search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "insurance scheme"

    • இதற்கு சூடாமணி ஏரியின் மழை நீர் வெளியேற வழி இன்றி நிற்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • நெல் பயிர்கள் அழுகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் பின்ன லூர், மதுபானைமேடு, நெல்லி கொல்லை. துரிஞ்சி கொல்லை உள்ளிட்ட கிராம விவசாயிகளின் நெல் பயிர்கள் சுமார் 1000 ஏக்கர் அழுகி உள்ளது. இதற்கு சூடாமணி ஏரியின் மழை நீர் வெளியேற வழி இன்றி நிற்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் -விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால் இந்த பகுதியில் வடிகால் அமைக்கப்படாத தால் நெல் பயிர்கள் அழுகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    மேலும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க வில்லை எனவும் லேடன்மூ லம் கணக்கெடுப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என காப்பீடு திட்ட அலுவலர்களும், வேளாண் துறை அலுவலர்க ளும் தெரிவிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.அழுகிய நிலையில் உள்ள நெல் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கவுன்சிலர் ஜேஸ்மின் லூர்து மேரி ஏற்பாட்டில் 100 பெண்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான கலைஞர் காப்பீட்டு திட்டம் அட்டை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
    • பயனாளிகள் சென்ற வேனை கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி வழி அனுப்பி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 22-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ஜேஸ்மின் லூர்து மேரி ஏற்பாட்டில் 100 பெண்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான கலைஞர் காப்பீட்டு திட்டம் அட்டை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    முன்னதாக மனுதாரர்கள் வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார் மற்றும் தாசில்தார்களிடம் பரிந்துரை பெற்று மருத்துவ அட்டை வாங்க வீண் கால தாமதமும் அலைச்சலும் ஏற்படுவதால் கவுன்சிலர் ஜேஸ்மின் லூர்துமேரி அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் மனுதாரர்களை நேரில் அழைத்துச் சென்று உரிய விசாரணை நடத்தி மருத்துவ அட்டை பெற்றுத்தர உதவினார். இறுதி கட்டமாக தனது சொந்த செலவில் வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை மருத்துவ அட்டை பெற்று வர தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அழைத்து சென்றார்.

    பயனாளிகள் சென்ற வேனை கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி வழி அனுப்பி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அமலி அந்தோணி பிரகாஷ் உட்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெற்று தர உதவியாக இருந்த தி.மு.க. கவுன்சிலருக்கும், நகராட்சி சேர்மன், அமைச்சர், மற்றும் தமிழக அரசுக்கும், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். இதேபோல் அனைத்து கவுன்சிலர்களும் முன்னெடுத்தால் பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பயனாளிகள் தெரிவித்தனர்.

    • மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடை பெற்றது.
    • தொடர்ந்து 7 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்ட சத்து பெட்டகத்தையும் வழங்கினார்கள்.

    சேலம்:

    கருணாநிதி நூற்றாண்டையொட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளி கள் பதிவு செய்யும் முகாம் மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடை பெற்றது. முகாமை மேயர் ராமச்சந்திரன், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவ லர் மேனகா ஆகியோர் தொடங்கிவைத்தனர். தொடர்ந்து 7 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்ட சத்து பெட்டகத்தையும் வழங்கினார்கள்.

    முகாமில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில், கலைஞர் நூற்றாண்டை யொட்டி அரசு தமிழ்நாடு முழுவதும் 100 மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டதின் அடிப்ப டையில் சேலம் மாவட்டத் தில் 5 சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெறு கிறது. முகாமில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதோடு காப்பீட்டுத் திட்ட பயனா ளிகள் பதிவு செய்யும் முகா மும் இங்கு நடைபெறுவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்ப டுத்திக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதில் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை, மணிப்பால் மருத்துவமனை, ஐ பவுண்டேசனை சார்ந்த மருத்துவ குழுவினர் பங்குபெற்று ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோ, காது மூக்கு தொண்டை மருத்துவம், தோல்நோய் மருத்துவம், சித்தா மருத்துவம், காச நோய், தொழுநோய், புற்று நோய், பொதுமருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தை கள் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்து வம் ஆகியவற்றிக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளும் வழங்கினர். கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிர சவத்திற்காக யோக பயிற்சியும் முகாமில் அளிக்கப்பட்டது.

