search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ சிகிச்சை"

    • டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதி.
    • பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் தன்னால் பங்கேற்க முடியவில்லை.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வயிற்று தொற்று காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு பிரியங்கா காந்தி 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட தகவல் உறுதியானது.

    கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக உத்தரபிரதேசத்தில் நடைபெறும் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் தன்னால் பங்கேற்க முடியவில்லை.

    துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். நான் குணமடைந்தவுடன் அங்கு வருவேன். உ.பி.யில் மக்கள், எனது நண்பர்கள் அனைவருக்கும் நியாய யாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பிரியங்கா காந்தி 'எக்ஸ்' இணைய தளத்தில் பிரியங்காகாந்தி பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிருஷ்ணகிரியில் 11.329 பேருக்கு ரூ.20.11 கோடியில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • முதல் அமைச்சரின் வரிவான மருத்துவ காப்பீட்டில் வழங்கப்பட்டது.

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு, பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜன திட்டத்தின் கீழ் 11 ஆயிரத்து 329 பயனாளிகளுக்கு ரூ.20 கோடியே 11 லட்சத்தில் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார்.

    நிறைவு விழா

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீடு மற்றும் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தின், 5-ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கி காப்பீட்டுத் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு பரிசுகள், சிறப்பாக செயல்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:

    ரூ.20.11 கோடியில் மருத்துவ சிகிச்சைகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் அமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம், 11,329 பயனாளிகளுக்கு, 20.11 கோடி ரூபாய் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3 லட்சத்து 78 ஆயிரத்து 741 குடும்பங்கள், பதிவு செய்யப்பட்டு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

    காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர் ரேஷன், ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட ஆண்டு வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக, அறை எண்.32 -ல் செயல்படும் மையத்தை அணுகி இணையத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    பாராட்டு சான்றிதழ்கள்

    தொடர்ந்து, பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா மற்றும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயனடைந்த, 5 பயனாளிகளுக்கு நினைவு பரிசுகளும், சிறப்பாக செயல்பட்ட தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை, உமாராணி, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகிய தனியார் மருத்துவமனை, 5 வார்டு மேலாளர்கள், 5 தொடர்பு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.மேலும் பிரதம மந்திரி மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட,10 பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

    இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலர்கள் இளந்தரியன், சையத்அலி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சீர்காழி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • மருத்துவ உதவியாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 2000-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு அனைத்து வகையான நோய்களைக் கண்டறியும் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலர் வி.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். டி.என்.சாய் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் மருத்துவர்கள் எம். ஸ்ரீநாத் , எஸ். பாரத், எஸ்.அருண் குமார், சி.அபிநயா, எம். சுப்பிரமணியம், சிவநேசன் மற்றும் மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டு தேவையான மருத்துவ சிகிச்சையளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியினை பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    டி.ஆர்.பார்த்தசாரதி, சத்ய சாய் சேவா நிறுவனங்களின் மாவட்டத்தலைவர் எஸ். சங்கரன், பள்ளி உதவித் தலைமையாசிரியர்கள் என்.துளசிரங்கன், டி.ஸ்ரீனிவாசன் பங்கேற்றனர்.

    நிறைவில் பள்ளி உதவித் தலைமை யாசிரியர் எஸ். முரளிதரன் நன்றி கூறினார்.

    • தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு, ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் கட்டண சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
    • ரூ.149 கோடியே 86 இலட்சம் மதிப்பில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் கோவிந்தராவ் கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவர் கிருஷ்ணகிரி நகராட்சி குப்பைமேட்டு தெருவில் உள்ள நகர்புற நல வாழ்வு மையம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், ஜெகதேவியில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் காப்பீடு அட்டை பதிவு செய்யும் முகாம், பர்கூர் அரசு மருத்துவமனை மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களை ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு உடன் சென்றார்.

