என் மலர்
நீங்கள் தேடியது "selling cannabis"
- கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வந்தது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
காரைக்குடி
தமிழகத்தில் மது பழக்கத்துக்கு அடுத்து கஞ்சா மற்றும் போதை பொருட்களை இளைஞர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த பழக்கம் காரணமாக இளைஞர்களின் எதிர்காலம் முற்றிலும் நாசமாகிவிடும் அபாயம் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ கத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கப்படு கிறது. மேலும் குண்டர் சட்டத்தின் கீழும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி ஆலோசனைபடி தனிப்படை போலீசார் காரைக்குடி பகுதி முழு வதும் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஒரு மாணவர் மதுரையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தவர் என்பதும், அவர் பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு லட்சம், லட்சமாக சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.
பிடிபட்ட 2 கல்லூரி மாணவர்களிடம் இருந்து 1 கிேலா 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசாரின் விசாரணை யில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வந்தது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
காரைக்குடி பகுதியில் மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டட பலர் 22 வயதுக்குட்பட்ட வர்கள். அதில் பெரும்பா லானவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து தனிப்படை போலீசார் கஞ்சா வியாபாரிகளை கண்காணித்து நடவடிக்ைக எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- கஞ்சா விற்பனையை தடுக்க வலியுறுத்தல்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் நகர பாரதிய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர தலைவர் சண்முகம் தலைமை வகித்தார், மாவட்டத் துணைச் செயலாளர் வக்கீல் அன்பழகன் முன்னிலை வகித்தார், அனைவரையும் பொதுச் செயலாளர் சரவணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சி.வாசுதேவன், மாநிலச் செயலாளர் கொ. வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் முன்னாள் நகரத் தலைவர் அருள்மொழி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்குமார், பொதுச் செயலாளர் ஈஸ்வர், கவியரசு, உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். இறுதியில் பொதுச் செயலாளர் டிவி பார்த்திபன் நன்றி கூறினார். கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட விவரம் வருமாறு;-
திருப்பத்தூர் நகராட்சி குடி தண்ணீர் எந்தெந்த நேரங்களில் விடுகிறார்கள் என்று பொதுமக்களுக்கு தெரியவில்லை. ஆகவே திருப்பத்தூரில் அனைத்து வாடுகளில் எந்தெந்த நாட்களில் குடிநீர் வழங்கப்படுகிறது என்பதை அட்டவணை வெளியிட வேண்டும், ஆலங்காயம் ரோடில் உள்ள நகைக்கடை பஜாரில் பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் அந்தப் பகுதியில் கழிப்பறை இல்லாததால் அந்த இடத்தில் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி செய்து தர வேண்டும், திருப்பத்தூர் நகரத்தில் சாராயம் கஞ்சா குட்கா போன்றவை அதிக அளவில் உள்ளது செல்போனில் கூறினால் எடுத்து வந்து கொடுக்கிறார்கள்.
இதுதான் பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் இதை கட்டுப்படுத்த போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஜோலார்பேட்டையில் நகர பாஜக செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அணி பிரிவு தலைவர்கள் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்திற்கு நகரத் தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். நகரத் துணைத் தலைவர்கள் அறிவுச்சுடர், சௌந்தர்ராஜன், நகர பொதுச்செயலாளர்கள் ராஜேந்திரன், விவேகானந்தன் ஆகியோர் முன்னில வகித்தனர். மேலும் இந்த செயற்குழுக் கூட்டத்தில் மாநில செயலாளர் கொ. வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சி. வாசுதேவன், விவசாய அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. கே. மணி, மாவட்ட பொதுச்செயலாளர் சி. கவியரசு ஆகியோர் பேசினர்.
இதனைத் தொடர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட பிற அணி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஐஸ்வர்யா, மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் வா. கி. அருணா, மாவட்டத் துணைத் தலைவர் முன்னாள் ராணுவ பிரிவு கே. அருள், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் ரஞ்சித் உள்ளிட்ட மாவட்ட, நகர, பிராணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் நகர இளைஞரணி தலைவர் ஆசைமுத்து நன்றி கூறினார்.
- பவானி அருகே மண் தொழிலாளர் வீதி சின்ன ஆற்றோரம் கஞ்சா விற்பனை செய்வதாக பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
- கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பவானி:
பவானி அருகே மண் தொழிலாளர் வீதி சின்ன ஆற்றோரம் கஞ்சா விற்பனை செய்வதாக பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த விஜயன், பாம்பாட்டி மணி, மாணிக்கம் ஆகிய 3 பேரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 1கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பல்லடம்
பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணர் பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கள்ளக்கிணர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர் சென்னை வடபழனியைச் சேர்ந்த பாண்டியன் (58) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் ரெயில்நிலையப்பகுதியில் போலிச்சாமியார்கள் அதிகளவில் உலாவி வருகின்றனர். குட்செட் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்த போதும் கஞ்சாவிற்பனையை தடுக்க முடியவில்லை.
குறிப்பாக கல்லூரி மாணவர்கள் ஒருமுறை புகைத்தால் மீண்டும் அதை தேடிவரும் நிலை உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட சிறைச்சாலை பின்புறம் தற்போது கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. ஆண்கள் விற்பனையில் ஈடுபட்டால் எளிதில் மாட்டிக்கொள்வோம் என்பதால் பெண்களை பயன்படுத்தி கஞ்சா விற்பனையை தொடர்ந்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்கால் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களுக்கு கஞ்சா புகைப்பது தூண்டுதலாக உள்ளது.
எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கஞ்சாவிற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் ஜாபர்கான்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக எம்.ஜி.ஆர்.நகர் போலீசாருக்கு புகார்கள் வந்தது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஜாபர்கான் பேட்டை காசி தியேட்டர் அருகில் உள்ள மேம்பாலத்தின் கீழே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஜாபர்கான் பேட்டை ஆர்.வி. நகரைச் சேர்ந்த தினேஷ், கணேஷ், சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட தினேஷ் மீது ஏற்கனவே சென்னையில் 2 கொலை வழக்கு மற்றும் பல்வேறு செயின் பறிப்பு வழக்குகள் உள்ளன. மேலும் அவர் பிரபல ரவுடியான சின்ன சிவாவின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews