search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5G"

    • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களில் 5ஜி வசதியை வழங்குவதற்கான பீட்டா டெஸ்டிங்கை மேற்கொண்டு வந்தது.
    • தற்போது ஐஒஎஸ் 16.2 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.2 வெர்ஷன்களை ஆப்பிள் வெளியிட துவங்கி இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த சில வாரங்களாக பீட்டா முறையில் டெஸ்டிங் செய்து வந்த ஐஒஎஸ் 16.2 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.2 அப்டேட்களின் ஸ்டேபில் வெர்ஷன்களை ஐபோன் மற்றும் ஐபேட் மாடல்களுக்கு வெளியிட்டு உள்ளது. இந்த அப்டேட் மூலம் ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்துவோர் ஐபோன் 14, ஐபோன் 13, ஐபோன் 12 மற்றும் ஐபோன் SE 3 மாடல்களில் 5ஜி அப்டேட் பெற முடியும்.

    எனினும், சில பயனர்களுக்கு ஐபேட் ஒஎஸ் 16.2 தங்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்கவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர். 2022 ஐபேட் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களின் செல்லுலார் வெர்ஷன்களில் 5ஜி சப்போர்ட் உள்ளது. புது அப்டேட் 5ஜி கனெக்டிவிட்டியை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சினை குறித்து பயனர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

    5ஜி மட்டுமின்றி புதிய அப்டேட் ஃபிரீடம் ஆப் வழங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் தரவுகளை கேன்வாஸ் ஒன்றில் ஒருங்கிணைத்து வைத்துக் கொள்ளலாம். பின் இங்கிருந்தபடி அவற்றை பார்ப்பது, ஷேர் மற்றும் கொலாபரேட் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும். இதில் ஏராளமான ஃபைல்களுக்கான சப்போர்ட், அவற்றை பிரீவியூ பார்க்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஃபிரீடம் போர்டுகள் ஐகிளவுடில் ஸ்டோர் செய்யப்பட்டு இருக்கும்.

    இவற்றை ஃபேஸ்டைம் அழைப்புகளின் போதும் இயக்க முடியும். இதை கொண்டு மற்றவர்களுடன் இணைந்து குறிப்பிட்ட போர்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்ளலாம். ஐகிளவுடில் ஸ்டோர் செய்யப்பட்டு இருப்பதால், இவை தானாக மற்ற சாதனங்களிடையேயும் சின்க் செய்யப்பட்டு விடும். இந்த அப்டேட்டில் ஆப்பிள் மியூசிக் சிங் ஆப்ஷனும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐகிளவுடிற்கு மேம்பட்ட டேட்டா பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    • டெலிகாம் சந்தையில் அதிநவீன புது தொழில்நுட்பம் 5ஜி, உலகளவில் வேகமாக வளர்ந்து வருகிறது.
    • இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை வெளியிடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    உலகின் பல்வேறு நாடுகளில் புதிய தலைமுறை டெலிகாம் தொழில்நுட்பான 5ஜி ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கும் பணிகளில் டெலிகாம் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. 5ஜி என்பது 5th Gen செல்லுலார் நெட்நொர்க்குகளை குறிக்கும்.

    புதிய தொழில்நுட்பம் வெளியாகும் முன்பே இதுபற்றிய வதந்திகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி விட்டன. அந்த வகையில் புதிய 5ஜி தொழில்நுட்பம் பற்றி அதிகம் வெளியாகி இருக்கும் வதந்திகள் மற்றும் அவற்றுக்கு பின்னணியில் உள்ள உண்மை தகவல்கள் பற்றி தொடர்ந்து பாரப்போம்.

    மொபைல் போன்களில் மட்டும் வேலை செய்யும்?

    பெரும்பாலானோரும் 5ஜி தொழில்நுட்பம் மொபைல் போன்களுக்கு மட்டும் தான் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவலில் துளியும் உண்மையில்லை. ஒவ்வொரு சாதனத்திற்கும் ஏற்ப இணைய சேவையை மாற்றிக் கொள்ளும் வகையில் 5ஜி தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தொழில்துறை பயனர்களுக்கு இது அதிவேக இணையம், லோ-லேடன்சி மற்றும் தலைசிறந்த கனெக்டிவிட்டி வழங்குகிறது. அந்த வகையில் இந்த தொழில்நுட்பம் பரவலான சாதனங்களில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

    4ஜி - 5ஜி என்ன வித்தியாசம்?

    லேடன்சி, டவுன்லோடு வேகம், பேஸ் ஸ்டேஷன் மற்றும் செல் டென்சிட்டி உள்ளிட்டவை 5ஜி-யில் அதிகளவில் இருக்கும். பயனர்கள் நொடிக்கு அதிகபட்சம் 20 Gb வேகத்தை அனுபவிக்க முடியும். இத்துடன் 1ms லோ லேடன்சி, அதிக தரமுள்ள வீடியோ ஸ்டீரிமிங், ஹை-ரெசல்யூஷன் ஸ்டிரீமிங் உள்ளிட்டவைகளை வழங்குகிறது. 5ஜி முந்தைய தலைமுறை 4ஜி நெட்வொர்க்கை விட அதிகளவு அனுபவப்பூர்வமான சேவை ஆகும்.

    5ஜி அதிக மின்திறன் எடுத்துக் கொள்ளும்?

    5ஜி தொழில்நுட்பத்தில் ஆண்டெனாக்கள் தேவைக்கு ஏற்ப மட்டுமே பயன்படும் என்பதால் மின் பயன்பாடு ஆப்டிமைஸ் செய்யப்பட்டு விடும். தகவல் பரிமாற்றம் செய்யப்படும் போது மட்டுமே இவை பயன்படுத்தப்படும். மேலும் 5ஜி-யில் தகவல் பரிமாற்றம் மற்ற நெட்வொர்க்குகளை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

    உடல் நலத்தை பாதிக்கும்?

    5ஜி நெட்வொர்க்குகள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்ற தகவல் பொது மக்கள் மத்தியில் ஆழமாக பரவி விட்டது. ஆனால் இந்த தகவலில் துளியும் உண்மையில்லை என்றும் இந்த கூற்றை நிரூபிக்கும் சான்று இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் உலகம் முழுக்க பல்வேறு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். 5ஜி மூலம் வெளிப்படும் ரேடியோ கதிர்களும், சிக்னல்களும் மக்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    5ஜி பாதுகாப்பற்றது, வை-பை-க்கு மாற்றாக இருக்கிறது?

    5ஜி தொழில்நுட்பம் மேம்பட்ட பாதுகாப்பை வழங்க இருக்கிறது. இதன் மூலம் முற்றிலும் புதிய ஆதெண்டிகேஷன் வழிமுறைகள் மற்றும் இதர பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். 5ஜி தொழில்நுட்பம் அதற்கும் முந்தைய நெட்வொர்க்குகளை விட மிகவும் பாதுகாப்பானது ஆகும். 5ஜி மற்றும் வைபை இரண்டும் முற்றிலும் வித்தியாசமான தொழில்நுட்பங்கள் ஆகும். 5ஜி செல்லுலார் நெட்வொர்க் வழங்கும். வைபை குறுகிய ரேன்ஜ் வரை இணைய சேவையை வழங்கும். அந்த வகையில் 5ஜி எப்போதும் வைபை தொழில்நுட்பத்திற்கு மாற்றாக முடியாது.

    • இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
    • நாட்டின் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கப்பட்டு விட்டதாக நிறுவனங்கள் தினந்தோரும் அறிவித்து வருகின்றன.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பூனேவில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டதாக அறிவித்து இருக்கிறது. இந்த பகுதியில் 5ஜி சேவை வழங்கிய முதல் நிறுவனம் ஜியோ தான் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஸ்டாண்ட்அலோன் ட்ரூ 5ஜி நெட்வொர்க் கிடைத்தால் மட்டுமே ட்ரூ 5ஜி நெட்வொர்க்கில் பீட்டா டெஸ்டிங் துவங்கப்படுகிறது என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

    முன்னதாக டெல்லி-NCR பகுதிகளான- டெல்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டன. இவை மட்டுமின்றி பெங்களூரு, ஐதராபாத் நகரங்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரனாசி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் கடந்த மாதம் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட்டன.

    பூனே அதிக மாணவர்கள் வசிக்கும் பகுதியாக திகழ்கிறது. இதோடு முன்னணி தகவல் தொழில்நுட்ப பகுதியாகவும் விளங்குகிறது. இந்தியாவில் ஆட்டோமொபைல் உற்பத்தியின் பெரும்பாலான பகுதிகள் பூனே சுற்றுவட்டார பகுதிகளிலேயே நடைபெறுகிறது. அந்த வகையில், ஜியோ 5ஜி வெளியீடு இந்த பகுதிவாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    சேவைகள் வழங்கப்பட்டதை அடுத்து பூனேவில் வசிக்கும் ஜியோ பயனர்கள் ஜியோ வெல்கம் ஆஃபருக்கு இன்வைட் செய்யப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் அதிகபட்சம் 1Gbps+ வேகத்தில் மொபைல் டேட்டா பயன்படுத்த முடியும். இதற்கு எந்த விதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. 

    • இந்திய டெலிகாம் சந்தையில் புதிய தலைமுறை செல்லுலார் கனெக்டிவிட்டி வெளியிடப்பட்டு வருகின்றன.
    • முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை பல்வேறு நகரங்களில் அறிமுகம் செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளன.

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் பல்வேறு இந்திய நகரங்களில் 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் 5ஜி சேவைகள் தற்போது குருகிராமில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் மேற்கு வங்கம் முழுக்க 5ஜி சேவைகளை வழங்க ஜியோ இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் சிலிகுரியில் முதலில் 5ஜி வழங்கப்படும் என ஜியோ அறிவித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து வடக்கு வங்கம், அசாம், வட கிழக்கு பகுதிகளில் 5ஜி வழங்கப்பட இருக்கிறது.

    இதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதிக்குள் கொல்கத்தா முழுக்க 5ஜி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. தற்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரனாசி, நாத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    குருகிராம் மட்டுமின்றி மும்பை, டெல்லி, ஐதராபாத், வாரனாசி, சென்னை, சிலிகுரி, பெங்களூரு, நாக்பூர் மற்றும் பானிபட் போன்ற பகுதிகளில் ஏர்டெல் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. குருகிராம் முழுக்க ஏர்டெல் 5ஜி இன்னும் வழங்கப்படவில்லை. தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டுமே 5ஜி வழங்கப்பட்டு இருக்கிறது.

    நாடு முழுக்க பத்து நகரங்களில் ஏர்டெல் 5ஜி வழங்கப்பட்டு இருக்கிறது. ஜியோ 5ஜி சேவைகள் எட்டு நகரங்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்கப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார். ஏர்டெல் நிறுவனம் 2024 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுக்க 5ஜி வழங்கப்படும் என அறிவித்து இருந்தது.

    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போது 5ஜி சேவையை வழங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 2024 மார்ச் மாதத்திற்குள் அனைத்து நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்குவதாக வி நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. எனினும், இதுவரை 5ஜி வெளியீடு பற்றி வி எந்த தகவலையும் வழங்கவில்லை.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களின் சாதனங்களில் 5ஜி சேவையை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    இந்தியாவின் மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரனாசி, நத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் என எட்டு நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கைாயளர்கள் அதிவேக 5ஜி நெட்வொர்கில் இணைந்து கொள்ள முடியும். எனினும், இதற்கு மைஜியோ செயலியில் இன்வைட் பெற்று இருப்பது அவசியம் ஆகும்.

    டிசம்பர் 2023-க்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்து இருக்கிறது. ஜியோ பயனர்கள் தங்களின் 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். புதிய தலைமுறை 5ஜி சேவைகளை பயன்படுத்த ரிலையன்ஸ் ஜியோ சிறப்பு அறிமுக சலுகையை அறிவித்து இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு 5ஜி சேவையை 500Mbps முதல் 1Gbps வேகத்தில் பயன்படுத்த முடியும்.

