என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "crash"
- ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரானின் கிழக்கு பகுதியில் அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டரில் ரைசி பயணம் செய்து கொண்டிருந்தார்.
ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில், அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர், ஆனால் அந்த பகுதியில் மோசமான வானிலை காரணமாக சம்பவ இடத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது 63 வயதான ரைசி, முன்னதாக ஈரான் நாட்டின் நீதித்துறையை வழிநடத்தியவர் ஈரானின் 2021 ஜனாதிபதித் தேர்தலில் ரைசி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- இவர் திண்டிவனத்தில் உள்ள வேல்டிங் கடையில் வெல்டராக பணிபுரிந்து வந்தார்.
- அதிவேகமாக வந்த தனியார் பஸ் ராமதாஸ் மீது மோதியது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல் சிவிரி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ்( வயது 33). இவர் திண்டிவனத்தில் உள்ள வேல்டிங் கடையில் வெல்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாரில் உள்ள ராமதாசின் மாமியார் வீட்டில் தங்கி உள்ளனர். அவர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடுவதற்காக திண்டிவனத்தில் இருந்து பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் தெள்ளார் நோக்கி ராமதாஸ் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த ஊரல் அருகே வரும்போது அதிவேகமாக வந்த தனியார் பஸ் ராமதாஸ் மீது மோதியது.இந்த விபத்தில் ராமதாஸ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த ரோசனை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமதாஸின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ்சை பறிமுதல் செய்து வேலூர் பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் தினேஷ்குமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆயுத பூஜை கொண்டாடச் சென்ற வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில் இந்த பகுதி மிகவும் குறுகிய சாலை பகுதியாகவும் இந்த பகுதியில் திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி,வேலூர், செல்லும் தனியார் பஸ்கள் அதிக ஒலி எழுப்பி அதி வேகமாக செல்வதே தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவதாக தெரிவித்தனர்.எனவே டிரைவர்களுக்கு போலீசார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறையினர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
- சாலைகள் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணி.
- சாலை ஓரங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணி தொடக்கம்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை செய்யும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க ஐந்தாயிரம் மண் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை என தெரிவித்தனர் வேதாரண்யம் தாலுகாவில் வடகிழக்கு பருவமழையால் சாலைகள் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தற்போது மணல் முட்டைகள் தயார் செய்யும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் இங்கு தற்போது ஜந்து ஆயிரம்மண் மூட்டையில் தயார் செய்யப்பட்டு சாலை ஓரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஆறுகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்யும் வகையில் சாலை ஓரங்களில் மண் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளையும் சமாளிக்க நெடுஞ்சாலைத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கோபிசெட்டிபாளையம் அருகே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி கணவன்-மனைவி லாரி மோதியது விபத்தில் பெண் பலியானார்.
- இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ராஜேஸ்வரி (57). இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சண்முகம் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று ராஜேஸ்வரிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை மருத்துவமனைக்கு கணவர் சண்முகம் தனது மொபட்டில் அழைத்து சென்றார். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று கணவன்-மனைவி இருவரும் மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
சாந்தி தியேட்டர் பிரிவு அருகே ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக சண்முகம் மொபட் மீது மோதியது. இதில் சண்முகம், ராஜேஸ்வரி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
அப்ேபாது அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கணவன்-மனைவி இருவரையும் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் கோவை அரசு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். சண்முகம் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, சூடானில் ஐ.நா. அமைதிப்படையில் அங்கம் வகித்து செயல்பட்டுக்கொண்டிருந்தது.
இந்த ஹெலிகாப்டர் 23 பேருடன் சூடான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கடுக்லி நகரத்தில் இருந்து எல்லையோரம் உள்ள அப்யெய் பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர், ஐ.நா. இடைக்கால பாதுகாப்பு படை வளாகத்தினுள் நேற்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் அந்த ஹெலிகாப்டரின் 3 ஊழியர்கள் பலியாகினர். 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 3 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதை ஐ.நா. இடைக்கால பாதுகாப்பு படை, ஒரு அறிக்கையில் உறுதி செய்துள்ளது. இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை. இது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது.
பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகளில் ஒன்று, மைக்ரோனேசியா. அந்த நாட்டின் போன்பெய் தீவில் இருந்து ‘ஏர் நியுகினி போயிங்-737’ பயணிகள் விமானம், பப்புவா நியு கினியாவின் தலைநகர் போர்ட் மாரஸ்பிக்கு நேற்று புறப்பட்டு சென்றது. இந்த விமானம், மைக்ரோனேசியாவில் உள்ள சூக் தீவின் வெனோ நகரம் வழியாக செல்லக்கூடியதாகும்.
இந்த விமானத்தில் 35 பயணிகளும், 12 சிப்பந்திகளும் என மொத்தம் 47 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம், வெனோ நகரில் தரை இறங்கி செல்ல வேண்டும். ஆனால் தரையிறங்கும்போது, சற்றும் எதிர்பாராத வகையில் ஓடு தளத்துக்கு செல்வதற்கு முன்பாக கடலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பயணிகள் அலறினர். இடுப்பளவு தண்ணீரில் விமானம் நின்றது.
