search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 கட்ட தேர்தல்"

    பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6 ஆயிரம் உதவித்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும், யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி பியூஸ் கோயல் கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், சிறிய மற்றும் விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகளுக்கு வருமான உத்தரவாதம் வழங்குகிற வகையில் பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி என்ற திட்டத்தை செயல்படுத்தி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

    இந்த தொகை 3 தவணைகளில், விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும். 2 ஹெக்டேர் (சுமார் 5 ஏக்கர்) வரையில் சாகுபடி நிலம் வைத்திருக்கிற விவசாயிகள் அனைவரும் இந்த நிதி உதவியைப் பெற முடியும் எனவும் குறிப்பிட்டார்.

    இந்த நிதி உதவி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும். மார்ச் 31-ந்தேதிக்குள் முதல் தவணையை வங்கிக்கணக்குகளில் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது தொடர்பான செயல்பாட்டு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    அதில், “சாகுபடி செய்யத்தக்க 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கிறவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். கணவன், மனைவி, குழந்தைகள் என ஒரு குடும்பத்துக்கு கூட்டாக இந்த வரையறைக்குள் சொத்து இருக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த உதவித்தொகை விவசாயிகளில் யாருக்கெல்லாம் கிடைக்காது என்பதுவும் வழிமுறையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அது வருமாறு:-

    * அரசியல் அமைப்பு பதவி வகித்தவர்கள், வகிக்கிறவர்களுக்கு கிடையாது.

    * மந்திரிகள், முன்னாள் மந்திரிகள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், முன்னாள் எம்.எல்.சி.க்கள், மாநகராட்சி மேயர்கள், முன்னாள் மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், முன்னாள் தலைவர்கள் ஆகியோரை உறுப்பினராக கொண்ட விவசாய குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி கிடையாது.

    * மத்திய, மாநில அரசு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள், ஊழியர்கள், முன்னாள் அதிகாரிகள், ஊழியர்கள் குடும்பங்களுக்கும் விவசாய குடும்பங்களுக்கான நிதி உதவி கிடையாது.

    * மாதம் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெறுகிற ஓய்வூதியதாரர்களின் குடும்பத்துக்கும் கிடையாது.

    * கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்களின் குடும்பங்களுக்கும் கிடையாது.

    * பதிவு செய்துள்ள டாக்டர்கள், என்ஜினீயர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள், கட்டுமான வல்லுனர்கள் குடும்பங்களுக்கும் விவசாயிகளுக்கான நிதி உதவி கிடையாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், இரண்டாவது தவணையின்போது நிதி உதவி பெறுகிற விவசாயிகள் ஆதார் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
    இந்தோனேசியாவின் சுலவேசிய மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளனர். #IndonesiaLandslide
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் இன்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த துயரச் சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவினால் கோவாஸ் மாவட்டம் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் அனைவரும் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள். சிலர் நிலச்சரிவால் புதைந்தும், சிலர் மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றி முகாம்களுக்கு அழைத்து செல்லும் பணி நடைபெறுகிறது. நிலச்சரிவினால் இப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. #IndonesiaLandslide
    நீலகிரி மாவட்டம் பந்தலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட் நீதிபதியின் காரை மறித்து தகராறில் ஈடுப்பட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதியும், போலீஸ் இன்ஸ்பெக்டருமான அவரது மனைவியும் அவர்களின் குழந்தையை கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விட்டு விட்டு காரில் பந்தலூருக்கு திரும்பி சென்றனர்.

    காரை நீதிமன்ற ஊழியர் வினோத் கண்ணா ஓட்டி சென்றார். கட்டபெட்டு பஜாரை கார் கடந்த போது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் காரை பின் தொடர்ந்து வந்து ஹாரன் அடித்து முந்தி செல்ல முயன்றுள்ளனர்.

    பின்னர் சாலை வளைவில் முந்தி சென்றவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி காரை மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கார் பாக்கிய நகர் சென்ற போது ஏற்கனவே தகராறில் ஈடுபட்ட 3 பேர் தனது நண்பர்கள் சிலருடன் நீதிபதி காரை நிறுத்தி மீண்டும் தகராறு செய்து உள்ளனர். அப்போது கார் டிரைவர் வினோத் கண்ணா, காரில் நீதிபதியும் அவரது மனைவி போலீஸ் இன்ஸ்பெக்டரும் உள்ளனர். தகராறு செய்யாமல் வழி விடுங்கள் என கேட்டுள்ளார்.

