search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "celebrates"

    • ஊட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை-பூஜைகள் நடத்தப்பட்டன
    • பக்தர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது

    ஊட்டி,

    பாரத பிரதமர் மோடி 73-வது பிறந்தநாளை முன்னிட்டு ஊட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை-பூஜைகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கு ஊட்டி நகர பா.ஜ.க தலைவர் பிரவீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். பின்னர் பக்தர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    பின்னர் ஊட்டி நகர அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் கட்சிக்கொடி ஏற்றிவைத்து பேசுகையில், ஊட்டி நகர பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழிலாளர்களிடம் மத்திய அரசின் திட்டத்தின் பயன்கள் குறித்து எடுத்துக்கூற வேண்டும் என்று கூறினார்.

    தொடர்ந்து வண்ணாரப்பேட்டை மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு பயிற்சி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு, பா.ஜ.க சார்பில் ஒருநாள் உணவு வழங்கப்பட்டது. அப்போது அங்கு உள்ள குழந்தைகள், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் பரமேஸ்வரன், மாவட்டசெயலாளர்கள் அருண்குமார், வெங்கடேஷ், நகர பொதுச்செயலாளர்கள் சுரேஷ்குமார், ருத்கார்த்திக், துணைத் தலைவர்கள் ஹரிகிருஷ்ணன், சுதாகர், தேவி, செயலாளர்கள் அபிராமி, பிரவீன்குமார், பிலோமினா, சுற்றுச்சூழல் பிரிவு விசாலி, வெங்கடேஷ், கண்ணன், நாகராஜ், விளையாட்டுபிரிவு ரகு மற்றும் உதயா, ஐ.டி.விங் மல்லிகா, பிரசாந்த், மணிகண்டன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • அரியலூரில் காங்கிரசார் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்
    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்

    ஜெயங்கொண்டம்:

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில், மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரத்தால் திருச்சியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டினர்
    • மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் திருச்சி மாநகர் மாவட்ட தில்லை நகர் அலுவலகத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    திருச்சி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் திருச்சி மாநகர் மாவட்ட தில்லை நகர் அலுவலகத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் வனிதா, பகுதிச் செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, என்.எஸ்.பூபதி, நாகநாதர் பாண்டி, கலைவாணன், என்ஜூனியர் இப்ராம்ஷா எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் அப்பா குட்டி, வட்ட செயலாளர்கள் தில்லை முருகன், கண்ணியப்பன், ராஜகோபால், ஜெகதீசன், சீனிவாசன், கல்லுக்குழி முருகன் செல்வமணி, அப்துல் ரகுமான், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட த் தலைவர் ஜான் எட்வர்ட் குமார், பகுதி பிரதிநிதிகள் திருநாவுக்கரசு, மகேந்திரன், ஹாரூண், மற்றும் ரோஜர், தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ், தில்லை நகர் விஷ்வா, மார்க்கெட் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


    • பொதுமக்கள்,மங்கலம்- அங்கன்வாடி மைய குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • இளைஞர்அணி நிர்வாகிகள்,மாணவரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம் : 

    தமிழக அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை புதிய அமைச்சராக சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.உதயநிதிஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.

    இதையடுத்து மங்கலம் ஊராட்சி சார்பில் சின்னப்புத்தூர் பகுதியில் தி.மு.க. கட்சியின் கொடியேற்றப்பட்டது. மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி கொடியேற்றினார். அதனைத்தொடர்ந்து மங்கலம் பகுதியில் பட்டாசு வெடிக்கப்பட்டதுடன் பொதுமக்கள்,மங்கலம்- அங்கன்வாடி மைய குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, கட்சியின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுல்தான்பேட்டை தம்பணன், தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சகாபுதீன் , மங்கலம் ஊராட்சி மன்ற 9-வது வார்டு உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளருமான எம்.ஏ.முகமது இத்ரீஸ், திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.ஏ.முகமது ஜுனைத், தெற்கு ஒன்றிய கூடுதல் துணைச்செயலாளர் இடுவாய் ரவிச்சந்திரன், தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இடுவாய் சரவணன், சீராணம்பாளையம் செயலாளர் முத்துவேல், இடுவாய் சுரேஷ், தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணக்குமார், தெற்கு ஒன்றிய முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ், மற்றும் இளைஞர்அணி நிர்வாகிகள்,மாணவரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே உள்ள இருளர் மற்றும் பழங்குடியினருடன் நடந்தது.
    • பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவின் வெற்றி கொண்டாட்டம் புதுவை பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே உள்ள இருளர் மற்றும் பழங்குடியினருடன் நடந்தது. பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப் பாளராக மாநில தலைவர் சாமிநாதன் கலந்து கொண்டார். அப்போது 150 குடும்பங்களுக்கு பட்டியல் அணி சார்பில் சர்க்கரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில துணை த்தலைவர் செல்வம், செயலாளர்ரத்தினவேலு, அலுவலக செயலாளர் மகேஷ்ரெட்டி, தேசிய விவசாய அணி செயற்குழு உறுப்பினர்

    பாரதி மோகன், காலாப்பட்டு தொகுதி தலைவர் பிரகாஷ், பொதுச்செயலாளர் குணசீலன், துணைத்தலைவர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கருணாநிதி பிறந்த நாளையொட்டி நெல்லையில் 500 பேருக்கு இனிப்பு வழங்கி தி.மு.க.வினர் கொண்டாடினர்.
    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி நெல்லை மாநகர தி.மு.க. சார்பில் வண்ணார் பேட்டையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர தி.மு.க. செயலாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் தலைமை தாங்கினார்.

