search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே அதிரடி: மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
    X

    கஞ்சா கடத்தியதாக கைதான 3 பேரை படத்தில் காணலாம்.

    விழுப்புரம் அருகே அதிரடி: மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

    • விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
    • இவர்களிடம் இருந்து 1,500 கிராம் கஞ்சா வை போலீசார் கைப்பற்றினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாஉத்தரவுப்படி திண்டிவனம் உட்கோட்டஉதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்திபெக்டர்கள் ஞானசேகரன், சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில் முப்பளி கிராமம் அங்காளம்மன் கோவில் அருகில் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் சம்பந்தமாக கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை வழி மறித்து சோதனை செய்தனர். சோதனையில் 3 பேர் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ரெட்டணை கிராமம் ராஜு நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 23) ராமலிங்கம் (21) இடையஞ்சாவடியை சேர்ந்த சந்துரு (25)ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1,500 கிராம் கஞ்சா வை போலீசார் கைப்பற்றினர்.

    Next Story
    ×