search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரிவாக்க பணி"

    • இதற்கு சூடாமணி ஏரியின் மழை நீர் வெளியேற வழி இன்றி நிற்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • நெல் பயிர்கள் அழுகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் பின்ன லூர், மதுபானைமேடு, நெல்லி கொல்லை. துரிஞ்சி கொல்லை உள்ளிட்ட கிராம விவசாயிகளின் நெல் பயிர்கள் சுமார் 1000 ஏக்கர் அழுகி உள்ளது. இதற்கு சூடாமணி ஏரியின் மழை நீர் வெளியேற வழி இன்றி நிற்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் -விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால் இந்த பகுதியில் வடிகால் அமைக்கப்படாத தால் நெல் பயிர்கள் அழுகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    மேலும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க வில்லை எனவும் லேடன்மூ லம் கணக்கெடுப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என காப்பீடு திட்ட அலுவலர்களும், வேளாண் துறை அலுவலர்க ளும் தெரிவிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.அழுகிய நிலையில் உள்ள நெல் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சார்பில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
    • இதில் குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர்.

    தாயில்பட்டி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியின் உணவக மேலாண்மை மற்றும் கணினி பயன்பாட்டியல் துறைகள் இணைந்து ஸ்ரீவில் லிபுத்தூர் வள்ளலார் இல்லம் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக் கான நிகழ்ச்சிகளை நடத்தி–யது. இதில் குழந்தைகளுக்கு யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக் கப்பட்டன.

    மேலும் சதுரங்க போட்டி, இசை நாற்காலி போன்ற விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர். இதையடுத்து துறையின் விரிவாக்க பணி சார்பில் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகர–ணங்களான பேனா, பென் சில் மற்றும் சமைய–லுக்கு தேவையான பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மின் விசிறி, மின் விளக்கு ஆகியவற்றை மாணவர்கள் வழங்கினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு–களை கணினி பயன்பாட்டி–யல் துறை உதவி பேராசி–ரியை குருமகேஸ்வரி, சுற் றுலா மற்றும் உணவக மேலாண்மைத்துறை உதவி பேராசிரியை அபிநயா ஆகி–யோர் செய்திருந்தனர்.

    • சோழவந்தான் ரெயில் நிலைய விரிவாக்க பணி தொடக்க விழா நடந்தது.
    • பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில்வே நிலையத்தை விரிவாக்கம் செய்து தரம் உயர்த்த மத்திய அரசின் ரெயில்வே துறையின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலம் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான திட்டப்பணி தொடக்க விழா நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    முதன்மை திட்ட மேலாளர் (காதி சக்தி) பாலசுந்தர், துணை தலைமை பொறியாளர் சூர்யமூர்த்தி, பிரிவு பொறியாளர்கள் யுகேந்தர், ரவி தேஜா முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வக்கீல் சத்திய பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 115 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
    • உதவி பொறியாளா் பாபு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் உடன் இருந்தனா்.

    பல்லடம்:

    பல்லடம் - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை தற்போது இருவழி சாலையாக இருப்பதை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பல்லடத்தில் இருந்து புத்தரச்சல் வரையிலான 11.80 கிலோ மீட்டா் சாலை முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 115 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணியை சென்னை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவு தலைமைப் பொறியாளா் இரா.சந்திரசேகா் ஆய்வு மேற்கொண்டு பணியை தரத்துடன் விரைந்து முடித்திட அறிவுறுத்தினாா்.

    ஆய்வின்போது திருப்பூா் கண்காணிப்புப் பொறியாளா் பொ.வளா்மதி, திருப்பூா் கோட்டப் பொறியாளா் ஜெ.ரமேஷ்கண்ணா, திருப்பூா் தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, பல்லடம் உதவி கோட்டப் பொறியாளா் தனலட்சுமி, உதவி பொறியாளா் பாபு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் உடன் இருந்தனா்.

    • இரு புறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கின்றன.
    • பல ஆண்டுகளாக சாலை ஓரத்தில் இருந்து வந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்திலிருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது சாலையின் இரு புறமும் வடிகால் வாய்க்கால் அமைத்தும், ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றியும் அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கடலூர் மஞ்சகுப்பம் ஆல்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக 43 வீடுகள் இடிப்பதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஒருங்கிணைப்பாளர் ஆல்பேட்டை பாபு தலைமையில் பல ஆண்டுகளாக வசித்து வந்த வீடுகளை இடிப்பதற்கு நாங்கள் அனுமதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு மாற்று இடம் வழங்கினால் நாங்கள் உடனடியாக இடத்தை காலி செய்வதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் 43 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பல ஆண்டுகளாக சாலை ஓரத்தில் இருந்து வந்த பயணிகள் நிழற்குடை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் முழுவதுமாக இடிக்கப்பட்டது. அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து விடிய விடிய காத்திருந்தனர். மேலும் ஏதேனும் வீடுகள் இடிக்கப்பட உள்ளதா? என பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    தற்போது முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

    மேலும் 43 வீடுகளை சேர்ந்த பொதுமக்கள், எங்கள் வீடுகளை இடிக்க வேண்டுமானால் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தது போல் எங்களுக்கு மாற்று இடம் வழங்கிய பிறகு எங்கள் வீடுகளை இடிப்பதற்கு அனுமதிப்போம். இதற்கான நடவடிக்கை காலதாமதம் ஆனால் தமிழ்நாடு முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். ஆகையால் மாவட்ட நிர்வாகம் எங்களது அடிப்படை கோரிக்கையான மாற்று குடியிருப்பை உடனடியாக அதற்கான சான்று வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    ×