    முகாமில் துணை மேயர் சாரதாதேவி, மண்டல குழுத்தலைவர்கள் உமாராணி, தனசேகர், சுகாதார நிலைக்குழுத்த லைவர் ஏ.எஸ்.சரவணன், இணை இயக்குநர் நலப்பணி கள் பானுமதி, துணை இயக்குநர் சவுண்டம்மாள், துணை இயக்குநர் யோகா னந், கவுன்சிலர்கள் சங்கீதா, கிரிஜா, ஸ்ரீராஜ் குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர். 

    • மண்டபம், எஸ்.மாரியூரில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 24-ந் தேதி நடக்கிறது.
    • மேல்சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை வழங்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 24-ந்தேதி மண்டபம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் கடலாடி அருகே எஸ்.மாரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

    இந்த முகாமில் அனைத்து சிறப்பு மருத்துவப் பிரிவுகளும் பங்கேற்கும் வகையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பங்கேற்கின்றனர். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமும் செயல்படுத்தப்படும்.

    உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், நீரிழிவு, பல் பரிசோதனை, கொழுப்பு, உப்பு, ரத்தம், சிறுநீர் பரிசோதனை, கருப்பைவாய் பரிசோதனை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை, இதய நோய், மனநலம், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலம், காது, மூக்கு, தொண்டை, எலும்பியல், கண் மருத்துவம், தோல் வியாதி, இந்திய மருத்துவம் மற்றும் சித்தா மருத்துவம், தாய்-சேய் நல ஆலோசனை ஆகிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. மருந்துகளும் வழங்கப்படும்.

    பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். தெரிவிக்கப்படாத பரிசோதனை முடிவுகள் வாட்ஸ்-அப் மற்றும் இ-மெயில் மூலம் அனுப்பப் பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படும். இதனையடுத்து தொற்று நோய் கண்டறியப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மக்களைத்தேடி மருத்துவம் மூலமாக அவர்கள் வீடு தேடியே மருந்துகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேல்சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல 100 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி ஆண்டுதோறும் நடக்கிறது.
    • பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. காய்கறி பயிர்கள் மட்டுமின்றி தென்னை, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட நீண்ட கால பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த இரண்டு மாவட்டங்களில், பல 100 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி ஆண்டுதோறும் நடக்கிறது. உற்பத்தியாகும் வாழைகள், வியாபாரிகள் மூலம் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. கனமழை, வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், இயற்கையாக பரவும் தீ விபத்து உட்பட பல்வேறு காரணங்களால், பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.குறிப்பாக வாழை பயிரிடும் விவசாயிகள், கனமழை, சூறைக்காற்று ஆகியவற்றின் காரணமாக பெருத்த நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

    குறிப்பிட்ட சில பயிர்களுக்கு மட்டுமே அரசு காப்பீடு திட்டத்தை வழங்குகிறது. இதனால் விவசாயிகள், பேரிடர் மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். ஆனால் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களுக்கு மட்டுமே இந்த காப்பீடு திட்டம் பொருந்தும் என்பதால், இதர கிராமங்களில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இது பொருந்தாது.இதனால் இழப்பினை சந்திக்கும் வாழை விவசாயிகள் செய்வதறியாமல் பரிதவிக்கின்றனர். ஆண்டு தோறும் பேரிடர் காரணமாக வாழைகள் கடுமையாக சேதமடைகின்றன.

    சமீபத்தில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் வீசிய சூறைக்காற்று மற்றும் கன மழையால் பல 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. எனவே அனைத்து தரப்பு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் காப்பீடு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் காற்றுக்கு வாழை மரங்கள் முறிவதற்கான வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்திய வானிலை மையத்தின் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை சார்பில் திருப்பூர் மாவட்டத்தின் காலநிலை விவரம் வழங்கி வருகிறது. அதன்படி வரும் நாட்களில் மாவட்டத்தின் காலநிலை, 35 முதல் 37 டிகிரி செல்சியஸாக இருக்கும். சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 4 முதல், 8 கி.மீ., வேகத்தில், பெரும்பாலும் கிழக்கு திசையில் இருந்து, தென் கிழக்கு திசை வரை பதிவாகும்.

    காற்றுக்கு 5 மாதம் வயதுடைய வாழை மரங்கள் சாய்ந்து விழும் வாய்ப்புள்ளதால் மரங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும். பரவலாக வாழையில் குருத்து அழுகல் நோய் தென்படுகிறது. இதை கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் அளவுக்கு பிளீச்சிங் பவுடர் கலந்து, மரத்தின் அருகே ஊற்ற வேண்டும். நோய் தாக்குவதற்கு முன் இந்த மருந்து செலுத்தினால் நோய் பரவாமல் பாதுகாக்க முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • தென்னைமர காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 16,290 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், வறட்சி, பூச்சிநோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நிலஅதிர்வு, ஆழிப்பேரலையால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்க ப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ தென்னைமர காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.

    தென்னை சாகுபடி விவசாயிகள் தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வரப்பில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ குறைந்த பட்சம் பலன் தரக்கூடிய 5 மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் குட்டை மற்றும் ஒட்டுரக தென்னை மரங்களை 4 ஆண்டு முதலும், நெட்டை மரங்களை 7 ஆண்டு முதலும் 60 ஆண்டுகள் வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.

    ஒரு ஹெக்ேடருக்கு சுமார் 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய இயலும்.

    காப்பீடு செய்ய வேண்டிய தென்னை மரங்களை வண்ணம் பூசி 1,2,3.. என எண்கள் குறித்து விவசாயியுடன் புகைபடம் எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.

    4 முதல் 15 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.2.25-ம், 16 வயது முதல் 60 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.3.50-ம், பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும்.

    காப்பீடு செய்வதற்கு முன்மொழி படிவத்துடன், ஆதார் நகல், வங்கிகணக்கு புத்தகத்தின் முதல் பக்கநகல், சிட்டா, அடங்கல், நிலவரைபடம், விவசாயியின் புகைப்படம், சுய அறிவிப்பு கடிதம்,

    காப்பீடு செய்வதற்கன வேளாண்மை உதவி இயக்குநரின் சான்றிதழ், கட்டணத்திற்கான வரைவோலை ஆகியவற்றை இணைத்து, அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    கூடுதல் விவரங்க ளுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்கமையத்தை தொடர்பு கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன.
    • மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் எண்ணற்ற கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறும்.

    பல்லடம் :

    கைத்தறி நெசவாளர்களுக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பாரதீய மஸ்தூர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது குறித்து அதன் கோவை மண்டல பொது செயலாளர் நடராஜன் கூறியதாவது:-

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன. பாரம்பரியமாக நெசவு செய்து வரும் பல ஆயிரம் குடும்பங்களுக்கு இத்தொழில் வாழ்வாதாரமாக உள்ளது.குறைந்த கூலி வருவாயை கொண்டு குடும்பம் நடத்தி வரும் நெசவாளர்களின் நலன் கருதி மகாத்மா காந்தி பங்கர் பீமா யோஜனா காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தியது.