    தச்சநல்லூர் கிழக்குப்பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான தச்சை சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நெல்லை மத்திய மாவட்ட துணைச் செயலாளர் ஆ.க.மணி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன் ஆகியோர் வரவேற்றனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்பட்டது. 

    இதில் மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, பாளை பகுதி செயலாளர் பூக்கடை அண்ணாதுரை, மானூர் ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரி, வடகரை கிளை செயலாளர் செல்லத்துரை, மாவட்ட பிரதிநிதி தொப்பி மைதீன், நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கண்காணிப்பு குழு உறுப்பினரும், நெல்லை பேட்டை பகுதி இளைஞரணி துணை அமைப்பாளருமான மணிகண்டன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    முன்னதாக அங்கு அலங்கரித்து வைக்க ப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு நிர்வாகிகள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலு த்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை தச்சநல்லூர் கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளரும், முன்னாள் மண்டல சேர்மனுமான தச்சை  சுப்பிரமணியன் செய்திருந்தார்.
    கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி தூத்துக்குடியில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
    தூத்துக்குடி:

    தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர்  கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் எட்டையபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி சிலைக்கு மாவட்ட பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.

    பின்னர் பழைய பேருந்து நிலையம் முன்பு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி அரசு மருத்துமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், வக்கீல்  பாலகுருசாமி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலளார்கள் ஆறுமுகம், ராஜ்மோகன்செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     மேலும் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் ராமர், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ஜெபசிங்,

    மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர் ஜேசையா, மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், துணை அமைப்பாளர் பெருமாள்,

     வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், அருணாதேவி, மாணவரணி துணை அமைப்பாளர் சீனிவாசன், பகுதிசெயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன்,  ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், சக்திவேல், அண்டன் பொன்சேகா, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அருண்சுந்தர், செல்வின், முத்துராமன், சங்கரநாராயணன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி,

    மாணவரணி துணை அமைப்பாளர்கள் பால்மாரி, டைகர் வினோத்து. ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், வக்கீல் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜன்பாபு, சுபேந்திரன், விவசாய அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, இசக்கிராஜா, ராமர், கண்ணன், தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா, அதிஷ்டமணி, ஜான்சிராணி, பொன்னப்பன், கந்தசாமி, விஜயகுமார், முத்துவேல், சரண்யா, ஜான், ராமும்மாள்,

    விஜயலட்சுமி, ரெக்ஸின், மகேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், செந்தில்குமார், செல்வக்குமார், ஜெயசிங், தொமுச நிர்வாகிகள் முருகன், கருப்பசாமி, மரியதாஸ், அண்ணாநகர் பகுதி துணைச்செயலாளர் பாலு, வட்டச்செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், நாராயணன், டென்சிங், மூக்கையா, மற்றும் சுப்பையா, பிரபாகர், கருணா, அல்பர்ட், ராஜா, மகேஸ்வரசிங், அருணகிரி, பாலசுப்பிரமணி, பெரியசாமி, சிவசுந்தர், இசக்கி, அற்புதராஜ், பெலின்டஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.      

    ம.தி.மு.க. சார்பில் ஓன்றிய செயலாளர் வீரபாண்டிய சரவணன், மாநகர செயலாளர் முருகபூபதி, நிர்வாகிகள் தராசு மகாராஜன், அனல் செல்வராஜ், எபனேசர் தாஸ், சரவணபெருமாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் ஆரோக்கியபுரம் புனித ஜோசப் தொழுநோய் மருத்துவமனை உள் நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பிரதிநிதி நெல்சன் முத்து நகர் கிளை செயலாளர் பிரபாகர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், துணை அமைப்பாளர் ராஜ் மற்றும் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செய்திருந்தார்கள்.
    காணும் பொங்கலை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி சுற்றுலா தலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர். #KaanumPongal
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அதிகாலையிலேயே வாசல்களில் வண்ணக் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர்.

    மேலும் பொங்கலுக்கு மறுநாள் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கிராமங்களில் பசு உள்ளிட்ட மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    காணும் பொங்கலையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் சென்று கொண்டாடுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா, முத்துநகர் கடற்கரை பூங்கா, துறைமுக கடற்கரை பூங்கா பகுதிகளுக்கு மக்கள் சென்றனர். மக்கள் அந்த பகுதிகளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு விளையாடி மகிழ்ந்தனர்.

