search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central"

    • மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய பிரசார பயணம் நடைபெறுகிறது.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்

    அரியலூர்:

    அரியலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய பிரசார பயணம் நடைபெற்று வருகிறது. இந்த பிரசாரத்தின் நிறைவாக ஜெயங்கொண்டத்தில் நாளை (வியாழக்கிழமை) தபால் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இந்தநிலையில் நேற்று காலை புதுச்சாவடி கிராமத்தில் தப்பாட்ட இசைக்குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசாரம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மீனா, பத்மாவதி, சேகர் குமார், வீரப்பன், தியாகராஜன் ஆகிய மாவட்டக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பிரசார பயணம் ஆமணக்கந்தோண்டி, கடாரம்கொண்டான், உட்கோட்டை, வீரசோழபுரம், கங்கைகொண்ட சோழபுரம், இளையபெருமாநல்லூர், முத்து சேர்வாமடம், மீன்சுருட்டி, வெத்தியார் வெட்டு, சலுப்பை வழியாக ஜெயங்கொண்டத்தில் இரவு 7 மணிக்கு பிரசாரம் நிறைவடைந்தது. இதில், கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது.

    சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.நேற்றும்,இன்றும் தமிழக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற இலவச வங்கி கணக்கு தொடங்க ஏதுவாக செயல்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-நேற்றும், இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது. புதிய கணக்குகள் தொடங்கும் நடைமுறையினை மேற்கொள்ள பட்டது. எனவும் இதர பணபரிவர்த்தனைகள் மேற்கொள்ள வில்லை எனவும் தெரிவித்துள்ளனர். குடும்பத் தலைவிகள் ரூ 1000 உரிமைத் தொகை பெற இலவச வங்கி கணக்கு துவங்க வங்கிக்கு வரலாம். இந்த வாய்ப்பை மகளிர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    • சேலம் அய்யந்திரு மாளிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மைய கட்டிடம் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் முடிவுற்று விரைவில் திறக்கப்பட உள்ளது.
    • இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இன்று ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சேலம் அய்யந்திரு மாளிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மைய கட்டிடம் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் முடிவுற்று விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த மையம் தரைதளம், முதல் தளம் ஆகிய 2 தளங்களை கொண்டது.

    தரை தளத்தில் 60 நபர்கள் அமரக்கூடிய வாசிப்பு அறை, 10 எண்ணிக்கை கொண்ட கணினி மையம், நூலக அறை, கண்காணிப்பு கேமராவுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை, முதல் தளத்தில் 35 நபர்கள் அமரக்கூடிய வாசிப்பு அறை, 5 எண்ணிக்கை கொண்ட கணினி மையம், 30 நபர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இம்மையத்தில் சிறப்பு அம்சங்களான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 16 எண்ணிக்கையிலான கண்காணிப்பு கேமரா, 75 இஞ்ச் எல்.சி.டி 2 தொலைக்காட்சி, 2 புரஜெக்டர், ஸ்மார்ட் வகுப்புகளுக்கான மைக் மற்றும் சுவர் ஒலி பெருக்கிகள், புத்தக அலமாரிகள், சைகை மொழி பேனர்கள், அபாகஸ் உபகரணங்கள், டிக்டாக் டோ உபகரணங்கள், கண்ணாடி புரம்மை உபகரணங்கள், தளவாட பொருட்கள், மையத்திற்கு வெளியில் அமர்வதற்கான இருக்கைகள், கழிப்பறை வசதிகள் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன.

    இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இன்று ஆய்வு செய்தார். அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கேட்டறிந்து தொடர்ந்து மையத்தை நன்கு பராமரிப்பு செய்திட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது செயற் பொறியாளர் கு.செந்தில்குமார், உதவி செயற் பொறியாளர் எஸ்.செந்தில்குமார், உதவி பொறியாளர் அன்புசெல்வி ஆகியோர் உடனிருந்தனர். 

    • மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக் காக கடந்த 2021-ம் ஆண்டு இ-ஷ்ரம் திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகம் செய்தது.
    • சேலம் மாவட் டத்தில் 3 லட்சம் விவசாயி கள் பயன்பெற்று வருவதை போல் இ-ஷ்ரம் திட்டத்தில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அமைப்புச்சாரா தொழிலா ளர்கள் பலர் சேர்ந்துள்ளனர்.

    சேலம்:

    மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக் காக கடந்த 2021-ம் ஆண்டு இ-ஷ்ரம் திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகம் செய்தது.

    இதில் கட்டுமான தொழி லாளர்கள், தெருவோர வியாபாரிகள், வேளாண் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களை ஆதாருடன் இணைப்பதற்கு தேசிய அளவிலான தர வுத்தளம் உருவாக்கப்பட்டுள் ளது.

