என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Woman"

    • 2 பேரும் வேலைக்கு சென்று விட்டதால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
    • மணமகள் சாரா குடும்பத்தினர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்தனர்.

    கோவை:

    கோவை நவ இந்தியா பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி பிரேமலதா. இவர்களது மகன் கவுதம்(வயது30). இவர் கனடாவில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார்.

    கவுதம் கல்லூரியில் படித்தபோது அவருக்கு அமெரிக்கா வாஷிங்டன் டி.சி. பகுதியை சேர்ந்த ராபர்ட் டக்ளஸ் பிராட்-எலினிட்டா யசன்யா பிராட் தம்பதி மகள் சாரா(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் கவுதம் மற்றும் சாரா ஆகியோரின் பெற்றோர் பங்கேற்றனர். அப்போது கவுதமும், சாராவும் தங்களது பெற்றோரிடம், தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டனர்.

    அதற்கு அவர்கள் மேற்படிப்பு முடித்த பிறகு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கவுதமும், சாராவும் பட்ட மேற்படிப்பு முடித்து தற்போது கனடாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    2 பேரும் வேலைக்கு சென்று விட்டதால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    மணமகள் சாராவின் பெற்றோர் தமிழ் கலாசாரத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பதால் அவர்கள் தமிழ்நாட்டில் தங்கள் மகள் திருமணத்தை நடத்த விரும்பினர்.

    இதையடுத்து மணமகள் சாரா குடும்பத்தினர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்தனர். பின்னர் இங்கு திருமண ஏற்பாடுகளை இரு வீட்டு பெற்றோரும் செய்து வந்தனர்.

    நேற்று கொடிசியா வளாகத்தில் கவுதம்-சாரா திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் தமிழ்முறைப்படி நடந்தது. மணமகள் சாராவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்து மணமகன் கவுதம் திருமணம் செய்து கொண்டார்.

    இந்த திருமண விழாவில் மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கனடா, அமெரிக்காவை சேர்ந்த உறவினர்கள் என பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். 

    • கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
    • அடிக்கடி மற்ற பெண்களை பார்த்ததால் ஆண் நண்பர் மீது ஆத்திரம்.

    காதலன் காதலியுடன் செல்லும்போது எதேச்சையாக மற்ற பெண்களை பார்ப்பது உண்டு. சிலர் வேண்டுமென்றே பார்ப்பதும் உண்டு. அந்த நேரத்தில் காதலி காதலனை பார்க்கும் ஒரு முறைப்பை நாம் சினிமா படங்களில் பார்த்திருப்போம். சில சமயங்களில் இதுபோன்ற சம்பவத்தால் அடிதடியும் நடப்பது உண்டு.

    இப்படி ஆண் நண்பர் ஒருவர் மற்ற பெண்களை பார்த்ததால் ஆத்திரம் அடைந்த பெண் ஒருவர், ஆண் நண்பரின் கண்ணில் வெறிநாய்க்கடி ஊசியால் குத்திய சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

    அமெரிக்காவின் மியாமி-டேட் கவுன்ட்டியில் சந்த்ரா ஜிமினெஸ் என்ற 44 வயது பெண்மணி ஒருவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் கடந்த 8 வருடங்களாக வசித்து வருகிறார். ஆண் நண்பர் அடிக்கடி மற்ற பெண்களை பார்த்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே தாங்கள் வளர்க்கும் நாய்க்கு ஊசி போடுவதற்காக இரண்டு நெறிநாய்க்கடி ஊசிகளை (rabies needles) ஆண் நண்பர் வீட்டில் வாங்கி வைத்துள்ள்ளார்.

    மற்ற பெண்களை ஆண் நண்பர் பார்த்து வந்ததால் ஜிமினெஸ்க்கு கடுங்கோபம் வந்துள்ளது. இதனால் ஒரு ஊசியை எடுத்து ஆண் நண்பரின் கண்ணில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    காயம் அடைந்த அந்த ஆண் நண்பர் காவல்துறைக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார். போலீசார் அவர்களது வீட்டிற்கு சென்று, ஆண் நண்பரை காப்பாற்றியதுடன், வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தூங்கிக் கொண்டிருந்த ஜிமினெஸை கைது செய்துள்ளனர்.

    போலீசார் விசாரணையின்போது, ஆண் நண்பரின் கண்ணில் நான் ஊசியால் தாக்கவில்லை என்று குற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த ஜிமினெஸ், ஆண் நண்பர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.

    • கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பெண் ஒரிகானில் இருந்து விமான ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார்.
    • விமானத்தில் 3 டாக்டர்கள் மற்றும் 2 மருத்துவ உதவியாளர்கள் இருந்தனர்.

    ஆலந்தூர்:

    பெங்களூரைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவர் குடும்பத்துடன் அமெரிக்காவின் ஒரிகான் நகரில் உள்ள போர்ட்லேண்ட் பகுதியில் வசித்து வந்தார்.

    அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோயின் தாக்கம் குறையவில்லை. அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது.

    இதைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடிவு செய்தார். சாதாரண பயணிகள் போல் பல மணி நேரம் பயணம் செய்ய முடியாது என்பதால் பெங்களூரைச் சேர்ந்த தனியார் ஏர் ஆம்புலன்சு சேவையை அணுகினார். அவர்கள் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து இருந்தனர்.

    ஏர் ஆம்புலன்சு விமானத்தில் ஐ.சி.யூ. சிகிச்சை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அந்த பெண் ஒரிகானில் இருந்து விமான ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். விமானத்தில் 3 டாக்டர்கள் மற்றும் 2 மருத்துவ உதவியாளர்கள் இருந்தனர்.

    ஐஸ்லாந்து, துருக்கி வழியாக சுமார் 26 மணி நேர பயணத்துக்கு பின்னர் சென்னை விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 2.10 மணிக்கு விமானம் தரையிறங்கியது.

    அங்கிருந்து உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பெங்களூர் பெண்ணுக்கு விரைவில் இருதய ஆபரேசன் செய்யப்பட உள்ளது.

    இந்த ஆம்புலன்சு விமான பயணத்துக்கு சுமார் ரூ.1 கோடிக்கு மேல் செலவு ஆனதாக தெரிகிறது.

    இதுகுறித்து ஏர் ஆம்புலன்சு சேவை நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அமெரிக்காவில் உள்ள சிகிச்சை அவருக்கு போதுமானதாக இல்லை என்று உணர்ந்து இருந்தனர். எனவே அவர்கள் இங்கு சிகிச்சைக்கு வர முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தோம்.

    ஏர் ஆம்புலன்சில் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பயணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஓரிகானில் இருந்து தொடங்கியது.

    நோயாளியைக் கண்காணிக்க விமானத்தில் 3 மருத்துவர்கள் மற்றும் இரண்டு உதவியாளர் உள்பட மருத்துவக் குழுவுடன் ஐ.சி.யூ.வும் தயார் செய்யப்பட்டு இருந்தது.

    விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக ஐஸ்லாந்து தலைநகரில் நிறுத்தப்பட்டது. மேலும் துருக்கி விமான நிலையத்தில் இருந்து மற்றொரு விமானத்தில் நோயாளி மாற்றப்பட்டார். பின்னர் கடைசியாக தியர்பாகிரில் இருந்து விமானம் புறப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.10 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×