    ஜெகதேவி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் காப்பீடு அட்டை பதிவு செய்யும் முகாமை பார்வையிட்டு, காப்பீடு அட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை குறித்து நேரடியாக ஆய்வு செய்து, 10 பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் காப்பீடு அட்டைகளை வழங்கினார்.

    தொடர்ந்து, பர்கூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை பார்வையிட்டு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்னுயிர் காப்போம் 48 திட்டத்தின் கீழ், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

    இது குறித்து இயக்குனர் கோவிந்தராவ் கூறியதாவது:-

    சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் வகையிலும் அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவை குறைப்பதற்கும், முதல்- அமைச்சரால் 18.12.2021 அன்று தொடங்கப்பட்ட திட்டம் இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும்-48 திட்டம்.

    இத்திட்டத்தின் மூலம் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்.

    இத்திட்டத்தில் 237 அரசு மருத்துவமனைகள், 451 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 688 மருத்துவமனைகள் மருத்துவ சிகிச்சைகள் வழங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உள்ளவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர்கள், வேற்று நாட்டவர்கள் என அனைவருக்கும் தமிழ்நாடு எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு, ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் கட்டண சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30.06.2023 வரை அரசு மருத்துவமனைகளில் 1,52,833 நபர்களும் தனியார் மருத்துவமனையில் 15,314 நபர்கள் என மொத்தம் 1,70,231 நபர்களுக்கு ரூ.149 கோடியே 86 இலட்சம் மதிப்பில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் சாலை விபத்தினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அலுவலர் சையத் அலி, மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் சந்திரசேகர், மருத்துவ கல்லூரி துணை முதல்வர் சாத்வீகா, மருத்துவர் மீனாட்சி, தாசில்தார் சம்பத், ஜெகதேவி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி, துணைத் தலைவர் சரவணன் மற்றும் சுகாதார அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    • தனியாயா காப்பகத்தில் 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. அங்கிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
    • இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூர் கிராமத்தில் அன்பு ஜோதி ஆசிரமம் உள்ளது. இதனை கேரளாவைச் சேர்ந்த ஜீபின் பேபி (வயது 45) நடத்தி வருகிறார். இங்கு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு ஊர்களில் இருந்து ஆதரவற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்ப ட்டவர்கள் தங்கியுள்ளனர்.மனநலம் பாதிக்கப்பட்ட ஜாபருல்லா (45) என்பவரை இந்த காப்பகத்தில் திருப்பூரைச் சேர்ந்த ஹனிதின் 2021 அக்டோபர் 1-ந் தேதியன்று சேர்த்தார். பின்னர் 2022-ம் வருடம் ஜாபருல்லாவை காண ஹனிதின் அன்பு ஜோதி காப்பகத்திற்கு வந்தார். அங்கு அவரைக் காணவில்லை. இது குறித்து ஆசிரம உரிமையாளரிடம் விசாரித்த போது, ஜாபருல்லாவை பெங்களூரு காப்பத்திற்கு மாற்றியுள்ளதாக கூறினார். அங்கும் ஜாபருல்லாவை காணவில்லை.இது தொடர்பாக ஹனிதின் கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகாரினை பெற மறுத்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்அதன் மீதான உத்தரவின் பேரில் வருவாய்த் துறை விழுப்புரம் ஆர்.டிஒ. ரவிச்சந்திரன், செஞ்சி போலீஸ் டி.எஸ்.பி. பிரியதர்ஷினி, சமூக நல அலுவலர் ராஜாம்பாள், மாற்றுத் திறனாளி நல அலுவலர் தங்கல் மற்றும் போலீசார் காப்பகத்திற்கு சென்றனர். அங்கிருந்த 137 பேர் மற்றும் காப்பக உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். இதில் காப்பகத்தில் அடிப்படை வசதிகள் இன்றி சுகாதாரமற்று இருந்தது. மேலும், இந்த காப்பகத்தில் இருந்து 17 பேர் காணாமல் போனது தெரியவந்ததுகுரங்கு கடித்ததுஆய்வு நடத்து கொண்டிருந்த போது, காப்பக உரிமையாளர் ஜீபின் பேபியால் வளர்க்கப்படும் குரங்கு அங்கிருந்த 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. அங்கிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து காப்பகத்தில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அங்கிருந்து மாலை 4 மணிக்கு வெளியேறினர். தொடர்ந்து இன்றும் விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