    சிறுவர்கள் பட்டங்களை பறக்கவிட்டு விளையாடினர். கடற்கரை மற்றும் பூங்காக்களையொட்டி 100-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் தின்பண்டங்கள், சிறுவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் தங்கள் குடும்பங்களுடன் சென்று நேரத்தை செலவழிப்பது வழக்கம். காணும் பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடியில் முயல் தீவு மற்றும் தெர்மல் நகர் கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.

    காணும் பொங்கலை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் இருக்கும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின் பேரில், 1,800-க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதிலும் உள்ள சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    கூட்டம் அதிகமாக இருந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. குற்றங்களை தடுப்பதற்காக சாதாரண உடையிலும் போலீசார் வலம் வந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களான குற்றாலம், பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய இடங்களிலும் ஏராளமான மக்கள் காணும் பொங்கலை கொண்டாடினார்கள். இப்பகுதியில் உள்ள பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    களக்காடு தலையணையில் காணும் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் குடும்பத்தினர்களுடன் பச்சையாற்றில் குளித்தனர்.

    இந்தாண்டு புதியதாக அமைக்கப்பட்ட பூங்காவில் சிறுவர்கள் விளையாடினர். வனத்துறை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்பட பொருட்கள் கொண்டு வருகிறார்களா? என கடும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு முதல் முறையாக கழிவறை, குடிநீர் வசதி, உடை மாற்றும் அறைகள் உள்பட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

    களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனரும், தலைமை வன பாதுகாவலருமான அன்வர்தீன் உத்தரவின் பேரில் களக்காடு துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆலோசனையின்படி வனசரகர்கள் புகழேந்தி, பாலாஜி முன்னிலையில் வனத்துறையினரும், களக்காடு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுபோல களக்காடு தேங்காய் உருளி அருவி, பச்சையாறு அணை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக குவிந்திருந்தனர். #KaanumPongal

    தெலுங்கானா உதயமான தின விழாவில் பங்கேற்ற முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், மாநில விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டத்தை அறிவித்தார். #Telangana #FourthFormationDay
    ஐதராபாத்:

    ஒன்றுபட்ட ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதிகளை பிரித்து கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் 29-வது மாநிலமாக உதயமான தெலுங்கானாவின் முதல் முதல்-மந்திரியாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகர் ராவ் பதவி வகித்து வருகிறார்.

    இந்த மாநிலம் உதயமான 4-வது ஆண்டு தினம் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    செகந்திராபாத் அணிவகுப்பு மைதானத்தில் மாநில அரசு சார்பில் காலையில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் மாநில அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். மேலும் பல புதிய திட்டங்களை அறிவித்தும் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தெலுங்கானாவை, தங்க தெலுங்கானாவாக மாற்றும் லட்சியத்தை நிறைவேற்றும் நோக்கில் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் விவசாயத்தை இலாபம் தரும் தொழிலாக மாற்றவும், விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    குறிப்பாக விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதுடன், விவசாயிகளின் டிராக்டருக்கான சாலை வரியும் ரத்து செய்யப்பட்டது. முந்தைய ஆட்சிக்காலங்களில் புறக்கணிக்கப்பட்டு இருந்த நீர்ப்பாசனத்துறை, தற்போது கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

    மாநில விவசாயிகளுக்கு மற்றுமொரு சிறப்பு திட்டமாக ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு திட்டம் தொடங்கப்படும். எல்.ஐ.சி.யுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்கான பிரிமியத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும். இந்த திட்டத்தில் இணைக்கப்படும் விவசாயி இறந்து விட்டால், 10 நாட்களுக்குள் அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

    மாநில அரசு செயல்படுத்தி வரும் ‘கல்யாண லட்சுமி’, ‘ஷாதி முபாரக்’ திட்டங்கள் மூலம் ஏழை பெண்களின் திருமணத்துக்கு தலா ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. பீடி தொழிலாளர்களுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    தெலுங்கானாவில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய வளர்ச்சி திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இவ்வாறு சந்திரசேகர் ராவ் கூறினார்.

    இந்த நிகழ்வில், தனது 4 ஆண்டுகால ஆட்சியின் முன்னேற்ற அறிக்கையையும் அவர் வெளியிட்டார். முன்னதாக அவர் தெலுங்கானா பிரிவினை போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களுக்காக கட்டப்பப்பட்டு உள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    பஞ்சாரா ஹில்சில் அமைந்துள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில உள்துறை மந்திரி நயினி நரசிம்ம ரெட்டி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதைப்போல பல்வேறு மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் மந்திரிகள் பங்கேற்று வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தனர்.

    இதற்கிடையே தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘தெலுங்கானா மாநில மக்களின் கனவுகளும், விருப்பங்களும் வருகிற ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.  #Telangana #FourthFormationDay 
    ×