    காரில் இருந்து இறங்கி சமரசம் செய்த நீதிபதி மற்றும் அவரது மனைவியிடமும் தகராறு செய்துள்ளனர்.

    இது குறித்து கார் டிரைவர் வினோத் கண்ணா கோத்தகிரி போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், அலெக்சாண்டர், மார்ட்டின் லூதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் கட்டபெட்டு பாக்கிய நகரை சேர்ந்த சரவணன் (36),ராமகிருஷ்ணன் (21),லட்சுமணன் (23), பிரகாஷ் (45),துரைராஜ் (58) கோபிநாத் (27) ஆகியோர் தகராறு செய்தது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
    மகாராஷ்டிரா மாநிலத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாபமான உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #NandurbarBoatcapzise
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பர் மாவட்டத்தில் நர்மதை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் படகு சவாரி நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில், நர்மதை ஆற்றில் இன்று சென்ற படகில் சுமார் 60க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். ஆற்றின் நடுவில் சென்றபோது படகு நிலைதடுமாறி கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

    தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 39 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

    காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #NandurbarBoatcapzise
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கல்யாண்பூர் பகுதியில் அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். #UPBusAccident
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் இருந்து அலகாபாத் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமானொர் பயணம் செய்தனர்.

    கல்யாண்பூர் பகுதியில் உள்ள மவ்ஹர் கிராமத்தின் அருகே வந்தபோது, பஸ்சின் டயர் பஞ்சரானது. இதனால் நிலைகுலைந்து போன பஸ் எதிரே வந்த சிமெண்ட் லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் 19 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

    உ.பி.யில் அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #UPBusAccident
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து கேரளாவில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 2 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவில் ஆச்சாரத்தை மீறி அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியானதும் இளம்பெண்கள் பலரும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். அவர்களை பக்தர்கள் வழிமறித்து திருப்பி அனுப்பினர்.

    பக்தர்களின் எதிர்ப்பை மீறி கடந்த 2-ம் தேதி பிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்களை போலீசார் சபரிமலை சன்னிதானம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் சாமி தரிசனமும் செய்தனர்.

    50 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் இருவர் சபரிமலையில் தரிசனம் செய்த தகவல் வெளியானதும், கோவில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் நடந்தது. மேலும் அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள், சபரிமலை கர்மசமிதியை சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.



    இதையொட்டி நடந்த முழு அடைப்பில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. கடைகள், அலுவலகங்கள், அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. கொடிக் கம்பங்களும் உடைக்கப்பட்டன.

    கேரளத்தின் தென்பகுதியான நெய்யாற்றின்கரை முதல் வடபகுதியான கண்ணூர் வரை கலவரம் பரவியது. சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம் திட்டா மாவட்டத்தில் பல இடங்களிலும் கலவரம் மூண்டது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலைத்தனர்.

    வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 2 ஆயிரத்து 182 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 894 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும், 5 ஆயிரத்து 817 பேர் ஜாமினில் வெளிவந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். #sabarimala
    உளுந்தூர்பேட்டையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் உளுந்தூர்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உளுந்தாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த சிலர், அங்கு புத்தாண்டு பண்டிகையையொட்டி மதுகுடித்து விட்டு தகராறில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த போலீசார் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

    இதை கண்டித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தியை, அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்ததாகவும், போலீசார்களை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், உளுந்தாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த சாதிக்(வயது 22), பரசுராமன்(27) செல்வராஜ்(20), மணிகண்டன்(26) நமச்சிவாயம்(35), தெய்வசிகாமணி(24) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    டென்மார்க் நாட்டில் இன்று சரக்கு ரெயிலுடன் பயணிகள் ரெயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். #Trainaccident #DenmarkTrainaccident
    கோபென்ஹாகென்:

    டென்மார்க் நாட்டில் உள்ள ஜிலாந்து மற்றும் புனேன் தீவுகளை இணைக்கும் பாதை வழியாக இன்று காலை ஒரு பயணிகள் ரெயில் வந்துகொண்டிருந்தது.

