search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்எஸ்எல்சி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்வு அறைகளில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, 48 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக ஈடுபடுகிறார்கள்.
    • கடந்த 4-ந்தேதி தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இன்று தொடங்கும் தேர்வு, வருகிற ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளன.

    முதல் நாளான இன்று, தமிழ் மற்றும் இதர மொழிப்பாட தேர்வுகள் நடக்கிறது. தேர்வை, 12 ஆயிரத்து 616 பள்ளிகளை சேர்ந்த, 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதுகிறார்கள். மேலும், 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதுகிறார்கள். தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெறுகிறது.

    தேர்வு அறைகளில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, 48 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக ஈடுபடுகிறார்கள். மேலும், 3 ஆயிரத்து 350 பறக்கும் படைகளும், ஆயிரத்து 241 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

    தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேர்வறைக்குள் செல்போன் உள்பட மின்சாதன பொருட்கள் கொண்டுவர ஆசிரியர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களும், ஹால்டிக்கெட்களில் கொடுக்கப்பட்டுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக, கடந்த 4-ந்தேதி தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. பிளஸ்-1 விடைத்தாள்கள் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. இதில், பிளஸ்-1 அரியர் மாணவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 6-ந்தேதியில் இருந்தும், இதர மாணவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 15-ந் தேதியில் இருந்தும் திருத்தம் செய்யும் பணிகள் தொடங்குகிறது.

    • எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.
    • விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதும், மதிப்பெண்களை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றும் பணிகள் தொடங்கி நடைபெறும்.

    சென்னை:

    பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு 22-ந்தேதியுடனும், பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு 25-ந்தேதியுடனும் தேர்வு நிறைவு பெற உள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.

    இந்த நிலையில் பொதுத் தேர்வு நிறைவு பெற்றதும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கப்படும். அந்த வகையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் எப்போது தொடங்கப்படும்? என்ற தகவலை பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

    அதன்படி, பிளஸ்-2 வகுப்புக்கு அடுத்த மாதம் 1-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு அடுத்த மாதம் 6-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரையிலும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு அடுத்த மாதம் 12-ந்தேதி ஆரம்பித்து 22-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதும், மதிப்பெண்களை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றும் பணிகள் தொடங்கி நடைபெறும். ஏற்கனவே பொதுத் தேர்வு அட்டவணை வெளியிட்ட நேரத்தில், பிளஸ்-2 வகுப்புக்கு மே மாதம் 6-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு மே 10-ந்தேதியும், பிளஸ்-1 வகுப்புக்கு மே 14-ந்தேதியும் பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுத்தேர்வு முடிவை வெளியிட பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக பணிகளில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் தமிழகம் முழுவதும் தலா 3302 மையங்களில் நடக்கிறது.
    • எவ்வித முறைகேடுக்கும் வழிவகுக்காமல் தேர்வை நடத்த வேண்டும் என்று மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது. இத்தேர்வினை 7.15 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். தேர்வில் எவ்வித குழப்பமும் இல்லாமல் முறையாக நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

    தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத் தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    எவ்வித முறைகேடுக்கும் வழிவகுக்காமல் தேர்வை நடத்த வேண்டும் என்று மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ்-1, பிளஸ்-2 தேர்விற்கு தலா 3200 பறக்கும் படை வீரர்களும், பத்தாம் வகுப்பு தேர்விற்கு 3350 வீரர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதேபோல பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் தமிழகம் முழுவதும் தலா 3302 மையங்களில் நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 4107 மையங்களில் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களில் வினாத்தாள்களை பாதுகாக்க 154 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு வினாத்தாள்களை பாதுகாக்க 304 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் தேர்வு முடிந்து விடைத்தாள்களை சேகரித்து பாதுகாக்க பிளஸ்-2 தேர்விற்கு 101 விடைத்தாள் சேகரிப்பு மையங்களும், 10-ம் வகுப்பிற்கு 118 மையங்களும் தயார்படுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    மேலும் விடைத்தாள் திருத்தும் மையங்களும் இப்போதே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள்கள் தலா 83 மையங்களிலும், 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்கள் 88-ம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை திட்டமிட்டப்படி நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா செய்துள்ளார்.