உடனடியாக பயணிகள், விமானத்தில் இருந்து வெளியேற தொடங்கினர். சிலர் நீந்திக் கரை சேர்ந்தனர். இருப்பினும் உள்ளூர் மீனவர்களின் மீன்பிடி படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அந்தப் படகுகள் மூலம் பயணிகள் கரைக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர்.
இந்த விபத்தில் பயணிகள், சிப்பந்திகள் அனைவரும் அதிசயமாக உயிர் தப்பினர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் மைக்ரோனேசியாவை சேர்ந்த நாளிதழ் ஒன்றின் நிர்வாக ஆசிரியரான பில் ஜேனசும் பயணம் செய்தார். விமானம் விபத்துக்குள்ளானது பற்றி அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வீடியோவும், தகவலும் வெளியிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், “அது கனவு போல அமைந்து விட்டது. விமானம் கடலில் பாய்ந்து நின்ற இடத்தில் இடுப்பளவு தண்ணீர் இருந்தது. நெருக்கடி கால வழியாக விமானத்தில் இருந்து நாங்கள் வெளியேறினோம்” என கூறி உள்ளார்.
ஜேம்ஸ் எயின்கெலுவா என்ற மற்றொரு பயணி கூறும்போது, “ஓடுதளத்தை அடைவதற்கு 500 மீட்டருக்கும் அதிகமான தூரம் இருந்தபோதே விமானம் கடலுக்குள் பாய்ந்து விட்டது. நல்ல வேளையாக இது பகல் நேரத்தில் நடந்தது. விமானம் கடலுக்குள் பாய்ந்து நின்றதும், எங்களை எல்லாம் மீட்டுச்செல்வதற்கு உள்ளூர் மக்கள் மீன்பிடி படகுகளுடன் வந்து உதவினர்” என கூறினார்.
இந்த விமான விபத்து தொடர்பான படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தீவிரமாக பரவின. அவற்றில் விமானம் இடுப்பளவு தண்ணீரில் பாய்ந்து நின்றது, சிறிய படகுகள் மூலமாக பயணிகள் மீட்கப்பட்டது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந்த விபத்து பற்றி ஏர் நியுகினியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானம் கடலுக்குள் பாய்ந்துவிட்டாலும் அதில் இருந்த 35 பயணிகளும், 12 சிப்பந்திகளும் பாதுகாப்பாக வெளியேற முடிந்திருக்கிறது. பயணிகள், சிப்பந்திகள் பத்திரமாக வெளியேறுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. பலத்த மழை பெய்து மோசமான வானிலை நிலவியதுதான் இந்த விபத்துக்கு காரணம்”என கூறப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பயணிகள், சிப்பந்திகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். குறிப்பிடத்தக்க அளவுக்கு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
இந்த விபத்தில் பத்திரமாக உயிர் பிழைத்தது, பயணிகளுக்கும், சிப்பந்திகளுக்கும் மிகுந்த நிம்மதியை அளித்துள்ளது. விபத்துக்குள்ளான விமானம் பப்புவா நியு கினியா நாட்டுக்கு சொந்தமானது. #Micronesian #AirNiuginiBoeing737
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தலிபான்களை முன்னேற விடாமல் தடுப்பதும், அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கும் சில நகரங்களை மீண்டும் அரசின் வசம் ஒப்படைப்பதுமே குறிக்கோளாக கொண்டு பாதுகாப்பு படை வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் தலிபான்களை எளிதில் தாக்குவதற்கு ஏதுவாக, பாதுகாப்பு படை வீரர்களை உரிய இடத்தில் கொண்டு சேர்க்க வான்வழி மார்க்கம் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் விரைவில் பாதுகாப்பு படை வீரர்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று தாக்குதல்களை நடத்த முடிகிறது.
அவ்வாறு இன்று பாதுகாப்பு படை வீரர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 வீரர்கள், ஒரு ஓட்டுனர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஃபாராஹ் மாகாணத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் தலிபான் தாக்குதலில் இந்த விபத்து ஏற்படவில்லை எனவும், தொழில்நுட்ப கோளாறு காராணமாகவே விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். #Afghanistan #HelicopterCrash
வியட்னாம் நாட்டின் காங்க் ட்ரி மாகாணத்தில் இருந்து திருமணத்துக்காக மணமகன் உட்பட குடும்பத்தினர் 17 பேர் மினி பேருந்தில் பின்ஹ் டின்ஹ் மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி மோசமான விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் சம்பவ இடத்திலேயெ பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மணமகன் உட்பட மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், படுகாயங்களுடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறுகாயங்களுடன் தப்பிய லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது திருமண விழாவுக்கு செல்லும் வழியில் மணமகனும் அவரது குடும்பத்தாரும் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Vietnam #BusAccident
பிரான்ஸ் நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘கஸேல்’ ரக ஹெலிகாப்டரில் இன்று இரு வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர் விமானி, ஒருவர் பயிற்சி பெறும் இளம் வீரர்.
ஐவரி கோஸ்ட் நாட்டின் வர்த்தக தலைநகரான அபிட்ஜான் நகரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் பறந்தபோது அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் போர்ட் போயெட் பகுதியில் உள்ள பிரான்ஸ் நாட்டு ராணுவ முகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் சிகிச்சை பலனின்றி விமானி உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் உள்ள மற்றொருவர் மேல் சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். #Frencharmyhelicoptercrash #Frencharmy #helicoptercrash
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்