    ஆதார் தொடர்பான தகவல்கள், சொந்த விவ ரங்கள், தொடர்பு விவ ரங்கள், முகவரி தகவல், தொழில் விவரங்கள், வங்கி விவரங்கள், வாரிசாக நியமிக்கப்படுபவரின் விவரங்கள் உள்ளிட்டவை இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படு வதன் மூலம் மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங் களை கொண்டு சேர்ப்பதில் உதவிகரமாக உள்ளது.

    சேலம், நாமக்கல்..

    குறிப்பாக, மத்திய அரசு விவசாயிகளுக்கு வருடத் திற்கு ரூ. 6 வழங்கி வரும் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத் தில் மட்டும் சேலம் மாவட் டத்தில் 3 லட்சம் விவசாயி கள் பயன்பெற்று வருவதை போல் இ-ஷ்ரம் திட்டத்தில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அமைப்புச்சாரா தொழிலா ளர்கள் பலர் சேர்ந்துள்ள னர்.

    சேலம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இ-ஷ்ரம் திட்டத்தில் இணைந்துள்ளனர். இது குறித்து மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை மந்தரி பூபேந்தர் யாதவ் கூறியதாவது:-

    நாட்டில் தற்போது தொழிலாளர் சட்டங்கள் மாற்றப்பட்டு, சீர்திருத்தப் பட்டு, எளிமையாக்கப்படு வதாகத் தெரிவித்தார். அந்தவகையில், 29 வகை யான தொழிலாளர் சட்டங்கள், 4 எளிதான தொழிலாளர் சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. இது குறைந்தபட்ச கூலி, பணிப் பாதுகாப்பு, சமூகப் பாது காப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வாயிலாக தொழிலாளர்களின் அதிகா ரமளித்தல் உறுதி செய்யும்.

    28.93 கோடி தொழிலாளர்கள்

    இ-ஷ்ரம் இணைய தளத்தில் 400-க்கும் மேற்பட்ட தொழில்பிரிவு களில் ஈடுபட்டுள்ள 28.93 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்கள், பதிவு செய்துள்ளனர். மேலும் பல தொழில் பிரிவுகள் இதில் சேர்க்கப்படும்.

    தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம் மூலம் பல்வேறு வகையான வேலைவாய்ப்புத் தொடர்பான சேவைகள் அளிக்கப்படுகின்றன.

    இதன் மூலம் 1.39 கோடி பேருக்கு வேலைவாய்ப்புக் கான உதவிகள் அளிக்ப் பட்டுள்ளன. தேசிய வேலை வாய்ப்பு இணையதளம் இ-ஷ்ரம், உத்யம், திறன் இந்தியா ஆகிய இணைய தளங்களுடன் இணைக்கப் பட்டுள்ளது.

    தொழிலாளர் கொள்கை யில் சீர்தி ருத்தங்கள் செய்யப்பட்டதன் காரண மாக கடந்த 9 ஆண்டுகளில் ெதாழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.ஓ.) தொழிலா ளர்கள் எளிதாக பணம் எடுக்கும் முறை, ஓய்வூதிய தாரர்கள் எளிதாக வாழ் நாள் சான்றிதழ் பெறும் முறை மற்றும் பென்சன் உயர்வு உள்ளிட்டவை காரணமாக பயனடைந்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் அஸ்தம்பட்டியில், சேலம் மத்திய சிறை சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • பாக்கெட்டில் 160 கிராம் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டியில், சேலம் மத்திய சிறை சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு பாதுகாப்பு பணியில் ஏராளாமான போலீசார் ஷிப்ட் முறையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மகன் தனபால் (வயது 39). இவர், சேலம் மத்திய ஜெயிலில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஜெயில் வளாகத்தில் சமைத்துக் கொண்டிருந்த போது தனபால், சமையல் வேலைக்கு ஒரு கட்டையும் நூலும் தேவைப்படுவதாக கூறி ஜெயிலை விட்டு வெளியே வந்தார்.

    இதையடுத்து அந்த பொருட்களை வாங்கிக்கொண்டு தனபால் மீண்டும் சிறைக்குள் வரும்போது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் 160 கிராம் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து சேலம் மத்திய சிறை அலுவலர் மதிவாணன், கொடுத்த புகார் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமையல்காரர் தனபாலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
    • இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்க ளின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன.

