என் மலர்
இந்தியா
- நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை.
- உலக சந்தைகளின் கதவுகள் இந்தியாவுக்காக திறந்து விடப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளித்து பேசி வருகிறார். எப்ஸ்டீன் கோப்புகள், வர்த்தக ஒப்பந்தம் என பல விவகாரங்கள் குறித்து பேச அனுமதிக்கப்படாததை அடுத்து, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.
எனினும், அவையில் பிரதமர் மோடி பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "விக்சித் பாரத் பயணத்தில், கடந்த ஆண்டுகள் நாட்டின் விரைவான வளர்ச்சிக்குரிய ஆண்டுகளாக இருந்துள்ளன. இது வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் மாற்றங்கள் ஏற்பட்ட ஒரு காலகட்டமாக இருந்துள்ளது. நாடு சரியான திசையில் அதிவேகமாக முன்னேறிச் செல்கிறது."
"கார்கே ஜியின் வயதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாத வகையில், அவரை அமர்ந்தபடியே முழக்கமிட அனுமதிக்க வேண்டும் என்று, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். பின்னால் இளைஞர்கள் இருக்கிறார்கள். எனவே, கார்கே-ஜி அமர்ந்தபடியே முழக்கமிட தயவுசெய்து அனுமதி அளியுங்கள்."
"இளம் திறமையாளர்கள் நிறைந்த நாடாக இந்தியா தற்போது இருக்கிறது. முழக்கங்களை எழுப்பியதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் களைந்துவிட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எப்போது ஓடிக் கொண்டே இருக்க முடியாது, பதில் சொல்ல வேண்டும். எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் செய்கின்றன. நாட்டிற்கான அரசியலை செய்யவில்லை."
"காங்கிரஸ் கட்சிக்கு நாட்டின் வளர்ச்சி பற்றி ஆழ்ந்த சிந்தனையோ, தொலைநோக்கு பார்வையோ இல்லை. காங்கிரஸ் கட்சியின் முந்தைய பிரதமர்களுக்கு தொலைநோக்கு பார்வை இருந்ததில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை."
"அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளோம். எதிர்கால தேவைக்கான வர்த்தக ஒப்பந்தத்தை தற்போது இந்தியா மேற்கொண்டிருக்கிறது. இந்தியாவின் இளைஞர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உலக சந்தைகளின் கதவுகள் இந்தியாவுக்காக திறந்து விடப்பட்டுள்ளன."
"உலகின் பெரிய பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா வேகமாக வளர்கிறது. எதிர்க்கட்சிகளுடனான விவாதம் இன்னும் சிறப்பான முறையில் இருக்க விரும்புகிறேன். மோசான காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேற்கு வங்கத்தில் ஒரு கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை பாதுகாக்க நீதிமன்றம் சென்றிருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்," என்றார்.
- தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 12,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
- உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 12,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இது கல்வித் துறையில் தனியார் மயமாக்கல் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருவதும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுவதும் இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் நவீனக் கல்வி முறைகளைச் செயல்படுத்துவதில் உள்ள தொய்வு போன்றவை அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
பாஜக ஆட்சியில் உள்ள உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது தரவுகளில் தெரியவந்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டம் (RTE) நடைமுறையில் இருந்தும், ஏழை மாணவர்களுக்கான தரமான கல்வியை தரும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
- வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
- ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டது என்று அமெரிக்கா தெரிவித்தது.
அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும். அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையவும் இந்தியா ஒப்புக்கொண்டது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ரஷியாவுக்கு பதில் இந்தியா இனி வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்து குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "எண்ணெய் இறக்குமதியை பொருத்தவரை, 140 கோடி மக்களின் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா எந்த நாட்டிலிருந்து வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கும்.அனைத்து கொள்முதல் முடிவுகளும் நாட்டு நலன் மற்றும் ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுகின்றன. இதில் அரசியல் அழுத்தங்களுக்கு இடமில்லை
- எந்த பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இல்லை
- முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை நடத்த திட்டம்
மக்களவையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்கத் திட்டமிட்டிருந்தபோது, சில காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்து கொண்டு "முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை" செய்யத் திட்டமிட்டிருந்ததாக தமக்குத் தகவல் கிடைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அவையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரைச் சபைக்கு வர வேண்டாம் என்று தாமே அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் இதற்கு பதலளித்துள்ள பிரியங்கா காந்தி,
"பிரதமர் சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார். நேற்று, மூன்று பெண்கள் இருக்கைக்கு முன்னால் நின்றதால், அவைக்கு வர அவருக்குத் துணிச்சல் இல்லையா... இது என்ன முட்டாள்தனம்? இங்கு எந்த விவாதமும் நடக்கவில்லை. காரணம் எந்த பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இல்லை" என தெரிவித்துள்ளார்.
- மாணவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் கட்டணமாகப் பெற்று ஏமாற்றியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- சுமார் 140 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் கட்டிடங்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கடந்த ஆண்டு டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சில மருத்துவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்துடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர சோதனையில், பல்கலைக்கழகத்தின் நிதி முறைகேடுகள் மற்றும் போலி ஆவணங்கள் குறித்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
இந்த முறைகேடுகள் தொடர்பாக அல்-பாலா பல்கலைக்கழகத்தின் தாளாளர் ஜவாத் அகமது சித்திகி மற்றும் அல்-பாலா அறக்கட்டளை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற ஜவாத் அகமது சித்திகி குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்திற்குத் தேவையான யுஜிசி அங்கீகாரம் மற்றும் என்.ஏ.ஏ.சி தகுதிச்சான்றிதழ் இருப்பதாகப் பொய்யான தகவல்களைக் கூறி மாணவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் கட்டணமாகப் பெற்று ஏமாற்றியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுமார் 493 கோடி ரூபாய் வரை மாணவர்களிடம் இருந்து சட்டவிரோத நிதி திரட்டப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய பல்கலைக்கழகத்தின் சுமார் 140 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் கட்டிடங்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது.
- நாட்டின் ஜனநாயக மரபுகள் சிதைக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று கூறிறேன்
- 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடக்கும் முதல் நிகழ்வு
நாடாளுமன்றத்தின் கீழவையில் பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்ததாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் பதிலளிக்க இருந்தபோது, சில காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமரின் இருக்கைக்கு அருகே சென்று ஒரு அசம்பாவித சம்பவத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், இத்தகைய சூழலில் நாட்டின் ஜனநாயக மரபுகள் சிதைக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று தாமே கேட்டுக்கொண்டதாக ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமரின் உரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இது 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடக்கும் முதல் நிகழ்வு என்று கூறப்படுகிறது. பிரதமர் இருக்கைக்கு அருகில் சென்று நேற்று எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அவை நேற்று ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஓம் பிர்லாவின் இந்த கருத்துகள் வெளிவந்துள்ளன.
- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.
- டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை இந்தியா காத்திருக்க தயார்.
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒரு ஆண்டு பேச்சு வார்த்தைக்கு பிறகு சமீபத்தில் எட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மீது பரஸ்பரவரியை விதித்த டிரம்ப், பின்னர் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் அந்த வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
இதனால் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும், வர்த்தக பேச்சுவார்த்தையிலும் முட்டுக்கட்டை உண்டானது.
இதனால் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் டிரம்ப் பேசி வந்தார். ஆனால், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இந்தநிலையில் இரு நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவை டிரம்ப் மிரட்ட முடியாது என்று அமெரிக்க அமைச்சரிடம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தெரிவித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக டிரம்ப் உயர்த்தினார். மேலும் இந்தியாவுக்கு மிரட்டல்களை தொடர்ந்து விடுத்தார். அந்த சமயத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.
இரு நாடுகள் இடையே அதிகரித்துள்ள பதற்றத்தை தணிக்க இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை அஜித்தோவல் சந்தித்து பேசினார்.
அப்போது, வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப் அல்லது அவரது மூத்த உதவியாளர்கள் இந்தியாவை மிரட்ட முடியாது என்றும் கடந்த காலத்தில் கடினமான அமெரிக்க நிர்வாகங்களை இந்தியா கையாண்டிருக்கிறது என்றும் மார்கோ ரூபியோவிடம் அஜித்தோவல் தெரிவித்தார்.
மேலும், தேவைப்பட்டால் வர்த்தக ஒப்பந்தத்திற்காக டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை இந்தியா காத்திருக்க தயாராக இருப்பதாகவும் அஜித்தோவல் தெரிவித்தார்.
அதன்பிறகு செப்டம்பர் 16-ந்தேதி பிரதமர் மோடியிடம் டிரம்ப் தொலைபேசியில் பேசி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதுமை காரணமாக இம்ரத்தால் நடக்க முடியவில்லை.
- மருத்துவமனை வளாகத்தில் தனது தந்தையை சுமந்தபடி சில நிமிடங்கள் சுற்றித் திரிந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்த முனேஷ் ரகுவன்ஷி என்ற நபர் தனது தந்தை இம்ரத் சிங்கை குணா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
வாகனம் அவர்களை மருத்துவமனை வாயிலில் இறக்கிவிட்டுச் சென்றது. முதுமை காரணமாக இம்ரத்தால் நடக்க முடியவில்லை. முனேஷ் ஸ்ட்ரெச்சரைத் தேடினார். மருத்துவமனை ஊழியர்கள் கூட அவருக்கு உதவ வரவில்லை. இதனால், அவர் தனது தந்தையை தோளில் சுமந்து மருத்துவமனைக்குள் சென்றார்.
அவர் மருத்துவமனை வளாகத்தில் தனது தந்தையை சுமந்தபடி சில நிமிடங்கள் சுற்றித் திரிந்தார். இதனை வேடிக்கை பார்த்த ஊழியர்கள் உதவ முன்வரவில்லை. முனேஷ் தனது தந்தையை 2-வது மாடிக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. லிப்ட் பழுதடைந்தது முனேஷ் மட்டும் ஸ்ட்ரெச்சரில் தனது தந்தையை வைத்து 2-வது மாடிக்கு இழுத்துச் சென்றார். இது அரசு மருத்துவமனையில் அவலம் நடந்ததாக பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து முனேஷ் கூறுகையில், என் அப்பாவுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. சரியான நேரத்தில் நான் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். மருத்துவமனை ஊழியர்கள் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை. நான் நிறைய சிரமங்களை எதிர்கொண்டேன் என்றார்.
- அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரும் இறந்துவிட்டனர்.
- ஒரு தலைமுறையைத் தாண்டி நீடிக்கும் கிரிமினல் வழக்கு நடைமுறையே ஒரு தண்டனையாக மாறிவிடுகிறது.
40 ஆண்டுகளுக்கு முன்பு கொலைக் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபரை நிரபராதி என நீதிமன்றம் தற்போது விடுத்துள்ளது.
விடுவிக்கப்பட்ட தானி ராம்-க்கு தற்போது வயது 100. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் தானி ராம். 1982-ஆம் ஆண்டு ஒரு நிலத் தகராறில் நடந்த கொலை தொடர்பாக தானி ராம் உட்பட மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
1984-ஆம் ஆண்டு ஹமிர்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
தண்டனையை எதிர்த்து 1984-லேயே தானி ராம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதே ஆண்டு அவருக்கு ஜாமீனும் கிடைத்தது.
இருப்பினும், அவரது மேல்முறையீட்டு மனு கடந்த 40 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரும் இறந்துவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்திர தாரி சிங் மற்றும் சஞ்சீவ் குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, தானி ராமை விடுவித்து நீதிபத்திகள் உத்தரவிட்டனர்.
ஒரு தலைமுறையைத் தாண்டி நீடிக்கும் கிரிமினல் வழக்கு நடைமுறையே ஒரு தண்டனையாக மாறிவிடுகிறது என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
- பிரதமர் மோடி உரையாற்ற இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக உரை ரத்து செய்யப்பட்டது.
- முன்னதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பு வழங்க்கப்படவில்லை.
கடந்த ஜனவரி 28 தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த பிப்ரவரி 1 அன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதற்கிடையே கூட்டத்தொடர் தொடக்கத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்றைய மக்களவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்பின் அவை ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் உரை இல்லாமலேயே தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று உரையாற்ற இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக உரை ரத்து செய்யப்பட்டு அவை நிறைவுற்றது.
இன்று சபை தொடங்கிய பிறகு, நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
முன்னதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பு வழங்காததால் பிரதமர் மோடி பேச இருக்கும்போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- உள்ளாடைகளை விற்பனை செய்யும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பெண் ஒருவர் ஆச்சரியத்துடன் வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் இருக்கைகளுக்காக சண்டை போடுவது, கவர்ச்சியாக உடை அணிந்து செல்வது, இளம் ஜோடிகளின் அத்துமீறல் என பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி இருந்தது. ஆனால் தற்போது வைரலாகும் வீடியோவில், டெல்லி மெட்ரோவின் ரோகிணி கிழக்கு ரெயில் நிலையத்தில் சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்களுக்கு பதிலாக உள்ளாடைகளை விற்பனை செய்யும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதில், 3 பெரிய கண்ணாடிக் கதவுகளைக் கொண்ட இந்த எந்திரத்தில் பல்வேறு அளவுகளில் உள்ளாடைகள் அடுக்கி வைக்கப்பட்டு மின்னணு திரை மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இதனைப்பார்த்த பெண் ஒருவர் ஆச்சரியத்துடன் வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ வைரலாகி பார்வைகளை குவித்து வருகிறது. நெட்டிசன்கள் சிலர், அவசரத் தேவைகளுக்காகவும் குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் போன்ற இக்கட்டான காலங்களில் இது போன்ற எந்திரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பதிவிட்டுள்ளனர். சில பயனர்கள், மெட்ரோ பயணத்தின்போது உள்ளாடைகளை வாங்குவது என்பது சற்று வினோதமான முயற்சி என்று பதிவிட்டுள்ளனர்.
- சசி தரூரின் மகன் இஷான் தரூரை தி வாஷிங்டன் போஸ்ட் வேலையை விட்டு நீக்கியுள்ளது.
- 300 ஊழியர்களை தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருபவர் சசி தரூர். இவர் சமீபகாலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் புகழ்ந்தும், பாராட்டியும் பேசி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், சசி தரூரின் மகன் இஷான் தரூரை தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.
இஷான் தரூர் உடன் கிட்டத்தட்ட 300 ஊழியர்களை தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.
இதுகுறித்து இஷான் தரூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தில் இருந்து நான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக என் நண்பர்களாகவும் ஒத்துழைப்பாளர்களாகவும் இருந்த ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களுக்காகவும் நான் மனம் உடைந்தேன். அவர்களுடன் பணியாற்றுவது ஒரு மரியாதை. உலகத்தையும் அதில் அமெரிக்காவின் இடத்தையும் வாசகர்கள் நன்கு புரிந்துகொள்ள உதவும் வகையில் ஜனவரி 2017 இல் WorldView பத்தியைத் தொடங்கினேன். மேலும் பல ஆண்டுகளாக வாரத்திற்கு பல முறை இந்தப் பத்தியைப் படித்த 5 லட்சம் விசுவாசமான சந்தாதாரர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.






