளை கூற வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

    இது சம்பந்தமாக வக்கீல் கோபால் சுப்பிரமணியம் கருத்து தெரிவிக்கையில், இந்திய கோர்ட்டுகளில் சுமார் 3 கோடியே 10 லட்சம் வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. கோர்ட்டுகளில் 23 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இதனால் ஏற்கனவே பணிச்சுமை அதிகமாக உள்ளது. இப்போது கோவில், மசூதி, தேவாலயங்களை ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருப்பதால் பணிச்சுமை இன்னும் அதிகரிக்கும் என்று கூறினார். #SupremeCourt
    ×