search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும்.
    • தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும்.

    * தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். தேனை பொதுவாக வயிற்றின் நண்பன் என கூறுவது உண்டு. தேன் வயிற்றில் உருவாகும் அழற்சி, புண், பித்தப்பை மற்றும் ஈரல் நோய்கள் அனைத்திறக்கும் மருந்தாக உள்ளது.

    * தினமும் வெறும் வயிற்றில் காலை அல்லது இரவு நேரத்தில் உணவு உண்பதற்கு முன் சுத்தமான தேனை ஒன்று முதல் மூன்று ஸ்பூன் எடுத்து ஆறிய சுடுதண்ணிரில் கலந்து அருந்தி வர வேண்டும். இவ்வாறு செய்தால் இரைப்பை அழற்சி, வயிற்றுப் புண், பித்தப்பை நோய்கள் குணமாகும்.

    * தேனுடன் வெங்காய சாறை கலந்து சாப்பிட்டு வர இரைப்பையில் அளவுக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தின் தன்மையை கட்டுப்படுத்துகிறது, இதனால் வயிற்றுப் புண்ணிற்கு அமிலத்தால் ஏற்படுத்தப்படுகிற தூண்டுதலை குறைத்து, வயிற்று வலி மற்றும் எரிச்சலை நீக்குகிறது.

    * எலுமிச்சம் பழச்சாறுடன் தேனை கலந்து அருந்தினால் குமட்டல், வாந்தி, மற்றும் தலைவலி சரியாகும்.

    * கண்பார்வை பிரகாசமாக தெரிய தேனுடன் வெங்காய சாரை கலந்து சாப்பிட்டு வரவேண்டும்.

    * தேனுடன் முட்டை மற்றும் பாலை கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையில் இருந்து தப்பலாம்

    * உடல் ஆரோக்கியத்திற்கு தேன் மிகவும் நல்லது. தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

    * இருமல், சளித்தொல்லை, நுரையீரல் தொடர்பான நோய் எதுவாக இருந்தாலும் பார்லி கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

    * தேனையும் மாதுளை ஜூசையும் சம அளவு சேர்த்து தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

    * உடம்பில் ரத்தக் குறைவு அல்லது ரத்தசோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நோய் நீங்கும்.

    * தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூசி வர கட்டிகள் பழுத்து உடையும்.

    * மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

    * கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

    * வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்கு தொப்புளை சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

    * தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

    * ஒரு ஸ்பூன் தேனுடன், ஒரு அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, ரத்த சுத்திகரிப்பும், ரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

    * அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு ஸ்பூன் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

    * முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

    * தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டு சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

    * ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்னர் அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண்காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும்.

    * குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம்பெறும். புதிய ரத்தம் உடம்பில் பாய்ந்தோடும். அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

    நெல்லிக்காய்களை துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

    * என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

    * சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன் தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.

    * நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களை தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.

    * மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன் தான். வலி உள்ள இடத்தில் நன்றாக தேனை தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டு எலும்புகள் வலிமையாக இருக்கும்.

    * படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள்.

    * கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகை தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு. ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளில் இருந்து விடுபட தினமும் தேனை பருகி வரவேண்டும்.

    தேன் நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல ரத்த விருத்தி ஏற்படும்.

    ஒரு ஸ்பூன் தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத்தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.

    • தொப்பையை குறைக்க மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான்.
    • சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறையும்.

    உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின்னர் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

    * பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

    * எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகுத்தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

    * காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, லவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2 அல்லது 3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

    * இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

    * உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

    * தொடர்ந்து 3 அல்லது 4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

    * எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

    இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானை போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

    • நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
    • சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது.

    கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறுநீர் கழிக்கும் அளவு குறையும்.

    கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச்சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.

    கோடைகாலங்களில் ரெயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

    இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது. பெரும்பாலும் 'ஈகோலை' என்னும் பாக்ட்டீரியாவால் இந்த 'நீர் கடுப்பு நோய்' வருகிறது.

    அறிகுறிகள்:

    அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதுபோன்ற உணர்வு வரும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறுநீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும்.

    குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும்.

    கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

    இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச்சத்துள்ள பானங்களை குடிப்பதுதான்.

    அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.

    மேலும் சுற்றுலா மற்றும் நெடுந்தூர பயணம் மேற்கொள்வோர் சிறுநீரை அடக்கி வைக்காமல் அவ்வப்போது கழிப்பது நல்லது.

    உணவுமுறைகள்:

    * இளநீர், மோர், பழச்சாறு மற்றும் நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை போதிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * கர்ப்பிணிப் பெண்கள் மற்ற காலங்களை விட நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.

    * கோடை காலத்தில் வெயிலில் விளையாடச் சென்றுவிடும் குழந்தைகளை அழைத்து அடிக்கடி நிறைய நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை கொடுப்பதுடன் குழந்தைகளை அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் அறிவுறுத்த வேண்டும்.

    * 'நீர்க் கடுப்பு' அதிகமானாலோ அல்லது அடிவயிற்றில் வலி அதிகமானாலோ மருத்துவரை அணுகி மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் எந்த வகை கிருமியால் இந்த 'நீர்க் கடுப்பு' நோய் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதை அழிப்பதற்கு தகுந்த மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.