    மருத்துவ சிகிச்சைமேலும், விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறையை சேர்ந்த மருத்துவக் குழு நேற்று இரவு காப்பகத்திற்கு விரைந்தது. குரங்கு கடித்தவர்களுக்கும், அங்கிருந்த அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளித்து மாத்திரை மருந்துகள் வழங்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • இதயம், நரம்பி யல், மூளை சம்பந்தமான 11 உயர்வகை மருத்துவ சிகிச்சை அளிக்க தேவை யான மருத்துவக் குழு உள்ளது.
    • ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்காக பிரத்தியேக பன்முக பிரிவு

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டத் தில் சுமார் 18 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்ற னர். இவர்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய ஒரு பெரிய நவீன மருத்துவமனையாக ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை மட்டுமே உள்ளது.

    இங்கு இதயம், நரம்பி யல், மூளை சம்பந்தமான 11 உயர்வகை மருத்துவ சிகிச்சை அளிக்க தேவை யான மருத்துவக் குழு உள்ளது. ஆனால் உள் நோயாளிகள் படுப்பதற்கு 80 படுக்கைகளைக் கொண்ட ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட பழைய கட்டிடம் மட்டுமே உள்ளது.

    ஆதலால் சிகிச்சை தேடி வரும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் திருவ னந்தபுரம் மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்காக பிரத்தியேக பன்முக பிரிவு மற்றும் அதற்கான கட்டி டம் வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கையை எழுப்பி இருந்தது.

    இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சூக் மண்டயாவை டெல்லியில் விஜய்வசந்த் எம்.பி. நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

    பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரமம் திட்டத்தின் கீழ் 140 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் கட்டுவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

    • மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
    • தரமான சிகிச்சை வழங்க ப்படுவதை உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் ஆண்டு விழா மற்றும் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திடத்தில் கடந்த ஓராண்டிற்கு மேலாக 3,067 நபர்களுக்கு ரூ.1,98,31,997 மதிப்பீட்டில் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இத்திட்டத்தின்கீழ் பல்வேறு அறுவை சிகிச்சைகள் வாயிலாக குணமடைந்த 5 நபர்களுக்கு சிகிச்சை குறித்தும் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்து, பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், 5 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய இரண்டு திட்ட ஒருங்கிணை ப்பாளர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கி, தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டது. மேலும், இத்திட்ட த்தின்கீழ் பயன்பெற அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அல்லாதோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் செயல்படும் காப்பீட்டுத்திட்ட மையத்தில் பதிவு செய்து, மருத்துவக் காப்பீட்டு அட்டை பெற்று பயன்பெறலாம்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்படும் 22 அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை வழங்க ப்படுவதை உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட தனி யார் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள தொ கையில் பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மேலும், மருத்துவமனைகளில் காப்பீடு குறித்த விபரங்கள் அடங்கிய தகவல் பலகையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பாக அவ்வப்போது, இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், இணை இயக்குநர் மருத்துவப் பணிகள் மரு.பாலச்சந்தர், தேசிய சுகாதார குழும ஒருங்கிணைப்பாளர் மரு.செந்தில், திட்ட ஒருங்கிணைப்பாளர்சோ.சாமிநாதன், மாவட்ட கருவூல அலுவலர் திரு.இளங்கோ பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

    • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் கீழ் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் ஆண்டு விழா நடைபெற்றது.
    • அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாளர்கள் 8 பேருக்கு பாராட்டு நற்சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் கீழ் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கிபேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது :- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 5 ஆயிரத்து 504 பேர் ரூ.5 கோடியே 57 லட்சத்து 86 ஆயிரத்து 907 மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக பெற்றுள்ளனர். இந்த திட்டத்தை பற்றி அறிய 14555 அல்லது 1800 425 3993 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலமாக 1,451 வகையான மருத்துவ சிகிச்சைகள், 151 வகையான தொடர் சிகிச்சைகள், 38 வகையான பரிசோதனைகள், மற்றும் இதயம், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஞ்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை, காது நுண்திறன் கருவி பொருத்துதல் என உயர்ரக சிகிச்சைகளும் அடங்கும் என கலெக்டர் வினீத் தெரிவித்தார்.

    இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த 8 பேருக்கு நினைவுப்பரிசு, புதிதாக சேர்க்கப்பட்ட 5 பேருக்கு அடையாள அட்டை, சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பகுதி மேலாளர்கள், காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள் என 8 பேருக்கு பாராட்டு நற்சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன், இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பிரேமலதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

    • கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பெண் ஒரிகானில் இருந்து விமான ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார்.
    • விமானத்தில் 3 டாக்டர்கள் மற்றும் 2 மருத்துவ உதவியாளர்கள் இருந்தனர்.

    ஆலந்தூர்:

    பெங்களூரைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவர் குடும்பத்துடன் அமெரிக்காவின் ஒரிகான் நகரில் உள்ள போர்ட்லேண்ட் பகுதியில் வசித்து வந்தார்.

    அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோயின் தாக்கம் குறையவில்லை. அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது.

    இதைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடிவு செய்தார். சாதாரண பயணிகள் போல் பல மணி நேரம் பயணம் செய்ய முடியாது என்பதால் பெங்களூரைச் சேர்ந்த தனியார் ஏர் ஆம்புலன்சு சேவையை அணுகினார். அவர்கள் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து இருந்தனர்.

    ஏர் ஆம்புலன்சு விமானத்தில் ஐ.சி.யூ. சிகிச்சை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அந்த பெண் ஒரிகானில் இருந்து விமான ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். விமானத்தில் 3 டாக்டர்கள் மற்றும் 2 மருத்துவ உதவியாளர்கள் இருந்தனர்.

    ஐஸ்லாந்து, துருக்கி வழியாக சுமார் 26 மணி நேர பயணத்துக்கு பின்னர் சென்னை விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 2.10 மணிக்கு விமானம் தரையிறங்கியது.

    அங்கிருந்து உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பெங்களூர் பெண்ணுக்கு விரைவில் இருதய ஆபரேசன் செய்யப்பட உள்ளது.

    இந்த ஆம்புலன்சு விமான பயணத்துக்கு சுமார் ரூ.1 கோடிக்கு மேல் செலவு ஆனதாக தெரிகிறது.

    இதுகுறித்து ஏர் ஆம்புலன்சு சேவை நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அமெரிக்காவில் உள்ள சிகிச்சை அவருக்கு போதுமானதாக இல்லை என்று உணர்ந்து இருந்தனர். எனவே அவர்கள் இங்கு சிகிச்சைக்கு வர முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தோம்.

    ஏர் ஆம்புலன்சில் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பயணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஓரிகானில் இருந்து தொடங்கியது.

    நோயாளியைக் கண்காணிக்க விமானத்தில் 3 மருத்துவர்கள் மற்றும் இரண்டு உதவியாளர் உள்பட மருத்துவக் குழுவுடன் ஐ.சி.யூ.வும் தயார் செய்யப்பட்டு இருந்தது.

    விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக ஐஸ்லாந்து தலைநகரில் நிறுத்தப்பட்டது. மேலும் துருக்கி விமான நிலையத்தில் இருந்து மற்றொரு விமானத்தில் நோயாளி மாற்றப்பட்டார். பின்னர் கடைசியாக தியர்பாகிரில் இருந்து விமானம் புறப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.10 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×