என் மலர்tooltip icon

    இந்தியா

    • ஆளுநர் அஜய் பல்லா முதலமைச்சர் கேம்சந்த் சிங்கிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
    • மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்ட நிலையில் பதவியேற்பு.

    மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக யும்னம் கேம்சந்த் சிங் பதவியேற்றுக் கொண்டார்.

    இம்பாலில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் அஜய் பல்லா முதலமைச்சர் கேம்சந்த் சிங்கிற்கு பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

    மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்ட நிலையில் முதல்வராக கேம்சந்த் சிங் பதவியேற்றுள்ளார்.

    • இரண்டு சமூகங்களுக்கு இடையிலான இன வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
    • மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஒய்.கேம்சந்த் சிங் பதவியேற்றார்.

    மணிப்பூர் பற்றி எரியும்போது மத்திய அரசு அமைதி காத்ததாகவும், அம்மாநிலத்தை ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றியதாகவும் மல்லிகார்ஜுனே கார்கே குற்றம் சாட்டியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பதிலளித்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே,

    "வாஸ்கோடகாமா போர்ச்சுகலிலிருந்து ஆப்பிரிக்கா வழியாக இந்தியாவை அடைய சுமார் 11 மாதங்கள் எடுத்துக் கொண்டார், அப்போது அவருக்கு கடல் வழி கூட தெரியாது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயினிலிருந்து வட அமெரிக்காவை அடைய இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டார். ஆனால் இவ்வளவு பெரிய மனிதாபிமான நெருக்கடியின் போது, எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து மணிப்பூரை அடைய இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்.   

    இரண்டு சமூகங்களுக்கு இடையிலான இன வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 70,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர். நீங்கள் மணிப்பூரை இராணுவமயமாக்கப்பட்ட மண்டலமாக மாற்றியுள்ளீர்கள். வடகிழக்கு மற்றும் இந்தியா மீதான உங்கள் அக்கறையை இப்படித்தான் வெளிப்படுத்துவீர்களா? என கார்கே கேள்வி எழுப்பினார். கார்கேவின் இந்த உரைக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. 

    மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை திரும்பப் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டநிலையில் கார்கே இந்த உரையை நிகழ்த்தினார். மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஒய்.கேம்சந்த் சிங் பதவியேற்பு விழாவிற்கு சற்று முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    மெய்தி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே பல மாதங்களாக நடந்த இன வன்முறையைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி பிரேன் சிங் ராஜினாமா செய்ததை அடுத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    • பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.
    • இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சீனா உடனான எல்லை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பிரதமர் உரையாற்றாமலேயே மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சீனா உடனான எல்லை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மேலும் முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவானே எழுதிய புத்தகத்தில் உள்ள கருத்துகளை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    "சரணடைந்த மோடி" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதற்கு முன்னதாக இன்று காலை 11 மணிக்குத் தொடங்கிய மக்களவை, பகல் 12 மணி, மதியம் 2 மணி மற்றும் மாலை 5 மணி எனப் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    • மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையை தூண்டி விடுவதாக, முதல்வராக இருந்த பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆடியோவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனால், பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், மணிப்பூரில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    இதனிடையே, மணிப்பூர் சட்டமன்ற பாஜக கட்சி தலைவராக யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் யும்னம் கெம்சந்த் சிங் விரைவில் முதல்வராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.

    • தன்னை வாதிட அனுமதித்த உச்சநீதிமன்றத்திற்கு மம்தா நன்றி தெரிவித்தார்
    • பெயர்களை நீக்கியதற்கு எதிரான மாநில அரசின் ஆதாரங்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது

    வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் SIR பணி நடைபெற்று வருவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

    உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முரண்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, நீண்ட வரிசையில் மக்களை காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், SIR பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் எனக் குற்றம் சாட்டியுனார்.

    இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பில் பிரதிநிதிகள் ஆகியோருடன் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்தார். அப்போது, பேசிக்கொண்டிருந்தபோது, பாதிலேயே மம்தா பானர்ஜி வெளியேறினார்.

    இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் SIR வழக்கில் மம்தா பேனர்ஜி வழக்கறிஞராக ஆஜராவார் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் SIR வழக்கில் ஆஜரான மம்தா பேனர்ஜி தனது வாதங்களை தொடங்கியுள்ளார்.

    அப்போது "SIR விவகாரத்தில் பல வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டாலும் எங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு 6 முறை கடிதம் அனுப்பினோம், எந்த பதிலும் இல்லை என மேற்குவங்கம் தரப்பு வாதத்தை மம்தா எடுத்துவைத்தார்.

    பெயர்களை நீக்கியதற்கு எதிரான மாநில அரசின் ஆதாரங்களை தேர்தல் ஆணையம் நிராகரிப்பதாக கூறிய மம்தா பானர்ஜி, பெயர்களை நீக்கும் நடவடிக்கையில் மட்டுமே தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

    SIR விவகாரத்தில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது, எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மம்தா பானர்ஜி மனு மீது 2 நாட்களில் பதிலளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. .