    மருந்துகள்:

    ஹோமியோபதியில் ஆபிஸ் மெல், லைகோபோடியம், காந்தாரிஸ், பெர்பெரிஸ் வல்காரிஸ், ஹய்ட்ரஜ்யா போன்ற மருந்துகள் சிறுநீர் கடுப்பிற்கும், சிறுநீரகக் கற்கள் தோன்றுவதை தடுப்பதற்கும் மிகச் சிறந்தவை.

    • பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
    • அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

    விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றை பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா...? எதுக்கிக்கெண்டே இருக்குமா? இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் பார்க்க்கலாம்....

     * இஞ்சித் துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

    * இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

    * பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

    * எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

    * ரோஜாப்பூ கஷாயம், பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

    * பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

    * விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

    * அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

    * பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

    * கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

    * நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

    * எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

    * அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

    • ஆவிபிடித்தல் உங்களை ரிலாக்ஸாக இருக்கச் செய்யும்.
    • மூச்சுக்குழாய்களை முழுதாக அடைப்பதால் மூச்சு திணறல் ஏறப்டுகிறது.

    ஆவிபிடித்தல்

    ஆவிபிடித்தல் இதை நீங்கள் அடிக்கடி செய்யாமல் மூக்கு அடைப்பிருந்தால் அல்லது வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்யலாம். இது உங்களை ரிலாக்ஸாக இருக்க செய்யும். ஆவி பிடிக்கும்போது சிலியாவிற்கு அந்த வெப்பமான காற்று மூக்கை சுத்தம் செய்து, அடைப்பு இருந்தாலும் அதை எடுக்கவும் உதவி செய்கிறது.

    உங்களுக்கு தொற்றுநோய் இருக்கும்போதும் மூக்கடைப்பு இருக்கும்போது செய்தாலே போதுமானது, அடிக்கடி செய்ய வேண்டிய அவசியமில்லை. தொற்று இருக்கும் போது மூக்கடைப்பு இருக்கும் போது மட்டும் செய்ய வேண்டும்.

     இருமல்

    தொற்றுநோய் இருக்கும்போது ஏன் இருமல் வருகிறது?

    நமது தொண்டை நுரையீரல் மற்றும் நுரையீரலில் இருக்கும் அல்வியோலிகளில் ஏற்படும் தொற்றுநோய்களை வெளியேற்ற நமது உடலே முயல்கிறது. இதை தான் இருமல் என்று சொல்கிறோம். ஆனால் இருமலை அடக்கி கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு அடக்கமுடியாமல் இருமுகிற போது அதன் பலன்கள் அதிகமாக இருக்கும்.

    இருமலை எப்படி கட்டுப்படுத்துவது?

    தோல்களை ரிலாக்சாக வைத்து சேரில் அமர்ந்து, கால்கள் இரண்டும் தரையில் வைத்து கைகளை வயிற்று தசைகளில் இறுக்கமாக வைத்துக்கொள்ளவும். கையில் ஏதாவது சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்து வாயை மூடிக்கொண்டு இருமலாம். இது கட்டுப்படுத்தப்பட்ட இருமல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு இருமுகிற போது காற்று செல்லும் வழியை சுத்தம் செய்ய உதவுகிறது.

     போஸ்டுரல் டிரைனேஜ்

    போஸ்டுரல் என்றால் நிற்பது அல்லது படுப்பது. உடலில் ஏதாவது தொற்றுநோய், ஆஸ்துமா, சி.பி.ஓ.டி போன்றவைகளால் நுரையீரல் பாதித்தால் மூச்சுக்குழாய்கள் சுருங்கிவிடும்.

    இந்த தொற்றுகளை எதிர்க்க நுரையீரல் சளியை உருவாக்குகிறது. இது மூச்சுக்குழாய்களை முழுதாக அடைப்பதால் சுருங்கி மூச்சு திணறல் ஏறப்டுகிறது. அதேபோல நாம் இரும்புகிறபோது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.

    படுக்கும் நிலையில் வைத்து போஸ்டுரல் வடிகால் நம்மை எளிமையாக சுவாசிக்க உதவி செய்கிறது. இதை உண்பதற்கு முன்பு செய்வது நல்லது, இல்லையென்றால் உணவிற்கு பின் செரிமானமாகிய 2 மணி நேரத்திற்கு பின் செய்யலாம். கீழே அல்லது மெத்தையில் படுக்கலாம்.

    அசெளகரியமாக இருந்தால் தலையணையை சப்போட்டாக வைத்து இடது பக்கம் அல்லது வலது பக்கம் திரும்பி படுக்கலாம். தலையணை வைக்கும்போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது நீங்கள் வயிற்றுப்பகுதியில் படுக்க வேண்டும். அதாவது கவிழ்ந்து படுத்து உங்கள் மார்பு பகுதி கீழேயும் இடுப்பு பகுதி அதே நிலையில் கவிழ்ந்த நிலையில் மேலேயும் இருக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் சளியை வெளியேற்ற உதவுகிறது.

    உடற்பயிற்சி

    மருத்துவர்கள் அனைவருமே நம்மை 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனக் கூறுவார்கள். ஏனென்றால் உடல் உழைப்பு செய்கிறபோது நுரையீரலின் திறன் மேம்படுகிறது. ரத்த ஓட்டம் மேம்படுகிறது. உடல் நிறைய ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன் – டை- ஆக்ஸைடு வெளியேற்றி ரத்த ஓட்டம் சீராவதால் உடலில் உள்ள அதிக அளவிலான கார்பன் – டை- ஆக்ஸைடு எளிதாக வெளியேறுகிறது.