    சேலம்:

    மக்களுக்கு குறைவான விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்க மாகக் கொண்டு, நாடு முழுவ தும் மக்கள் நல மருந்தகங்கள் எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்த கங்கள் மூலம் அனைத்து மக்க ளுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்க ளின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன. குறைவான விலையில் மருந்து கிடைப்பதால், அதிக விலையுடைய மருந்துகளை வாங்கும் நெருக்கடியில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

    சேலத்தில்...

    தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவையில் 56, ஈரோட்டில் 29, சேலத்தில் 27, திருப்பூரில் 13, நாமக்கல்- 13, மக்கள் நல மருந்த கங்கள் செயல்படுகின்றன.

    இந்த நிலையில் மத்திய அரசு இவற்றின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவ தும் மக்கள் மருந்த கங்களின் எண்ணிக்கையை 10,000-ஆக அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு மும்முரமாக பணியாற்றி வருகிறது.

    • மத்திய அரசு பணிகளில் 90 சதவீத தமிழகத்தை சேர்ந்வர்களை பணியமர்த்த கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
    • மக்கள் விழிப்புணர்ச்சி பேரவை கலெக்டரிடம் மனு

    திருச்சி:

    மக்கள் விழிப்புணர்ச்சி பேரவை சார்பில் அதன் தலைவர் பொன்.முருகன், துணை பொதுச்செயலாளர் ஞானசேகர் கலெக்டர் பிரதீப் குமாரிடம் அளித்த மனுவில், "ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் யு.பி.எஸ்.சி. தகுதி தேர்வில் தமிழ்மொழியிலும் வினாக்கள் கேட்கப்பட வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்தி மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வசூலிக்க அனுமதி அளித்தது வருந்ததக்கது.தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் 90 சதவீதம் தமிழகத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களை பணியமர்த்த வேண்டும். பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்" என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது. அப்போது நிர்வாகிகள் வக்கீல் சன்.மாரியப்பன், சக்தி, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் உள்ளிட்டோ

    • ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    • இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஈரோடு காளை மாட்டு சிலை அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு மாநில பதிவாளர் உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி 4 . 7 . 2022 முதல் 12.8.2022 வரை தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த 18-ந் தேதி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. தர்ணா போராட்டத்திற்கு ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் கவுரவ தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் விநாயகமூர்த்தி, மாவட்ட நகர கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய தொடர்பாக பேச்சு வார்த்தை தொடங்கிட வேண்டும்.

    கூட்டுறவு வங்கியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வு ஊதியமாக 10,000, தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உடன் கூடிய மாற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு 3:1 என்கிற விகிதத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள 25 சதவீத பணியிடங்களை பதவி உயர்வுகள் மூலம் நிரப்ப வேண்டும்.

    எஸ்.ஆர்.பி மூலம் 2015-16 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களின் பணி மூப்பு பட்டியல் உடனடியாக வெளியிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

    • மத்திய அரசு பணிக்கான தேர்வில் சேலம், நாமக்கல் பட்டதாரிகள் தேர்ச்சி.
    • பல்வேறு அரசு துறைகளில் பட்டப்படிப்பு தரத்திலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பேஸ்-9 தேர்வு 2021 அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது.

    சேலம்:

    இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு அரசு துறைகளில் பட்டப்படிப்பு தரத்திலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பேஸ்-9 தேர்வு 2021 அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது.

    பட்டதாரிகளுக்கான கணினி அடிப்படையிலான இந்த தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையும் மற்றும் மார்ச் மாதம் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும் நடைபெற்றது.

    4 லட்சம் பேர் இந்தியா முழுவதும் 4 லட்சத்து 27 ஆயிரத்து 536 பேர் இந்த தேர்வை எழுதினர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வசித்து வரும் பட்டதாரிகள், முதுநிைல பட்டதாரிகள் என ஏராளமானோர் எழுதினர்.

    இந்த நிலையில் பேஸ்-9 தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. அதில் கட் ஆப் மதிப்பெண் மற்றும் தகுதியான தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. ெமாத்தம் 14 ஆயிரத்து 345 பேர் அடுத்த கட்ட நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    குறிப்பாக பட்டியலி னத்தவர் -2306 பேர், பழங்குடியினர் -1140 , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 3165 , பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் -1014, பொதுப்பிரிவு- 6424, இ.எஸ்.எம்.-174, ஓ.எச்-68, எச்.எச்-19, வி.எச்-29, இதர மாற்றுத்திறனாளிகள் -6 என 14 ஆயிரத்து 345 பேர் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் சேலம், நாமக்கல் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைத்து துணை ஆவணங்களின் நகலை கையோப்பம் போட்டு சமர்ப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, அனுபவம், வகை, வயது, வயது தளர்வு, முதலியவற்றை ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அந்தந்த பிராந்திய அலுவலகங்களுக்கு வருகிற 22-ந்தேதி விரைவு தபால் வழியாக மட்டுேம அனுப்ப வேண்டும்.

