search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிளில்"

    • ஜெயங்கொண்டத்தில் இருந்து சைக்கிளில் லடாக் சென்று திரும்பிய வாலிபர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • 8400 கி.மீ. சைக்கிள் பயணம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மகன் வினோத் (வயது18), இவர் பிளஸ்-2 முடித்துள்ளார். சூரியமணல் கிராமத்தை சேர்ந்த தச்சுத் தொழிலாளி ரவி மகன் ராசு (20) இவர் டிப்ளமோ முடித்துள்ளார். நண்பர்களான இவர்கள் இருவரும், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், ஜூன் 1-ந் தேதி ஜெயங்கொண்டத்திலிருந்து காஷ்மீர் லடாக் பகுதிக்கு சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். ஜூன்31-ந் தேதி லடாக்கை சென்றடைந்து, எல்லை பகுதியில் ஒரு நாள் தங்கினர். ஜூலை 2-ந் தேதி அங்கிருந்து சைக்கிளில் புறப்பட்டு, நேற்று ஜெயங்கொண்டத்தை வந்தடைந்தனர். 8400 கி.மீ. சைக்கிள் பயணம் செய்த இளைஞர்களை பொதுமக்கள், காவல் துறையினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • சித்தோட்டில் வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் சிக்கினர்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    சித்தோடு:

    சித்தோடு மற்றும் லட்சுமி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்துவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து சித்தோடு போலீசார் பவானி அடுத்த லட்சுமி நகர் கோண வாய்க்கால் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் கஞ்சாவை பாலிதீன் கவரில் வைத்து விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சித்தோடு குமிளம்பரப்பு பகுதியை சேர்ந்த ராஜா (28), சித்தோடு கொங்கம்பாளையம் முரு கேசன் (34), சித்தோடு சொட்டையம்பாளையம் வெங்கடேஷ் (44) என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்க ளிடம் இருந்து 4.100 கிராம் கஞ்சாவை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் கஞ்சா விற்பனையில் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தினர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×