     க்ரீன் டீ

    இதில் நிறைய ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ் திறன்கள் உள்ளது. ஆன்டி- ஆக்ஸிடண்ட்களில் அதிக அழற்சி எதிர்ப்பு திறன்கள் உள்ளது. ஒரு தொற்று ஏற்படுகிறது என்றால் அதை எதிர்க்க எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இது க்ரீன் டீ-யில் உள்ளது. ஒருநாளுக்கு ஒருமுறை அல்லது இருமுறை குடித்தால் நுரையீரலுக்கு மிகவும் நல்லது.

    உணவுமுறை

    மஞ்சள், வால்நட், செர்ரிகள் ப்ளூபெர்ரி, பச்சை காய்கறிகள் இவை அனைத்திலுமே எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் திறன்களும் உள்ளதால் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

     சுவாசிக்கும் முறை

    இது மிகவும் முக்கியமான டிப்ஸ் ஆகும். இதை ஐந்து-பத்து நிமிடம் வரை தினமும் செய்ய வேண்டும். இது எப்போதுமே 1:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் நேரம் 1, மூச்சு வெளியேற்றும் நேரத்தை 2 ஆக வைக்கவும். உதாரணத்துக்கு மூச்சை உள்ளிழுப்பதற்கு 2 வினாடி எடுக்கிறீர்கள் என்றால் மூச்சை வெளியேற்றுவதை 4 வினாடிகளுக்கு பொறுமையாக விட வேண்டும்.

    • நுரையீரலை சுத்தமாக வைத்துகொள்ள மூச்சுப் பயிற்சி அவசியம்.
    • நுரையீரல் ஆரோக்கியமாக இருந்தால் தான் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.

    நுரையீரல் என்பது மிக முக்கியமான உறுப்பு. தற்போது இவை அதிக பாதிப்பை சந்திக்கிறது. அதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை முதலில் பார்க்கலாம்.

    நிறைய காரணங்கள் உண்டு என்றாலும் மாசு மிகவும் முக்கிய காரணமாகும். அதிகரித்து வரும் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகையால் காற்று மாசடைகிறது. இவை தவிர புகைப்பிடிப்பதும் முக்கிய காரணமாகிறது.

    நுரையீரலை சுத்தமாக வைத்துகொள்ள மூச்சுப் பயிற்சி, பிராணயாமம் செய்ய வேண்டும் என்றும் சொல்வதுண்டு. ஏன் நுரையீரலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் எனில் நுரையீரல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம்மால் இயல்பான ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.

    நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு முறையும் நுரையீரல் மற்றும் அதை சுற்றியுள்ள தசைகளின் வேலைகளை தெரிந்துக்கொண்டால் மட்டுமே அதன் முக்கியத்துவத்தை நாம் அறிய முடியும். நாம் மூச்சு பயிற்சி செய்யும் போது மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும் என்று சொல்வார்கள்.

     இப்போது மூச்சை மூக்கு வழியாக உள்ளிழுக்கும் போது காற்று சூடாகவும், ஈரப்பதமாகவும் உள்ளே செல்லும். மூக்கில் இறகு போல இருக்கும் சிலியா நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசுக்களை பெருமளவு அங்கேயே அகற்றி சூடாக்கி அல்லது ஈரப்பதத்தோடு மூச்சுக்குழாயிற்கு அனுப்புகிறது.

    அதன்பிறகு இந்த காற்று மூச்சுக்குழாய்கள் வழியாக அல்வியோலி பைக்கு வருகிறது. இதை சுற்றி நிறைய ரத்த குழாய்க்கள் உள்ளது. கார்பன் – டை- ஆக்ஸைடு உள்ள ரத்தம் கெட்ட ரத்தம் ஆகும்.

    இதை இதயத்தில் உள்ள நுரையீரல் தமனிகள் நுரையீரலுக்கு எடுத்து வரும். இந்த ரத்த குழாய்களும் அல்வியோலி பையை சுற்றியிருக்கும், நாம் சுவாசித்த சுத்தமான ஆக்சிஜன் நிறைந்த காற்றை உள்ளே அனுப்பி அது எடுத்துக்கொண்டு அந்த கெட்ட ரத்தத்தை விட்டுச் செல்லும்.

    இப்போது நாம் மூச்சு வெளியே விடும்போது இந்த தேவையில்லாத கார்பன் – டை- ஆக்ஸைடு வெளியே வரும். இவை அனைத்தும் அல்வியோலி பையில் தான் நடக்கிறது. இந்த வழியாக நல்ல ரத்தம் மற்ற உடல் உறுப்புகளுக்கு சென்றடையும்.

    நாம் ஒவ்வொருமுறை சுவாசிக்கும் போது உடல் உள்ளே இவ்வளது செயல்முறைகள் நடக்கிறது. இவை அனைத்து தசைகள், விலா எலும்பை சுற்றியுள்ள இண்டட்கோஸ்டல் தசைகள் மற்றும் நுரையீரல்களுக்கு கீழே உள்ள உதரவிதானம் ஆகிய அனைத்தும் வேலை செய்து தான் நமது மூச்சு உள் இழுப்பதிலும் வெளியிடுவதிலும் வேலை செய்கிறது.

