search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5G"

    • இந்தியாவில் மெல்ல 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் 5ஜி-யை வெளியிடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

    இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நாடு முழுக்க 5ஜி சேவையை வெளியிடும் பணிகள் மெல்ல நடைபெற்று வருகின்றன. அடுத்த தலைமுறை மொபைல் நெட்வொர்க் பல்வேறு வழிகளில் பலன் தரும். இதோடு ஹேக்கர்களுக்கும் மக்களை ஏமாற்ற வழி செய்துள்ளது. 5ஜி சேவையை துவங்கும் ஆரம்பக்கட்டத்தில் மக்கள் எப்படி 5ஜி சேவையை ஆக்டிவேட் செய்வது என ஆராய்ந்து வருகின்றனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள ஹேக்கர்கள் மும்முரம் காட்ட துவங்கி விட்டனர். அதன் படி 5ஜி சேவையை எப்படி ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்ற விவரங்களை வழங்குவதாக கூறி மக்களிடம் இருந்து தகவல்களை ஹேக்கர்கள் திருட முயன்று வருகின்றனர். இது குறித்த எச்சரிக்கை தகவலை மும்மை காவல் துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிட்டு உள்ளது.

    அதில் எப்படி 4ஜி-யில் இருந்து 5ஜி நெட்வொர்க்கிற்கு அப்டேட் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் வழங்குவதாக கூறி பயனர் வங்கி விவரம் உள்பட முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் சேகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 5ஜி ஆக்டிவேட் செய்வது பற்றி வரும் சந்தேகத்திற்குரிய இணைய முகவரிகளை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் மும்பை காவல் துறை தெரிவித்து உள்ளது.

    ஹேக்கர்கள் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர் போன்று தொடர்பு கொண்டு பயனர் விவரங்களை இணைய முகவரி கொடுத்து அபகரிக்கின்றனர். முன்னதாக இதே போன்ற எச்சரிக்கை தகவலை ஐதராபாத் நகர காவல் துறை சார்பிலும் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த வகையில் 4ஜி-யில் இருந்து 5ஜி நெட்வொர்க்கிற்கு மாறுவோர் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகி இருக்கிறது.

    • சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு எப்போது 5ஜி அப்டேட் கிடைக்கும் என்ற தகவலை தெரிவித்துள்ளது.
    • முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களுக்கு 5ஜி அப்டேட் வழங்கும் காலக்கட்டம் பற்றி அறிவித்து இருந்தது.

    ஆப்பிளை தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர மாத மத்தியில் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு 5ஜி சேவையை பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

    5ஜி சேவையை வழங்குவதற்காக சாம்சங் நிறுவனம் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சாம்சங் சாதனங்களில் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். சாம்சங் சாதனங்கள் என குறிப்பிட்டு இருப்பதால் ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து கேலக்ஸி டேப் எஸ்8 சீரிஸ் மாடல்களுக்கும் 5ஜி அப்டேட் வழங்கப்படலாம்.

    முன்னதாக ஏர்டெல் நிறுவனத்தின் நான்-ஸ்டாண்ட்-அலோன் 5ஜி பிளஸ் நெட்வொர்க் இந்தியாவின் எட்டு நகரங்களில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த நெட்வொர்க்கில் எந்தெந்த சாதனங்களில் 5ஜி வேலை செய்யும் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் ஏராளமான சாம்சஙங் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21 மற்றும் அதற்கும் முன் வெளியிட்ட சாதனங்களை அப்டேட் செய்ய வேண்டும்.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஸ்டாண்ட்-அலோன் 5ஜி சேவையை நாட்டின் நான்கு நகரங்களில் வெளியிட்டது. தற்போது பீட்டா சோதனை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து அதிக நகரங்களில் 5ஜி சேவைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு இந்தியாவில் 5ஜி சப்போர்ட் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    • முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளை துவங்கி விட்டன.

    இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு எப்போது 5ஜி நெட்வொர்க் சப்போர்ட் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபோன் 12 மற்றும் அதன் பின் வெளியான மாடல்களுக்கு 5ஜி சப்போர்ட் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 12 மற்றும் அதன் பின் வெளியான ஐபோன்களில் விரைவில் 5ஜி சேவையை அனுபவிக்கலாம் என கூறப்படுகிறது.