    இதனையடுத்து தன்னை வாதிட அனுமதித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்த மம்தா மக்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டுகோள் விடுத்தார்.

    • உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
    • SIR பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுனார்.

    வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் SIR பணி நடைபெற்று வருவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

    உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முரண்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, நீண்ட வரிசையில் மக்களை காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், SIR பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் எனக் குற்றம் சாட்டியுனார்.

    இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பில் பிரதிநிதிகள் ஆகியோருடன் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்தார். அப்போது, பேசிக்கொண்டிருந்தபோது, பாதிலேயே மம்தா பானர்ஜி வெளியேறினார்.

    இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் SIR வழக்கில் மம்தா பேனர்ஜி வழக்கறிஞராக ஆஜராவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் SIR வழக்கில் ஆஜரான மம்தா பேனர்ஜி தனது வாதங்களை தொடங்கியுள்ளார்.

    அப்போது "SIR விவகாரத்தில் பல வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டாலும் எங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு 6 முறை கடிதம் அனுப்பினோம், எந்த பதிலும் இல்லை என மேற்குவங்கம் தரப்பு வாதத்தை மம்தா எடுத்துவைத்தார்.

    SIR விவகாரத்தில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது, எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • பாலஸ்தீனம் விடுதலை பெறவேண்டும் என்ற போஸ்டர்களை பிரிட்டிஷ் தம்பதி ஒட்டியுள்ளனர்.
    • பிரிட்டிஷ் தம்பதியின் விசாவை ரத்து செய்தனர்.

    பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய பிரிட்டிஷ் தம்பதியை இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இங்கிலாந்தில் இருந்து லூயிஸ் கேப்ரியல் மற்றும் அவரது காதலி அனுஷி எம்மா கிறிஸ்டின் ஆகியோர் சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்துள்ளனர்.

    ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் மாவட்டத்தில் பாலஸ்தீனம் விடுதலை பெறவேண்டும்,இஸ்ரேலை புறக்கணியுங்கள் (FREE PALESTINE, BOYCOTT ISRAEL) என்ற போஸ்டர்களை பிரிட்டிஷ் தம்பதி ஒட்டியுள்ளனர்.

    இதனை கன்டுபிடித்த உளவுத்துறை, பிரிட்டிஷ் தம்பதியின் விசாவை ரத்து செய்து இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளனர். 

    • ஒவ்வொரு இளைஞரும் இந்த புத்தகம் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
    • புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டக்கூடாது என்று எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    இது குறித்து பேசும் போது, "பிரதமருக்கு இன்று மக்களவைக்கு வர துணிச்சல் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் அவர் வந்தால், நான் இந்த புத்தகத்தை அவரிடம் கொடுக்கப் போகிறேன். பிரதமர் வந்தால், நான் நேரில் சென்று இந்த புத்தகத்தை அவரிடம் கொடுப்பேன், அதனால் அவர் அதை படித்து, இந்த நாடு உண்மையை அறிந்துகொள்ள முடியும்."

    "இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் இந்த புத்தகம் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும். இது திரு. நரவணேவின் புத்தகம். அவர் இந்த புத்தகத்தில் லடாக் பற்றிய முழு விவரங்களையும் கொடுத்துள்ளார். இந்தப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டக்கூடாது என்று எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது."

    "முக்கிய விஷயம் என்னவென்றால், பிரதமர் சொன்னதுதான் - "எதை சரி என்று நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள்". (முன்னாள்) ராணுவ தளபதி ஜெனரல் நரவணே, ராஜ்நாத் சிங்கை அழைத்து, சீன டாங்கிகள் கைலாஷ் ரிட்ஜூக்கு வந்துவிட்டன, அதனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, முதலில் ராஜ்நாத் சிங் அவருக்கு பதிலளிக்கவில்லை. அவர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் கேட்டார், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை."

    "பின்னர் அவர் மீண்டும் ராஜ்நாத் சிங்கை அழைத்தார். ராஜ்நாத் சிங், தான் 'உயர்மட்டத்திடம்' கேட்பதாக கூறினார். 'உயர்மட்டத்தின்' நிரந்தர உத்தரவு என்னவென்றால், சீனப் படைகள் உள்ளே வந்தால், அனுமதி இல்லாமல் அவர்கள் மீது சுடக்கூடாது என்பதுதான். நரவணேவும் நமது ராணுவமும் அந்த டாங்கிகள் மீது சுட விரும்பின, ஏனென்றால் அவை நமது எல்லைக்குள் நுழைந்துவிட்டன."