    • பாமாயில் ஆரோக்கியமானதா இல்லையா...?
    • பாமாயில் பற்றிய தவறான கருத்து மக்களிடம் பரவலாக உள்ளது.

    பாமாயில் ஆரோக்கியமானதா இல்லையா...? என்றால் பொதுவாக மருத்துவ கூட்டமைப்புகள் பாமாயில் பெரிதாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துவதில்லை என்று கூறுகின்றன. ஆனாலும் பாமாயில் உடலுக்கு நல்லது செய்யுமா... கெட்டது செய்யுமா என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது. அது குறித்த பதிவு உங்களுக்காக....

    இன்றைக்கும் சில டிவி விளம்பரங்களில் ரீபைண்டு ஆயில் விளம்பரங்கள் மக்களை பெரிய அளவில் மக்கள் மனதில் பதிந்துள்ளது. எனவே இதுவும் பாமாயிலை மக்கள் வாங்க தயங்குவதற்கு ஒரு காரணமாகும்.

    தமிழகத்தில் பெரும்பாலானோர் ரேஷன் கடையில் வழங்கப்படும் பாமாயில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாமாயில் பற்றிய தவறான கருத்து மக்களிடம் பரவலாக உள்ளது. ஆனால் இதில் எண்ணற்ற நன்மைகள் இருப்பது என்பது யாருக்கும் தெரியாது.

    உண்மையில் பாமாயில் உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்க கூடியது அல்ல. பாமாயில் என்பது ஒரு தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தான். இந்த தாவரம் இந்தோனிசியா, மலேசியா போன்ற நாடுகளில் அதிகளவில் விளைகிறது. மலேசியாவில் இருந்து சுத்திகரிக்கப்படாத எண்ணெயை வாங்கி இங்குள்ளவர்கள் சமயலுக்கு பயன்படுத்தும் தரத்திற்கு மாற்றி விடுகிறார்கள்.

    சுத்தமான பாமாயில் சிகப்பு நிறத்தில் இருக்கும். 15 கிலோ பழத்தில் இருந்து 20 முதல் 25 சதவிகிதம் பாமாயில் கிடைக்கும். வெறும் 100 கிராம் பாமாயில் எண்ணையில் 884 கலோரிகள் உள்ளதாக மதிப்பிட்டுகிறார்கள். இதில் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது.

    குறிப்பாக வேறு எந்த பழத்திலும் கிடைக்காத அளவு வைட்டமின் ஈ இந்த பழத்தில் உள்ளது. ஒரு ஸ்பூன் பாமாயிலில் 120 கலோரிகள் வரை இருக்கின்றன.

    கொழுப்பு - 14 கிராம்

    சாச்சுரேட்டட் கொழுப்பு - 7 கிராம்

    மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு - 5 கிராம்

    பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு - 1 கிராம்

    வைட்டமின் ஈ - தினசரி தேவையில் 14 சதவீதம்

    பாமாயில் ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொலஸ்டிராலைக் குறைத்து நல்ல கொலஸ்டிராலான எச்டிஎல் (HDL) கொலஸ்டிராலை அதிகரிக்கச் செய்து இதய நோய் ஆபத்துகள் வராமல் தடுக்க உதவி செய்கிறது.

    கண் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்து தெளிவான பார்வையை இது உண்டாக்குகிறது. இதில் இயற்கையாகவே வைட்டமின் E நிரம்பி உள்ளதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை இது தடுக்கிறது.

    மற்றொரு புறம் இதில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடை வெகுவாக அதிகரிக்கும், அதனால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் இந்த பாமாயில் தவிர்ப்பது நல்லது.

    • வெயிலின் உச்சகட்டம் தீவிரமாக காணப்படும்.
    • மாலைவரை வெயிலில் அலையாமல் இருப்பது மிக மிக முக்கியம்.

    கோடை காலம் வந்துவிட்டாலே சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கிவிடும். அதுவும் அக்னி நட்சத்திர காலத்தில் கேட்கவே வேண்டாம். வெயிலின் உச்சகட்டம் தீவிரமாக காணப்படும்.

    கோடைகாலத்தை சமாளிக்க நாம் செய்ய வேண்டியது, முடிந்த அளவு வெயிலின் கடுமை அதிகமாக இருக்கும் பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் அலையாமல் இருப்பது மிக முக்கியம்.

    ஒருவேளை அந்த நேரத்தில் வெயிலில் செல்ல வேண்டிய அவசியம் இருந்தால் சூரியக்கதிர்களில் இருந்து உங்களை பாதுகாக்க குடை பயன்படுத்தலாம், தலையில் தொப்பி அணியலாம். பெண்கள் துப்பட்டா மூலம் தலை, முகத்தை மூடிக்கொள்ளலாம். அடிக்கடி முகம், கை-கால்களை கழுவிக்கொள்வது நல்லது. இது தவிர கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு பயன்தரும் சில இயற்கை பானங்கள் பற்றிய விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

     நன்னாரி சர்பத்

    நன்னாரி வேர் 100 கிராம் (இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்), சர்க்கரை 500 கிராம், தண்ணீர் ஐந்து கப், 2 எலுமிச்சை பழச்சாறு சாறு. நன்னாரி வேர்களை நன்கு சுத்தம் செய்து இயந்திரத்தில் கொடுத்து பொடித்து வர வேண்டும். பின்பு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நன்னாரி தண்ணீரில் சர்க்கரை, எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி எடுக்க வேண்டும்.

