search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jay Shah"

    • வீடியோ வடிவில் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.
    • உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா.

    டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாத துவக்கத்தில் நடைபெற இருக்கிறது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. வீடியோ வடிவில் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி குறித்து ரசிகர்கள் கலவையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

     


    இந்த நிலையில், இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. பி.சி.சி.ஐ. தலைவர் ஜெய் ஷா, இந்திய டி20 அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இந்திய அணியின் ஸ்பான்சர் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.



    • அனைத்து வீரர்களும் இனி பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும்.
    • ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக கடந்த காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளருக்கான தேர்வு விரைவில் தொடங்கும் என்று ஜெயிஷா அறிவித்துள்ள நிலையில் புதிய கேப்டன் யார் என்ற கேள்வியும் கூடவே எழுந்திருக்கிறது. தற்போது ரோகித் சர்மாவுக்கு 38 வயது ஆகிவிட்டதால் அவர் நீண்ட காலம் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட முடியாது.

    இன்னும் சொல்லப்போனால் 2024-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தான் அவருக்கு கேப்டனாக கடைசி தொடராக இருக்கலாம். இதனால் அடுத்த கேப்டன் யார் என்ற பந்தயத்தில் ஹர்திக் பாண்ட்யா கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் இருக்கிறார்கள்.

    ஹர்திக் பாண்ட்யா, குஜராத் அணிக்காக கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட நிலையில் அதன் பிறகு அவருடைய கேப்டன்ஷிப் மிகவும் மோசமாக அமைந்திருக்கிறது. எனினும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தான் துணை கேப்டன் பதவி கிடைத்திருக்கிறது.

    இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அனைத்து வீரர்களும் இனி பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும். ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக கடந்த காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் தற்போது வெள்ளை நிற கிரிக்கெட் பந்து தொடர்களில் ஹர்திக் பாண்ட்யா தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ சார்பாக அவரிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் மூலம் அடுத்த கேப்டன் பதவி வேண்டும் என்றால் உடல் தகுதியை நிரூபிப்பதோடு இனி உள்ளூர் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட வேண்டும்.

    என்று ஜெய்ஷா கூறினார்.

    • இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடவில்லை.
    • ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அவர்களை நீக்கியது அவருடைய முடிவு.

    இந்திய கிரிக்கெட் அணியின் 2023 -24 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.

    இருவரும் உள்ளூர் தொடர்களில் விளையாடுமாறு பிசிசிஐ மற்றும் இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார். ஆனால் இருவரும் அதைக் கேட்காமல் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை. அதனால் இந்த இருவரையும் சம்பள ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ நீக்கியது.

    இந்நிலையில் இவர்கள் இருவரையும் நான் நீக்கவில்லை என்றும் அஜித் அகார்கர் தான் நீக்கினார் என்றும் பிசிசிஐ செயலாளர் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் அரசியலமைப்பை சரி பார்க்கலாம். அந்த முடிவு அஜித் அகர்கரிடம் உள்ளது. இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அவர்களை நீக்கியது அவருடைய முடிவு. செயல்படுத்தியது மட்டுமே என்னுடைய வேலை. புதிதாக இணைக்கப்பட்ட சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் தவிர்க்க முடியாதவர்கள்.

    அதே போல வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு என்னை பிசிசிஐ கருதினால் நான் விஜய் ஹசாரே கோப்பை, சயீத் முஸ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாட தயாராக இருப்பதாக ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

    இந்தியாவுக்காக விளையாட அதற்கு தகுந்த உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாட வேண்டும். இந்திய அணியில் இடம் பிடிக்காத இஷான் கிஷன் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் மும்பை வீரராக விளையாடலாம்.

    ஆனால் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு நீங்கள் அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டு திறமையை நிரூபிக்க வேண்டும். அதை சரியாக செய்பவர்களையே சரியான வீரர்களாக கருதுவோம். மும்பை போட்டி முடிந்ததும் இஷான் கிஷனிடம் மற்ற வீரர்களை போலவே நான் நட்பாக பேசினேன். வேறு எதுவுமில்லை.

    என்று ஜெய்ஷா கூறினார். 

    • ஐபிஎல் தொடரில் இம்பேக் பிளேயர் விதி சோதனை முயற்சியாக கொண்டுவரப்பட்டதுதான்.
    • இம்பேக் பிளேயர் விதி நிரந்தரமான விதி கிடையாது.

    ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை விறுவிறுப்பாக எடுத்து செல்லும் விதமாக ஒவ்வோரு சீசனிலும் புதிய விதிமுறையை அமல்படுத்துவதுண்டு. அந்த வகையில் நடப்பு ஐபிஎல் சீசனில் புதிய விதிமுறையாக இம்பேக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த விதிக்கு இதுவரை எதிர்ப்பு ஏதும் வரவில்லை. ஆனால் ரோகித் சர்மா மட்டும் இந்த விதி தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இம்பேக் பிளேயர் விதிமுறை தொடருமா என்பது குறித்து பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா கூறியதாவது:-

    ஐபிஎல் தொடரில் இம்பேக் பிளேயர் விதி சோதனை முயற்சியாக கொண்டுவரப்பட்டதுதான். நிரந்தரமான விதி கிடையாது. இந்த விதியால் ஒவ்வொரு போட்டியிலும் 2 புதிய இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

    இம்பேக்ட் விதி குறித்து இதுவரை எந்த அணியும் எங்களிடம் கருத்து தெரிவிக்கவில்லை. அணிகள், ஒளிபரப்பு உரிமம் பெற்றவர்கள் என அனைவரிடமும் கலந்தாலோசித்த பின்னரே, இந்த விதி தொடர வேண்டுமா, கூடாதா என முடிவெடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  

    • கடந்த வருடம் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • ராகுல் டிராவிட் விரும்பினால் விண்ணப்பிக்கலாம்- ஜெய் ஷா

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ராகுல் டிராவிட். இந்தியாவில் கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரோடு அவருடைய தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது.

    ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, இங்கிலாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

    இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை தோல்வியடையாமல் முன்னேறியது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

    இந்த வருடம் ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என பிசிசிஐ தெரிவித்தது.

    இந்த நிலையில் ஜூன் மாதத்திற்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவில் ராகுல் நீடிப்பாரா? என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விடம் கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில் "ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதம் வரை மட்டுமோ. தன்னிச்சையாக அவரது பதவிக்காலம் நீடிக்கப்படமாட்டாது. அவர் விரும்பினால் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் தொடர்பான விளம்பரம் வெளியிடப்படும். புதிய பயிற்சியாளர் இந்தியாவைச் சேர்ந்தவரா? வெளிநாட்டைச் சேர்ந்தவரா? என்பது தீர்மானிக்க முடியாது. அதுகுறித்து சிஏசி முடிவு செய்யும். பிசிசிஐ உலகளாவிய அமைப்பாகும்" என் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், தனது மற்றும் தனது சப்போர்ட் ஸ்டாஃப் ஆகியோரின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பாக ஒப்பந்தத்தில் ராகுல் டிராவிட் கையெழுத்திட்டார். ஆனால் அவர்களது பதவிக்காலம் ஜூன் மாதம் வரைதான் என பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காயத்தில் இருந்து தேறியுள்ள ரிஷப் பண்ட் தற்போது நன்றாக பேட்டிங் செய்கிறார்.
    • விரைவில் அவர் முழு உடல்தகுதியை எட்டி விடுவார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 2022-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் பயங்கரமான கார் விபத்தில் சிக்கி படுகாயத்துடன் தப்பினார். கால்முட்டியில் ஆபரேஷன் செய்து கொண்ட அவர் 17-வது ஐ.பி.எல். தொடர் மூலம் மறுபிரவேசம் செய்வதற்காக தயாராகி வருகிறார்.

    இந்த நிலையில் இவர்களது உடல்தகுதி குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காயத்தில் இருந்து தேறியுள்ள ரிஷப் பண்ட் தற்போது நன்றாக பேட்டிங் செய்கிறார். விக்கெட் கீப்பிங்கும் செய்கிறார். விரைவில் அவர் முழு உடல்தகுதியை எட்டி விடுவார். ஜூன் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அவர் விளையாடினால் பெரிய பலமாக இருக்கும். அவர் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து.

    சிக்கலின்றி விக்கெட் கீப்பிங் பணியை அவர் தொடரும் பட்சத்தில், அவரால் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விளையாட முடியும். அதற்கு முன்னோட்டமாக ஐ.பி.எல். போட்டியில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்கலாம்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு குறித்து கேட்கிறீர்கள். இந்திய கிரிக்கெட் வாரியம் சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். இது ஒரு நிறுவனம் அல்ல. எனவே இதில் யாரும் முதலீடு செய்ய முடியாது.

    இவ்வாறு ஜெய் ஷா கூறினார்.

    • கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
    • செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் முகமது சமி இந்திய அணியில் இணைவார்

    அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி 3 போட்டிகளில் முகமது சமி விளையாடுவார் என கூறப்பட்டது. ஆனால் காயம் குணமடையாததால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து சமி விலகினார். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்வதற்காக சமி ஜனவரி மாதம் லண்டன் சென்றார்.

    இந்நிலையில் கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில் இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து கணுக்கால் காயம் காரணமாக இந்திய வீரர் முகமது சமி விலகியுள்ளதாக பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் முகமது சமி இந்திய அணியில் இணைவார் என தெரிவித்தார்.

    வரும் ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ளது. அந்தவகையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அதேபோல், ஜூன் 9 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் நடைபெற உள்ளது.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து முகமது சமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி 24 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தி அசத்தினார். மேலும், இந்திய வீரர் முகமது சமி ஐபிஎல் 2024 தொடரில் இருந்தும் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • இந்த ஊக்கத்தொகை 2022-2023 சீசனில் இருந்து தொடங்கும் எனவும் ஜெய்ஷா குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்றது.