    (உள்நாட்டு நேரப்படி) காலை ஏழரை மணியளவில் கிரேட் பெல்ட் பிரிட்ஜ் என்னும் பாலத்தின் மீது வந்தபோது அந்த பயணிகள் ரெயில் மீது பக்கவாட்டில் சென்ற ஒரு சரக்கு ரெயில் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 16 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    மோதிய வேகத்தில் சரக்கு ரெயிலில் இருந்த கன்டெய்னர்கள் பெயர்ந்து கிடக்கும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டன. இவ்விபத்தை தொடர்ந்து அந்த பாலத்தின் வழியாக செல்லும் பிற ரெயில்களின் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.



    அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசுவதால் விபத்துக்குள்ளான ரெயில்களை அங்கிருந்து அகற்றும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவ்விபத்துக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    இருப்பினும், ஏதோவொரு மர்மப் பொருள் மீது மோதாமல் இருப்பதற்காக பயணிகள் ரெயிலின் டிரைவர் எதிர்பாராத வகையில் ‘பிரேக்’ போட்டதால் நிலைதடுமாறி பக்கவாட்டில் கடந்து சென்ற சரக்கு ரெயிலின் மீது மோதியதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம என கருதப்படுகிறது. #Trainaccident #DenmarkTrainaccident
    கர்நாடகாவில் செயல்பட்டு வரும் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்துச் சிதறியதில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #BoilerBlastinaSugarMill
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலம் முதால் மாவட்டத்தில் உள்ள குலாலி கிராமத்தில் முன்னாள் மந்திரி முர்கேஷ் நிரானிக்கு சொந்தமான சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    அந்த ஆலையில் இயங்கி வந்த கொதிகலன் இன்று காலை திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அங்கு பணியில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. 
     


    கொதிகலன் வெடித்து சிதறியதில் சர்க்கரை ஆலையின் பல்வேறு சுவர்கள் பாதிப்பு அடைந்துள்ளன. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் 13 பேர் பலியான சில தினங்களுக்குள் மீண்டும் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #BoilerBlastinaSugarMill
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பொதுமக்களில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Pulwamaencounter #Militantskilled #Peoplekilled
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், புல்வாமா மாவட்டம் சர்னூ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது.
     
    அதன் அடிப்படையில் இன்று காலை சர்னூ கிராமத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.



    மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இன்றைய என்கவுண்டரில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நடத்தப்படும் துப்பாக்கிச் சண்டையின்போது நமது பாதுகாப்பு படையினர் மிகவும் கவனமாக நடந்து கொள்ள தவறி விடுகின்றனர். இந்த வார இறுதி நாளும் ரத்தக்கறையுடன் முடிந்துள்ளது என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். #Pulwamaencounter #Militantskilled #Peoplekilled
     
    நேபாளத்தில் பேருந்தும் ஜீப்பும் மோதிய விபத்தில் மணமகனின் பெற்றோர் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #NepalAccident
    காத்மண்டு:

    நேபாள நாட்டின் கீதா நகரில் இருந்து ஷம்ஷெர்குஞ்ச் பகுதியை நோக்கி பயணிகள் பேருந்து இன்று சென்று கொண்டிருந்தது.

    நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள டாங் மாவட்டத்தின் லமாஹி பகுதியில் வரும்போது முன்னாள் சென்ற ஜீப் மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். ஜீப் டிட்ரைவர் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், ஜீப்பில் பயணம் செய்தவர்கள் தங்களது மகன் திருமணத்துக்கு சென்று கொண்டிருந்ததும், உயிரிழந்தவர்களில் மாப்பிள்ளையின் தாய், தந்தையும் அடங்குவர் என்பதும் தெரிய வந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #NepalAccident
    உத்தர பிரதேசத்தில் யமுனை நதியில் படகு கவிழ்ந்து மூழ்கியதால், பலியான 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. #BoatCapsizes
    பிரயாக்ராஜ்:

    மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிலர் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில், அஸ்தியை கரைப்பதற்காக வந்திருந்தனர். அஸ்தி கரைப்பு மற்றும் சடங்குகள் செய்தபிறகு படகு மூலம் கரை திரும்பினர். கீத்கஞ்ச் பகுதியில் மங்காமேஷ்வர் ஆலயம் அருகே வந்தபோது, படகினுள் திடீரென தண்ணீர் புகுந்தது. இதனால் பாரம் தாங்காமல் யமுனை நதியில் படகு கவிழ்ந்தது.

    படகில் பயணம் செய்த 16 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களில் 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படகோட்டி உள்ளிட்ட 2 பேர்  நீந்தி கரை சேர்ந்தனர். 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 2 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து படகோட்டியை தேடி வருகின்றனர். கீத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். #BoatCapsizes 
    ×