search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
    X

    கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் நேற்று இரவு சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது பார்சம் பேட்டை அருகே ன சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர் இடையன்பட்டி பகுதியைச் சேர்ந்த நெல்சன் மண்டேலா (வயது 25) என்பதும், கையில் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதேபோல் இடையும் பட்டியைச் சேர்ந்த ஹரிஷ் (23) என்பவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.

    அவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் 2 வாலிபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×