    தேவையான வேளைகளில் இந்த நன்னாரி சர்பத்தில் தண்ணீர் கலந்து குடிக்க வேண்டும். இதை செய்வதற்கு கடினமாக இருந்தால் கடைகளில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தை வாங்கி பயன்படுத்தலாம். இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், சிறுநீர் நன்றாக வெளியேறும்.

     வில்வப்பழ சர்பத்

    வில்வ பழத்திலிருந்து சாறு எடுத்து அதனுடன் நாட்டு வெல்லம் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து மணப்பாகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதில் தேவையான போது ஐந்து முதல் பத்து மில்லி அளவு எடுத்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து குடிக்க வேண்டும். இது வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்ற பானமாகும். உடல் குளிர்ச்சியையும், குடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தரும். குடல் புண்களை குணப்படுத்தும்.

     நீர் மோர்

    தயிருடன் நீர் சேர்த்து நன்றாக கலக்கி வெண்ணெய்யை வடிகட்ட வேண்டும். இந்த நீர் மோரில் இஞ்சி, புதினா, மிளகாய் அல்லது அதற்கு பதிலாக சிறிதளவு மிளகுத்தூள், வறுத்த பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் நல்ல செரிமானம் உண்டாகும், உடலுக்கு குளிர்ச்சியை தரும், சிறுநீர் நன்றாக வெளியேறும்.

     இளநீர்

    கோடை காலம் வந்து விட்டாலே இளநீருக்கு சற்று மவுசு அதிகம் தான். இளநீரில் பொட்டாசியம் சத்து இருப்பதால் கோடை காலத்தில் வியர்வையால் ஏற்படும் சோர்வை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தரும், சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும்.

     எலுமிச்சை பழ பானம்

    எலுமிச்சை பழச்சாற்றில் சர்க்கரை, சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீரில் கலந்து, புதினா இலை இரண்டு சேர்த்து குடிக்க வேண்டும். எலுமிச்சையில் உள்ள சிட்ரேட் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். இதில் உள்ள வைட்டமின் சி சத்து சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும்.

     செம்பருத்தி மணப்பாகு

    இது கோடைகாலத்திற்கு ஏற்ற சிறந்த பானம். இது உடலில் உள்ள கழிவுகளை நீக்கும். இதயத் தசைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். செம்பருத்தி இதழ்களை அரைத்து அதனுடன் தண்ணீர் கலந்து தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மணப்பாகு பதம் வந்தவுடன் ஆற வைக்கவும். தேவையான போது சிறிதளவு எலுமிச்சை சாறு, இஞ்சிச்சாறு ஆகியவற்றை கலந்து குடித்தால், கோடை வெயிலுக்கான உற்சாக பானம் தயாராகிவிடும்.

     தர்ப்பூசணி பழச்சாறு

    கோடை காலத்தின் வரப்பிரசாதமான தர்ப்பூசணி பழத்தை அப்படியே சாப்பிடலாம். அல்லது தர்ப்பூசணி பழத்தின் சாற்றை குடிக்கலாம். இது தாகத்தை தணிக்கும், உடலுக்கு குளிர்ச்சியை தரும், சிறுநீர் பெருக்கி செய்கையும் இதற்கு உண்டு.

     லஸ்ஸி

    தயிர், சர்க்கரை கொண்டு தயாரிக்கும் இந்த பானம் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை கிடைக்கிறது.

     கரும்புச்சாறு

    கரும்புச் சாறுடன், சிறிதளவு இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும். உடல் சூடு, பித்தத்தை தணிக்கும், காமாலை நோயாளிகளுக்குநல்லது. ஜீரண சக்தி மேம்படும்.

     பார்லி தண்ணீர்

    பார்லியை நன்றாக கொதிக்க விட்டு, ஆற வைத்து குடிக்க வேண்டும். இதனால் கோடை காலங்களில் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் நீங்கும், சிறுநீரக கற்களை வெளியேற்றும். சிறுநீர் பெருக்கி குணம் இதற்கு உண்டு.

     முலாம்பழச்சாறு

    கோடை காலத்திற்கேற்ற சிறந்த பானம் முலாம் பழச்சாறு. இப்பழத்தில் பீட்டா கரோட்டின் சத்து உள்ளது. இது உடலின் தேவையற்ற கழிவுகளை அகற்றும். ஆரோக்கியமான சருமத்தை உருவாக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும், சிறுநீர் கடுப்பு நீங்கும்.

    சீரக கொத்தமல்லி பானம்

    சிறிதளவு சீரகம், கொத்தமல்லி எடுத்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும், இது உடலுக்கு குளிர்ச்சியை தரும், பித்தத்தை அகற்றும், உடல் உள் உறுப்புகளில் உள்ள கழிவுகளை அகற்றும்.

    தண்ணீர்

    கோடைகாலத்தில் பெரியவர்கள் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் தோலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும், உடலுக்கு குளிர்ச்சி தரும், சிறுநீரகங்கள் சிறப்பாக வேலை செய்வதற்கு உதவி செய்யும்.

     பழைய சாதம்

    சாதத்தில் இரவு தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் சாப்பிட வேண்டும். இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இது உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

    சாதத்தில் உருவாகும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியாதான் புளிப்புச் சுவையைத் தருகிறது. பழைய சாதத்துடன், மோர், சின்ன வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் துவையல் செய்து சாப்பிட்டால் சுவையே அலாதி தான். உடல் ஆரோக்கியத்திற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் பழைய சாதம் தான் முதல் சாய்ஸ்.

