search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிநவீன லேப்ராஸ்கோப்பி கருவி திறப்பு விழா
    X

    அதிநவீன லேப்ராஸ்கோப்பி கருவி திறப்பு விழா

    • விழாவுக்கு தீபா கண்ணன் மருத்துவமனை தலைமை டாக்டர் ராமசாமி தலைமை தாங்கி லேப்ராஸ் கோப்பி கருவியை திறந்து வைத்தார்.
    • இதில் மருத்துவ மனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    கரூர்,

    கரூரில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும் தீபா கண்ணன் மருத்துவ மனையில் அதிநவீன லேப்ராஸ்கோப்பி கருவி (நுண்துளை அறுவை சிகிச்சை கருவி) திறந்து வைக்கப்பட்டது.

    விழாவுக்கு தீபா கண்ணன் மருத்துவமனை தலைமை டாக்டர் ராமசாமி தலைமை தாங்கி லேப்ராஸ் கோப்பி கருவியை திறந்து வைத்தார். சர்க்கரை மற்றும் தீவிர சிகிச்சை டாக்டர் நிரேஷ் கண்ணன் வரவே ற்றார். இக்கருவி குறித்து, டாக்டர் ராமசாமி கூறு ம்போது, அதிநவீன நுண்து ளை அறுவை சிகிச்சை கருவி மூலம் வயிற்றில் இருக்கும் உறுப்புகளின் பிரச்சினைகளை மிக துல்லியமாக அறிந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்ய முடியும். இதனால் ரத்தப்போக்கு மிகவும் குறைவாக இருக்கும். இந்த கருவி மூலம் பித்தபை, குடல் வால் நோய், குடல் இறக்கம், குடலில் ஏற்படும் புற்றுநோய், கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்டவை மேற் கொள்ள முடியும் என்றார். கரூர் தீபா கண்ணன் மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சை, குடல் நோய் மருத்துவ சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல் துறைக்கு மத்திய அரசு என்.ஏ.பி.எச். சான்றிதழ் பெற்ற ஒரே மருத்துவமனை ஆகும். இந்த விழாவில் கரூர் கே.ஆர்.ஜி. மருத்துவமனை குடல், ஈரல் மற்றும் கணையம் சிகிச்சை டாக்டர் மணி கண்டன், கரூர் கேஸ்ட்ரோ பவுண்டேஷன் மருத்துவ மனை குடல் அறுவை சிகிச்சை டாக்டர் சதாசிவம், கரூர் ஸ்ரீ சக்கரா மருத்துவ மனை குடல் அறுவை சிகிச்சை டாக்டர் ராஜ்நிகேதன், கரூர் கே.ஆர்.ஜி. மருத் துவமனை மகப்பேறு டாக்டர் கோமல் சிந்து, ஸ்ரீ சக்கரா மருத்துவமனை மயக்கவியல் டாக்டர் நித்யாபாரதி மற்றும் தீபா கண்ணன் மருத்துவ மனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×