search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 arrested"

    55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் மோட்டாம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த்(30), கார்த்திகேயன்(42) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் குச்சி காட்டில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ஆண்டி(25) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து 22 பவுன் நகைகள் மீட்டக்கப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. குற்றவாளிகளை பிடிக்க ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிர ரோந்து சுற்றி வந்தனர்.

    சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது 2 பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.

    அவர்க ளிடம் விசாரணை நடத்திய போது பொன்னையாபுரம் எம்.ஜி.ஆர். நகர் பாண்டி மகன் தங்கராஜ் (வயது 33), கருமலையான் மகன் செல்லமுத்து (24) என தெரியவந்தது. இவர்கள் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வீடு புகுந்து நகை திருடியுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த 14 பவுன் நகைகள் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    பரமக்குடி அருகே நயினார்கோ விலை அடுத்துள்ள மும்முடி சாத்தானை சேர்ந்த ரோஜா என்பவரது வீட்டில் கடந்த வாரம் 8 பவுன் நகை, வெள்ளி கொலுசு திருடு போனது. இது தொடர்பாக நயினார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் வீடு புகுந்து திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீ சார் அந்த பெண்ணை கைது செய்து 8 பவுன் நகையை மீட்டனர்.

    • சசிவிகுமார் கருவம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
    • நாய் உதவியுடன கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சாய் லட்சுமி நகரை சேர்ந்தவர் சிவி குமார். இவர் கருவம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லதா மயிலம் அடுத்த விழுக்கம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது 2 குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்ட நிலையில் இவர்களும் தங்களது பணிகளுக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய பொழுது வீட்டின் உள்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்பு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டிலிருந்த 36 சவரன் நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    தகவல் அறிந்த போலீஸ்சூப்பிரணடு ஸ்ரீநாதா மற்றும் திண்டிவனம் ஏ.எஸ். பி அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்க்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை மேற்புறமாக திருப்பி வைத்துவிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்கையும் அந்த மர்ம நபர்கள் திருடி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர். பின்பு இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இரண்டு தனிப்படைகளை அமைத்து கைரேகை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் மாவட்டக் போலீஸ் சூப்பிரண்டு சூபபிரண்ஸ்ரீ நாதா உத்தரவின் பேரிலும் ,திண்டிவனம் ஏ எஸ் பி அபிஷேக்குப்தா மேற்ப்பார்வையிலும் இயங்கிவந்த தனிப்படையினர் திண்டிவனம் முத்துகிருஷ்ணன் முதலி தெருவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வசித்து வந்து தற்போது சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வருகின்ற கனகராஜ் (33), சென்னை தனிஷ் லான் மோகன் (44), சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த மணி என்கிற பாட்டில் மணிகண்டன்(31) ஆகியோரைகைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் திண்டிவனம் சாய் லட்சுமி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகை திருடியதும் , திண்டிவனத்தில் பல்வேறு வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.இவர்களிடம் இருந்து நகை பணம் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கஞ்சா விற்பனை செய்வதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 3 பேரையும் கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சூலூர்:

    கருமத்தம்பட்டி அருகே கணியூர் வேட்டைக்காரன் குட்டை பகுதியில் மர்ம நபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொ ண்டனர். அப்போது வேட்டைக்காரன் குட்டை பகுதியில் ஆதவன் மில் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பன்மாலை கண்கார், திகம்பர் கண்கார், தீபக் பிரதான் என தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்த போது அதில் 500 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து 3 பேரையும் கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    • திட்டக்குடி அருகே அனுமதி இன்றி கிராவல்மண் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர் .

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெரங்கியம் ஏரியில் அனுமதி இன்றி கிராவல் அள்ளுவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை செய்த போது மாணிக்கம் என்பவரது நிலத்திற்கு அனுமதி இன்றி கிராவல் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வம் (31), அவினாஷ் (19), கவியரசன் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் கிராவல் மண்அள்ளுவதற்கு பயன்படுத்திய பதிவு எண் இல்லாத ஜே.சி.பி.,எந்திரம் ஒன்றும், இருசக்கர வாகனம் ஒன்றும், பதிவுகள் இல்லாத கார் ஒன்றும் ஆகிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர் .

    • வீட்டிற்கு சென்ற தானபாலின் தாய்மாமா சீரங்கன் குடும்பத்தினர் வந்து பழனியம்மாள் மற்றும் தனபாலின் மனைவி விஜயலட்சுமி
    • சின்னப்பொண்ணு. தனசேகர். செல்வராஜ் ஆகி யோரை கைது செய்துள்ளனர்.


    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள சேடப்பட்டி கிராமம் காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 32) இவர் தாரமங்கலம் அண்ணாசிலை அருகே டைலர் கடை வைதுள்ளார்.

