என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது
- ரோந்து பணியில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜா சப் இன்ஸ்பெக்டர் தீபன் சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று பூண்டி கிராமம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள பச்சையம்மன் கோயில் அருகே நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கஞ்சா விற்பனை செய்பவர் என்று தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story






