search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
    X

    கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

    • 3 கிலோ போதை பொருள் பறிமுதல்
    • ரோந்து பணியில் சிக்கினர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போலீஸ் ஏட்டு ரங்கநாதன் உள்பட போலீசார் கலவை அடுத்த குப்பிடி சாத்தம் கிராமப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அருகே உள்ள பில்லாந்தி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 26) என்பவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கலவையை சேர்ந்த அலி (33) என்பவரும் கஞ்சா வைத்திருக்கும் தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து போலீசார் கலவையில் அலியிடம் சோதனை செய்தபோது அவரிடம் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் இருவரிடமிருந்தும் மொத்தம் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×