     பானகம்

    இது உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.

    பானகம் தயாரிக்கும் முறை:

    குளிர்ந்த தண்ணீர் 1 லிட்டர், வெல்லம் ஒரு கப், எலுமிச்சம் பழம்- ஒன்று, புளி-ஒரு எலுமிச்சை அளவு, சுக்கு கால் தேக்கரண்டி, ஏலக்காய் 2, ஜாதிக்காய் பொடி ஒரு சிட்டிகை, மஞ்சள் ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு, துளசி இலை, புதினா இலை வகைக்கு ஐந்து.

    முதலில் புளியை தண்ணீரில் கரைத்து அதனுடன் வெல்லத்தை கரைக்கவும். பின்னர் எலுமிச்சம் பழச்சாறு, சுக்கு, ஏலக்காய், மஞ்சள், மிளகு, ஜாதிக்காய் பொடி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கரைத்து வடிகட்டவும், அதனுடன் மணத்திற்காக புதினா இலை, துளசி இலையை போடவும், இப்போது சுவையான பானகம் தயார். இதை ஒரு பாட்டிலில் எடுத்துக்கொண்டு வெளியில் செல்லும்போது தண்ணீருக்கு பதில் அடிக்கடி குடித்து வரலாம்.

    பதநீர்

    ஆரோக்கியமான பானங்களில் பதநீர் இன்றியமையாத இயற்கை பானம். இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளது. இது எலும்புக்கு நல்ல பலத்தையும், உடலுக்கு குளிர்ச்சியையும் தரும்.

    • இதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவும்.
    • மூட்டுவலி, கீழ்வாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு உதவும்.

    நீச்சல் பழகுவதை பலரும் போட்டிக்குரிய பயிற்சியாகத்தான் பார்க்கிறார்கள். கோடை காலங்களில் உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நீச்சல் குளத்தை நாடும் வழக்கத்தையும் பலர் பின்பற்றுகிறார்கள். உடற்பயிற்சியை போலவே இதனையும் பின் தொடரலாம். தினமும் நீச்சல் பயிற்சி செய்வதால் ஏராளமான நன்மைகளையும் பெறலாம்.

    * இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவும் பயனுள்ள பயிற்சியாக நீச்சல் அமையும். சுவாச செயல்பாட்டையும் துரிதப்படுத்துவதன் மூலம் இதய துடிப்பையும் மேம்படுத்த உதவும். இதய தசைகளையும் பலப்படுத்தும்.

    * ஓடுவது, பளு தூக்குவது போன்ற பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது மூட்டுகளில் குறைவான அழுத்தத்தையே ஏற்படுத்தும். காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கும். மூட்டுவலி, கீழ்வாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு நீச்சல் சிறந்த பயிற்சியாகவும் அமையும்.

    * தசை வலிமையை மேம்படுத்தும். கைகள், கால்கள், முதுகு மற்றும் தோள்பட்டைகளை பலப்படுத்தவும் வித்திடும். நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவும்.

    * நீச்சல் என்பது கலோரிகளை எரிக்கும் பயனுள்ள பயிற்சியாகவும் அமைந்திருக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கு உதவும். கலோரிகளை எரித்து தசைகளை வலுப்படுத்தவும் செய்யும். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடைப்பிடித்தால் உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் வழிவகுக்கும்.

    * நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் செய்யும். நீச்சலின்போது பின்பற்றும் சுவாச முறைகள் சுவாச தசைகளை வலுப்படுத்தவும், ஆக்சிஜன் நுகர்வை மேம்படுத்தவும் உதவும். ஆஸ்துமா மற்றும் சுவாச கோளாறு பிரச்சினை கொண்டவர்களுக்கு நீச்சல் பயிற்சி பயனுள்ளதாக அமையும்.

    * நீச்சல் பயிற்சி எண்டோர்பின்களை வெளியிடும். இது மகிழ்ச்சி ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. கவலை, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவும்.

    • தவிர்க்க முடியாத உணவுப்பொருளாக இருக்கிறது மைதா.
    • மைதா மாவு உயர் கிளைசெமிக் குறியீடு கொண்டது.

    ஊட்டச்சத்துமிக்க பொருட்களை உட்கொண்டால்தான் உடல்நலனை பாதுகாக்கலாம் என்பது தெரிந்திருந்தும் பலராலும் தவிர்க்க முடியாத உணவுப்பொருளாக இருக்கிறது மைதா. இந்த சுத்திகரிக்கப்பட்ட மாவு உடலுக்கு தீங்குவிளைவிக்கக்கூடியது என்று தெரிந்திருந்தும் அதன் சுவைக்கு அடிமையாகி பலரும் விரும்பி உட்கொள்கிறார்கள்.

    அவர்களின் ருசிக்கு தீனிபோடும் விதமாக மென்மையான பரோட்டா முதல் பலதரப்பட்ட பேக்கரி பலகாரங்கள் வரை மைதாவில் தயாராகின்றன. இந்த மாவை ஒரு மாதம் தவிர்த்தால் உடலில் என்னென்ன நல்ல மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

    எடை குறையும்

    சுத்திகரிக்கப்பட்ட இந்த மாவு உயர் கிளைசெமிக் குறியீடு கொண்டது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்க செய்துவிடும். குறுகிய காலத்திற்குள் உடலுக்கு அதிக அளவு ஆற்றலையும் வழங்கிவிடும். அதனால் சில மணி நேரத்துக்குள் பசி உணர்வை தூண்டிவிடும். அதிக அளவு சாப்பிடுவதற்கும் வழிவகுத்துவிடும்.