    மைஜியோ செயலியில் 5ஜி-யை பயன்படுத்துவதற்கான நோட்டிபிகேஷன் வைத்திருப்பவர்கள், தங்களின் ஸ்மார்ட்போனில் எப்படி 5ஜி நெட்வொர்க்கில் இணைய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

    - முதலில் ஸ்மார்ட்போனின் "செட்டிங்ஸ்" செல்ல வேண்டும்

    - அடுத்து "மொபைல் நெட்வொர்க்" அல்லது இதே போன்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

    - இனி ஜியோ சிம் ஆப்ஷனில் "பிரெஃபர்டு நெட்வொர்க் டைப்" ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

    - இதில் 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி போன்ற ஆப்ஷன்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். இதில் 5ஜி-யை தேர்வு செய்ய வேண்டும்.

    ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ்-இல் 5ஜி நெட்வொர்க்-ஐ தேர்வு செய்ததும், ஸ்மார்ட்போனின் நெட்வொர்க் ஸ்டேட்டஸ் பாரில் 5ஜி தெரியும். இனி வழக்கம் போல் மொபைல் டேட்டாவில் இணைய சேவையை பயன்படுத்தலாம்.

    தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையை பெற புது சிம் கார்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளன. அந்த வகையில், தற்போதைய 4ஜி சிம் கொண்டு புதிய நெட்வொர்க்கில் இணைய முடியும்.

    • ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களுக்கு 5ஜி சேவையை பயன்படுத்துவதற்கான அப்டேட் பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.
    • ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனை பயன்படுத்தி வருவோருக்கு புதிய தலைமுறை 5ஜி தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 16.2 பீட்டா வெர்ஷனை உலகம் முழுக்க வெளியிட்டு வருகிறது. இந்திய ஐபோன் பயனர்களுக்கு இந்த அப்டேட் 5ஜி கனெக்டிவிட்டியை வழங்குகிறது. இந்தியாவில் 5ஜி சப்போர்ட் வெளியிடும் நிறுவனங்களில் ஆப்பிள் தற்போது இணைந்து இருக்கிறது. முன்னதாக சாம்சங், சியோமி, ரியல்மி, ஒப்போ, ஒன்பிளஸ் மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்கின.

    ஐஒஎஸ் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தி வருவோர் புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்து 5ஜி சேவையை பயன்படுத்த முடியும். முன்னதாக இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதாக ஆப்பிள் அறிவித்து இருந்தது. தற்போது ஐஒஎஸ் 16.2 அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்களிடம் இருந்து கருத்து கேட்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

    ஆப்பிள் தேர்வு செய்த பயனர்கள் புதிய ஐஒஎஸ் 16.2 பீட்டா 2 வெர்ஷன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் பீட்டா திட்டத்தில் இணைந்து இருக்கும் பயனர்கள் 5ஜி சேவையை அனுபவிக்க முடியும். தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக இந்த இரு நிறுவன சேவைகளை பயன்படுத்தி வரும் பயனர்கள் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். இதற்கு பயனர் வசிக்கும் பகுதியில் 5ஜி ஏற்கனவே வெளியிடப்பட்டு இருப்பது அவசியம் ஆகும்.

    தற்போது ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 13 சீரிஸ், ஐபோன் SE 2022 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. ஐஒஎஸ் 16.2 பீட்டா இன்ஸ்டால் செய்த பின் ஐபோன்களின் செட்டிங்ஸ் -- வாய்ஸ் & டேட்டா -- 5ஜி ஆன், 5ஜி ஆட்டோ மற்றும் 4ஜி/எல்டிஇ போன்ற ஆப்ஷன்கள் காணப்படுகின்றன.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • முன்னதாக நாட்டின் நான்கு நகரங்களில் ஜியோ 5ஜி பீட்டா டிரையல் துவங்கி நடைபெற்று வந்தது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சென்னையில் 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது. முன்னதாக மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி என நான்கு நகரங்களில் 5ஜி பீட்டா டிரையல் துவங்கப்பட்டது. தற்போது இன்வைட் செய்யப்பட்ட ஜியோ பயனர்கள் சென்னையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை அனுபவிக்க முடியும்.

    இத்துடன் 5ஜி சார்ந்து இயங்கும் வைபை சேவைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைகள் நத்வாரா மற்றும் ராஜஸ்தானில் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவைகள் கல்வி நிறுவனங்கள், ஆன்மீக தளங்கள், ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வர்த்தக மையங்கள் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சீராக கிடைக்கும்.

