search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
    X

    மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

    • சித்தோட்டில் வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் சிக்கினர்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    சித்தோடு:

    சித்தோடு மற்றும் லட்சுமி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்துவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து சித்தோடு போலீசார் பவானி அடுத்த லட்சுமி நகர் கோண வாய்க்கால் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் கஞ்சாவை பாலிதீன் கவரில் வைத்து விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சித்தோடு குமிளம்பரப்பு பகுதியை சேர்ந்த ராஜா (28), சித்தோடு கொங்கம்பாளையம் முரு கேசன் (34), சித்தோடு சொட்டையம்பாளையம் வெங்கடேஷ் (44) என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்க ளிடம் இருந்து 4.100 கிராம் கஞ்சாவை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் கஞ்சா விற்பனையில் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தினர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×