search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் மோடி பிறந்தநாள்: பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்
    X

    ஊட்டியில் மோடி பிறந்தநாள்: பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

    • ஊட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை-பூஜைகள் நடத்தப்பட்டன
    • பக்தர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது

    ஊட்டி,

    பாரத பிரதமர் மோடி 73-வது பிறந்தநாளை முன்னிட்டு ஊட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை-பூஜைகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கு ஊட்டி நகர பா.ஜ.க தலைவர் பிரவீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். பின்னர் பக்தர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    பின்னர் ஊட்டி நகர அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் கட்சிக்கொடி ஏற்றிவைத்து பேசுகையில், ஊட்டி நகர பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழிலாளர்களிடம் மத்திய அரசின் திட்டத்தின் பயன்கள் குறித்து எடுத்துக்கூற வேண்டும் என்று கூறினார்.

    தொடர்ந்து வண்ணாரப்பேட்டை மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு பயிற்சி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு, பா.ஜ.க சார்பில் ஒருநாள் உணவு வழங்கப்பட்டது. அப்போது அங்கு உள்ள குழந்தைகள், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் பரமேஸ்வரன், மாவட்டசெயலாளர்கள் அருண்குமார், வெங்கடேஷ், நகர பொதுச்செயலாளர்கள் சுரேஷ்குமார், ருத்கார்த்திக், துணைத் தலைவர்கள் ஹரிகிருஷ்ணன், சுதாகர், தேவி, செயலாளர்கள் அபிராமி, பிரவீன்குமார், பிலோமினா, சுற்றுச்சூழல் பிரிவு விசாலி, வெங்கடேஷ், கண்ணன், நாகராஜ், விளையாட்டுபிரிவு ரகு மற்றும் உதயா, ஐ.டி.விங் மல்லிகா, பிரசாந்த், மணிகண்டன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×