    ஜியோ வெல்கம் சலுகையின் கீழ் பயனர்கள் இந்த சேவையை தற்போது இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 5ஜி வைபை சேவைகள் ஜியோ சேவையை பயன்படுத்தாத பயனர்களுக்கும் கிடைக்கும். இதன் மூலம் அதிவேக இணைய சேவையை பயன்படுத்திய பிறகு ஜியோ சேவையில் இணைந்து கொள்ளலாம் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்து இருக்கிறது.

    "ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று 5ஜி சேவை தேர்வு செய்யப்பட்ட சிலருக்கோ அல்லது பெரும் நகரங்களில் வசிப்போருக்கு மட்டும் பிரத்யேகமானதாக இருக்கக் கூடாது. இந்த சேவை ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு வீடு மற்றும் வியாபாரத்திலும் இந்தியா முழுக்க கிடைக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியருக்கும் ஜியோட்ரூ5ஜி வழங்குவதற்கான பயணம் தான் இது," என ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் நிறுவன தலைவர் ஆகாஷ் எம் அம்பானி தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி கடந்த ஒன்றாம் தேதி இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவைத்தார்.
    • 5ஜி மூலம் இயங்கும் வைபை சேவைகளை நாத்வாராவில் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனம் அதன் 5ஜி வசதியை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்துவாராவில் அறிமுகம் செய்துள்ளது. அப்போது ஆகாஷ் அம்பானி பேசியதாவது:

    இந்தியாவின் உண்மையான 5ஜி வசதிகொண்ட பொதுமக்கள் பயன்படுத்தும் வைபை வசதியை புனித நகரமான நாத்துவாராவில் அறிமுகம் செய்து பொதுமக்களுக்கும் கடவுளுக்கும் சமர்ப்பிக்கிறோம்.

    இதைத்தொடர்ந்து இன்னும் பல இடங்களுக்கு இந்த 5ஜி சோதனை செய்யவுள்ளோம். அதில் புதிதாக சென்னையும் சேர்ந்துள்ளது.

    5ஜி சேவை இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகன், ஒவ்வொரு வீடு மற்றும் ஒவ்வொரு வணிக அமைப்புக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    5ஜியில் இயங்கும் வைபை சேவையை மக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள், ஆன்மீக தலங்கள், பேருந்து நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களில் விரிவாக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

    அக்டோபர் 1 அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிட நோக்கியா நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கிறது.
    • இதற்காக நோக்கியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இடையே பல ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

    ஆகஸ்ட் மாத வாக்கில் நடத்தப்பட்ட ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் சர்வதேச அளவில் நெட்வொர்க் தொழில்நுட்பம் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து இருந்தது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு 5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் உபகரணங்களை பல ஆண்டுகள் வழங்குவதற்கான உரிமத்தை வென்று இருப்பதாக நோக்கியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    இதை அடுத்து இரு நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஒப்பந்தத்தின் படி நோக்கியா நிறுவனம் பேஸ் ஸ்டேஷன்கள், அதிக திறன் கொண்ட 5ஜி MIMO ஆண்டெனா, பல்வேறு ஸ்பெக்ட்ரம் பேண்ட்களை சப்போர்ட் செய்யும் ரிமோட் ரேடியோ ஹெட்கள், நெட்வொர்க் மென்பொருள் உள்ளிட்டவைகளுக்கான உபகரணங்களை நோக்கியா வினியோகம் செய்ய இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ மட்டுமின்றி ஏர்டெல் நிறுவனத்திற்கும் நோக்கியா தனது ஜி உபகரணங்களை வழங்க இருக்கிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவைகளின் பீட்டா சோதனையை- மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி என நான்கு நகரங்களில் துவங்கி இருக்கிறது. வரும் வாரங்களில் இந்த சேவை மேலும் அதிக நகரங்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 2023-க்குள் நாட்டின் ஒவ்வொரு நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்க இலக்கு நிர்ணயம் செய்து இருப்பதாக ரிலையன்ஸ் குழும ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார். ரிலையன்ஸ் ஜியோ 5ஜி ஸ்டாண்ட்-அலோன் நெட்வொர்க்-ஐ வழங்க திட்டமிட்டு இருப்பதாக நோக்கியா தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ மேம்பட்ட 5ஜி சேவைகளை வழங்க முடியும்.

    • மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி அப்டேட் வெளியிடுவது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
    • ஸ்மார்ட்போன் நிறுவனங்களை போன்றே டெலிகாம் நிறுவனங்களும் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.

    ஆப்பிள், சாம்சங் நிறுவனங்கள் வரிசையில் மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி அப்டேட் வழங்குவது பற்றி அறிவித்து இருக்கிறது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ (SA), ஏர்டெல் மற்றும் வி (NSA) 5ஜி மோட்களை தனது 5ஜி ஸ்மார்ட்போன்களில் மோட்டோரோலா வழங்க இருக்கிறது.

    ஏர்டெல் நிறுவனம் தனது வலைதளத்தில் மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி வசதியை வழங்குவது பற்றி இதுவரை எந்த தகவலையும் தனது வலைதளத்தில் தெரிவிக்கவில்லை. எனினும், மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 30 அல்ட்ரா மற்றும் எட்ஜ் 30 பியுஷன் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த வாரமே 5ஜி அப்டேட் வழங்கப்படும் என மோட்டோரோலா அறிவித்து உள்ளது.

    இதைத் தொடர்ந்து வரும் வாரங்களில் மற்ற மோட்டோரோலா 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கும் அப்டேட் வழங்கப்படும். நவம்பர் 2022 மாதத்தின் முதல் வாரத்திற்குள் அனைத்து 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கும் 5ஜி அப்டேட் வழங்க மோட்டோரோலா திட்டமிட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் அதிக 5ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக மோட்டோரோலா விளங்குகிறது. மேலும் பயனர்கள் 4ஜி-யில் இருந்து 5ஜி நெட்வொர்க்கிற்கு மாற அனைத்து வசதிகளையும் விரைந்து மேற்கொள்வதாக மோட்டோரோலா தெரிவித்துள்ளது. 

    • இந்தியாவில் 5ஜி சேவை முதல் கட்டமாக 4 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • 5ஜி தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் கல்லூரியின் மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியாவின் 5ஜி தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டில் உருவானது. தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து ஒருசில முக்கியமான பாகங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு 5ஜி தொழில்நுட்பம் உருவானது.

    5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனையைப் பற்றி நாம் பெருமிதம் கொள்ளலாம். 5ஜி தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. 2024-க்குள் நாட்டின் பெரும்பாலான மக்கள் 5ஜி சேவைப் பெற முடியும் என தெரிவித்தார்.

    • இந்திய சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
    • ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை பல்வேறு நகரங்களில் வெளியிட்டு வருகின்றன.

    மத்திய தொலைத்தொடர்பு துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் மொபைல் ஆபரேட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அடுத்த மூன்று மாத காலத்திற்குள் 5ஜி ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை வழங்க காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மூத்த அரசு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ரூ. 10 ஆயிரத்திற்கும் அதிக விலையில் 4ஜி போன்களை உருவாக்கும் பணிகளை நிறுத்துவதாக மொபைல் போன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பயனர்கள் எளிதில் 5ஜி சேவையை பயன்படுத்த வைக்கும் பணிகளில் ஈடுபடுவதாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட முன்னணி டெலிகாம் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் மொத்தம் 750 மில்லியனுக்கு்ா அதிகமான மொபைல் போன் பயனர்கள் உள்ளனர். இதில் 350 மில்லியனுக்கும் அதிகமானோர் 3ஜி மற்றும் 4ஜி வசதி கொண்ட சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 100 மில்லியனுக்கு்ம அதிகமானோர் 5ஜி ஸ்மார்ட்போன்களை வைத்துள்ளனர். ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அரசு அதிகாரிகளிடம் ரூ. 10 ஆயிரத்திற்கும் அதிக விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை குறைத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளன.

    சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் 5ஜி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்த போதிலும், ஏராளமான நிறுவனங்கள் தங்களது சாதனங்களில் 5ஜி வசதியை வழங்கவில்லை. டெஸ்டிங் நிறைவு பெற்றதும் 5ஜி சேவையை பயன்படுத்துவதற்கான அப்டேட் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும். டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரனாசி போன்ற நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவையை வெளியிட்டு வருகிறது.

    ×