    உறையின் மேல் பகுதியில் "பட்டதாரி மற்றும் அதற்கு மேல் நிலை" மற்றும் வகை எண் எழுத வேண்டும். ஒரு விண்ணப்பதார் 3 வகை பதவிகளுக்கு விண்ணப்பித்திருந்தால், ஒவ்வொரு பதவிகளுக்கு தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    சென்ட்ரல்-எழும்பூர் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது. பயணிகள் ஆர்வமாக வாங்கி குடித்தனர். #Nilavembukashayam
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை அழிக்க மாநகராட்சி, சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மழை நீர் தேங்கி நிற்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபம், ஓட்டல், கட்டுமான பணி இடங்கள், அரசு மற்றும் தனியார் காலி இடங்களில் மழை நீர் தேங்காதபடி அகற்றும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பஸ், ரெயில் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு இடங்களில் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட நில வேம்பு கசாயம் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இது தவிர சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி 5-வது மண்டலம் சார்பில் மண்டல நல அலுவலர் டாக்டர் கவுசல்யா, முதுநிலை பூச்சியல் வல்லுனர் யமுனா ஆகியோர் முன்னிலையில் பயணிகள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ரெயில் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது. பயணிகள் ஆர்வமாக வாங்கி குடித்தனர். சிறுவர்களுக்கும், பெற்றோர்கள் வழங்கினர். நிலவேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கலாம் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். நூற்றுக்கணக்கான பயணிகள் நிலவேம்பு கசாயத்தை பருகி சென்றனர்.

    மேலும் டெங்கு காய்ச்சல் குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரசாரம் செய்தனர்.

    கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் உள்ள போலீஸ் குடும்பங்களுக்கு நிலவேம்பு கசாயம் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. #Nilavembukashayam

    வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் வரையிலும், சென்ட்ரலில் இருந்து டி.எம்.எஸ். தேனாம்பேட்டை வரையிலுமான மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் வரையிலும், சென்ட்ரலில் இருந்து டி.எம்.எஸ். தேனாம்பேட்டை வரையிலும் இன்னும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. இந்த 2 வழிகளில் மட்டும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.

    இந்த 2 வழித்தடத்திலும் அனைத்து பணிகளையும் முடித்து டிசம்பர் இறுதியில் சேவையை தொடங்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் இன்னும் ஒரு சில பணிகள் நிறைவடையவில்லை.

    அண்ணா சாலையில் இன்னும் நிறைய கட்டுமானப் பணிகள் முழுமை அடையாமல் உள்ளன. 2 மாதத்தில் இந்த பணிகள் முடிவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கு முன்பாக சோதனை ஓட்டம் குறிப்பிட்ட காலம் வரை நடத்தப்பட வேண்டும்.

    சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அதில் உள்ள குறைகளை சரி செய்ய சில நாட்கள் தேவைப்படும். தற்போது சோதனை நடத்த வேண்டிய இந்த 2 வழித்தடமும் மிக முக்கியமான பகுதியாகும்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கும், தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.க்கும் இடையே கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சிக்னல் சாப்ட்வேர் கருவிகள் வெளிநாட்டில் இருந்து வருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் சோதனை ஓட்டம் தள்ளிப் போகிறது.

    கடந்த மாதம் நடைபெற வேண்டிய சோதனை ஓட்டம் தொடங்க முடியாமல் அடுத்த மாதம் நவம்பருக்கு தள்ளி செல்கிறது.

    இது குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறுகையில், வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்ப கருவிகள் வருவதில் தாமதம் ஆகி வருகிறது. அடுத்த மாதம் அக்கருவிகள் வரும் என்று நம்புகிறோம். கருவிகள் வந்தவுடன் சோதனை ஓட்டம் தொடங்கும். தண்டவாளம் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டன. வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய சிக்னல் சாப்ட்வேர் கருவிக்காக காத்திருக்கிறோம் என்றனர். #MetroTrain
    மத்திய, மாநில பட்ஜெட்டுகளில் விவசாயம் மற்றும் நீர் ஆதாரத்தை சேமிக்க அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
    கோவை:

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழா விவசாயிகள் தின விழா பொதுக்கூட்டமாக கோவை சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு கோவை மாநகர் தெற்கு மாவட்டத்தலைவர் வி.வி.வாசன் தலைமை தாங்கி பேசினார். கோவை மாநகர் வடக்கு மாவட்டத்தலைவர் கே.என்.ஜவஹர் வரவேற்று பேசினார். கோவை புறநகர் வடக்கு மாவட்டத்தலைவர் அன்னூர் ராமலிங்கம், புறநகர் தெற்கு மாவட்டத்தலைவர் பி.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.

