பெரம்பலூர் அருகே வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பெரம்பலூர் அருகே வாலிபரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இரவு 10 மணி வரை பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதி பெற்று தர வேண்டும் - கலெக்டரிடம் மனு

புனித ரமலான் மாதம் தொடங்க உள்ளதால் பள்ளிவாசல்களில் இரவு 10 மணிவரை நோய்த்தடுப்பு விதிகளை பின்பற்றி தொழுகை நடத்த அனுமதி பெற்றுத்தரக்கோரி கலெக்டரிடம் அனைத்து முஸ்லிம் ஜமாஅத்தார்கள் மனு கொடுத்தனர்.
சிவகாசி அருகே மனைவியை தாக்கியவர் கைது

சிவகாசி அருகே குடும்ப தகராறில் மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் தொடரும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை தேவை - கலெக்டருக்கு கோரிக்கை

மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் குண்டாற்று படுகையில் நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் தொடரும் மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
குத்தாலம் அருகே பாம்பு கடித்து பெண் பலி

குத்தாலம் அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மேலும் 5,989 பேருக்கு புதிதாக கொரோனா- 23 பேர் பலி

தமிழகத்தில் தற்போது 37,673 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அரியலூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலி

அரியலூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்தடை குறித்து புகார் செய்தால் சரி செய்ய உடனடி நடவடிக்கை- அதிகாரி தகவல்

பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் மின்தடை புகார் பதிவு மையம் இயங்கி வருகிறது.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கார்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலி

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கார் மோதிய விபத்தில் மற்றொரு கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
வாணியம்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு கட்டிட தொழிலாளி பலி

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற கட்டிட தொழிலாளி ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.
அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

கொரோனா 2-ம் அலை பரவிக்கொண்டு இருப்பதால் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என கரூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
ராணிப்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது

ராணிப்பேட்டையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர்.
கூரை வீட்டில் தீ விபத்து: உடல் கருகி முதியவர் பலி

ரிஷிவந்தியம் அருகே கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் சிக்கி உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
உரங்கள் விலை உயர்வுக்கு டெல்டா விவசாயிகள் கண்டனம்- குறைக்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு

மத்திய அரசோ உர விலை உயர்வுக்கும் தங்களுக்கும் தொடர்பு கிடையாது என கூறுகிறது. மாறாக உர நிறுவனங்கள் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என கூறியது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
காப்பகங்கள், ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் - மீளாய்வு மன்ற தலைவர் எச்சரிக்கை

மனநலகரிசனச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யாத காப்பகங்கள், ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மனநல மீளாய்வு மன்ற தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் அருகே வேட்டையாடிய 4 முயல்களுடன் வாலிபர் கைது

ராமநாதபுரம் அருகே வனத்துறையினர் நடத்திய சோதனையில் இறைச்சிக்காக விற்பனை செய்ய வேட்டையாடி கொண்டுவந்த 4 முயல்களை கைப்பற்றி வாலிபரை கைது செய்தனர்.
கரூர் அருகே தேர்தல் பணியில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல்: 12 பேர் மீது வழக்கு

கரூர் அருகே தேர்தல் பணியில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே மோதிக் கொண்டனர். இது தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பஸ் நிலையத்தில் பஸ்களில் ஏறி பயணிகளிடம் கலெக்டர் கொரோனா விழிப்புணர்வு

ஒரே பகுதியில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதியை தனிமைப்படுத்திய பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு தீவிரமாக கண்காணிக்கப்படும்.
கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம்

கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த பொதுமக்களிடம் இருந்து ரூ.80 ஆயிரம் அபராதம் வசூல்

முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த பொதுமக்களிடம் இருந்து இதுவரை ரூ.80 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.