search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இம்பேக்ட் பிளேயர்"

    • டோனி 2024 ஐபிஎல்-லில் 100 சதவீதம் விளையாடுவார்.
    • கடினமான சூழல்களை எப்படி சமாளிப்பது என்பது டோனிக்கு தெரியும்.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் டோனி, இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அவரிடமே கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து டோனி இதுவரையில் எந்த தகவலும் அளிக்கவில்லை. டோனி இந்த தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வந்தாலும், சிலரோ அவர் அடுத்த சீசனும் விளையாடுவார் என்றும் கூறி வருகின்றனர்.

    சமீபத்தில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற பிளே ஆப் போட்டிக்கு பிறகு ஓய்வு முடிவு குறித்து டோனி கூறுகையில், மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன்.

    விளையாடுகிறேனோ அல்லது வேறு ஏதாவது பொறுப்பில் இருப்பேனோ என்பது தெரியவில்லை. எப்படியானாலும், நான் எப்போதும் சிஎஸ்கே அணியின் அங்கமாகவே இருப்பேன் என்று அவர் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், டோனி அடுத்த ஆண்டு விளையாடுவார் என சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    டோனி 2024 ஐபிஎல்-லில் 100 சதவீதம் விளையாடுவார். குறிப்பாக இம்பேக்ட் பிளேயர் விதி அவரை நீண்ட நாட்களுக்கு விளையாட வைக்கும். ரகானேவும், சிவம் துபேவும் அணிக்கு வலிமை சேர்ப்பதால், டோனியிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் கடினமான சூழல்களை எப்படி சமாளிப்பது என்பது டோனிக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெங்களூரு அணி கேப்டனாக விராட் கோலி இன்று செயல்படுகிறார்.
    • டூ பிளசிஸ் இம்பேக்ட் பிளேயராக களமிறங்க உள்ளார்.

    மொகாலி:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியானது இன்று மொகாலியில் நடைபெறுகிறது.

    விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி பஞ்சாப் அணிக்கெதிரான இந்த போட்டியில் களம் இறங்குகிறது.

    டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    டூ பிளசிஸ் காயம் காரணமாக இந்த போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்க உள்ளார். பெங்களூரு அணி கேப்டனாக விராட் கோலி மீண்டும் செயல்படுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • இந்த போட்டியில் 13 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி என 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
    • இம்பேக்ட் பிளேயராக களம் புகுந்த ரோகித் சர்மா முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பிளேயிங் லெவனில் இடம்பெறாததால் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி கொல்கத்தா அணிக்கெதிரான இந்த போட்டியில் களம் இறங்கியது.

    ஆனால் முதல் பாதியில் விளையாடாத ரோகித் சர்மா கொல்கத்தா அணி 185 ரன்கள் குவித்ததும் அடுத்ததாக மும்பை அணி சேசிங் செய்ய வருகையில் இம்பேக்ட் பிளேயராக துவக்க வீரராக இஷான் கிஷனுடன் களமிறங்கினார். அந்த வகையில் இம்பேக்ட் பிளேயராக களம் புகுந்த ரோகித் சர்மா முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தார்.

    இந்த போட்டியில் 13 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி என 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

    இந்நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா ஏன் இம்பேக்ட் வீரராக களமிறங்கினார் என்பது குறித்து மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    நாங்கள் இந்த போட்டியில் முதலில் பந்துவீசவே விரும்பினோம். ஏனெனில் மைதானம் கொஞ்சம் டிரையாக இருந்ததால் இரண்டாவது பேட்டிங்கிற்கு மைதானம் நன்றாக ஒத்துழைக்கும் என்று நினைத்தோம். அதன்படியே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தோம். ரோகித் சர்மாவிற்கு இந்த போட்டிக்கு முன்னதாக வயிற்று பகுதியில் சற்று அசவுகரியம் ஏற்பட்டது.

    அதனாலேயே அவர் இந்த போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. பின்னர் அவர் சேசிங்கின் போது இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினார்.

    என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    • சென்னை அணியில் இம்பேக்ட் பிரேயராக துஷார் தேஷ்பாண்டே களமிறங்கினார்.
    • குஜராத் அணியில் இம்பேக்ட் பிளேயராக தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார்.

    ஐபிஎல் 16-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை-குஜராத் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஒவ்வொரு முறையும் ஐபிஎல் தொடரில் ஏதாவது புதிய விதிமுறை அறிமுகத்திற்கு வரும். அந்த வகையில் இந்த முறை 'இம்பேக்ட் பிளேயர்' என்கிற முறையை அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த புதிய விதியின் படி, டாஸ் போடும் போது வழங்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியலுடன், மாற்று வீரர்கள் 5 பேரின் பெயர்களையும் வழங்க வேண்டும். அந்த 5 பேரில் இருந்து ஒருவரை, ஆட்டத்தின் நடுவில் களமிறக்கலாம்.

    அது பந்து வீச்சாக இருந்தாலும் சரி, பேட்டிங் வரிசையாக இருந்தாலும் சரி, அது அந்த அணியின் விருப்பம். அதே நேரத்தில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால் மட்டுமே, கூடுதலாக ஒரு வெளிநாட்டு வீரரை களத்தில் இறக்க முடியும். ஒருவேளை 4 வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால், ஐந்தாவதாக மற்றொரு வெளிநாட்டு வீரரை 'இம்பேக்ட் ப்ளேயராக' களத்தில் இறக்க முடியாது.

    இந்த புதிய விதியை தன்னுடைய முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயன்படுத்தியது. குஜராத்திற்கு எதிராக களமிறங்கிய சென்னை அணியின் அம்பாதி ராயுடு பேட்டிங் செய்த நிலையில், சென்னை அணி பீல்டிங் செய்யும் போது, அவருக்கு பதிலாக 'இம்பேக்ட் பிரேயர்' முறையில் துஷார் தேஷ்பாண்டே மாற்றப்பட்டார்.

    3.2 ஓவர்களை வீசிய அவர், 51 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். 15.30 எக்கானமியை பெற்றார். இவ்வாறு களம் கண்டதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் முதல் 'இம்பேக்ட் ப்ளையர்' என்கிற பெருமையை பெற்றார் தேஷ்பாண்டே.

    இதேபோல குஜராத் அணியிலும் இம்பேக்ட் பிளேயராக தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார். குஜராத் அணி பீல்டிங் செய்யும் போது சிக்சரை தடுக்க சென்ற வில்லியம்சனுக்கு காலில் அடிப்பட்டதால் அவர் பாதிலேயே வெளியேறினார். இதனால் அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் பேட்டிங் செய்தார்.

    அவர் 17 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருவரும் சொல்லி கொள்ளும் அளவுக்கு எந்த இம்பேக்ட்டும் கொடுக்கவில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

    ×