    கூட்டத்தில் த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-

    விவசாய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்த ஜி.கே.மூப்பனார் தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் அகில இந்திய அரசியலில் அடியெடுத்து வைத்து வளர்ந்து, உயர்ந்து விளங்கியதற்கு அடிப்படையாக இருந்தது அவர் பிறந்த விவசாய மண், காவிரி மண். அந்த வகையில் தமிழ்மாநில காங்கிரஸ் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கும் கட்சி.

    இனிமேல் காவிரியின் குறுக்கே தடுப்புச்சுவர் அமைத்தால் மட்டுமே பாசன கால்வாய்களில் தண்ணீரை கொண்டு செல்ல முடியும். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது கால்வாய்களின் கடைக்கோடிக்கு சென்றடையவில்லை. மேட்டூர் அணைக்கு கீழே காவிரியின் குறுக்கே தேவையான தடுப்பணைகளை கட்டியிருக்க வேண்டும். இனிமேலாவது தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் முறைப்படி காலத்தே கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    கேரளாவில் மழை, வெள்ளக்காலங்களில் ஆறுகளில் இருந்து பல நூறு டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. இவற்றை தமிழக பகுதிகளில் திருப்பி விடும் திட்டத்தை செயல்படுத்தி தமிழகத்திற்கு பாசன நீர், கேரளாவிற்கு மின்சாரம் என்ற அடிப்படையில் நீர் பங்கீடு செய்திட வேண்டும்.

    மத்திய-மாநில பட்ஜெட்டுகளில் எதிர் காலங்களில் விவசாயத்திற்கும், நீர் ஆதாரத்தை சேமிப்பதற்கும், அதிக நிதி ஒதுக்கீடு செய்து விவசாய தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும்.

    நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். அமராவதி அணையின் நீர் கொள்ளளவை 4 டி.எம்.சி.யில் இருந்து 9 டி.எம்.சி.யாக அதிகரிக்க வேண்டும். அவினாசி-அத்திக்கடவு பாசன திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்.

    விவசாயிகளின் விளை பொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. விலை குறையும் போது அதை ஈடுகட்டும் வகையில் விலை பாதுகாப்பு காப்பீடு திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். எனவே தமிழகத்தில் இனி நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில், யாரும் வெற்றி பெற முடியாது என்ற நிலையை நாம் ஏற்படுத்துவோம். இதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுக்கூட்டத்தில், முன்னாள் எம்.பி. பி.எஸ்.ஞானதேசிகன், மாநில துணைத்தலைவர் கோவை தங்கம், குனியமுத்தூர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், ஈரோடு ஆறுமுகம், சுரேஷ் மூப்பனார், சக்திவடிவேல், யுவராஜா, மாறன், கோபால், கவுதமன், மாநில செயலாளர்கள் சேதுபதி, செல்வராஜ், தொழிற்சங்க செயலாளர் தனசேகரன், இளைஞரணி செயலாளர் நடராஜ், துணை தலைவர்கள் சிவசுப்பிரமணியம், செழியன், பொதுச்செயலாளர்கள் பத்மநாபன், அப்துல் கலாம் அசாத், பெரியசாமி, மற்றும் முருகேஷ், தங்கராஜ், திருப்பூர் மாநகர் மாவட்டத்தலைவர் எஸ். ரவிக்குமார், மாநில பொதுச்செயலாளர் மோகன் கார்த்திக், திருப்பூர் தெற்கு புறநகர் மாவட்டத் தலைவர் டி.ரத்தினவேல், நீலகிரி மாவட்டத்தலைவர் சந்திரன் மற்றும் தம்பு, இளைஞர் அணி துணை தலைவர் சி.பி.அருண்பிரகாஷ், கோவை விஷ்ணு, சரத் விக்னேஷ், பொன் ஆனந்தகுமார், சி.ஆர்.ரவிச்சந்திரன், குனிசை ரவிச்சந்திரன் ராம்நகர் சக்தி முருகானந்தம், ராஜா, ராஜேஷ், மாவட்ட பொருளாளர் வளர்மதி கணேசன், காளப்பட்டி சிகாமணி, நித்யானந்தம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மழை-வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் கோவை மாநகர் வடக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் 30 ஆயிரம் தண்ணீர் பாட்டில்களும் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை ஜி.கே.வாசன் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.
    ×