    தேர்வு கூடங்களில் ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாமல் இருக்க ஜெனரேட்டர் வசதி, குடிநீர், கழிப்பிட வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • தேர்வு மையத்துக்கு நியமிக்கப்படும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் ஒரே பள்ளியை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது.
    • அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யவேண்டும்.

    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்க உள்ளது. இதில் பிளஸ்-2 வகுப்புக்கு அடுத்த மாதம் 1-ந்தேதியும், பிளஸ்-1 வகுப்புக்கு அடுத்த மாதம் 4-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி.க்கு அடுத்த மாதம் 26-ந்தேதியும் தொடங்கி, ஏப்ரல் மாதத்துடன் தேர்வுகள் முடிக்கப்பட உள்ளன.

    தேர்வுக்கான முன்னேற்பாடுகளில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு தேர்வுத்துறை சார்பில் பொதுத்தேர்வு பணிகள் தொடர்பாக சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாப்பு மையங்களை சரியாக வைத்திருக்க வேண்டும். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்க வேண்டும். பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் வினாத்தாள் கசிந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையோ, தனியார் பள்ளிகளின் முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்களையோ முதன்மை கண்காணிப்பாளராக நியமனம் செய்யக்கூடாது. தேர்வு மையத்துக்கு நியமிக்கப்படும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் ஒரே பள்ளியை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் தினத்தன்று சம்பந்தப்பட்ட பாடத்தை போதிக்கும் ஆசிரியராக இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர கடந்த ஆண்டு (2023) பொதுத்தேர்வில் விடைத்தாள் திருத்தும் பணியில் சரியாக பணியாற்றாத 1,000 ஆசிரியர்களை அடையாளம் கண்டு அரசு தேர்வுத்துறை அவர்கள் மீது றை ரீதியாக நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரைத்து இருந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும், அவர்களை இந்த ஆண்டுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு உடனடி தேர்வு ஜூன் 19-ந்தேதி நடத்தப்படும்.
    • பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வி பெற உயர் கல்வி வழிகாட்டி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடவும் தேர்வுத்துறை தயாராக உள்ளது.

    10-ம் வகுப்பு தேர்வு முடிவு 17-ந்தேதியும், 11-ம் வகுப்பு தேர்வு முடிவு 19-ந்தேதியும் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கபட்டு இருந்தது.

    இந்த நிலையில் 10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவை ஒரேநாளில் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு உடனடி தேர்வு ஜூன் 19-ந்தேதி நடத்தப்படும் என்றும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வி பெற உயர் கல்வி வழிகாட்டி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தாங்கள் படித்த பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு இக்குழு ஆலோசனை வழங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    • பொதுத்தேர்வுக்கு முன்னதாக, செய்முறை தேர்வு நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
    • கடந்த 20-ந் தேதி முதல் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வந்தது.

    சென்னை:

    பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

    பொதுத்தேர்வுக்கு முன்னதாக, செய்முறை தேர்வு நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 20-ந் தேதி முதல் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வரை முதலில் அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அதனை நீட்டித்து அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டு இருக்கிறது.

    இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மாணவர்களின் நலன் கருதி 10-ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு 31-ந் தேதி (நாளை) வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. எனவே செய்முறை தேர்வுக்கு வருகை புரியாத அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலநீட்டிப்பு செய்ததற்கான அவசியம் ஏன்? என்பது குறித்து விசாரித்தபோது, செய்முறை தேர்வில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே பிளஸ்-2 மொழிப்பாடங்கள் தேர்வில் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆன சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தற்போது எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வில் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆனது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    செய்முறை தேர்வில் இவ்வளவு பேர் பங்கேற்கவில்லை என்றால், அடுத்ததாக பொதுத்தேர்வு தொடங்கும்போது மொழிப்பாடங்களிலும் மாணவர்கள் 'ஆப்சென்ட்' விவகாரம் கண்டிப்பாக இருக்கும்.

    கால நீட்டிப்பு செய்யப்பட்ட நாட்களில் பங்கேற்காத மாணவர்களை எவ்வாறு செய்முறை தேர்வில் கல்வித்துறை பங்கேற்க வைப்பார்கள்? அதேபோல், பொதுத்தேர்விலும் அவர்களை எப்படி கலந்து கொள்ள செய்வார்கள்? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    ×