    இதில் 'டாஸ்' வென்று இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், அஷ்வின் 4 விக்கெட்டு, ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தாலும் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அரைசதத்தாலும் 259 ரன்கள் இந்திய அணி கூடுதலாக சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.இந்திய அணி தரப்பில் அஷ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

    இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி ஓர் ஆண்டில் 75% டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரருக்கு ஒரு போட்டிக்கு ரூ.45 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இது 2022-2023 சீசனில் இருந்து தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 15 ஆண்டுகளான கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக அவர் தனிப்பட்ட காரணத்துக்காக விடுமுறை கேட்டுள்ளார்.
    • காரணமே இல்லாமல் லீவு கேட்கும் வீரர் விராட் கோலி அல்ல.

    ராஜ்கோட்:

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி முதல் முறையாக டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஆடவில்லை. தொடர்ந்து எஞ்சிய 3 டெஸ்டிலும் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அவர் எதற்காக விலகினார் என்ற காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்தநிலையில் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி. சி.சி.ஐ) தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று அதன் செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார்.

    ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    விராட் கோலிக்கு பி.சி.சி.ஐ. தொடர்ந்து ஆதரவு அளிக்கும். 15 ஆண்டுகளான கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக அவர் தனிப்பட்ட காரணத்துக்காக விடுமுறை கேட்டுள்ளார். அது அவருடைய உரிமை. காரணமே இல்லாமல் லீவு கேட்கும் வீரர் விராட் கோலி அல்ல. நமது வீரர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

    20 ஓவர் உலகக் கோப்பையில் ஆடுவது தொடர்பாக விராட் கோலியிடம் விரைவில் பேசுவோம்.

    வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பைக்கு ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றுவார். ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையின் போது ஹர்த்திக் பாண்ட்யா காயம் அடைந்ததால் 20 ஓவர் போட்டிக்கு ரோகித் சர்மா திரும்ப அழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எதிர் காலத்தில் 20 ஓவர் அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா நிச்சயம் கேப்டனாக இருப்பார்.

    ரோகித்சர்மாவிடம் திறமை இருக்கிறது. அவரது தலைமையில் 20 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன்.

    கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் உள்ளூரில் நடைபெறும் முதல்தர போட்டியில் விளையாடுவது கட்டாயமாகும். தேர்வு குழு தலைவர், பயிற்சியாளர் அல்லது கேப்டன் உங்களி டம் (வீரர்கள்) உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என்று சொன்னால் நீங்கள் ஆட வேண்டும். இது அனைத்தும் ஒப்பந்த வீரர்களுக்கு பொருந்தும்.

    வீரர்கள் தனது எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது. அதை தேர்வு குழுதான் முடிவு செய்ய வேண்டும்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதில் மத்திய அரசின் முடிவுப்படி தான் இந்திய அணி பங்கேற்பது தெரிய வரும்.

    இவ்வாறு ஜெய்ஷா கூறி உள்ளார்.

    • இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது.
    • இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி இருந்தது.

    அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெற இருக்கும் 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ராக்கோட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை ஜெய் ஷா வெளியிட்டார்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி கோப்பையை நழுவவிட்டது. இதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி இருந்து கொண்டே வந்தது.

     


    "2023 அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாம் உலகக் கோப்பை வெல்லவில்லை என்ற போதிலும், தொடரச்சியாக பத்து போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் நம் மனங்களை வென்றனர். 2024-ம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையில் இந்திய தேசிய கோடி உயர பறக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்," என்று ஜெய் ஷா தெரிவித்தார்.

    இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்த இருப்பது உறுதியாகி இருக்கிறது. 

    • இந்தோனேசியாவின் பாலி நகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
    • ஏசிசி தலைவர் பொறுப்பை ஜெய் ஷா ஜனவரி 2021-ல் ஏற்றுக்கொண்டார்.

    பாலி

    இந்தோனேசியாவின் பாலி நகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெய் ஷாவின் பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    ஏசிசி தலைவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். அதில் தற்போது ஜெய் ஷா 2-வது ஆண்டில் இருக்கிறார். இந்நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவர் வங்காளதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹாசனுக்குப் பிறகு ஜனவரி 2021-ல் ஏசிசி தலைவர் பொறுப்பை ஜெய் ஷா ஏற்றுக்கொண்டார். 2022-ல் ஷாவின் தலைமையின் கீழ், ஏசிசி ஆசிய கோப்பை டி20 போட்டியாகவும், 2023-ல் ஒருநாள் போட்டியாகவும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

    • நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இலங்கையில் சில போட்டிகளை நடத்துமாறு இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ஜெய் ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருடன் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற இருப்பதால் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது கேள்விகுறியாகும் நிலையில் உள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இலங்கையில் சில போட்டிகளை நடத்துமாறு இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ஜெய்ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் ஒரு வருடத்திற்கும் மேலாக கிரிக்கெட்டை தவறவிட்ட ரிஷப் பண்ட், ஐபிஎல் 2024-ல் மீண்டும் களமிறங்குவார். விக்கெட் கீப்பர் பேட்டரான அவர், வரவிருக்கும் சீசனில் அவரது அணியான டெல்லி கேபிடல்ஸை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×