பேரளம், பூந்தோட்டம் பகுதிகளில் 910 லிட்டர் சாராயம் பறிமுதல்- பெண்கள் உள்பட 11 பேர் கைது

பேரளம், பூந்தோட்டம் பகுதிகளில் சாராயம் விற்ற பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 910 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மாணவர்களுக்கு முககவசம் வழங்கி பள்ளிக்கு அழைத்த ஆசிரியர்கள்

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரில் வசிக்கும் மாணவ, மாணவிகளின் வீடுகளுக்கு சென்ற ஆசிரியர்கள் முகக்கவசம் மற்றும் இனிப்பு வழங்கி பள்ளிக்கு பாதுகாப்பான முறையில் வருமாறு அழைப்பு விடுத்தனர்.
தொடர் மழையால் 6-வது நாளாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10-ந்தேதி தொடர்ந்த மழை 6-வது நாளாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அரியாங்குப்பத்தில் கணவரை விட்டு பிரிந்த இளம்பெண் தற்கொலை

அரியாங்குப்பத்தில் கணவரை விட்டு பிரிந்த இளம்பெண் எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
28 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.139¾ கோடி விவசாய கடன் தள்ளுபடி- அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் 28 ஆயிரத்து 16 விவசாயிகளுக்கு ரூ.139¾ கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
ஞானதேசிகன் மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 24 மணிநேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராகுலை தலைவராகவே தி.மு.க. ஏற்றுக் கொள்ளவில்லை- குஷ்பு கிண்டல்

ராகுல் காந்தி முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்தது, தமிழ் பெருமை பற்றி பேசியதை பா.ஜனதாவைச் சேர்ந்த குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார்.
23-ந்தேதி முதல் கோவையில் 3 நாட்கள் முகாமிடும் ராகுல் காந்தி

தமிழகம் முழுவதும் ராகுல் காந்தியை சுற்றுப்பயணம் செய்ய வைத்து காங்கிரசின் பலத்தை வெளிப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளை கிருமிநாசினி தெளித்து தூய்மையாக வைக்க கலெக்டர் அறிவுரை

தஞ்சை மாவட்டத்தில் 19-ந்தேதி 438 பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மையாக வைத்துக்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
சிதம்பரம் அருகே விஷம் குடித்து மாணவி தற்கொலை

சிதம்பரம் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு பிடிபட்டது

வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பை தீயணைப்பு படைவீரர்கள் பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.
பள்ளிகள் திறப்பையொட்டி தூய்மை செய்யும் பணி தீவிரம்

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி அதியமான் கோட்டையில் உள்ள அரசு பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தலைமைச் செயலாளர் கே.சண்முகம் இந்த மாத இறுதியில் ஓய்வு

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் இந்த மாதம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு அடுத்த தலைமைச் செயலாளராக ஹன்ஸ்ராஜ் வர்மா நியமிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.417 கோடிக்கு மது விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் 417 கோடி ருபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
238 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

238 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா

புதுவை சுகாதாரத் துறை அமைச்சரான மல்லாடி கிருஷ்ணாராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி அரசு சார்பில் வழங்கிய வீடு, காரை திரும்ப ஒப்படைத்தார்.
சசிகலா விடுதலை ஆனவுடன் ஓசூரில் தங்குகிறாரா?

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆனவுடன் சசிகலா ஓசூரில் தங்குகிறாரா? என்பதற்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் பி.பழனியப்பன் பதில் அளித்துள்ளார்.
த.மா.கா.துணைத்தலைவர் ஞானதேசிகன் காலமானார்

தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
விவசாயிகளை அழிக்க மத்திய அரசு சதி- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

விவசாயிகளை அழிக்க மத்திய அரசு சதி செய்கிறது என்று ராகுல்காந்தி கூறினார்.
புதுவையில் பள்ளிகள் 18-ந்தேதி முதல் அரை நாள் மட்டும் இயங்கும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

புதுவை, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகள் வரும் 18-ந்தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரைதான் திறந்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.