search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்ற 3 பேர் கைது
    X

    கஞ்சா விற்ற 3 பேர் கைது

    • பவானி அருகே மண் தொழிலாளர் வீதி சின்ன ஆற்றோரம் கஞ்சா விற்பனை செய்வதாக பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
    • கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    பவானி அருகே மண் தொழிலாளர் வீதி சின்ன ஆற்றோரம் கஞ்சா விற்பனை செய்வதாக பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த விஜயன், பாம்பாட்டி மணி, மாணிக்கம் ஆகிய 3 பேரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×