    ஐபோன்களில் 5ஜி வசதியை வழங்கும் முன் பாதுகாப்பான டெஸ்டிங் மற்றும் வேலிடேஷன் பணிகளை மேற்கொள்ள ஆப்பிள் முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து மென்பொருள் அப்டேட் மூலம் 5ஜி வசதி ஆக்டிவேட் செய்யப்படும். ஆப்பிள் ஐபோன்களில் 5ஜி சேவையை வழங்க பாரதி ஏர்டெல் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    5ஜி சப்போர்ட் உடன் ஆப்பிள் வெளியிட்டு இருக்கும் அனைத்து ஐபோன் மாடல்களிலும் இரண்டு சிம் ஸ்லாட்களிலும் 5ஜி வசதியை பயன்படுத்த முடியும். அதன்படி 5ஜி வசதி கொண்ட குறைந்த விலை ஐபோன் மாடல்களாக ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் SE 2022 உள்ளன. ஐபோன்களில் 5ஜி வசதி வழங்குவதற்கான அப்டேட்டை வெளியிடுவது தொடர்பாக பல்வேறு ஐயங்கள் குறித்து ஆப்பிள் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் 5ஜி நெட்வொர்க்கில் ஐபோன்களை பரிசோதனை செய்யும் பணிகளை ஆப்பிள் நிறுவனம் துவங்கி விட்டதாக கூறப்பட்டது. இந்த சோதனைகள் டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் SE 2022 மாடல்களை வைத்திருப்போர் அதிவேக 5ஜி சேவையை இந்த ஆண்டு இறுதியில் அனுபவிக்க முடியும்.

    • 5ஜி-க்கு மாற்றம் செய்ய கடவு சொல்லை கேட்டால் அதனை யாரிடமும் தெரியப்படுத்த வேண்டாம்.
    • குற்றவாளிகள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவதற்கு வாய்ப்பு உள்ளது என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொது மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    அதில் உங்கள் சிம் கார்டை 4ஜி-ல் இருந்து 5ஜி-க்கு மாற்றம் செய்ய தங்களின் செல்போனுக்கு வந்துள்ள ஒரு நேர கடவு சொல்லை கூறுங்கள் என்று யாரும் கேட்டால் அதனை யாரிடமும் தெரியப்படுத்த வேண்டாம். அதன் மூலம் சைபர் கிரைம் குற்றவாளிகள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவதற்கு வாய்ப்பு உள்ளது என அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராஜ் மேற்பார்வையில் போலீசார் மாவட்டம் முழுவதும் சிம் கார்டு மாற்றம் உள்ளிட்ட சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    • இந்திய டெலிகாம் சந்தையில் ஒவ்வொரு நிறுவனமும் 5ஜி சேவையை வெளியிடுவதற்கான பணிகளை துவங்கி விட்டன.
    • விரைவில் இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் அதிவேக 5ஜி சேவை வழங்கப்பட உள்ளன.

    இந்தியாவில் 5ஜி சேவைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு விட்டன. 2022 இந்தியா மொபைல் காங்கிரஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவைகளை துவங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாட்டின் நான்கு நகரங்களில் 5ஜி பீட்டா டெஸ்டிங்கை துவங்கியது. இதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் எட்டு மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவையை வெளியிட்டு உள்ளது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதை அடுத்து பலரும் 5ஜி சேவையை அனுபவிக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருப்பர். புதிய தலைமுறை இணைய சேவையான 5ஜி அதிவேக இணைய இணைப்பை வழங்குவது மட்டுமின்றி ஏராளமான இதர பயன்பாடுகளையும் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    5ஜி சேவை பயன்கள்:

    இந்தியாவில் எந்த டெலிகாம் நிறுவனம் வழங்கினாலும், அதிவேக 5ஜி சேவையை பயன்படுத்த, 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன் வைத்திருப்பது அவசியம் ஆகும். உங்களின் ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி உள்ளதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை அடுத்து உங்களது ஸ்மார்ட்போன் தேவைக்கு ஏற்ற 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்கிறதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை தேவைப்படும் பேண்ட் சப்போர்ட் இல்லை எனில், 5ஜி சேவையை பயன்படுத்த முடியாது.

    ஸ்மார்ட்போன், பேண்ட் வரிசையில் சிம் கார்டும் 5ஜி வசதி கொண்டிருக்க வேண்டும். நல்ல வேளையாக ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை பயன்படுத்த புதிய சிம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்து விட்டன. தற்போதைய 4ஜி சிம் வைத்துக் கொண்டே 5ஜி சேவையை பயன்படுத்தலாம். எனினும், அப்டேட் செய்யப்பட்ட சிம் வைத்திருக்க வேண்டும்.

    மூன்றாவது மிக முக்கிய வழிமுறை ஸ்மார்ட்போனில் 5ஜி நெட்வொர்க் செட்டப் செய்வது தான். உங்களின் ஸ்மார்ட்போனில் 5ஜி நெட்வொர்க் செட்டப் செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

    சாம்சங்: ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- கனெக்‌ஷன்ஸ் -- மொபைல் நெட்வொர்க்ஸ் -- நெட்வொர்க் மோட் -- 5G/LTE/3G/2G (auto connect) ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

    கூகுள் பிக்சல் / ஸ்டாக் ஆண்ட்ராய்டு போன்கள்: செட்டிங்ஸ் -- நெட்வொர்க் & இண்டர்நெட் -- சிம் -- பிரிஃபர்டு நெட்வொர்க் டைப் -- 5ஜி

    ஒன்பிளஸ்: வைபை & நெட்வொர்க்ஸ் -- சிம் & நெட்வொர்க் -- பிரிஃபர்டு நெட்வொர்க் டைப் -- 2G/3G/4G/5G (automatic)

    ஒப்போ: செட்டிங்ஸ் -- கனெக்‌ஷன் & ஷேரிங் -- சிம் 1 அல்லது சிம் 2 -- பிரிஃபர்டு நெட்வொர்க் டைப் -- 2G/3G/4G/5G (automatic)

    ரியல்மி: செட்டிங்ஸ் -- கனெக்‌ஷன் & ஷேரிங் -- சிம் 1 அல்லது சிம் 2 -- பிரிஃபர்டு நெட்வொர்க் டைப் -- 2G/3G/4G/5G (automatic)

    விவோ / ஐகூ: செட்டிங்ஸ் -- சிம் 1 அல்லது சிம் 2 -- மொபைல் நெட்வொர்க் -- நெட்வொர்க் மோட் -- 5G

    சியோமி / போக்கோ: செட்டிங்ஸ் -- சிம் கார்டு மற்றும் மொபைல் நெட்வொர்க் -- பிரிஃபர்டு நெட்வொர்க் டைப் -- 5G

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின்பற்றிய பின் உங்களின் ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையை பயன்படுத்த துவங்கிட முடியும். இனி 5ஜி சேவை கிடைக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். உங்களின் ஸ்மார்ட்போன் 5ஜி நெட்வொர்க்-ஐ கண்டறிந்த பின் தானாக 5ஜி மோடிற்கு மாறிக் கொள்ளும்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிடுவதற்கான ஆயத்த பணிகளை துவங்கி விட்டது.
    • முதற்கட்டமாக 5ஜி பீட்டா சோதனையை ரிலையன்ஸ் ஜியோ துவங்கி இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி என இந்தியாவின் நான்கு நகரங்களில் 5ஜி சேவைகளை வெளியிடுவதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக 5ஜி சேவைகளின் பீட்டா டெஸ்டிங் நடைபெற இருக்கிறது. தசரா பண்டிகையை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்த நகரங்களில் 5ஜி சேவைகளுக்கான வெளியீடு தயாராகி வருகிறது. மேலும் 5ஜி பீட்டா டெஸ்டிங்குடன் அறிமுக சலுகைகளையும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது. பீட்டா டெஸ்டிங்கின் அங்கமாக ரிலையன்ஸ் ஜியோ தேர்வு செய்த வாடிக்கையாளர்கள் முழுமையான 5ஜி சேவைகளை அனுபவிக்க முடியும். இத்துடன் சேவை பற்றிய கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

    தீபாவளி வாக்கில் இந்தியாவில் 5ஜி சேவைகளை வெளியிடுவதாக ரிலையன்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிவித்து இருந்தது. இதை அடுத்து தற்போது 5ஜி பீட்டா டெஸ்டிங் துவங்கப்பட்டு உள்ளது. ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவைகள் ஸ்டாண்ட்-அலோன் (SA) தளத்தில் வெளியாகிறது.

    ஜியோ ட்ரூ 5ஜி அறிமுக சலுகைகள்:

    டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரனாசியில் ஜியோ 5ஜி அறிமுக சலுகைகள் இன்விடேஷன் முறையில் வழங்கப்படுகிறது.

    தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது.

    நான்கு நகரங்களை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் பீட்டா டெஸ்டிங் துவங்கும். இதுபற்றிய அறிவிப்பு படிப்படியாக வெளியிடப்படும்.

    சிறந்த கவரேஜ் மற்றும் பயனர் அனுபவம் அனைத்து வாடிக்கையாளருக்கும் கிடைக்கும் வரை பயனர்கள் பீட்டா டெஸ்டிங்கில் பயன்பெற முடியும்.

    இன்வைட் செய்யப்பட்ட ஜியோ அறிமுக சேவை பயனர்கள் தானாக 5ஜி சேவைக்கு அப்கிரேடு செய்யப்படுவர். இவர்கள் தனியே 5ஜி சிம் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

    ஒவ்வொரு மொபைல் போனிலும் தலைசிறந்த 5ஜி சேவையை வழங்க ஏதுவாக மொபைல் போன் உற்பத்தியாளர்களுடனும் ஜியோ தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

    • நாங்கள் பெரிய விளம்பரங்களை வெளியிடவில்லை.
    • நாட்டு மக்களின் வசதியை அதிகரிப்பதில் நாங்கள் கவனம் செலுத்தினோம்.

    டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    21ம் நூற்றாண்டில் வேகமாக வளரும் இந்தியாவுக்கு இன்று சிறப்பான நாள். 130 கோடி இந்தியர்கள் தொலைத்தொடர்புத் துறையிலிருந்தும் 5ஜி வடிவில் அற்புதமான பரிசைப் பெறுகிறார்கள். 5ஜி ஒரு புதிய சகாப்தத்தின் கதவுகளைத் தட்டுகிறது. 5ஜி எல்லையற்ற வாய்ப்புகளின் தொடக்கம். 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பங்களுக்காக இந்தியா மற்ற நாடுகளைச் சார்ந்து இருந்தது. ஆனால் 5ஜி மூலம் இந்தியா முதல் முறையாக தொலைதொடர்பு தொழில்நுட்பத்தை உலக தரத்தைப் பெற்றுள்ளது.

    மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் என்பது வெறும் பெயரல்ல, அது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு பெரிய தொலைநோக்கு பார்வை. தொழில்நுட்பத்தை சாமானிய மக்களிடம் கொண்டு செல்வதே இந்த தொலைநோக்குப் பார்வையின் குறிக்கோள். 2014 ஆண்டில் மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யாத நாம், இன்று ஆயிரக்கணக்கான மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளோம். 


    தற்போது நாடு முழுவதும் 1.7 லட்சம் பஞ்சாயத்துகள் ஆப்டிகல் ஃபைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. தொழில்துறைக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டன. 4ஜி தொழில் நுட்ப தரவுகளின் விலை உலகிலேயே இந்தியாவில் மிக குறைவு. ஒரு ஜி.பி. 300 ரூபாயில் இருந்து10 ரூபாயாக குறைந்தது. சில உயர் வகுப்பினர், ஏழைகள் டிஜிட்டலின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வார்களா என்று கேள்வி எழுப்பினர். தற்போது புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

    நாங்கள் பெரிய விளம்பரங்களை வெளியிடவில்லை. நாட்டு மக்களின் வாழ்க்கைக்கான வசதியை எவ்வாறு அதிகரிப்பது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். முதல் மூன்று தொழில் புரட்சிகளால் இந்தியா பயனடையாமல் இருக்கலாம், ஆனால் 4வது தொழிற்புரட்சியின் முழுப் பலனையும் இந்தியா பெறும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • முதற்கட்டமாக ஜியோ 5ஜி சேவைகள் இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ விரைவில் 5ஜி சேவைகளை வெளியிட இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி ஜியோ 5ஜி சேவைகள் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா என நான்கு நகரங்களில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறார்.

