search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்ற வாலிபர் கைது
    X

    கஞ்சா விற்ற வாலிபர் கைது

    • கஞ்சா விற்ற வாலிபர் கைது
    • 14 கிலோ பறிமுதல் போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை திருக்கோ விலூர் சாலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெ றுவதாக திருவண்ணாமலை கிழக்குபோலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஆண் கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசா ரணை நடத்தினர்.

    விசாரணையில் திருவண்ணாமலை-போளூர் சாலையை சேர்ந்த முருகன் (வயது 30) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×