search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்-திருச்சியில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
    X

    எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்-திருச்சியில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

    • எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரத்தால் திருச்சியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டினர்
    • மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் திருச்சி மாநகர் மாவட்ட தில்லை நகர் அலுவலகத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    திருச்சி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் திருச்சி மாநகர் மாவட்ட தில்லை நகர் அலுவலகத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் வனிதா, பகுதிச் செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, என்.எஸ்.பூபதி, நாகநாதர் பாண்டி, கலைவாணன், என்ஜூனியர் இப்ராம்ஷா எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் அப்பா குட்டி, வட்ட செயலாளர்கள் தில்லை முருகன், கண்ணியப்பன், ராஜகோபால், ஜெகதீசன், சீனிவாசன், கல்லுக்குழி முருகன் செல்வமணி, அப்துல் ரகுமான், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட த் தலைவர் ஜான் எட்வர்ட் குமார், பகுதி பிரதிநிதிகள் திருநாவுக்கரசு, மகேந்திரன், ஹாரூண், மற்றும் ரோஜர், தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ், தில்லை நகர் விஷ்வா, மார்க்கெட் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×