search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா, மது விற்ற 3 பேர் கைது
    X

    கஞ்சா, மது விற்ற 3 பேர் கைது

    • ஈரோடு, மணிக்கூண்டு, நேதாஜி சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கடத்தூர் போலீசார் நடத்திய சோதனைகயில் வண்டிபாளையம், முனியன் தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரை கைது செய்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு, மணிக்கூண்டு, நேதாஜி சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்திய போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம், மேட்டூர், கோவிந்தபாடியை சேர்ந்த தன்ராஜ்(45) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    பெருந்துறை போலீசார் நடத்திய சோதனையில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியை சேர்ந்த சுப்பிரமணியம் (52) என்பவரை கைது செய்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கடத்தூர் போலீசார் நடத்திய சோதனைகயில் வண்டிபாளையம், முனியன் தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி (60) என்பவரை கைது செய்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×