என் மலர்
இந்தியா
- ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட்டது.
- செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
புதுடெல்லி:
நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. கடந்த 2013-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.
அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோள் சந்திரயான்3 அனுப்பிய ஜிஎஸ்எல்வி மார்க்-03 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் ஏவப்பட்டது. செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சி.எம்.எஸ்.-03 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நமது விண்வெளித்துறை தொடர்ந்து நம்மை பெருமைப்படுத்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். நமது விண்வெளி விஞ்ஞானிகளால் இயக்கப்படும் விண்வெளித்துறை எவ்வாறு சிறப்பிற்கும் புதுமைக்கும் ஒத்ததாக மாறியுள்ளது என்பது பாராட்டத்தக்கது என பதிவிட்டுள்ளார்.
- ஆந்திராவில் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் நின்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
- பாதுகாப்பு வேண்டும் என காவல்துறையிடம் அனுமதி ஏதும் கேட்கவில்லை.
ஆந்திர மாநிலம் காசிபுக்கா ஸ்ரீகாகுளத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 9 பக்தர்கள் மூச்சுதிணறி உயிரிழந்தனர்.
இது தொடர்பாக 94 வயதான அந்த கோவிலின் நிறுவனர் கூறுகையில் ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் வந்தால், நான் என்ன செய்ய வேண்டும்? எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முகுந்தா பண்டா கூறியதாவது:-
ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் வந்தால், நான் என்ன செய்ய வேண்டும்?. வழக்கமாக நான் வரிசையில் ஒவ்வொரு நபராக அனுப்புவேன். ஆனால் சம்பவத்தன்று, ஏராளமான மக்கள் வருகை தந்தனர். என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நான் எந்த போலீஸ்க்கும் தகவல் தெரிவிக்கவில்லை.
நான் போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கவில்லை. எனக்கு தைரியம் இருக்கு. லைனில் செல்லுமாறு ஒவ்வொருவரிடமும் தெரிவித்தேன். மக்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள். அவர்கள் அவரசமாக முந்திச் சென்று, இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் நான் என்ன செய்ய முடியும்?.
இவ்வாறு முகுந்தா பண்டா தெரிவித்தார்.
போலீஸ் விசாரணையில் கோவில் தனியாருக்கு சொந்தமானது. முறையான ஒப்புதல் இல்லாமல் இயக்கப்பட்டு வந்துள்ளது. ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற தவறியது தெரியவந்துள்ளது.
- பாதுகாப்பு பணி மற்றும் கடலோர எல்லைகளை கண்காணிக்க எல்.வி.எம்-3 ராக்கெட் இன்று ஏவப்பட்டது.
- ரூ.1600 கோடியில் தயாரான நவீன செயற்கைக்கோளை நிலை நிறுத்துகிறது.
நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் கடந்த 2013-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-7 (ருக்மணி) செயற்கைக் கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் அதிநவீன சி.எம்.எஸ்.-03 (ஜிசாட்-7ஆர்) செயற்கைக் கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் எல்.வி.எம்.3 (ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவன் ஏவுதளத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.26 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
இதற்கான கவுன்டவுன் நேற்று மாலை தொடங்கியது.
சி.எம்.எஸ்.-03 செயற் கைக்கோள் 4,410 கிலோ எடை கொண்டது. இதுவரை புவிவட்டப் பாதைக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் இதுவே அதிக எடை கொண்டதாகும். இதில் விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகள் உள்பட பல்வேறு நவீன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்திய பாதுகாப்பு துறையின் கண்காணிப்புப் பணிகளுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்திய கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதுடன், போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே தொலைத் தொடர்பு சேவையை மேம்படுத்தவும் இது உதவும்.
அதற்கு ஏற்ப இந்த செயற்கைகோள் விண்ணில் குறைந்தபட்சம் 170 கி.மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 29,970 கி.மீட்டர் தொலைவிலும் புவி வட்டப்பாதையில் குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்தியா இதுவரை புவி வட்ட சுற்றுப்பாதைக்கு அனுப்பியுள்ள செயற்கைகோள்களில் இந்த செயற்கைகோள்தான் அதிக எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எல்.வி.எம்.-3 ராக்கெட்டின் 7-வது ஏவுதல் திட்டம் இது. இதற்கு முன்பு சந்திர யான்-3 விண்கலம் இந்த ராக்கெட் மூலமாக வெற்றி கரமாக விண்ணில் செலுத் தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எல்.வி.எம்.-3 ராக்கெட் அதிநவீன கருவிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதன்மூலம் பாதுகாப்பு துறைக்கு தேவையான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். எல்.வி.எம்- ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி உள்ளனர்.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றிக்குப் பிறகு நாடு பெருமிதம் கொண்டது.
- ஆனால் காங்கிரசும் அதன் கூட்டாளியான ராஷ்டிரீய ஜனதா தளமும் அதை விரும்பவில்லை.
பாட்னா:
பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் பீகாரின் அடையாளத்தை அழிக்க விரும்புகின்றன.
வாக்காளர்கள் இரண்டு கட்சிகளைப் பற்றி விழிப்புடன் இருக்கவேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றிக்குப் பிறகு நாடு பெருமிதம் கொண்டது. ஆனால் காங்கிரசும் அதன் கூட்டாளியான ராஷ்டிரீய ஜனதா தளமும் அதை விரும்பவில்லை.
பாகிஸ்தானில் குண்டுவெடிப்புகள் நடந்தன. ஆனால் காங்கிரஸ் அரச குடும்பத்தினர் தூக்கமில்லாத இரவுகளைக் கழித்தனர். சிந்தூர் நடவடிக்கையின் அதிர்ச்சியிலிருந்து பாகிஸ்தானும், காங்கிரஸ் ஆதரவாளர்களும் இன்னும் மீளவில்லை.
ஜம்மு காஷ்மீரில் எந்த அரசாங்கமும் 370-வது பிரிவை ரத்துசெய்ய முடியாது. ஆனால் நான் ஒரு உத்தரவாதம் அளித்து அதைச் செய்தேன்.
பீகார் விரைவில் கிழக்கு இந்தியாவின் ஜவுளி மற்றும் சுற்றுலாவின் முக்கிய மையமாக மாறும். பீகார் இளைஞர்கள் அனைவரும் சொந்த மாநிலத்தில் பணியாற்ற வேண்டும். மாநிலத்தை பெருமைப்படுத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
தேர்தலுக்கு பிறகு ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் மோதி கொள்ளும். ஆர்.ஜே.டி. கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வியை முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. இரண்டு கட்சிகள் இடையே மிகப்பெரிய உட்கட்சி மோதல் நடந்து வருகிறது.
மகா கூட்டணியின் தேர்தல் அறிக்கை பொய்களின் மூட்டையாக இருக்கிறது. பொய்கள், வஞ்சகம் மறறும் மக்களை ஏமாற்றுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
வரும் ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
- தேர்தல் வரைக்கும் நீங்கள் கேட்கும் எல்லாத்தையும் செய்வதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.
- ஆனால் தேர்தலுக்குப் பிறகு பீகாருக்கு வரவும் மாட்டார். உங்களுடைய பேச்சைக் கேட்கவும் மாட்டார்.
பீகார் மாநிலத்தின் முதற்கட்ட தேர்தல் வருகிற வியாழக்கிழமை 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித் ஷா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்தியா கூட்டணியின் ராகுல் காந்தி பெகுசாராய் என்ற இடத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தேர்தலுக்குப் பின்னர் மக்களின் பேச்சை பிரதமர் மோடி கேட்கமாட்டார் என விமர்சனம் செய்தார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி பேசியதாவது:-
நரேந்திர மோடி உரை நிகழ்த்துகிறார். பீகாருக்கு வருகிறார். வாக்குறுதிகள் தருகிறார். தேர்தல் வரைக்கும் நீங்கள் கேட்கும் எல்லாத்தையும் செய்வதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் தேர்தலுக்குப் பிறகு பீகாருக்கு வரவும் மாட்டார். உங்களுடைய பேச்சைக் கேட்கவும் மாட்டார். வெறுமன வெளியேறிவிடுவார்.
நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதை இப்பொழுதே செய்யுங்கள் என நான் சொல்கிறேன். பிரதமர் மோடி வாக்குகளுக்காக எது வேண்டுமானாலும் செய்வார். நீங்கள் யோகா செய்யச் சொன்னால் சில ஆசனங்களை அவர் செய்வார். ஆனால் தேர்தலுக்கு பிறகு, அதானி மற்றும் அம்பானியால் அனைத்து பாடல்கள், நடனங்கள் நடத்தப்படும். இந்த எல்லா விசயங்களும் ஜஸ்ட் டிராமாதான்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
- பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
- தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்படுகின்றன.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஜன் சுராஜ் கட்சியைச் சேர்ந்த பிரியதர்ஷி பியூஷ் மொகமா தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்காக வாக்குகள் சேகரிக்க பிரசாரத்தில் ஈடுபடும் பணியில் துலார்சந்த் யாதவ் (75) ஈடுபட்டார். இவர் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தொண்டர் மற்றும் உள்ளூர் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், அரசியல் குழுக்கள் இடையே நடந்த மோதலில் துலார்சந்த் நேற்று படுகொலை செய்யப்பட்டார்.
விசாரணையில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். மேலும், அவருடைய உதவியாளர்கள் மணிகாந்த் தாக்குர் மற்றும் ரஞ்சித் ராம் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய பாட்னா போலீஸ் அதிகாரி கார்த்திகேய சர்மா, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.
- பிரதமர் மோடி இன்று 2 பிரசார பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
- ராகுல் இன்று பெகுசராய், ககாரியா ஆகிய 2 இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா ஆகியோர் இன்று பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்கிறார்கள்.
பிரதமர் மோடி இன்று 2 பிரசார பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். ரோடுஷோவிலும் பங்கேற்கிறார். பாட்னாவில் இன்று மெகா ரோடுஷோ நடத்துகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அவரது 3-வது ரோடுஷோ இதுவாகும்.
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இங்கு ரோடு ஷோவில் ஈடுபட்டார். முன்னதாக ஆரா மற்றும் நவாடா ஆகிய 2 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார். மோடி ஏற்கனவே 2 முறை பீகாரில் பிரசாரம் செய்து இருந்தார்.
இதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முசாபர்பூர் மற்றும் வைஷாலி ஆகிய 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி ஏற்கனவே பிரசாரம் செய்து இருந்தார். அவர் இன்று பெகுசராய், ககாரியா ஆகிய 2 இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். தலைவர்கள் முற்றுகையால் பீகார் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
- பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாதுகாப்புப்படையினர் அழித்தனர்.
- பயங்கரவாதிகள் வாழ்ந்த இடங்களை மட்டுமே குறிவைத்தோம்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.
பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாதுகாப்புப்படையினர் அழித்தனர். இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தயார் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது;-
பாகிஸ்தான் ஏதேனும் கோழைத்தனமான செயலுக்கு முயன்றால் வலுவான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும். ஆயுதப்படைகள் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு முழுமையாக தயாராக இருக்கிறது.
பயங்கரவாதிகள் வாழ்ந்த இடங்களை மட்டுமே குறிவைத்தோம். பொதுமக்கள் பகுதிகள் அல்லது ராணுவ நிலைகளை தாக்கவில்லை.
நாங்கள் விரும்பியதை அடைந்தோம், நாங்கள் அவர்களைப் போன்றவர்கள் அல்ல என்பதை பாகிஸ்தானுக்குப் புரிய வைத்தோம். நாங்கள் தர்மயுத்தத்தை பின்பற்றுபவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பைக்கின் பின் சீட்டில் உட்கார்ந்து வருபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
- ஹெல்மெட் அணியவில்லை என்றால் சிசிடிவி கேமரா அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும்.
சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர் மட்டுமில்லாமல் பின்னாடி உட்கார்ந்து வருபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
பின்னாடி உட்காருபவர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் சிசிடிவி கேமரா அடிப்படையில் தன்னிசையாக அபராதம் விதிக்கப்படும்.
இந்நிலையில், பெங்களூரு நகரில் போக்குவரத்து அபராதத்தில் இருந்து தப்பிக்க ஹெல்மெட்டுக்கு பதில் பாத்திரத்தால் தலையை மூடிய இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது.
- ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசோக் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் உயிர்காக்கும் வாகனமான ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து 2 உயிர்களை பிரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு பெங்களூரு நகரில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சிவப்பு சிக்னல் காரணமாக சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற 40 வயது இஸ்மாயில் மற்றும் அவரது மனைவி சமீன் பானு ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உடனடியாக போக்குவரத்து போலீசார் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தி, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கினர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசோக் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
- 4 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.
- கட்சியின் பொதுச் செயலாளரான அபிஷேக் பானர்ஜியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பீகாரை தொடர்ந்து 2-ம் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) பணிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இந்த 4 மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.
எஸ்.ஐ.ஆருக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் வருகிற 4-ந்தேதி கொல்கத்தாவில் போராட்டம் நடக்கிறது.
கட்சியின் பொதுச் செயலாளரான அபிஷேக் பானர்ஜியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இதற்கிடையே மேற்கு வங்காள தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
மேற்கு வங்காள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.க தலைவருமான சுவேந்து, பூத் நிலை அதிகாரிகளுக்கு (பி.எல்.ஒ.) மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
- வருகிற 6-ந்தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- நிதிஷ்குமார் அரசாங்கத்தின் கீழ் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மேம்பட்டுள்ளது.
பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 6-ந்தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மீதி உள்ள 122 இடங்களுக்கு 2-ம் கட்டமாக வருகிற 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாட்டின் மிகவும் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற்ற மாநிலங்களில் பீகாரும் ஒன்று. கடந்த 20 ஆண்டுகளில் பீகார் அடைந்துள்ள முன்னேற்றத்தை மக்கள் கண்டிருக்கிறார்கள்.
லாலு பிரசாத், ராப்ரி தேவி ஆகியோர் பீகாரை பின்னோக்கி இழுத்து சென்றனர். ஆனால் இன்று அது எங்கே இருக்கிறது என்று பாருங்கள். நிதிஷ்குமார் அரசாங்கத்தின் கீழ் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மேம்பட்டுள்ளது என்று இளைஞர்கள் கூறி வருகின்றனர்.
இதுவே முன்னேற்றத்திற்கு அடிப்படை என்று அவர்கள் கூறுவார்கள். கங்கை நதியின் கீழ் 4 பாலங்களை கட்டினோம். இன்னும் 10 பாலங்கள் கட்டுமானத்தில் இருக்கின்றன. இது சாத்தியமாகும் என்று யாரும் நினைக்கவில்லை.
கடந்த ஆட்சியில் விவாதங்கள், கொள்ளை, கொலை, வழிப்பறி பற்றியதாக இருந்தது. ஆனால் இன்று விவாதங்கள் முன்னேற்றம் பற்றி மாறியுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்.
நாங்கள் பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் செல்வதை பல முறை தெளிவுப்படுத்தினோம். அவரே முதலமைச்சர் ஆவார். வெற்றிக்கு பிறகு அரசியலமைப்பு சட்டப்படி நாங்கள் செயல்படுவோம். எங்கள் பலத்தை பற்றி நினைக்காமல் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதே பா.ஜ.க.,-வின் கொள்கை.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். மாநிலத்தில் 2.8 கோடி குடும்பங்கள் உள்ளன. புதிதாக 2 கோடிக்கும் அதிகமான வேலை கொடுக்க வேண்டுமானால் பி, சி, டி பிரிவுகளில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.
அதற்கு சராசரியாக ரூ.39 ஆயிரம் சம்பளம் என நிர்ணயித்து கொண்டாலும் மொத்தம் ரூ.12.85 லட்சம் கோடி தேவை. இது பீகாரின் பட்ஜெட்டை விட 4 மடங்கு அதிகமாகும். சாத்தியமில்லாத இந்த வாக்குறுதியை தேஜஸ்விக்கு ராகுலும், லாலுவுதான் அளித்திருப்பார்கள்.
புலம்பெயர்வு குறைய பீகாரிலேயே சுய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும். மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் காட்டு ராஜ்ஜியம் திரும்பும். எனவே மக்கள் வாக்களிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






