10-ம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்து அசத்திய இரட்டையர்கள்

இருவரும் மேலூர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர்.5 பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் ஒட்டுமொத்தமாக இருவரும் 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்து அசத்திய இரட்டையர்கள்
Published on

மதுரை:

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. மதுரையை சேர்ந்த இரட்டையர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கீழையூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் வைரவன் இவர் வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி. இவரது மகன்கள் ராமநாதன், லட்சுமணன் இருவரும் இரட்டையர்கள்.

இவர்கள் இருவரும் மேலூர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். நேற்று வெளிவந்த மதிப்பெண் பட்டியலில் இவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

5 பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் ஒட்டுமொத்தமாக இருவரும் 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com