தென்னைமர காப்பீட்டு திட்டம்

ஈரோடு மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.தென்னைமர காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.
தென்னைமர காப்பீட்டு திட்டம்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் 16,290 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், வறட்சி, பூச்சிநோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நிலஅதிர்வு, ஆழிப்பேரலையால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்க ப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ தென்னைமர காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.

தென்னை சாகுபடி விவசாயிகள் தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வரப்பில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ குறைந்த பட்சம் பலன் தரக்கூடிய 5 மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் குட்டை மற்றும் ஒட்டுரக தென்னை மரங்களை 4 ஆண்டு முதலும், நெட்டை மரங்களை 7 ஆண்டு முதலும் 60 ஆண்டுகள் வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.

ஒரு ஹெக்ேடருக்கு சுமார் 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய இயலும்.

காப்பீடு செய்ய வேண்டிய தென்னை மரங்களை வண்ணம் பூசி 1,2,3.. என எண்கள் குறித்து விவசாயியுடன் புகைபடம் எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.

4 முதல் 15 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.2.25-ம், 16 வயது முதல் 60 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.3.50-ம், பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும்.

காப்பீடு செய்வதற்கு முன்மொழி படிவத்துடன், ஆதார் நகல், வங்கிகணக்கு புத்தகத்தின் முதல் பக்கநகல், சிட்டா, அடங்கல், நிலவரைபடம், விவசாயியின் புகைப்படம், சுய அறிவிப்பு கடிதம்,

காப்பீடு செய்வதற்கன வேளாண்மை உதவி இயக்குநரின் சான்றிதழ், கட்டணத்திற்கான வரைவோலை ஆகியவற்றை இணைத்து, அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கூடுதல் விவரங்க ளுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்கமையத்தை தொடர்பு கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com