search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selling cannabis"

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையில் போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு வாழைப்பந்தல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட குப்பிடிச்சாத்தம் பஸ் நிறுத்தத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது செய்யாறு தாலுகா மேட்டுகாலனியை சேர்ந்த விக்னேஷ் (வயது 26) கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் கலவை அப்பாதுரைபேட்டை பகு தியை சேர்ந்த அலி (33) என்பவர் கஞ்சா விற்றபோது அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 3 கிலோ போதை பொருள் பறிமுதல்
    • ரோந்து பணியில் சிக்கினர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போலீஸ் ஏட்டு ரங்கநாதன் உள்பட போலீசார் கலவை அடுத்த குப்பிடி சாத்தம் கிராமப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அருகே உள்ள பில்லாந்தி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 26) என்பவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கலவையை சேர்ந்த அலி (33) என்பவரும் கஞ்சா வைத்திருக்கும் தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து போலீசார் கலவையில் அலியிடம் சோதனை செய்தபோது அவரிடம் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் இருவரிடமிருந்தும் மொத்தம் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் நேற்று இரவு சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது பார்சம் பேட்டை அருகே ன சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர் இடையன்பட்டி பகுதியைச் சேர்ந்த நெல்சன் மண்டேலா (வயது 25) என்பதும், கையில் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதேபோல் இடையும் பட்டியைச் சேர்ந்த ஹரிஷ் (23) என்பவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.

    அவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் 2 வாலிபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கஞ்சா வைத்து விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்க தகவல் வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டுசின்னப்பராஜ் மகன்ரீனா ஸ்டீபன் ராஜ் (19),பணிக்கன் குப்பம்முருகன் கோவில் தெரு, நாகப்பன் மகன்ராஜ்குமார்(19) ஆகியோர் 50 கிராம் கஞ்சா வைத்து விற்பனை செய்து வந்ததாக தகவல் வந்ததின்பேரில் பண்ருட்டி உட்கோட்ட கிரைம் போலீசார் இவர்களைகாடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்துஇவர்கள் இருவரையும்காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன்,சப்.இன்ஸ்பெக்டர்பிரேம்குமார் கைது செய்துஅவர்களிடம் இருந்துமுதல்செய்துபண்ருட்டிகோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • விழுப்புரம் நகரப் பகுதிகளில் போலீசார் ரோந்துபணியில் இருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான நபரை விசாரணை செய்தனர்.
    • அவர் பயாஸ் அகமது (வயது 23)என்றும்,அவரிடமிருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்,

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரப் பகுதிகளில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்ததை தொடர்ந்து விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் கிழங்கு விழுப்புரம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு ெரயில்வே காலனி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    இதில் விழுப்புரம் நாப்பாலைய வீதியை சேர்ந்த சம்சுதீன் மகன் பயாஸ் அகமது (வயது 23) என்பது தெரியவந்ததும். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சோதனையில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை விவேகா னந்தர் தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் வாலாஜா போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஹேமந்த்குமார் (வயது 31). என்பவர் கஞ்சா விற்றது தெரிய வந்தது.

    அவரை பிடித்து விசாரணை நடத்திய போது ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து அதனை இருசக்கர வாகனத்தில் வைத்து வாலாஜா அடுத்த சாத் தம்பாக்கம் கிராம ஏரிக்கரை யோரம் கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது.

    பின்னர் ஹேமந்த் குமார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 500 கிராம் பறிமுதல்
    • ேபாலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பஸ்நிலையத்தில் பட்ட பகலிலேயே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் நேற்று சோதனை நடத்தினர்.

    அப்போது, கையில் பேக்குடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில், சுமார் 250 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    அதேபோல், கிடங்கு தெருவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் அந்த நபரும் சுமார் 250 கிராம் கஞ்சாவுடன் இருந்தது தெரியவந்தது.

    இவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒடுகத்தூர் அடுத்த அத்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி(வயது 39), அஜித்குமார்(23), என்பதும் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒடுகத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து, வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து சுமார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மர்மநபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் இன்று கிரிவலப் பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது நித்தியானந்தா ஆசிரமம் அருகே கிரிவலப்பாதையில் காவி உடை அணிந்த ஒருவர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    அவரை போலீசார் சோதனை செய்தபோது, அவரிடம் இருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கஞ்சா பறிமுதல்

    விசாரணையில் அவர், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, ஜீவா நகரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 48) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புடைய கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் ஆந்திராவில் கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து திருவண்ணாமலையில் சாமியார் போல் வேடமணிந்து கஞ்சா விற்றது தெரிந்தது.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவை கைது செய்தனர். தொடர்ந்து கஞ்சா விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் ரோந்தில் சிக்கினார்
    • 200 கிராம் பறிமுதல்

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்சால மோன் ராஜா தலைமையி லான போலீசார் கிரு பில்ஸ்பேட்டை, பெருமுச்சி, செய்யூர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது செய்யூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தே கிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபர் பிடித்து விசாரித்தனர். அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரை கைது செய்து 200 கிராம் கஞ்சாவை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    • கஞ்சா விற்ற வாலிபர் கைது
    • 14 கிலோ பறிமுதல் போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை திருக்கோ விலூர் சாலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெ றுவதாக திருவண்ணாமலை கிழக்குபோலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஆண் கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசா ரணை நடத்தினர்.

    விசாரணையில் திருவண்ணாமலை-போளூர் சாலையை சேர்ந்த முருகன் (வயது 30) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • 800 கிராம் பறிமுதல்
    • வேலூர் ெஜயிலில் அடைப்பு

    வேலூர்:

    கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர வாகன தணிக்கை மற்றும் கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் நேற்று மாலை சத்துவாச்சாரி வ.உ.சி நகர் மலையடிவாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மலை அடிவாரத்தில் 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து அவர்களிடம் இருந்து 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் 2 பேரும் வ. உ.சி நகரை சேர்ந்த அண்ணன் தம்பிகளான குமார் (வயது25), மணி (24) என தெரிய வந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா சப் இன்ஸ்பெக்டர் தீபன் சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று பூண்டி கிராமம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்குள்ள பச்சையம்மன் கோயில் அருகே நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கஞ்சா விற்பனை செய்பவர் என்று தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×