search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "urinary problems"

    • நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
    • சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது.

    கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறுநீர் கழிக்கும் அளவு குறையும்.

    கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச்சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.

    கோடைகாலங்களில் ரெயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

    இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது. பெரும்பாலும் 'ஈகோலை' என்னும் பாக்ட்டீரியாவால் இந்த 'நீர் கடுப்பு நோய்' வருகிறது.

    அறிகுறிகள்:

    அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதுபோன்ற உணர்வு வரும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறுநீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும்.

    குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும்.

    கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

    இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச்சத்துள்ள பானங்களை குடிப்பதுதான்.

    அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.

    மேலும் சுற்றுலா மற்றும் நெடுந்தூர பயணம் மேற்கொள்வோர் சிறுநீரை அடக்கி வைக்காமல் அவ்வப்போது கழிப்பது நல்லது.

    உணவுமுறைகள்:

    * இளநீர், மோர், பழச்சாறு மற்றும் நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை போதிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * கர்ப்பிணிப் பெண்கள் மற்ற காலங்களை விட நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.

    * கோடை காலத்தில் வெயிலில் விளையாடச் சென்றுவிடும் குழந்தைகளை அழைத்து அடிக்கடி நிறைய நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை கொடுப்பதுடன் குழந்தைகளை அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் அறிவுறுத்த வேண்டும்.

    * 'நீர்க் கடுப்பு' அதிகமானாலோ அல்லது அடிவயிற்றில் வலி அதிகமானாலோ மருத்துவரை அணுகி மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் எந்த வகை கிருமியால் இந்த 'நீர்க் கடுப்பு' நோய் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதை அழிப்பதற்கு தகுந்த மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.

    மருந்துகள்:

    ஹோமியோபதியில் ஆபிஸ் மெல், லைகோபோடியம், காந்தாரிஸ், பெர்பெரிஸ் வல்காரிஸ், ஹய்ட்ரஜ்யா போன்ற மருந்துகள் சிறுநீர் கடுப்பிற்கும், சிறுநீரகக் கற்கள் தோன்றுவதை தடுப்பதற்கும் மிகச் சிறந்தவை.

    பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் வரும், 80 சதவீத சிறுநீர் பிரச்சனைகளில், 60 சதவீத பிரச்சனை, சிறுநீர் கசிவு சம்பந்தப்பட்டதாக உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பெண்களை பாதிக்கும் உடல் பிரச்சனைகளில் முக்கியமானது, சிறுநீர் கசிவு. 40 வயதிற்கு மேல் வரும், 80 சதவீத சிறுநீர் பிரச்சனைகளில், 60 சதவீத பிரச்சனை, சிறுநீர் கசிவு சம்பந்தப்பட்டதாக உள்ளது. சிறுநீர் கசிவு பிரச்சனைக்கு, உரிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்பதே, பெரும்பாலான பெண்களுக்கு தெரிவதில்லை.

    இரு காரணங்களால், பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படலாம். முதல் வகை, இருமல், தும்மல் வரும் போது, வேகமாக நடந்தால், சிரித்தால், குனியும் போது, சிறுநீர் கசிவு ஏற்படும். சிறுநீர் பையில் உள்ள தசைகளில் ஏற்படும் அழுத்தத்தினால் வரும் இந்த பிரச்சனை, ‘ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினென்ஸ்’ எனப்படும். இதற்கு பயந்து, நிறைய பெண்கள், நடைபயிற்சி செய்வது இல்லை; உடல் பருமன் ஆகிவிடும்.

    அதன் தொடர்ச்சியாக, பல பிரச்சனைகள் வரும். அதன்பின், டாக்டரை பார்ப்பர். காரணத்தை அலசும் போது, சிறுநீர் கசிவின் தொடர்ச்சியாகவே இவை இருக்கும். பள்ளி மற்றும் வங்கிகளில் பணிபுரியும் பெண்கள், இந்த பிரச்சனைக்கு பயந்து, வேலையை விட்டு விடுவதும் உண்டு. வெளியில் போவதற்கு பயந்து, வீட்டிலேயே முடங்கி விடுவர்; இதனால், மன அழுத்தம் ஏற்படும்.



    சிறுநீர் கசிவிற்கான இன்னொரு காரணம், பிரசவத்தின் போது, இடுப்புத் தசை வலுவிழந்து விடும். பிரசவத்திற்குப் பின், தசைகளை வலுப்படுத்துவதற்கான, ‘பெல்விக் புளோர் எக்சர்சைஸ்’ செய்யச் சொல்வோம். இந்த உடற்பயிற்சியை செய்யாவிட்டால், வயது ஆக ஆக, தசைகள் மேலும் வலுவிழக்கும். இதுதான், கசிவிற்கு மூலக் காரணம்.

    கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் கசிவது தெரிந்தால், உடனே, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இடுப்புத் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் மூலம், பிரச்சனையை சரி செய்து விடலாம். பிரச்சனை பெரிதான பின், உடற்பயிற்சி மட்டும் செய்வதால், பலன் இல்லை. இடுப்புத் தசைகளுக்கு, ‘சப்போர்ட்’ செய்வதற்கு, ‘ஸ்லிங்’ வைக்க வேண்டும்.