    "நரேந்திர மோடி "எதைச் சரி என்று நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள்" என்று ஒரு செய்தியை அனுப்பினார். இதன் பொருள், நரேந்திர மோடி தனது கடமைகளை செய்யவில்லை; "இது என் சக்திக்கு அப்பாற்பட்டது" என்று கூறி, ராணுவ தளபதியை அவர் விரும்பியதை செய்யச் சொன்னார். 'நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன், முழு அரசமைப்பாலும் நான் கைவிடப்பட்டேன்' என்று நரவணே எழுதுகிறார்," என ராகுல் காந்தி தெரிவித்தார்.

    • பிரசாத் மற்றும் ரோஷினி ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பேசி காதலித்துள்ளனர்.
    • பிரசாத் ரோஷிணியுடன் பேசுவதை நிறுத்து விட்டு, அவரை ப்ளாக் செய்துள்ளார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் தனது செல்போன் நம்பரை பிளாக் செய்ததற்காக காதலன் பிரசாத்தை (25) காதலி ரோஷினி (22) கத்தியால் மார்பிலேயே குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிரசாத் மற்றும் ரோஷினி ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பேசி பழகி காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், திடீரென பிரசாத் ரோஷிணியுடன் பேசுவதை நிறுத்து விட்டு, அனைத்து சமூக வலைதளங்களிலும் அவரை ப்ளாக் செய்துள்ளார்.

    தன்னை பிளாக் செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் பிரசாத் பழக்க ஆரம்பித்து விட்டதாக சந்தேகப்பட்ட ரோஷிணி கத்தியை எடுத்துக்கொண்டு பிரசாத் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ரோஷினி தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து பிரசாத்தின் நெஞ்சில் குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து ரோஷினியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் ஒருவர் ஒரு பெண்ணை பார்த்து ஆபாச சைகைகள் செய்துள்ளார்.
    • குற்றம் சாட்டப்பட்ட அசோக் குமாரை குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

    பெண்ணை பார்த்து கண் அடிப்பதும் பிளையிங் கிஸ் கொடுப்பதும் ஒருவித பாலியல் தொல்லைதான் என்று சண்டிகர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

    2021 ஆம் ஆண்டு 62 வயது முதியவர் ஒருவர் ஒரு பெண்ணை பார்த்து கண் அடித்தும் பிளையிங் கிஸ் கொடுத்ததும் ஆபாச சைகைகள் செய்துள்ளார்.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த சண்டிகர் நீதிபதி சச்சின் யாதவ், குற்றம் சாட்டப்பட்ட அசோக் குமாரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். இருப்பினும் குற்றவாளியை விடுவித்த நீதிமன்றம் அவர் 6 மாத கால கண்காணிப்பில் இருப்பார் என்றும் அந்த காலகட்டத்தில் அவர் ஏதேனும் தவறு செய்தால் சிறைத்தண்டனை அனுபவிப்பார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • சேதன் குமார் என்பருக்கு பாக்கி (12), பிராச்சி (14), விஷிகா (16) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
    • மூன்று பெரும் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் கேமிங் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் ஆன்லைன் கேம் விளையாடக்கூடாது என பெற்றோர் கண்டித்ததால் 3 சகோதரிகள் 9 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காசியாபாத்தில் சேதன் குமார் என்பருக்கு பாக்கி (12), பிராச்சி (14), விஷிகா (16) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூன்று பெரும் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் கேமிங் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.

    இந்நிலையில், ஆன்லைன் கேமிங் விளையாடுவதை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனை மனா வருத்தம் அடைந்த 3 சகோதரிகளும் 9 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்.

    இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிபின் ராம்தாஸ் ஐதராபாத் ஐகோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
    • அசைவ உணவுப் பொருட்கள் விற்பனையை தடுக்க ஒரு கொள்கையை வகுக்குமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ஐதராபாத்:

    ஐதராபாத்தின் ரெட் ஹில்ஸில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிபின் ராம்தாஸ் என்பவர் இறைச்சி மற்றும் அசைவ உணவு பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி கோரினார். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர். இதனை எதிர்த்து அவர் ஐதராபாத் ஐகோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த வழக்கில் வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்தப் பிரச்சனையில் வழிகாட்டுதல்களை வகுக்க உத்தரவிட்டார்.

    மேலும் நீதிபதி கூறுகையில், தெலுங்கானா மாநிலத்தில் கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு 100 மீட்டருக்குள் இறைச்சி மற்றும் அசைவ உணவுப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க ஒரு கொள்கையை வகுக்குமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    பக்தர்களின் உணர்வுகள், அமைதி, தூய்மை, சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளை மனதில் கொண்டு வழிகாட்டுதல்களை வகுக்குமாறு நகராட்சி மற்றும் உள்துறை முதன்மை செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

    இறைச்சி விற்பனை மையங்களைத் திறப்பதற்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்கான விதியைச் சேர்க்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது. இந்த செயல்முறையை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    ×