    முதற்கட்டமாக நான்கு நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டதும், நாட்டின் மற்ற பகுதிகளிலும் ஜியோ 5ஜி சேவைகள் வெளியிடப்பட உள்ளன. இந்த பணிகள் டிசம்பர் 2023 வாக்கில் நிறைவு பெறும் என தெரிகிறது. ஜியோ 5ஜி சேவைகள் முதலில் 5ஜி எஸ்ஏ எனப்படும் ஸ்டாண்ட்-அலோன் நெட்வொர்க்குகளில் அறிமுகம் செய்யப்படும்.

    முன்னதாக 2016 வாக்கில் 4ஜி சேவைகள் வெளியீட்டின் போது ரிலையன்ஸ் ஜியோ அனைவரும் அதிர்ச்சியடைய செய்தது. இதே பானியை 5ஜி வெளியீட்டின் போதும் ஜியோ மேற்கொள்ளும் என தெரிகிறது. கட்டண ரீதியில் ஜியோ 5ஜி சேவைகள் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இது மட்டுமின்றி பல்வேறு இதர வழிகளிலும் ஜியோ தனது திட்டங்களின் மூலம் அதிர்ச்சி அளிக்கும் என தெரிகிறது.

    4ஜி சேவைகளை வெளியிடும் போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சிம் கார்டுகளை இலவசமாக வழங்கியதோடு, டேட்டா மற்றும் வாய்ஸ் கால் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இதே போன்ற திட்டத்தை 5ஜி வெளியீட்டிலும் ரிலையன்ஸ் ஜியோ மேற்கொள்ளலாம் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது பற்றி ரிலையன்ஸ் ஜியோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    வர்த்தக பயனர்கள் மட்டுமின்றி தொழில்துறை பயனர்களுக்கும் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட உள்ளன. டெலிகாம் சந்தையில் 5ஜி வெளியீட்டில் ஜியோவுக்கு போட்டியளிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களும் 5ஜி சேவையை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

    • இந்தியாவில் அடுத்த தலைமுறை டெலிகாம் சேவையான 5ஜி விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
    • இந்தியாவில் முதன் முதலில் 5ஜி சேவை எங்கு வெளியிடப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் 5ஜி சேவை முதற்கட்டமாக புதுடெல்லியில் வழங்கப்பட இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1 ஆம் தேதி இந்தியன் மொபைல் காங்கிரஸ் நிகழ்வை துவக்கி வைக்கிறார். மேலும் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்குகளை துவங்கி வைக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

    நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறுவதால் 5ஜி நெட்வொர்க் முதற்கட்டமாக டெல்லியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 5ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட்டதும் வர்த்தக பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்காது என்றே தெரிகிறது. எனினும், 5ஜி வெளியீடு பற்றி டெலிகாம் நிறுவனங்களின் அறிவிப்பு மட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்திய டெலிகாம் சந்தையில் டெல்லி மிக முக்கிய வட்டாரமாக விளங்குகிறது.

    5ஜி நெட்வொர்க் சப்போர்ட் கொண்ட சாதனங்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் 5ஜி நெட்வொர்க் சேவையை இயக்க முடியும். இந்த பண்டிகை காலக்கட்டத்தில் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதை அடுத்து பலரும் 5ஜி சாதனங்களுக்கு அப்கிரேடு செய்ய துவங்கி உள்ளனர்.  

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • ஸ்மார்ட்போன் உருவாக்குவதற்காக ஜியோ நிறுவனம் கூகுளுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45 ஆவது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கி வருவதாக அறிவித்து இருக்கிறது. இதற்காக கூகுள் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாகவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து புதிய 5ஜி ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    5ஜி சார்ந்த சேவைகளை உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயனர்களுக்கு ஜியோவின் தனியார் 5ஜி ஸ்டாக் மூலம் வழங்க கூகுள் நிறுவனத்தின் மேம்பட்ட கிளவுட் சேவையை பயன்படுத்த இருக்கிறது. இத்துடன் மெட்டா நிறுவனத்துடன் இணைந்து தலைசிறந்த தொழில்நுட்பத்தை அனைவருக்கும் வழங்க இருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது.


    ஜியோவின் கிளவுட்-ஸ்கேல் டேட்டா செண்டர்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் தொழில்நுட்பம், 5ஜி எட்ஜ் லொகேஷன், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இண்டெல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஜியோ தெரிவித்து இருக்கிறது. இதுதவிர எரிக்சன், நோக்கியா, சாம்சங் மற்றும் சிஸ்கோ போன்ற நிறுவனங்களுடன் நல்லுறவு கொண்டு இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறது.

