search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் இருந்து சைக்கிளில் லடாக் சென்று திரும்பிய வாலிபர்கள்
    X

    ஜெயங்கொண்டத்தில் இருந்து சைக்கிளில் லடாக் சென்று திரும்பிய வாலிபர்கள்

    • ஜெயங்கொண்டத்தில் இருந்து சைக்கிளில் லடாக் சென்று திரும்பிய வாலிபர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • 8400 கி.மீ. சைக்கிள் பயணம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மகன் வினோத் (வயது18), இவர் பிளஸ்-2 முடித்துள்ளார். சூரியமணல் கிராமத்தை சேர்ந்த தச்சுத் தொழிலாளி ரவி மகன் ராசு (20) இவர் டிப்ளமோ முடித்துள்ளார். நண்பர்களான இவர்கள் இருவரும், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், ஜூன் 1-ந் தேதி ஜெயங்கொண்டத்திலிருந்து காஷ்மீர் லடாக் பகுதிக்கு சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். ஜூன்31-ந் தேதி லடாக்கை சென்றடைந்து, எல்லை பகுதியில் ஒரு நாள் தங்கினர். ஜூலை 2-ந் தேதி அங்கிருந்து சைக்கிளில் புறப்பட்டு, நேற்று ஜெயங்கொண்டத்தை வந்தடைந்தனர். 8400 கி.மீ. சைக்கிள் பயணம் செய்த இளைஞர்களை பொதுமக்கள், காவல் துறையினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    Next Story
    ×