    அறுபது சதவீத சிறுநீர் கசிவு பாதிப்பு உள்ள பெண்களில், 45 சதவீதம் பேர், சிறுநீர் பை, கூடுதலாக வேலை செய்யும், ‘ஓவர் ஆக்டிவ் பிளாடர்’ பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், இரவில் துாக்கம் கெடுவதுடன், நீர்ச்சத்தும் குறையும். 
    உடல் கூறும் சில அறிகுறிகளை நாம் உடனடியாக அக்கறை கொடுத்துப் பார்த்தால் பல உடல் பாதிப்புகளிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
    உடல் கூறும் சில அறிகுறிகளை நாம் உடனடியாக அக்கறை கொடுத்துப் பார்த்தால் பல உடல் பாதிப்புகளிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம். சில நேரங்கள் சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் சிறுநீரகம் வரை கூட சென்றிருக்கலாம்.

    * சிறுநீர் செல்லும் பொழுது அதில் ரத்தம் கலந்தார் போல் இருந்தால் கிருமிகளோடு உடல் நடத்திய போராட்டத்தில் ரத்த சிவப்பு அணுக்கள் சிறுநீரில் கலந்திருக்கலாம். அப்படி இருந்தால் சிறுநீரக உறுப்புகளில் இருக்கும் கிருமிகளை சரி செய்ய உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.

    * அடிக்கடி சிறுநீர் செல்ல வேண்டும் போல் தோன்றுகின்றதா? சிறுநீரக பையில் கிருமிகள் தாக்குதல் இருந்தால் அந்த பாதிப்பினை ஏற்படுத்தும். அதனால் சிறுநீரக பை தன்னை சுருக்கிக் கொள்ளும். இதன் காரணமாகவே அடிக்கடி சிறுநீர் செல்லத் தோன்றும். பொதுவில் சிறுநீரக உறுப்பு கிருமி தாக்குதல் ஆண்களை விட பெண்களுக்கே சற்று அதிகமாக ஏற்படும். இது உடல் கூறு அமைப்பு காரணமாக ஏற்படுவது. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் சிறுநீரக பை இறங்கும் வாய்ப்பும் உள்ளது. இதன் காரணமாகவும் பாதிப்பு ஏற்படலாம்.

    * கீழ்முதுகு வலி:- கிருமியால் பாதிக்கப்பட்ட சிறுநீரகம் வீங்கும். இதனால் கீழ் முதுகுவலி ஏற்படும்.

    * சிறுநீர் செல்லும் பொழுது தாங்க முடியாத வலி இருக்கும். ஏனெனில் கிருமிகளால் சிறுநீரக உறுப்புகள், பாதை உள்ளிட்டவை வீங்கி இருக்கும்.

    * சிறுநீர் ஒரு கலங்கிய திரவம் போல இருக்கலாம். உடல் வெள்ளை ரத்த அணுக்களை கிருமிகளோடு போராட அனுப்புவதால் அவை போராடி சிறுநீரில் கலப்பதால் கலங்கிய தோற்றம் இருக்கலாம்.

    * சிறுநீர் அதிக துர்நாற்றத்துடன் இருக்கலாம்.

    * சிறுநீரில் சீழ் இருக்கலாம்.

    * மயக்கம் இருக்கலாம். கிருமி பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்படாத பொழுது கிருமிகள் ரத்த குழாய்களை பாதிக்கும். இதனால் ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் ஏற்படலாம்.

    * ஜுரம் இருக்கலாம்.

    மேலும் உங்கள் சிறுநீரகம் பாதித்து இருந்தால் அதன் அறிகுறிகளாக

    * திடீரென உடலில் மிக அதிக அரிப்பு, தடிப்பு ஏற்படலாம். நன்கு வேலை செய்யும் சிறுநீரகம் உடலில் உள்ள நச்சுக்களை கழிவுகளை வெளியேற்றி விடும். சிறுநீரக பாதிப்பு நிகழும் பொழுது இக்கழிவுகள் ரத்தத்தில் கூடி பாதிப்பினை ஏற்படுத்தும். இதன் வெளிப்பாட்டில் ஒன்றாக சருமத்தில் அதிக அரிப்பு, தடிப்பு ஆகியவை ஏற்படும். அதிக உப்பு சாப்பிடும் பழக்கம் சிலரிடம் இருக்கும். அதிக தாகம், உப்பிச உணர்வு, வீக்கம், இவை இருந்தால் நீங்கள் உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்கின்றீர்களா என்பதனை ‘செக்’ செய்யுங்கள்.

    * உட்கார, நிற்க முடியாத வயிற்றுவலி இருந்தால் சிறுநீரக கற்கள் பாதிப்பு இருக்கின்றதா என்பதனை மருத்துவரிடம் சென்று அறியுங்கள். கூடவே வாந்தி, அதிக வியர்வை வயிற்றுப்பிரட்டல் இவையும் இருக்கலாம். இதற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை என்பதனை அறிய வேண்டும்.

    * உயர் ரத்த அழுத்தம் உடலுக்கு மிக தீங்கு விளைவிக்கும். சிறுநீரகத்தின் ரத்த குழாய்கள் சிறுநீரை பிரித்து எடுக்கின்றன. உயர் ரத்த அழுத்தம் பெரிய குழாய்களில் இருந்தால் மிகச் சிறிய ரத்த குழாய்களிலும் இருக்கும். இதனால் சிறுநீரக மெல்லிய ரத்த குழாய்கள் பாதிப்படையும். எனவே உங்கள் ரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். 
    ×