    மைதாவை விலக்கி வைப்பதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பேணலாம். அதிகம் பசி எடுப்பதை குறைத்து உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும். மைதாவுக்கு மாற்றாக முழு தானிய உணவுகளை தேர்ந்தெடுத்தால் அதிலிருக்கும் அதிக நார்ச்சத்து செரிமானம் சுமூகமாக நடப்பதற்கு வழிவகுக்கும்.

    பசியை தூண்டாமல் வயிறு நிறைந்த உணர்வை நீண்ட நேரம் தக்கவைக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் துணை புரியும்.

     செரிமான ஆரோக்கியம்

    முழு தானியங்களுடன் ஒப்பிடும்போது மைதாவில் நார்ச்சத்தோ, ஊட்டச்சத்துக்களோ இல்லை. செரிமான அமைப்பை பராமரிக்க அவை அவசியம். மைதாவை தவிர்ப்பதன் மூலம் குடல் நலனை பேணலாம். அவை சிறப்பாக செயல்படவும் ஊக்குவிக்கலாம். உணவு உட்கொண்ட பிறகு வயிறு வீக்கம், அசவுகரியம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    நாள்பட்ட நோய்களை குறைக்கலாம்

    மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகள் டைப்- 2 நீரிழிவு, இதய நோய், புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய் அபாயங்களுடன் தொடர்புடையவை. உணவுப்பட்டியலில் இருந்து மைதாவை நீக்குவதன் மூலம் நாள்பட்ட நோய் அபாயத்தைக் குறைக்கலாம். முழு தானியங்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பேணி நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கின்றன.

    சருமம் பொலிவாகும்

    மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வது தோல் அழற்சிக்கு வழிவகுக்கும். முகப்பரு போன்ற பிரச்சினைகளுக்கும் வித்திடும். மைதாவை தவிர்ப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். அதற்கு மாற்றாக முழுதானியங்களை உட்கொள்ளும்போது அதிலிருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் தோல் மீளுருவாக்கம் பெறுவதற்கு உதவி புரியும். தோலின் நிறமும் மேம்படும்.

    மனநிலை மேம்படும்

    மன ஆரோக்கியத்திற்கும் உண்ணும் உணவிற்கும் கூட தொடர்பு இருக்கிறது. இந்த சுத்திகரிக்கப்பட்ட மாவு மனநிலையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்திவிடும். அறிவாற்றல் செயல்பாட்டையும் பாதிக்கும். மூளைக்கு சீரான ஊட்டச்சத்துக்களை வழங்கும் முழு தானியங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம், மனநிலை மேம்படும். மனத்தெளிவும் கிடைக்கும்.

    மந்த உணர்வு

    சுத்திகரிக்கப்பட்ட மாவை உட்கொள்வது மந்தமாக உணர வைக்கும். ஆற்றலை மெதுவாகவும், சீராகவும் வெளியிடும் முழு தானியங்களை உட்கொள்வதன் மூலம் நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை பெறலாம்.

    மேம்படுத்தப்பட்ட சுவை

    சுத்திகரிக்கப்பட்ட மாவில் முழு தானியங்கள் தரும் சுவையை உணர முடியாது. முழு கோதுமை, ஓட்ஸ், பழுப்பு அரிசி போன்றவைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் அவற்றின் மேம்பட்ட சுவையை முழுமையாக உணரலாம்.

    நோய் எதிர்ப்பு செயல்பாடு

    முழு தானியங்களில் காணப்படும் வைட்டமின்கள் பி, ஈ, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உணவில் அதிக முழு தானியங்களை சேர்ப்பதன் மூலமும், மைதாவை தவிர்ப்பதன் மூலமும், நோய்த்தொற்றுகளை தடுக்கலாம். ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடலுக்கு கிடைக்க செய்யலாம்.

    • அளவுக்கு மீறி உண்பது நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு காரணமாகும்.
    • சர்க்கரை நோய் பாதிப்பால் உடலில் சுண்ணாம்பு, இரும்பு, நார்ச்சத்துக்கள் குறைந்து விடும்.

    ஒரு வேளை உண்பவன் யோகி, இரு வேளை உண்பவன் போகி, மூன்று வேளையும் உண்டவன் ரோகி. எனவே அளவறிந்து உண், பசித்து புசி என்ற பழமொழிகள் எல்லாம் உடலை நோயில் இருந்து காக்க கூறப்பட்டவை. அளவுக்கு மீறி உண்பது, அரிசியுடன் இறைச்சி, நெய் உள்பட உடலுக்கு மந்தம் தரும் உணவுகளை தொடர்ந்து அளவுக்கு மீறி உண்பது நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு காரணமாகும் என்கின்றன, சித்த நூல்கள்.

    பொதுவாக, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்காத நிலையில் கண் பார்வை குறைவு, கால்களில் ஆறாத புண் என்று பல பாதிப்புகள் தொடர்ந்து விடும். சர்க்கரை நோய் பாதிப்பால் உடலில் சுண்ணாம்பு, இரும்பு, நார்ச்சத்துக்கள் குறைந்து விடும்.

