search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதிவு முகாம்"

    • ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் ஆகஸ்ட் 16-ந்தேதி வரை 79 ரேஷன் கடைகளுக்கு 137 மையங்களில் பதிவு நடை பெறுகிறது
    • மின் வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தாலுகாவில் மகளிர் உரிமைத் திட்ட உதவி பெற முதற்கட்டமாக வரும் நாளை முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை 83 ரேஷன் கடைகளுக்கு 87 மையங்களிலும், 2-ம் கட்டமாக வரும் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் ஆகஸ்ட் 16-ந்தேதி வரை 79 ரேஷன் கடைகளுக்கு 137 மையங்க ளில் பதிவு நடை பெறுகிறது.இதனை முன்னிட்டு இரு தினங்களுக்கு முன்பாக விக்கிரவாண்டி, பாப்பனாப் பட்டு, சாமியாடி குச்சி பாளையம் உள்ளிட்ட சில மையங்களில் முன்னோட்ட பதிவு துவங்கியது.

    அதை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் சென்று ஆய்வு செய்தார். பதிவு மையங்களில் மின் வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.  பயனாளிகளிடம் வங்கி கணக்குகள் நடைமுறையில் உள்ளதா எனவும், சர்வர் வேலை செய்கிறதா எனவும், தினமும் டோக்கன் படி பதிவு செய்ய ஆலோசனை களை வழங்கினார். அப்போது தாசில்தார் ஆதி சக்தி சிவக்குமரி மன்னன், செயல் அலுவலர் அண்ணா துரை, தேர்தல் துணை தாசில்தார் ஜோதிப்பிரியா, வருவாய் ஆய்வாளர்கள் தெய்வீகன், மெகருனிஷா, ஒருங்கிணைப்பாளர்கள் தமிழழகன், கமலக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடை பெற்றது.
    • தொடர்ந்து 7 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்ட சத்து பெட்டகத்தையும் வழங்கினார்கள்.

    சேலம்:

    கருணாநிதி நூற்றாண்டையொட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளி கள் பதிவு செய்யும் முகாம் மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடை பெற்றது. முகாமை மேயர் ராமச்சந்திரன், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவ லர் மேனகா ஆகியோர் தொடங்கிவைத்தனர். தொடர்ந்து 7 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்ட சத்து பெட்டகத்தையும் வழங்கினார்கள்.

    முகாமில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில், கலைஞர் நூற்றாண்டை யொட்டி அரசு தமிழ்நாடு முழுவதும் 100 மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டதின் அடிப்ப டையில் சேலம் மாவட்டத் தில் 5 சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெறு கிறது. முகாமில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதோடு காப்பீட்டுத் திட்ட பயனா ளிகள் பதிவு செய்யும் முகா மும் இங்கு நடைபெறுவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்ப டுத்திக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதில் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை, மணிப்பால் மருத்துவமனை, ஐ பவுண்டேசனை சார்ந்த மருத்துவ குழுவினர் பங்குபெற்று ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோ, காது மூக்கு தொண்டை மருத்துவம், தோல்நோய் மருத்துவம், சித்தா மருத்துவம், காச நோய், தொழுநோய், புற்று நோய், பொதுமருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தை கள் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்து வம் ஆகியவற்றிக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளும் வழங்கினர். கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிர சவத்திற்காக யோக பயிற்சியும் முகாமில் அளிக்கப்பட்டது.

    முகாமில் துணை மேயர் சாரதாதேவி, மண்டல குழுத்தலைவர்கள் உமாராணி, தனசேகர், சுகாதார நிலைக்குழுத்த லைவர் ஏ.எஸ்.சரவணன், இணை இயக்குநர் நலப்பணி கள் பானுமதி, துணை இயக்குநர் சவுண்டம்மாள், துணை இயக்குநர் யோகா னந், கவுன்சிலர்கள் சங்கீதா, கிரிஜா, ஸ்ரீராஜ் குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர். 

    ×