    இத்திட்டத்தில் உறுப்பினர் இயற்கை மரணமடைந்தால் குடும்பத்தினருக்கு 60 ஆயிரம் ரூபாய், விபத்து மரணம், அல்லது உடல் ஊனம் ஏற்பட்டால் 1.50 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் எண்ணற்ற கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறும்.ஆனால் 4 ஆண்டாக இத்திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இத்திட்டத்தில் இணைந்த நெசவாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு உரிய காப்பீடு கிடைப்பதில்லை. இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம், முத்ரா கடனுக்கு மானியம் வழங்காதது, கூட்டுறவு சங்கங்களில் சேலை உற்பத்தி செய்த உறுப்பினர்களின் கணக்கிலேயே, மானிய தொகையை வரவு வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் கீழ் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் ஆண்டு விழா நடைபெற்றது.
    • அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாளர்கள் 8 பேருக்கு பாராட்டு நற்சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் கீழ் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கிபேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது :- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 5 ஆயிரத்து 504 பேர் ரூ.5 கோடியே 57 லட்சத்து 86 ஆயிரத்து 907 மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக பெற்றுள்ளனர். இந்த திட்டத்தை பற்றி அறிய 14555 அல்லது 1800 425 3993 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலமாக 1,451 வகையான மருத்துவ சிகிச்சைகள், 151 வகையான தொடர் சிகிச்சைகள், 38 வகையான பரிசோதனைகள், மற்றும் இதயம், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஞ்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை, காது நுண்திறன் கருவி பொருத்துதல் என உயர்ரக சிகிச்சைகளும் அடங்கும் என கலெக்டர் வினீத் தெரிவித்தார்.

    இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த 8 பேருக்கு நினைவுப்பரிசு, புதிதாக சேர்க்கப்பட்ட 5 பேருக்கு அடையாள அட்டை, சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பகுதி மேலாளர்கள், காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள் என 8 பேருக்கு பாராட்டு நற்சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன், இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பிரேமலதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

    தெலுங்கானா உதயமான தின விழாவில் பங்கேற்ற முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், மாநில விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டத்தை அறிவித்தார். #Telangana #FourthFormationDay
    ஐதராபாத்:

    ஒன்றுபட்ட ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதிகளை பிரித்து கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் 29-வது மாநிலமாக உதயமான தெலுங்கானாவின் முதல் முதல்-மந்திரியாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகர் ராவ் பதவி வகித்து வருகிறார்.

    இந்த மாநிலம் உதயமான 4-வது ஆண்டு தினம் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    செகந்திராபாத் அணிவகுப்பு மைதானத்தில் மாநில அரசு சார்பில் காலையில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் மாநில அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். மேலும் பல புதிய திட்டங்களை அறிவித்தும் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தெலுங்கானாவை, தங்க தெலுங்கானாவாக மாற்றும் லட்சியத்தை நிறைவேற்றும் நோக்கில் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் விவசாயத்தை இலாபம் தரும் தொழிலாக மாற்றவும், விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    குறிப்பாக விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதுடன், விவசாயிகளின் டிராக்டருக்கான சாலை வரியும் ரத்து செய்யப்பட்டது. முந்தைய ஆட்சிக்காலங்களில் புறக்கணிக்கப்பட்டு இருந்த நீர்ப்பாசனத்துறை, தற்போது கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

    மாநில விவசாயிகளுக்கு மற்றுமொரு சிறப்பு திட்டமாக ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு திட்டம் தொடங்கப்படும். எல்.ஐ.சி.யுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்கான பிரிமியத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும். இந்த திட்டத்தில் இணைக்கப்படும் விவசாயி இறந்து விட்டால், 10 நாட்களுக்குள் அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

    மாநில அரசு செயல்படுத்தி வரும் ‘கல்யாண லட்சுமி’, ‘ஷாதி முபாரக்’ திட்டங்கள் மூலம் ஏழை பெண்களின் திருமணத்துக்கு தலா ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. பீடி தொழிலாளர்களுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    தெலுங்கானாவில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய வளர்ச்சி திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இவ்வாறு சந்திரசேகர் ராவ் கூறினார்.

    இந்த நிகழ்வில், தனது 4 ஆண்டுகால ஆட்சியின் முன்னேற்ற அறிக்கையையும் அவர் வெளியிட்டார். முன்னதாக அவர் தெலுங்கானா பிரிவினை போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களுக்காக கட்டப்பப்பட்டு உள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    பஞ்சாரா ஹில்சில் அமைந்துள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில உள்துறை மந்திரி நயினி நரசிம்ம ரெட்டி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதைப்போல பல்வேறு மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் மந்திரிகள் பங்கேற்று வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தனர்.

    இதற்கிடையே தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘தெலுங்கானா மாநில மக்களின் கனவுகளும், விருப்பங்களும் வருகிற ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.  #Telangana #FourthFormationDay 
    ×