search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இந்தியாவில் 5ஜி சேவை வெளியீடு - குட் நியூஸ் கொடுத்த ஏர்டெல்
    X

    இந்தியாவில் 5ஜி சேவை வெளியீடு - குட் நியூஸ் கொடுத்த ஏர்டெல்

    • ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • மேலும் இந்தியாவில் 5ஜி சேவை எப்போது வெளியிடப்படும் என்று ஏர்டெல் தெரிவித்து இருக்கிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் 5ஜி சேவைகளை வெளியிட ஆயத்தமாகி வருகிறது. அடுத்த தலைமுறை செல்லுலார் கனெக்டிவிட்டியை நாடு முழுக்க அறிமுகம் செய்ய ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. 2024 வாக்கில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவைகளை வழங்க ஏர்டெல் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    5ஜி வெளியீடு குறித்து ஏராளமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் 5ஜி வெளியீடு பற்றி தகவல் தெரிவித்து இருக்கிறார். 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இந்தியாவில் 5ஜி சேவைகளை வெளியிடும் நாட்டின் முதல் நிறுவனமாக ஏர்டெல் இருக்கும் என கூறப்படுகிறது.


    ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபல் விட்டல், இந்தியாவில் 5ஜி சேவைகள் இந்த மாதமே வெளியிடப்படும் என தெரிவித்து இருக்கிறார். சமீபத்திய ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ. 43 ஆயிரத்து 050 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது.

    இந்தியாவில் 5ஜி சேவைகளை 5 ஆயிரம் நகரங்களில் இருந்து துவங்க திட்டமிட்டுள்ளதாக ஏர்டெல் சிஇஒ தெரிவித்து இருக்கிறார். 2024 வாக்கில் நாட்டின் ஊரக பகுதிகளிலும் 5ஜி சேவைகளை வெளியிட ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. ஏர்டெல் மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    Next Story
    ×