    எனவே, நீரிழிவு நோயாளிகள் உணவில் வாழைப்பூ, பாகற்காய், வெந்தயம் ஆகியவற்றை அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது சித்த மருத்துவம். நீரிழிவு நோயை எளிதில் கட்டுப்படுத்த எளிய மருந்துகளையும் சொல்கிறது சித்த மருத்துவம்.

    நாவல் மரத்தின் பட்டையை ஒரு நாள் முழுவதும் இரவில் நீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் இந்த நீரை அருந்தினால் சர்க்கரை அளவு கட்டுப்படும். நாவல் கொட்டை, மருதம் பட்டை, சிறுகுறிஞ்சான், வேப்பம் பட்டை, கடலஞ்சில் ஆகிய ஐந்தையும் சம அளவு பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, இரவு ஆகிய நேரங்களில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

    இதே போல், ஆவாரம்பூ, சுக்குடன் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்த நீரை கசாயமாக சாப்பிடலாம். இது எளிய முறை. பொதுவாக, சர்க்கரை நோயாளிகள் உணவு மற்றும் மருந்துகளை டாக்டரின் ஆலோசனைப்படி உட்கொள்வதே பாதுகாப்பானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுவான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும்.
    • முதல் மூன்று மாதங்களில் இருந்து தொடங்குகிறது.

    கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தின் மிகவும் பொதுவான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். இது முதல் மூன்று மாதங்களில் தொடங்குகிறது. பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பத்தின் பிற்பகுதியில், இன்னும் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது.

     அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள்:

    ஹார்மோன் மாற்றங்கள்

    கர்ப்பத்தின் தொடக்கத்தில் ஹார்மோன் மாற்றங்கள் உடலில் ரத்த ஓட்டம் மற்றும் திரவத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது. அதற்கு மேல், உங்கள் சிறுநீரகங்கள், உங்கள் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்ற கடினமாக உழைக்கின்றன.

    அதிக திரவம் கொண்ட சிறுநீரகங்களுடன், சிறுநீர்ப்பை கருப்பையை அழுத்தினால், அதை அடிக்கடி காலி செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இதனால் தான் கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்கிறார்கள்.

    வயிறு மற்றும் கருப்பை வளர்தல்

    உங்கள் கர்ப்ப காலம் தொடரும் போது, உங்கள் உடல் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப மாறத் தொடங்குகிறது. அதேநேரத்தில், உங்கள் வளர்ந்து வரும் கருப்பை வயிற்று குழிக்குள் உயர்ந்து, உங்கள் சிறுநீர்ப்பையின் அழுத்தத்தை குறைக்கிறது.

    இந்த காரணங்களுக்காக, இரண்டாவது ட்ரிமெஸ்டரில் கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்லுவார்கள். மேலும் உங்கள் கருப்பையில் உங்கள் கருவில் உள்ள குழந்தை இடுப்புக்குள் மூழ்கி சிறுநீர்ப்பையில் அழுத்துவதால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஏற்படும்.

    சிறுநீர் பாதை நோய் தொற்று

    அடிக்கடி சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தின் ஒரு பகுதியா அல்லது சிறுநீர் பாதை நோய் தொற்று என்று பல பெண்கள் கவலைப்படுகிறார்கள்.

    சிறுநீர் பாதை நோய் தொற்று என்றால், சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் உணர்வு, காய்ச்சல், சிறுநீர் அடர்த்தியாக இருப்பதைக் காணலாம் அல்லது கழிப்பறையில் ரத்தத்தைப் பார்க்கலாம். சிறுநீர் கழிப்பதற்கான வலுவான தூண்டுதலையும் நீங்கள் உணரலாம், ஆனால் சில துளிகள் மட்டுமே வெளியே வரும்.

    பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் 6 முதல் 24 வாரங்கள் வரை சிறுநீர் பாதை நோய் தொற்று ஆபத்தை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் வளர்ந்து வரும் கருப்பை சிறுநீர் பாதையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது பாக்டீரியா தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

    உங்களுக்கு சிறுநீர் பாதை நோய் தொற்று இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், மருத்துவரை அணுகலாம். ஏனெனில் இந்த நோய்த்தொற்றுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படும்.

    கர்ப்ப கால நீரிழிவு

    கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது சில சமயங்களில் கர்ப்பகால நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம், பொதுவாக கர்ப்பத்தின் இது ஒரு தற்காலிக நீரிழிவு நோயாகும். கர்ப்பத்தின் 24 முதல் 28 வாரங்களுக்கு இடையில் கர்ப்ப கால நீரிழிவு நோயை மருத்துவர்கள் பொதுவாக பரிசோதிப்பார்கள்.

    கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டால், குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படாது, மேலும் நீங்கள் குழந்தையை பெற்றெடுத்த பிறகு நீரிழிவு பொதுவாக மறைந்துவிடும்.

    தொடர்ச்சியான தாகம், குமட்டல் அல்லது சோர்வுடன் கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகளை நீங்கள் கண்டால், உங்கள் மருத்துவரை தாமதிக்காமல் அணுகவும்.

    மேலும் சில காரணங்கள்:

    கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக நிறைய தண்ணீர் அல்லது பிற திரவங்களை இரவு நேரத்தில் குடிப்பது. கர்ப்ப காலத்தில் காஃபின் அதிகம் குடிப்பது.

    ×