    நேற்று வழக்கம் போல் தனபால் கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு சென்ற தானபாலின் தாய்மாமா சீரங்கன் குடும்பத்தினர் வந்து பழனியம்மாள் மற்றும் தனபாலின் மனைவி விஜயலட்சுமி ஆகியோரிடம் உங்களுடைய சொத்தில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்று கூறி இருவரையும் தாக்கி வீட்டிற்கு உள்ளே இருந்த டிவி, பீரோ உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர்.இதுபற்றி தனபால் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சின்னப்பொண்ணு. தங்க ராஜ். கோவிந்தம்மாள். பூபதி. கார்த்தி. மாணிக்கம். தனசேகர். செல்வராஜ் ஆகி யோர் மீது வழக்கு பதிவு செய்து சின்னப்பொண்ணு. தனசேகர். செல்வராஜ் ஆகி யோரை கைது செய்துள்ளனர்.தலைமறைவான 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


    • சின்னசேலம் தனியார் பள்ளி கலவர வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட காட்சிகளை வைத்து அவர்களை சிறப்பு புலனாய்வு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் வளையமாதேவி கிராமம் தெற்கு தெருவை ேசர்ந்தவர் பிரகாஷ் (வயது 24) ,கள்ளக்குறிச்சி வட்டம் உலகங்காத்தான் என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்திரா நகர் சுப்பிரமணி செந்தமிழன் (27), சின்னசேலம் வட்டம் பங்காரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த முரளி. இவர்கள் 3 பேரும் சின்னசேலம் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். சிறப்பு புலனாய்வு குழு போலீசார் குற்றவாளிகள் கலவரத்தில் ஈடுபட்டு, போலீஸ் வாகனத்தின் மீது கற்களை வீசி சேதப்படுத்தியது தொடர்பாக வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட காட்சிகளை வைத்து அவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் இன்று கைது செய்து அவர்களை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.

    • விழுப்புரம் அருகே புதுவையில் இருந்து சாராயம் கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் கிளியனூர் அருகே கொஞ்சிமங்கலம் பகுதியில் நேற்று வாகன சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலத்தி லிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் வழியாகபல்வேறு பகுதிகளுக்கு சாராயம் மற்றும் மது பாட்டில்கள் திருட்டுத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இதனைதடுக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இதற்குதனிப்படை அமை த்து தீவிர வாகன சோதனை செய்து வருகிறார். இந்நிலையில் புதுவை யில் இருந்து காரில் மது பாட்டில் கடத்துவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு வந்த தகவலின் பெயரில் அந்த பகுதியில் தீவிர வாகன சோதனை செய்ய உத்தரவிட்டார்.

    அதனபடி கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் வேல்மணி மற்றும் தலைமை காவலர் பிரபுதாஸ் சுதாகர் மற்றும் போலீசார் கிளியனூர் அருகே கொஞ்சிமங்கலம் பகுதியில் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 700 சாராய பாக்கெட்டுகள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் இந்த சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த சந்தை புதுகுப்பம் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 22) சூர்யா (23) ரங்கநாதபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (23) இந்த மூவரையும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
    • இவர்களிடம் இருந்து 1,500 கிராம் கஞ்சா வை போலீசார் கைப்பற்றினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாஉத்தரவுப்படி திண்டிவனம் உட்கோட்டஉதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்திபெக்டர்கள் ஞானசேகரன், சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில் முப்பளி கிராமம் அங்காளம்மன் கோவில் அருகில் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் சம்பந்தமாக கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை வழி மறித்து சோதனை செய்தனர். சோதனையில் 3 பேர் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ரெட்டணை கிராமம் ராஜு நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 23) ராமலிங்கம் (21) இடையஞ்சாவடியை சேர்ந்த சந்துரு (25)ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1,500 கிராம் கஞ்சா வை போலீசார் கைப்பற்றினர்.

    • ஈரோடு, மணிக்கூண்டு, நேதாஜி சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கடத்தூர் போலீசார் நடத்திய சோதனைகயில் வண்டிபாளையம், முனியன் தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரை கைது செய்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு, மணிக்கூண்டு, நேதாஜி சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்திய போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம், மேட்டூர், கோவிந்தபாடியை சேர்ந்த தன்ராஜ்(45) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    பெருந்துறை போலீசார் நடத்திய சோதனையில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியை சேர்ந்த சுப்பிரமணியம் (52) என்பவரை கைது செய்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கடத்தூர் போலீசார் நடத்திய சோதனைகயில் வண்டிபாளையம், முனியன் தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி (60) என்பவரை கைது செய்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • சித்தோட்டில் வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் சிக்கினர்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    சித்தோடு:

    சித்தோடு மற்றும் லட்சுமி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்துவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து சித்தோடு போலீசார் பவானி அடுத்த லட்சுமி நகர் கோண வாய்க்கால் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் கஞ்சாவை பாலிதீன் கவரில் வைத்து விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சித்தோடு குமிளம்பரப்பு பகுதியை சேர்ந்த ராஜா (28), சித்தோடு கொங்கம்பாளையம் முரு கேசன் (34), சித்தோடு சொட்டையம்பாளையம் வெங்கடேஷ் (44) என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்க ளிடம் இருந்து 4.100 கிராம் கஞ்சாவை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் கஞ்சா விற்பனையில் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தினர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பவானி அருகே மண் தொழிலாளர் வீதி சின்ன ஆற்றோரம் கஞ்சா விற்பனை செய்வதாக பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
    • கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    பவானி அருகே மண் தொழிலாளர் வீதி சின்ன ஆற்றோரம் கஞ்சா விற்பனை செய்வதாக பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த விஜயன், பாம்பாட்டி மணி, மாணிக்கம் ஆகிய 3 பேரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ×