சட்டமன்ற தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம் - த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு

கழகத் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க சட்டமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.முதன்மைக் கண்காணிப்பாளர்களாக ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம் - த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு
Published on

த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க சட்டமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் பின்வரும் வகையில் நியமிக்கப்படுகிறார்கள்.

சட்டமன்றத் தேர்தல் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக N.ஆனந்த், கழகப் பொதுச்செயலாளர், K.A செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர், கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், ஆதவ் அர்ஜுனா, தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com