search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளத்தில் ஜீப், பேருந்து மோதல் - மகன் திருமணத்துக்கு சென்ற பெற்றோர் உள்பட 6 பேர் பலி
    X

    நேபாளத்தில் ஜீப், பேருந்து மோதல் - மகன் திருமணத்துக்கு சென்ற பெற்றோர் உள்பட 6 பேர் பலி

    நேபாளத்தில் பேருந்தும் ஜீப்பும் மோதிய விபத்தில் மணமகனின் பெற்றோர் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #NepalAccident
    காத்மண்டு:

    நேபாள நாட்டின் கீதா நகரில் இருந்து ஷம்ஷெர்குஞ்ச் பகுதியை நோக்கி பயணிகள் பேருந்து இன்று சென்று கொண்டிருந்தது.

    நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள டாங் மாவட்டத்தின் லமாஹி பகுதியில் வரும்போது முன்னாள் சென்ற ஜீப் மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். ஜீப் டிட்ரைவர் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், ஜீப்பில் பயணம் செய்தவர்கள் தங்களது மகன் திருமணத்துக்கு சென்று கொண்டிருந்ததும், உயிரிழந்தவர்களில் மாப்பிள்ளையின் தாய், தந்தையும் அடங்குவர் என்பதும் தெரிய வந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #NepalAccident
    Next Story
    ×