search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "equipment"

    • மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை மருந்து நிறுவனங்கள் நிறுத்தியது.
    • மற்ற அரசு மருத்துவமனைகளும் கொடுக்க வேண்டிய பணம் கோடிக்கணக்கில் பாக்கியாக உள்ளது.

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கோட்டயம், கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்படுகின்றன. மேலும் எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பல இடங்களில் அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. பிரசித்தி பெற்ற தனியார் மருத்துவ மனைகளும் இங்கு ஏராளம். இருந்த போதிலும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் நோயாளிகள் அதிக அளவில் வருகிறார்கள். திருவனந்தபுரம் உள்ளிட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனியார் ஆஸ்பத்திரிகளை போன்று நவீன மருத்துவ வசதிகள் இருக்கின்றன. இதனால் வசதி படைத்த வர்கள் கூட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற விரும்பு கின்றனர்.

    இப்படிப்பட்ட சூழலில் கேரள மாநில அரசு ஆஸ்பத்திரிகளில் ஒரு சிக்கலான நிலை உருவாகி இருக்கிறது. கேரள மாநில அரசு கடந்த சில மாதங்களாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இது இந்த மாத தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் எதிரொலித்தது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு நாட்களுக்குள் அரசு ஊழியர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த மாதம் அது மிகவும் தாமதமாக வழங்கப்பட்டது. பல துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    இந்த நிதி நெருக்கடி மருத்துவத் துறையையும் பாதித்துள்ளதாக தெரிகிறது. கேரள மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான மருந்து விநியோகத்தில் ஏராளமான வினியோகஸ்தர்கள் ஈடுபடுகின்றனர்.

    அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை அரசு ஒரு குறிப்பிட்ட கால அளவில் வழங்கி வந்தபடி இருந்தது. இந்நிலையில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் நிறுவன விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை பல மாதங்களாக மாநில அரசு வழங்காமல் உள்ளது.

    2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் ரூ.143கோடி தொகையை விநியோகஸ்தர்களுக்கு மாநில அரசு வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக திருவ னந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.50கோடி வரை பாக்கி வைத்துள்ளது.

    அதேபோல் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரூ17.55 கோடியும், கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரூ23.14 கோடியும், எர்ணாகுளம் பொது மருத்துவமனை ரூ10.97 கோடியும், கோழிக்கோடு பொது மருத்துவமனை ரூ3.21 கோடியும் பாக்கி வைத்துள்ளது. இதே போல் மற்ற அரசு மருத்துவமனைகளும் கொடுக்க வேண்டிய பணம் கோடிக்கணக்கில் பாக்கியாக உள்ளது.

    தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு அறுவை சிகிச்சை நிறுவன விநியோகஸ்தர்கள் மாநில அரசை பலமுறை வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை கொடுக்க அரசு நடவ டிக்கை எடுக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை ஏப்ரல் மாதம் முதல் நிறுத்த அறுவை சிகிச்சை உபகரண நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் அந்தந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

    அந்த கடிதத்தில் எங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கிதொகையை வருகிற 31-ந்தேதிக்குள் கட்ட தவறி னால், உபகரணங்கள் சப்ளை நிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று கடந்த ஆகஸ்ட் மாதம் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை மருந்து நிறுவனங்கள் நிறுத்தியது. அதன் எதிரொலியாக அறுவை சிகிச்சை உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    அங்கு இருதய அறுவை சிகிச்சைகள் ஒரு வாரம் நிறுத்தப்பட்டது. பின்பு இரண்டு மாத நிலுவை தொகையான 6 கோடி ரூபாயை அரசு செலுத்தியபிறகே விநியோ கஸ்தர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை உபகரணங்களை சப்ளை செய்தனர். பின்பு தான் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெற தொடங்கின.

    இந்தநிலையில் தற்போது அறுவை சிகிச்சை உபகரணங்கள் நிறுவன விநியோகஸ்தர்கள் சப்ளையை நிறுத்துவோம் என்று கூறி இருப்பதால் தற்போது மீண்டும் பிரச்சினை உருவாகி இருக்கிறது.

    அவர்கள் கூறியிருப்பது போல் அறுவை சிகிச்சை உபகரணங்கள் சப்ளையை நிறுத்தினால் மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி களில் ஏப்ரல் மாதம் முதல் அறுவை சிகிச்சைக்கான அனைத்து உபகரணங்களும் தட்டுப் பாடு ஏற்படும்.

    இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்ய முடியாத நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நோயா ளிகள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள்.

    தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் ஒவ்வொரு நோயாளிக்கும் தேதி குறிப்பிடப்பட்டே அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு வெகுநாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையே நிலவி வருகிறது.

    இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்வது முற்றிலும் தடைபடும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

    அறுவை சிகிச்சை நிறுவனங்களின் விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முற்றிலுமாக வழங்கி, பிரச்சனைக்கு தீர்வு காண அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    • அப்போது துப்புரவு பணியாளர்கள் கையில் உறைகள் மட்டும் அணிந்திருந்தனர்.
    • ஒப்பந்ததாரரை நேரில் அழைத்தும் வரவில்லையா என கூறி சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. குப்பைகள் அகற்றுவதற்கு தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலமாக 300-க்கும் மேற்பட்ட தற்காலிக துப்புரவு பணியாளர்களைக் கொண்டு குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது. கடலூர் மாநகராட்சி நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 162 பேர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் சரியான முறையில் அகற்றவில்லை. இதன் காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளது. கடந்த வாரம் கலெக்டர் அருண் தம்புராஜ், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், குப்பை அகற்றும் தொழிலாளர்களுக்கு வாகன வசதி, பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை உடனடியாக வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து , இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் துப்புரவு பணியாளர்களை மீண்டும் ஆய்வு செய்தார். அப்போது துப்புரவு பணியாளர்கள் கையில் உறைகள் மட்டும் அணிந்திருந்தனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் நேரில் வரவில்லை. அதற்கு மாறாக ஒப்பந்ததாரரிடம் பணிபுரியும் ஊழியர்கள் வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அருண் தம்புராஜ் கடும் அதிர்ச்சி அடைந்து, ஆய்வு கூட்டத்திற்கு ஒப்பந்ததாரரை நேரில் அழைத்தும் வரவில்லையா என கூறி சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது தற்காலிக துப்புரவு பணியாளர்கள் பேசுகையில், எங்களுக்கு தற்போது குப்பைகள் அள்ளுவதற்கு கை உறைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாகன வசதிகள் சரியான முறையில் வழங்கவில்லை . தற்போது வழங்கப்பட்டுள்ள வாகனங்களில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால் அதனை நாங்களே செலவு செய்து சரி செய்து கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள். இது மட்டுமின்றி குப்பைகள் கொண்டு செல்வதற்கு சாக்குகளும் அதற்கான வசதிகளும் இல்லை. மேலும் அகற்றப்பட்ட குப்பைகள் கொண்டு செல்வதற்கு, ஜேசிபி வசதி இல்லாததால், குப்பைகளும் கொட்ட முடியவில்லை என சரமாரியாக புகார் அளித்தனர்.

    இதனை கேட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பேசுகையில், கடலூர் மாநகராட்சியை சுகாதாரமாக பேணிக்காப்பதற்காக தனியார் ஒப்பந்ததாரர் மூலமாக குப்பைகள் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் கடந்த வாரம் ஆய்வு செய்த போது, எப்படி இருந்ததோ அதேபோல் தற்போதும் உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு உடனடியாக மாநகராட்சி சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும் என கடும் எச்சரிக்கை விடுத்தார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாநகர நகர் அலுவலர் எழில் மதனா மற்றும் மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, கவுன்சிலர்கள் சுதா அரங்கநாதன், சுபாஷினி ராஜா, சக்திவேல், சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • சந்தேகப்படும்படி நபர்கள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
    • மீன்பிடிக்க செல்லும்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் எடுத்து செல்ல வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே காரங்குடா, மல்லிப்பட்டிணம் ஆகிய இடங்களில் இந்திய கடலோர காவல்படை, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மீன்வளத்துறை ஆகியோர் சார்பில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லக் கூடாது.

    தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது. கடத்தல் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

    கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல் படை பிரதான அதிகாரி பி.வி.வினு, ரமேஷ்ராஜா மற்றும் அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு குழும காவல் துணைக் கண்காணிப்பபாளர் பிரான்சிஸ், காவல் ஆய்வாளர் மஞ்சுளா, உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன், ஆய்வாளர் கெங்கேஸ்வரி மற்றும் மீனவ பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    • விழாவுக்கு தீபா கண்ணன் மருத்துவமனை தலைமை டாக்டர் ராமசாமி தலைமை தாங்கி லேப்ராஸ் கோப்பி கருவியை திறந்து வைத்தார்.
    • இதில் மருத்துவ மனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    கரூர்,

    கரூரில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும் தீபா கண்ணன் மருத்துவ மனையில் அதிநவீன லேப்ராஸ்கோப்பி கருவி (நுண்துளை அறுவை சிகிச்சை கருவி) திறந்து வைக்கப்பட்டது.

    விழாவுக்கு தீபா கண்ணன் மருத்துவமனை தலைமை டாக்டர் ராமசாமி தலைமை தாங்கி லேப்ராஸ் கோப்பி கருவியை திறந்து வைத்தார். சர்க்கரை மற்றும் தீவிர சிகிச்சை டாக்டர் நிரேஷ் கண்ணன் வரவே ற்றார். இக்கருவி குறித்து, டாக்டர் ராமசாமி கூறு ம்போது, அதிநவீன நுண்து ளை அறுவை சிகிச்சை கருவி மூலம் வயிற்றில் இருக்கும் உறுப்புகளின் பிரச்சினைகளை மிக துல்லியமாக அறிந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்ய முடியும். இதனால் ரத்தப்போக்கு மிகவும் குறைவாக இருக்கும். இந்த கருவி மூலம் பித்தபை, குடல் வால் நோய், குடல் இறக்கம், குடலில் ஏற்படும் புற்றுநோய், கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்டவை மேற் கொள்ள முடியும் என்றார். கரூர் தீபா கண்ணன் மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சை, குடல் நோய் மருத்துவ சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல் துறைக்கு மத்திய அரசு என்.ஏ.பி.எச். சான்றிதழ் பெற்ற ஒரே மருத்துவமனை ஆகும். இந்த விழாவில் கரூர் கே.ஆர்.ஜி. மருத்துவமனை குடல், ஈரல் மற்றும் கணையம் சிகிச்சை டாக்டர் மணி கண்டன், கரூர் கேஸ்ட்ரோ பவுண்டேஷன் மருத்துவ மனை குடல் அறுவை சிகிச்சை டாக்டர் சதாசிவம், கரூர் ஸ்ரீ சக்கரா மருத்துவ மனை குடல் அறுவை சிகிச்சை டாக்டர் ராஜ்நிகேதன், கரூர் கே.ஆர்.ஜி. மருத் துவமனை மகப்பேறு டாக்டர் கோமல் சிந்து, ஸ்ரீ சக்கரா மருத்துவமனை மயக்கவியல் டாக்டர் நித்யாபாரதி மற்றும் தீபா கண்ணன் மருத்துவ மனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • விளையாட்டு பயிற்சி கூடத்தில் மாணவிகளுக்கு வாரம் இருமுறை உடற்பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    திருப்பூர்:

    கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் 37வது வார்டில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவிகள் விடுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் சண்முகவிக்னேஷ் ஏற்பாட்டில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோபிநாத் முன்னிலையில் விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் அவர்களின் உடல்நலம் பேணும் வண்ணம் அவர்கள் தங்கி பயிலும் விடுதியின் அருகே கால்பந்து மைதானம், இறகுபந்து அரங்கம் மற்றும் நவீன உடற்பயிற்சி கூடம் போன்றவை உள்ளடங்கிய விளையாட்டு பயிற்சி கூடத்தில் மாணவிகளுக்கு வாரம் இருமுறை உடற்பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் டென் எக்ஸ் விளையாட்டு பயிற்சி கூடத்தின் உரிமையாளர் ஸ்வேதா, ராயபுரம் பகுதியை சேர்ந்த பூர்ணபிரசாத், அஜய், பிரவீன், தினேஷ் மற்றும் மாணவர் அணி செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • மாநில அளவிலான வீல்சேர் கிரிக்கெட் போட்டி 17-ந் முதல் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • போட்டிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு நிதிஉதவி செய்யும்படி கோரிக்கை.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் வேலூரில் மாநில அளவிலான வீல் சேர் கிரிக்கெட் போட்டி 17-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் தஞ்சையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான வீல் சேர் கிரிக்கெட் வீரர் அருண்குமார் என்பவர் கலந்து கொண்டு விளையாடுகிறார்.

    அவருக்கு போட்டிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி உதவி செய்யும்படி அனைத்திந்திய சட்ட உரிமைகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக மாநிலத் தலைவர் சாலமன், மாவட்டத் தலைவர் மோகனசுந்தரம் ஆகியோர் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனிடம் கோரிக்கை வைத்தனர்.

    அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாற்றுத்திறனாளியான அருண்குமாருக்கு போட்டிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.15 ஆயிரம் உதவித்தொகையை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் வழங்கினார்.

    அப்போது மாவட்டத் தலைவர் மோகனசுந்தரம், மாவட்ட செயலாளர் விஷ்ணு தேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கூடலூரில் சோதனை செய்யும் பணி தொடங்கியது.

    ஊட்டி,

    வனப் பகுதியை ஒட்டி கூடலூா் அமைந்துள்ளதால் அவ்வப்போது மின்சாரம் பாய்ந்து காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க மாவட்டத்தில் முதல் முறையாக கூடலூா், தொரப்பள்ளி பகுதியில் ஒரு மின்மாற்றியைத் தோ்வு செய்து அங்கு நவீன கருவியை மின்வாரியத்தினா் பொருத்தியுள்ளனா்.

    இந்தக் கருவியில் உள்ள சா்க்யூட் பிரேக்கா் என்ற சிஸ்டம் காட்டு யானைகள் உரசியவுடன் தானாக மின்சாரத்தை துண்டித்துவிடும். அதனால் யானைகளின் உயிரிழப்புத் தடுக்கப்படும் என்று வனத்துறையினா் தெரிவித்தனா்.

    முதுமலை புலிகள் காப்பக வன எல்லையில் தொரப்பள்ளி அமைந்துள்ளதால் அங்கு இந்தக் கருவியைப் பொருத்தி சோதனை முயற்சியில் மின்வாரியத்தினா் ஈடுபட்டுள்ளனா்.

    • கூட்டுறவு துறையில் காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.
    • வேளாண் உபகரணங்களை வாடகைக்கு விடும் திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும்.

    மெலட்டூர்:

    சாலியமங்களத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது .

    மாவட்ட துணை செயலாளர் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாய கடன் வழங்குதல், உரம் வழங்குதல், குறுவை தொகுப்பு திட்டம், பொங்கல் தொகுப்பு உள்பட அவ்வப்போது அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    கூட்டுறவு துறையில் காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படா மல் உள்ளது.

    இதனால் ஆட்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது .

    இந்நிலையில் வேளாண் உபகரணங்களை விலைக்கு வாங்கி கூட்டுறவு சங்கம் மூலம் வாடகைக்கு விடும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

    இத்திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு வங்களில் போதுமான ஊழியர்கள் இல்லை.

    அதனால் இத்திட்டத்தை கைவிட கோரி தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கி ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரசு உடனடியாக இத்திட்ட த்தை கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதில் ஒன்றிய நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கிளை செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    • விழா ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேமம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநில மருத்துவ அணி தலைவர் கனிமொழி, என்.வி.என்.சோமு எம்.பி. மற்றும் செயலாளர் மரு.எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ ஆகியோரின் அறிவுறுத்தல்படி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் அஞ்சுகம் பூபதியின் வழிகாட்டுதல் படி, மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ.வின் ஆலோசனை ப்படி அண்ணா பிறந்தநாள் மற்றும் கருணாநிதி நூற்றா ண்டு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட மருத்துவ அணி சார்பில் திருத்துறைப்பூண்டி அடுத்த விளக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ அணி தலைவர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார்.

