search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்ட்ரல்"

    சென்ட்ரல்-எழும்பூர் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது. பயணிகள் ஆர்வமாக வாங்கி குடித்தனர். #Nilavembukashayam
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை அழிக்க மாநகராட்சி, சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மழை நீர் தேங்கி நிற்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபம், ஓட்டல், கட்டுமான பணி இடங்கள், அரசு மற்றும் தனியார் காலி இடங்களில் மழை நீர் தேங்காதபடி அகற்றும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பஸ், ரெயில் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு இடங்களில் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட நில வேம்பு கசாயம் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இது தவிர சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி 5-வது மண்டலம் சார்பில் மண்டல நல அலுவலர் டாக்டர் கவுசல்யா, முதுநிலை பூச்சியல் வல்லுனர் யமுனா ஆகியோர் முன்னிலையில் பயணிகள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ரெயில் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது. பயணிகள் ஆர்வமாக வாங்கி குடித்தனர். சிறுவர்களுக்கும், பெற்றோர்கள் வழங்கினர். நிலவேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கலாம் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். நூற்றுக்கணக்கான பயணிகள் நிலவேம்பு கசாயத்தை பருகி சென்றனர்.

    மேலும் டெங்கு காய்ச்சல் குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரசாரம் செய்தனர்.

    கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் உள்ள போலீஸ் குடும்பங்களுக்கு நிலவேம்பு கசாயம் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. #Nilavembukashayam

    வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் வரையிலும், சென்ட்ரலில் இருந்து டி.எம்.எஸ். தேனாம்பேட்டை வரையிலுமான மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் வரையிலும், சென்ட்ரலில் இருந்து டி.எம்.எஸ். தேனாம்பேட்டை வரையிலும் இன்னும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. இந்த 2 வழிகளில் மட்டும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.

    இந்த 2 வழித்தடத்திலும் அனைத்து பணிகளையும் முடித்து டிசம்பர் இறுதியில் சேவையை தொடங்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் இன்னும் ஒரு சில பணிகள் நிறைவடையவில்லை.

    அண்ணா சாலையில் இன்னும் நிறைய கட்டுமானப் பணிகள் முழுமை அடையாமல் உள்ளன. 2 மாதத்தில் இந்த பணிகள் முடிவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கு முன்பாக சோதனை ஓட்டம் குறிப்பிட்ட காலம் வரை நடத்தப்பட வேண்டும்.

    சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அதில் உள்ள குறைகளை சரி செய்ய சில நாட்கள் தேவைப்படும். தற்போது சோதனை நடத்த வேண்டிய இந்த 2 வழித்தடமும் மிக முக்கியமான பகுதியாகும்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கும், தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.க்கும் இடையே கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சிக்னல் சாப்ட்வேர் கருவிகள் வெளிநாட்டில் இருந்து வருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் சோதனை ஓட்டம் தள்ளிப் போகிறது.

    கடந்த மாதம் நடைபெற வேண்டிய சோதனை ஓட்டம் தொடங்க முடியாமல் அடுத்த மாதம் நவம்பருக்கு தள்ளி செல்கிறது.

    இது குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறுகையில், வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்ப கருவிகள் வருவதில் தாமதம் ஆகி வருகிறது. அடுத்த மாதம் அக்கருவிகள் வரும் என்று நம்புகிறோம். கருவிகள் வந்தவுடன் சோதனை ஓட்டம் தொடங்கும். தண்டவாளம் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டன. வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய சிக்னல் சாப்ட்வேர் கருவிக்காக காத்திருக்கிறோம் என்றனர். #MetroTrain
    ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரெயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    பொன்னேரி:

    ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரெயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பொதுமக்களுடன் அவர் சாதாரணமாக அமர்ந்து பயணம் செய்தார். அப்போது அந்த பெட்டியில் இருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டார்.

    மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும் சைலேந்திரபாபு இறங்கினார். அவருடன் ரெயில்வே அதிகாரிகளும் வந்து இருந்தனர்.

    அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் குறைகள் பற்றி கேட்டு அறிந்தார். சைலேந்திரபாபுவிடம் பொதுமக்கள் கூறும்போது, “மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் செயின் பறிப்பு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகம் நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும், ரெயில்வே போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்” என்றனர்.

    இதையடுத்து சைலேந்திர பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ரெயில் பயணத்தின்போது பயணிகளுக்கு ஏற்படும் குறைகள் குறித்து கேட்டு வருகிறோம். அந்தந்த துறைக்கு குறைகள் பற்றி தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்.

    மீஞ்சூரில் ரெயில்வே காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகள் தொல்லையை தடுக்க அவர்களது அமைப்பில் தெரிவித்து மாற்று தொழில் செய்ய அறிவுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சைலேந்திரபாபுவும், அதிகாரிகளும் மீஞ்சூரில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயிலில் மீண்டும் பயணம் செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்திலும் அவர்கள் பயணிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். #Tamilnews
    ×