    இத்துடன் குவால்காம் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. சர்வதேச அளவில் முன்னணி செமிகண்டக்டர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான குவால்காம் ஜியோ பிளாட்பார்ம்ஸ்-இல் முதலீடு செய்து இருக்கிறது. ஜியோவுடன் இணைந்து கிளவுட்-நேடிவ், 5ஜி உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என குவால்காம் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ்டியானோ அமோன் தெரிவித்தார்.

    • இந்தியாவில் 5ஜி சேவை வெளியிடும் பணிகளில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
    • 5ஜி சேவையை வெளியீடு அக்டோபர் மாத வாக்கில் துவங்கும் என மத்திய மந்திரி தெரிவித்து இருக்கிறார்.

    இந்தியாவில் விரைவில் வர்த்தக ரீதியிலான 5ஜி சேவைகள் வழங்கப்பட இருக்கிறது. இது குறித்து மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் கூறும் போது, இந்தியாவில் 5ஜி சேவைகள் அக்டோபர் மாத வாக்கில் துவங்கும் என தெரிவித்து இருக்கிறார்.

    முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிடும் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் எப்போது 5ஜி சேவைகள் வெளியாகும் என்ற கேள்வி பரவலாக இருந்து வருகிறது.


    5ஜி சேவையை வெளியிடுவதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட டெலிகாம் வட்டாரங்களில் சேவையை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளன. அந்த வகையில், அரசு திட்டம் சரியாக இருப்பின் முதற்கட்டமாக 5ஜி சேவைகள் வழங்கும் நகரங்கள் பட்டியலை கீழே காணலாம்.

    ஆமதாபாத்

    பெங்களூரு

    சண்டிகர்

    சென்னை

    டெல்லி

    காந்திநகர்

    குருகிராம்

    ஐதராபாத்

    ஜாம்நகர்

    கொல்கத்தா

    லக்னோ

    மும்பை

    பூனே

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நகரங்களில் 5ஜி சேவை முதற்கட்டமாக வெளியிடப்படும் என எதிர்பாக்கலாம். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை டெலிகாம் நிறுவனங்கள் விரைவில் வெளியிடும் என தெரிகிறது. வி நிறுவனம் முதலில் டெல்லி பகுதியில் 5ஜி சேவைகளை வழங்க இருப்பதாக தனது பயனர்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறது. வோடபோன் ஐடியா நிறுவனம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டும் 5ஜி சேவைகளை வழங்கும் வகையிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கி உள்ளது.

    • ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • மேலும் இந்தியாவில் 5ஜி சேவை எப்போது வெளியிடப்படும் என்று ஏர்டெல் தெரிவித்து இருக்கிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் 5ஜி சேவைகளை வெளியிட ஆயத்தமாகி வருகிறது. அடுத்த தலைமுறை செல்லுலார் கனெக்டிவிட்டியை நாடு முழுக்க அறிமுகம் செய்ய ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. 2024 வாக்கில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவைகளை வழங்க ஏர்டெல் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    5ஜி வெளியீடு குறித்து ஏராளமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் 5ஜி வெளியீடு பற்றி தகவல் தெரிவித்து இருக்கிறார். 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இந்தியாவில் 5ஜி சேவைகளை வெளியிடும் நாட்டின் முதல் நிறுவனமாக ஏர்டெல் இருக்கும் என கூறப்படுகிறது.


    ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபல் விட்டல், இந்தியாவில் 5ஜி சேவைகள் இந்த மாதமே வெளியிடப்படும் என தெரிவித்து இருக்கிறார். சமீபத்திய ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ. 43 ஆயிரத்து 050 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது.

    இந்தியாவில் 5ஜி சேவைகளை 5 ஆயிரம் நகரங்களில் இருந்து துவங்க திட்டமிட்டுள்ளதாக ஏர்டெல் சிஇஒ தெரிவித்து இருக்கிறார். 2024 வாக்கில் நாட்டின் ஊரக பகுதிகளிலும் 5ஜி சேவைகளை வெளியிட ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. ஏர்டெல் மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    ×