    மாவட்ட அமைப்பாளர் திவாகரன் சுபாஷ், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் பிரகாஷ், ஊராட்சி தலைவர் தனலஷ்மி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட மருத்துவ அணி துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள் வீரராகுல் (திருத்துறைப்பூண்டி), அரவிந்தன் (மன்னார்குடி), ஒன்றிய துணை தலைவர் ராமகிருஷ்ணன், துணை அமைப்பாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தொகுதி துணை அமைப்பாளர் தீபன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.

    • முடல் நீக்கியல் வல்லுநர் ரூபன்ஸ்மித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    • 19 மாற்றுதிறனாளிகள் உபகரணங்கள் வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்திக் கழகம் சமூக செயலாற்றுகிற பொறுப்பி ன் கீழ் மாற்று த்திறனா ளிகளுக்கான உதவி உபகரணங்கள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது.

    கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவர் ஜெயபிரகா ஷ் தலைமையே ற்று முகாமை தொடக்கி வைத்து பேசினார். கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, முடல் நீக்கியல் வல்லுநர் ரூபன்ஸ்மித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முகாமில் கலந்து கொண்ட 19 மாற்றுதி றனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் பொருத்தப்பட்ட வாகனம், ஊன்றுகோல் மற்றும் இதர உபகரணங்கள் வழங்கு வதற்கு தேர்வு செய்ய ப்பட்டனர்.

    • இதற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர்‌ டாக்டர்‌ கமலக்கண்ணன்‌ தலைமை தாங்கினார்‌.
    • முடிவில் தொகுதி அமைப்பாளர் டாக்டர்‌ கார்த்திக்கேயன்‌ நன்றி கூறினார்.

    கடலூர்:

    கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பாக மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடை பெற்றது. இவ்விழாவில் வேளா ண்மை துறை அமைச்ச ரும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரு மான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலந்து கொண்டு முட்டம் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் கூடுதல் மருத்துவ உபகர ணங்களை வழங்கினார். இதற்கு மாவட்ட மருத்து வர் அணி அமைப்பாளர் டாக்டர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர். ராமச் சந்திரன் வரவேற்றார். தொகுதி அமைப்பாளர்கள் டாக்டர்கள் கடலூர் கலைக் கோவன், சிவசெந்தில், கிருஷ்ணராஜ், வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணை அமைப்பாளர் டாக்டர்கள் அவினாஷ், அருண், மாவட்டத் துணைத் தலைவர் செல்வம், வடி வேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் முட்டம், வடலூர், கடலூர் புதுப்பாளையம், புதுச்சத்திரம், புவனகிரி, கிருஷ்ணாபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கு மருத்துவ உபகர ணங்கள் வழங்கப் பட்டது. முடிவில் தொகுதி அமைப்பாளர் டாக்டர் கார்த்திக்கேயன் நன்றி கூறினார்.

    • ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.
    • மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்க ப்பட்டது.

    தஞ்சாவூர்:

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை செவித்திறன் குறைபா டுடையோர் மேல்நிலை ப்பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தலை மையாசிரியர் சக்கரவர்த்தி, ஜோதி அறக்கட்டளை குழுவினரிடம் இருந்து கல்வி உபகரணங்களை பெற்றுக்கொண்டனர்.

    முன்னதாக செவித்திறன் குறைபாடுடைய மாணவ- மாணவிகள், தங்களது ஆசிரியர்களுக்கு மலர்கள், இனிப்புகள் கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்தனர்.

    பின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    மேலும், அனைத்து ஆசிரி யர்களுக்கும், பணியா ளர்களுக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து, மாணவர்கள் அனைவரு க்கும் நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்க ப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பா ர்வையாளர் கல்யாணசு ந்தரம் உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×